Thursday, March 23, 2023

தொலைக்காட்சி விவாதங்கள்….

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி விவாதங்களுக்கு நான் செல்வதும் இல்லை. அதில் ஆர்வமும் இல்லை. 

புதுச்சேரி கம்பன் கலையரங்கில்  நாளை,24.03.2023 அன்று இரவு 7.00 மணிக்கு மாநில ஆளுநரைக் குறித்து நடைபெறும்  ‘புதிய தலைமுறை - வட்ட மேசை விவாதம்’ நிகழ்வுக்கு அவசியம் வர வேண்டும் என்று ஊடகநெறியாளர்திருஜி.எஸ்.வேங்கடப்
பிரகாஷ் அழைத்தார். மாநில கவர்னர்கள் குறித்து வரலாற்றுரீதியான பார்வையில் உங்களால்தான் பேச முடியும்; அவசியம் வர வேண்டும்  என்று   அவர் அழைத்த காரணத்தால் இந்த நிகழ்வில் அரசியலாளர் என்ற நிலையில் பங்கேற்கிறேன். 

என்னைப் பொருத்தவரை,தொலைக்காட்சி விவாதங்கள்,   அரசியல்ரீதியாக விழிப்புணர்வையும் எந்த தாக்கத்தையும் உருவாக்கப் போவதில்லை என்ற கருத்தில் தெளிவாக உள்ளேன். தினமும் நடக்கும் தொலைக்காட்சி    விவாதங்களில்  பங்கேற்பது இல்லை என நிலைப்படு உண்டு.

#கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
23-3-2023.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...