Sunday, June 27, 2021

இலக்கிய சிந்தனை

#இலக்கிய_சிந்தனை
——————————————————
ப.சிதம்பரமும் அவருடைய அண்ணன் ப.லட்சுமணனும் ‘இலக்கிய சிந்தனை’வட்டம்என்ற அமைப்பை 1970-களில் துவங்கினர். மாதம் ஒரு முறை  இதழ்களில் வெளி வந்த சிறுகதைகளைத் வாசிக்க பட்டு தேர்ந்தெடுத்து மாதாமாதம் வெளியிட்டனர். வருடத்திற்கு ஒரு முறை தேர்ந்தெடுத்த சிறுகதைகளுக்கு ‘இலக்கிய சிந்தனை’ சார்பில் பரிசும் வழங்கப்பட்டது. 

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் வருடம் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்து தற்போது வானதி பதிப்பகம் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளிட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகள் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் வருவது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். நண்பர்கள் மணா, திலீப்குமார், தோப்பில் மீரான்,பாவண்ணன், பிரபஞ்சன்,சோ. தர்மன்,மேலாண்மை பொன்னுச்சாமி,சூடாமணி, திருப்பூர் கிருஷ்ணன், வண்ணதாசன் என பலருடைய கதைகள் தற்போதும் பேசப்படுகின்றது.

இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது இலக்கிய சிந்தனை அமைப்பு.
ப.லட்சுமணன் அவர்களின் முயற்சியில் மாதந்தோறும் ஆழ்வார்பேட்டையில், ஒரு  சிறிய அரங்கில், கடைசி சனிக்கிழமை அன்று கூடும் இலக்கிய விரும்பிகள் கூட்டம். துவக்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தராத இலக்கிய புள்ளிகள் இல்லை எனலாம். ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அகிலன், அசோகமித்திரன், பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, கிரா என பலர். இதற்க்கு அமைப்பாளராக பாரதி இருந்தார்.வழி நடத்தும்அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் இலக்கிய சிந்தனை அமைப்பின் கீழ், அனைத்து பருவ இதழ்களும் வாங்கப்பட்டு, ஒருவரால் வாசிக்கப்பட்டு, அதில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது.

பரிசுஅளிப்புவிழாக்கள்ஏ.வி.எம்.ராஜேஸ்வரியின்  மண்டபத்தில் ஒவ்வொரு வருடம் சிறப்பாக ப.லட்சுமணன் நடத்துவர்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-06-2021.

rkkurunji@gmail.com


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...