Sunday, March 26, 2023

#ராகுல்காந்தி விடயம்



————————————-



 ராகுல்காந்தி குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்றதும் நாடாளுமன்ற மக்களவை அவரைப் பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தில் இருந்து அவர் வெளியேற்றம் செய்யப்பட்டதும் இன்றைக்கு சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது. ஜனநாயக ரீதியாக கவனித்து; ராகுல்காந்தி நீக்கம் நன்கு ஆலோசித்து செய்து இருக்கலாம். உடனே அவசரமாக நடவடிக்கை தேவையா? என்ற கருத்தும் உண்டு.

இருப்பினும்,
அவருடைய தந்தையார் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிய அமைதிப்படை அங்கே கோரதாண்டவமாடி, தமிழ் மக்களைக் கொன்று குவித்து இந்தியாவுக்குத் திரும்பியதும் 1990 மார்ச் இதே நாள்தான் ராகுல் நீக்கம். முதல்வர் தலைவர்  கலைஞர் அது அமைதி படை அல்ல அமளி படை என அந்த படை வீரர்களை வரவேற்க செல்ல வில்லை. அன்று வி. பி. சிங் பிரதமர்.

ரபேல் வழக்கில் ராகுல் பேசிய வார்த்தைகளுக்கு எதிராக மத்திய அமைச்சர் மீனாட்சிலேகி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும், அவ ராகுல்காந்தி விடயம்
 ராகுல்காந்தி குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்றதும் நாடாளுமன்ற மக்களவை அவரைப் பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தில் இருந்து அவர் வெளியேற்றம் செய்யப்பட்டதும் இன்றைக்கு சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது.
 அவருடைய தந்தையார் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிய அமைதிப்படை அங்கே கோரதாண்டவமாடி, தமிழ் மக்களைக் கொன்று குவித்து இந்தியாவுக்குத் திரும்பியதும் 1990 மார்ச் இறுதியில்தான். ரபேல் வழக்கில் ராகுல் பேசிய வார்த்தைகளுக்கு எதிராக மத்திய அமைச்சர் மீனாட்சிலேகி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் ராகுல்  மன்னிப்பும் கேட்டார்.
 
கடந்த 10.7.2013 அன்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவியல் வழக்குகளில் தண்டைனை பெற்றால் அவர்களுடைய பதவியைப் பறிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்தபோது, காங்கிரஸ் மன்மோகன் சிங் அரசு லல்லு பிரசாத் யாதவை இந்த பாதிப்பிலிருந்து காப்பாற்ற அவரசரச் சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தை ராகுல்காந்தி கடுமையாக எதிர்த்து நகலையும் கிழித்தெறிந்தார். அதுமட்டுமல்ல, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மலைவாழ் மக்களைக் குறித்தான சட்டங்கள் வந்தபோதும் அதையும் கடுமையாகச் சாடி ராகுல்காந்தி பேசியதும் உண்டு. சோனியா வாழும் ஜன்பத் வீட்டின் முகமறிந்து மன்மோகன் சிங் கடமைகளைச் செய்து பத்து ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பிலிருந்தார். பல நேரங்களில் மன்மோகன் சிங் மீது மறைமுகமாக ராகுல் காந்தி சாடியது எல்லாம் உண்டு. 

அதுமட்டுமல்ல, காங்கிரஸ் ஒருபக்கம் கூட்டணிப் பேச்சு வார்த்தையை திமுகவுடன் அறிவாலயத்தில் நடத்திக் கொண்டே, கலைஞருடைய மனைவியை தாயாள் அம்மாவை அதே அறிவாலயத்தில் முதல் மாடியில் 2 ஜி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சிபிஐ மற்றும் என்போர்ஸ்மெண்ட் துறையும் விசாரித்ததும் உண்டு. 

அதே காலகட்டத்தில் கலைஞர் 2 ஜி விவகாரம் குறித்து சோனியாகாந்தியைச் சந்திக்க தில்லி ஜன்பத் வீட்டுக்குச் சென்றபோது, கலைஞரோடு சென்ற புகைப்பட நிபுணர்களைக் கூட  ராகுல் காந்தி அனுமதிக்கவில்லை என்ற செவி வழித் தகவல்கள் எல்லாம் உண்டு. 
அதேபோல சந்திப்பு தொடர்பான படங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சியும் பத்திரிகைகளுக்கு வழங்கவில்லை. இப்படியான மனோபாவங்கள், ராகுலுக்கும் உண்டு. இந்திராகாந்தி மாதிரி செயல்பாடுகள், அவருடைய தந்தையார் ராஜீவ் காந்திபோல புதுமையை நேசிப்பது என அகப்புறச் சூழல்களைப் புரியாத மனிதராகவே ராகுல் இருக்கிறார் என்பதே பொதுவான கருத்து. 
 
ராகுல் காந்தி தன்னுடைய தாய் சோனியா போல செயல்பாடு கொண்டவர். சோனியாகாந்தி பிரதமர் இந்திரா காந்தி வீட்டின் மருமகளாகியும் நீண்ட காலம் இந்திய குடியுரிமை வாங்காமலேயே இருந்ததைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் அன்றைக்கு வெளிவந்த சன்டே ஆங்கில வார ஏட்டில் எழுதியதெல்லாம் நினைவில் வருகின்றன. இந்திரா காந்தியின் காலத்தில் ராஜீவ்காந்தி திடமாக அரசியல் களத்தில் நுழைந்தபோதுதான் சோனியா காந்தி, இந்திய பிரஜா உரிமையை சோனியாகாந்தி பெறுகிறார் என்பதையும் நாம் அறிய வேண்டும். 

இதில் முரண்நகை என்னவென்றால் இலங்கை சென்ற அமைதிப்படை தமிழர்களைத் துன்புறுத்தி இந்தியாவுக்குத் திரும்பிய அதே மார்ச் இறுதியில்தான் ராகுல்காந்தி குறித்தான நீதிமன்றத் தீர்ப்பும், அதன் பின் அவரின் நாடாளுமன்ற வெளியேற்றம் தொடர்பான மக்களவை அறிவிப்பும் வந்துள்ளது.  முள்ளிவாய்க்காலில் நடத்திய கோரத்தை மறக்க முடியுமா?

இதைத் தனிப்பட்ட முறையில் குற்றம் பார்த்துச் சொல்லவில்லை. நடந்தவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இந்தப் பதிவு.

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
26-3-2023.

Pic-The illustrated weekly of India, April 8-14, 1979.

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...