Wednesday, November 29, 2017

கம்பராமாயணம் தந்த சேக்கிழார்!!! கூறியது யார்? மெத்தப்படித்த தமிழக முதல்வர்!!!

கம்பராமாயணம் தந்த சேக்கிழார்!!! கூறியது யார்? மெத்தப்படித்த தமிழக முதல்வர்!!!

ஞானத்தில் ஞாலத்தில் உயர்ந்தது தமிழகம் என்பார்கள். கவிக்கொரு கம்பன், பாட்டுக்கொரு பாரதி என்று ஜொலித்த தமிழகத்தில் கருமாந்திரம் பிடித்த முதலமைச்சர் என்பவர் கம்பராமாயணம் தந்த சேக்கிழார் என்று தஞ்சை எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவில் இன்று பேசுகிறார். எங்கே முட்டிக்கொள்ள? எங்கே மோதிக்கொள்ள? தமிழக மக்களே… உங்களுக்குத் தகுதியான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் வேண்டாமென்று தீர்க்கமாக நீங்களே முடிவெடுத்துவிட்டபிறகு இதையெல்லாம் பார்த்து எங்கள் தலையிலடித்துக்கொள்ளவேண்டியதுதான். தகுதியே தடை என்று நான் அடிக்கடி சொல்வதற்கேற்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இப்படியொரு கேடுகெட்ட நிலையா தமிழகத்திற்கு?! விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாயோ?  

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...