Monday, December 7, 2015

டர்பன் மாநாட்டு பரிந்துரைகள்: 
---------------------------------
Durban Recommendations: Outcome document of the Conference on Peace and Justice in Sri Lanka, 6 & 7 November, 2015
------------------------------------
கடந்த நவம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதி டர்பன், தென்னாப்பிரிக்காவில் தென்னபிரிக்காவை தளமாகக் கொண்ட Solidarity Group for Peace and Justice in Sri Lanka எனும் அமைப்பின் ஏற்பாட்டில் தாயகத்தை தளமாகக் கொண்ட அமைப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ்நாட்டு அமைப்புக்கள் கூட்டமொன்றில் கலந்து கொண்டன. தமிழ் சிவில் சமூக அமையமும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது.  கூட்ட நிறைவில் பொறுப்புக் கூறல் மற்றும் அரசியல் தீர்வுக்கான செயன்முறைக்கு முன்னோடியாக செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துடனான ஊடாட்டத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கி இவ்வமைப்புக்கள் வெளியிட்ட பரிந்துரைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். 

https://www.scribd.com/doc/290158531/Durban-Recommendations

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அரசாங்கம் தீர்க்கமாக முன் வைக்க வேண்டும், இராணுவத்தை விலக்கி கொள்ள வேண்டும், பயங்கரவாதத் தடை சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், புலம் பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட 07 விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடில் பொறுப்புக் கூறல் தொடர்பாகவோ அரசியல் தீர்வு தொடர்பிலோ பேசுவதற்கான சூழல் உருவாகப் போவதில்லை என இவ்வாவணம் சுட்டிக் காட்டுகின்றது. இவ்வாவணம் சர்வதேச சமூகத்தை விழித்து  விடுக்கப்பட்டுள்ளதுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட தென்னாபிரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...