Monday, May 28, 2018

சில காயங்கள் காலம் கடந்தும் ஆறுவதில்லையே .......

சில காயங்கள் காலம் 
கடந்தும் ஆறுவதில்லையே .......

————————————————-

கேள்விப்பட்ட செய்தி,உண்மையா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும் . 1996 பொதுத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் போட்டியிட்ட வைகோ, ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிட்ட சி .பி.எம் கட்சியை சார்ந்த பி.சம்பத்தையும், கோவில்பட்டியில் போட்டியிட்ட எனக்கும் எதிராக அன்றைக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது செல்வாக்கினை கமுக்கமாக காட்டியதாக செய்தி. அப்போதெல்லாம் இதை அறிந்திருக்கவில்லை. 

அந்த காலத்திற்கு சற்று முன்னால் (1987-88) கூடங்குளம், 1994இல் தூத்துக்குடியில் அமைந்த ஸ்டெர்லைட், கும்மிடிப்பூண்டியில் டாபர் - டூபான்ட் ஆகிய திட்டங்கள் வந்தபோது சென்னையில் கூட்டங்களும், அதை எதிர்த்து வழக்குகளை தொடுத்த பணிகளில் எல்லாம் ஈடுபட்டோம். 

அந்த நிலையில்,ஸ்டெர்லைட் இந்த புண்ணியத்தை செய்திருக்குமோ என்று நினைக்கிறேன். இதை ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் இதற்க்கு பதில் சொல்லவேண்டும். இன்றைக்கு தான் இந்த செய்தியை மதுரையில் இருந்தபோது ஒரு நம்பிக்கையான நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். காலமும், வரலாறும் இதை பார்த்திருக்கும். உண்மையென்றால் அதை மக்களே பரிசீலனைக்கு தான் வைக்க முடியும். வேறென்ன செய்ய முடியும்?

நீண்டகாலமாக பொதுத்தளத்தில் இருந்தும் எந்த ஒரு பொறுப்புக்கும் வரமுடியவில்லையே என்று நண்பர்கள் பலர் வருத்தப்படுகிறார்கள். இப்படி கேடான அக மற்றும் புறச் சூழல் இருக்கும்போது நாங்கள் எப்படி வரும் வரமுடியும்.

#ஸ்டெர்லைட்
#தூத்துக்குடி
#பொது_வாழ்வு
#தகுதியே_தடை
#Public_life
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-05-2018

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...