Saturday, June 29, 2019

நாம் சுயமரியாதையோடு அடிமைத்தனம் இல்லாமல் இருந்தால் ..... அடுத்தவர் பயத்துடன் நம்மை பற்றி பின்னால் பேச வாய்ப்பு இல்லாமல் போகும்.....

நாம் சுயமரியாதையோடு அடிமைத்தனம் இல்லாமல் இருந்தால் .....
அடுத்தவர் பயத்துடன் நம்மை பற்றி பின்னால் பேச வாய்ப்பு இல்லாமல் போகும்.....

******
உங்கள் ஆற்றல் மதிப்பை உணராதவரிடம் கூட நீங்கள் சற்று தள்ளி இருந்து கொள்ளலாம். ஆனால் உங்கள் நல்ல குணத்தை சந்தேகிப்பவரிடம், முற்றிலும் விலகியே இருக்க வேண்டும்.

******
நாம் யாரை அதிகம் நம்புகிறோமோ அவர்களிடம் கவலை அற்று ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்..

******
கருத்து வேறுபாடுகள் உண்டாவது இயல்பு. ஆனால்...
வேறுபாடுகள் விரோதங்களாகி விடக்கூடாது.வன்மம் மனித ஆற்றலுக்கு
நல்லதல்ல.

*****
நம்மை அர்த்தமில்லாமால் வெறுப்பவர்கள் வெறுக்கட்டும்
ஆனால் நாம் மட்டும் மனசாட்சிக்கு உண்மையாக இருப்போம்.

******
நமக்காக யாருமே இல்லை என வருத்தபடுவதை விட, தகுதியான நமக்கானவர்கள் இல்லை என கடந்து போய்விடுங்கள்...
******
யாரும் எல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் பேசிட முடியாது. ஒவ்வொர்க்கிட்டேயும் ஒவ்வொரு இடைவெளி இருக்கும் . நம்பிய நெருக்கமானவரிடம் மட்டும்தான் முக்கிய விசயத்தை எந்த யோசனையும் இல்லாம மனம் விட்டு பேசிட முடியும்.ஆனால் அவரின் நம்பக தன்மை
முக்கியம்....

******
எல்லோருக்கும் தவறென்று தெரிந்தும்,எல்லோருக்கும் தட்டிக்கேட்கும்உரிமையிருந்தும்,
யாருமே அதை பேசாமலேய கடப்பது என்பதே இன்றைய போலி ஜனநாயகம்;
(உ ம்)மணல் கொள்ளையில் மக்கள் பயப்படுகிறார்கள் என்பதைவிட நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று தயங்கி நிற்கிறார்கள் என்பது தான் யதார்த்தம்.

******
சுயமரியாதை என்பது 
தற்பெருமையோ
ஆத்திரமோ 
அன்று...
பயந்து உரிமைகளை விட்டுக் 
கொடுக்க தயாராக இல்லாத மனோநிலையேயாகும்.

******
வாழ்வு என்பது லட்சியத்தைத் தேடும் தொழிலேயாகும். 
சால்பு அடைய முயல்வதே அதன் குறிக்கோள். நம்மால் முடியாதென்றோ நம்மிடம் குறைபாடுகள் உள்ளனவென்றோ எண்ணி நாம் நம்முடைய லட்சியத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது.

நான் என் பலவீனத்தை அறிவேன். குறைபாடுகளையும் அறிவேன். இவற்றை நீக்கி அருளும் படி நான் உண்மையிடம் மௌனமாக பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறேன்.
******
ஆரம்ப கட்ட வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏணியாக இருந்தவர்களை மறக்காமல் 
என்றும் நன்றி பாராட்டுங்கள்.

****
தகுதியை மதிப்பது அவசியம் . தகுதியற்றவர்களால் எந்த பயனும் இல்லை; சிக்கல்தான்....
ஆனால் இன்றைக்கு #தகுதியேதடை......

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2019Image may contain: bird, grass, outdoor and nature

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...