இங்கு சாதியா பிரச்சனை? ஆனால் இரண்டு வன்னியர்கள், இரண்டு கவுன்டர்கள் மதிமுக வில் அதே தேர்தலில் போட்டியிட்டனர்.போராடிய வர்களுக்கும் கழகத்திற்காக உழைத்த தகுதி உள்ளவர்களுக்கும் கிடைக்க வேண்டியதை சாதியைக் காட்டி ஒதுக்கியதில் வைகோ மிகுந்த புத்திசாலியாக இருந்தார். எனக்கு பின் நாட்களில் கலைஞரிடமும் ஸ்டாலினிடமும் இதேதான் நடந்தது.
வெறுமனே கிரேக்க அரிஸ்டாட்டில் போல மக்கள் முன்புதன்னை காட்டிக் கொள்வார். இப்படி அவர் தகுதி பார்த்து என்னைப் புறக்கணித்து அவரது அதிகாரத்தின் கீழ் தகுதியற்ற உள்ளவர்களை அரவணைத்துக் கொண்டார். அது அவரது தன் அகங்காரமாக இருந்ததை நான் அப்போது பொருட்படுத்தவில்லை. இதற்குப் பிறகும் மீண்டும் நான்கு வருடத்திற்கு மேல் அவருடன் நான் இருந்தேன். மீண்டும் 2001 இல் சட்டமன்றத் தேர்தல்! திமுகவுடன் கூட்டணி என்ற முறையில் மதிமுகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டது. தன்னைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் ஒரு 18 பேராவது எம்எல்ஏ வாக தேர்வு ஆவார்கள் என்ற உற்சாகமானநிலையில் இருக்கும்போதே வைகோ கலைஞரிடம் ஏதோ தன் நலனுக்கு முறைத்துக் கொண்டு போய் விட்டார். இன்னும்எத்தனை வருடம் நம்முடன் இருந்து கஷ்டப்படுவார்கள் இந்தச் சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வைகோ விற்கு அப்போது இல்லை என்பது தான் உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. நடந்தது என்னவோ அவரது சுய லாபங்களுக்குள்ளும் அவரது மகன் திமுகவை போல தனக்குமான வாரிசு அரசியலுக்குள் இடம்பெற்று தனக்கு ஆதரவாக வர வேண்டும் அதற்காக நம்முடன் உழைத்த பலரை கைவிட்டாலும் பரவாயில்லை என்கிற அவரது போக்கு அப்போதுதே வெளிப்படத் தொடங்கியது. 1998முதல் வைகோ தன் அன்பு பதல்வனின் ஆலோசனையை கேட்க ஆரம்பித்து விட்டர்.இவர்தான் வாரிசு அரசியலை எதிர்த்தார் என்பதை நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இப்படி ஆகிவிட்டாரே என்ற நிலையில் அதற்கு பிறகும் நான் நான்கு வருடம் அவருடன் தான் 2001 வரை மதிமுவில் இருந்தேன். ஒரு பண்பட்ட நிலையில் அவரை ஆதரித்த என்னையும் பொன் முத்துராமலிங்கத்தையும் நிராகரித்துவிட்டு அவருக்கு விசுவாசம் ஆன புதியவர்கள பக்கத்தில் வைத்துக் காப்பாற்ற தொடங்கி விட்டார். அதில் ஒருவர் இன்று துரோகி. இப்படியானவர்களை வைகோ வளர்த்தார். அவர்களை கொண்டு எங்களை அன்று அவமானம் செய்தார். அதன் விளைவு தான் இன்றைக்கு அவர் அனுபவிக்கின்ற துன்பங்கள் மற்றும் விளைவுகளுக்குக் காரணம் ஆகி இருக்கின்றன. என்ன இருந்தாலும் மதிமுகவின் நிர்மாணத் தலைவர்களில் நானும் ஒருவன். இத்தனை அரசியல் விளைவுகளும் அதன் தொடர்ச்சிகளும் இன்றைக்கு இரண்டாயிரத்தில் அல்லது 90களில் பிறந்த இளைஞர்களுக்குத் தெரியாது. வைகோவால் தான் நான் வளர்ந்தேன் வைகோ தான் என்னை அடையாளம் காட்டினார் என்றெல்லாம் அவர்கள் சொல்வது எனக்கு ஒருபோதும் பொருந்தாது. நான் ஏற்கனவே காமராஜரால் வளர்க்கப்பட்டு பிரபாகரனோடு இருந்து எம்ஜிஆர் கலைஞர் ஜெயலலிதா வரை அவர்கள் எப்படியானவர்கள் என்பதை அறிந்து பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் வளர்ந்து வந்தவன். ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி நாராயணசாமி நாயுடு போன்றவர்களுடெல்லாம் மக்கள் வழி அரசியலில் ஈடுபட்டு அதன் வரலாற்று நிலைப்பாடுகளுடன் பொது வழக்குகளையும் சந்தித்து வளர்ந்தவன். அதற்கு பிறகான ஒரு காலத்தில்தான் வைகோ போன்ற ஒரு நபரைச் சந்தித்தேன். இதையெல்லாம் அறியாமல் இன்றைக்கு பேசுபவர்கள் நான் ஏதோ வைகோ வழியாகத்தான் வந்தேன் என்று அறியாமல் பேசுகிறார்கள். அந்த வகையில் சொன்னால் உண்மையில் நெடுமாறன்தான் தமிழ் தேசியம் ஈழம் என்கிற வகையில் என்னை வளர்த்தெடுத்தார். அவருக்கு எனக்கும் ஆதி தொடர்பு ஏதுமில்லை அவர் மதுரை நான் கோவில்பட்டி. இருந்தாலும் நாங்கள் உடன்பட்டோம். பொன் முத்துராமலிங்கமும் நானும் வைகோவிற்கு செய்த அடிப்படை உதவிகள் அதனால் விளைந்த நம்பிக்கைத் துரோகங்கள் புறக்கணிக்கப்படுதல் எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அரசியல் ஒரு திறந்த புத்தகம். அதில் ஈடுபட எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் மதிமுக கட்சிக்கு நான் செய்த பணிகள் அனைத்தும் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் என்ன செய்ய இப்படியாக அதன் இறுதி விளைவுகளை கண்முன்பு துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வை கோபால்சாமி என்கிற பெயரை 8 மணி நேரத்தில் வைகோ என்று மாற்றியவன். தமிழகமெங்கும் வைகோ பேசுகிறார் என்கிற போஸ்டர் அக்காலத்தில் மிகப் பிரபலம். ஒரு புனித தலைவருக்கு இணையாக அவரை நாங்கள் நம்பினோம் அன்றைக்கு நடந்து கொண்டிருந்தது திமுக ஆட்சி. இப்படி எல்லாம் நாங்கள் செய்தது யாருக்கு தெரியும். இப்படிப் பல விஷயங்கள் சொல்ல முடியும். இப்படி எல்லாம் எங்களைப் போல் அவருடன் இருந்தவர்களை வைகோ மிக எளிதாக எடை போடுகிறார். காலகாலமாக வாரிசுகளோடு இயங்கும் 2/3
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment