Sunday, March 29, 2015

சிலநேரங்களில் சிலமனிதர்கள்





“புத்தியுள்ள மனிதரெல்லாம் 
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை”

*
சென்னை உயர்நீதிமன்றம் எதிரேயுள்ள ஆர்மேனியன் தெருவில் அமைந்துள்ள கேத்தலிக் சென்டருக்குச் சென்றிருந்தேன். அங்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைச் சந்திக்கச் சென்றபோது எதிரே வெள்ளையும் சொள்ளையுமாக ஒரு நபர் வந்தார். அருகில் வந்ததும் வணக்கம் வைத்து அவர் காட்டிய பந்தாவாகவும் பெரிய தோரணையும் பாசாங்கும் பகட்டாக இருந்தது.

அந்தக்காட்சியைப் பார்க்கும் போது... இப்படியா வேடிக்கை மனிதர்கள் என நினைத்துக் கொண்டேன்.

அதே நபர் 25 ஆண்டுகளுக்கு முன், வேலையில்லாமல் எனது காரில் என்னோடு பயணித்தது நினைவுக்கு வந்தது. கூடவே கவிஞர் கண்ணதாசன் வரிகளில், அற்புத நடிகர் சந்திரபாபு அன்னை படத்தில் பாடிய இந்த வரிகளும் நினைவுக்கு வந்தன...

#சிலநேரங்களில்_சிலமனிதர்கள்

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...