Wednesday, January 24, 2024

#இந்திய அரசியல்சாசனம் மதசார்பற்ற - செக்யூலர் (Secular)என சொல்வது பிழை. சரியாக மதநல்லிணக்கம்(communal harmony )என அழைக்க வேண்டும்.

#இந்திய அரசியல்சாசனம் 
மதசார்பற்ற - செக்யூலர் (Secular)என
சொல்வது பிழை. சரியாக மதநல்லிணக்கம்(communal harmony )என அழைக்க வேண்டும்.












1950ல் இந்திய  மூல அரசியல் சாசனத்தில் ராமர் படம்.. 
———————————————————-
கேரளாவின் நடிகை பார்வதி மேனன் உள்ளிட்ட அங்குள்ள திரைப்படத்துறையினர் பதிவில்,
இந்திய அரசியல் சாசன முகப்பின் முதல் பக்கத்தில் செக்யூலர் என்று பதிவு உள்ளது என்று இன்றுதான் அதைப் புதிதாக அறிந்தவர்கள் போல ஒரு புரட்சிகரக் கோரிக்கையை வைக்கின்றார்கள்.




உண்மையில் 1950ல் இந்திய  மூல அரசியல் சாசனத்தில் ராமர் படம்தான் இருந்தது.அது காந்தி அடிகள் சொன்ன ராம ராஜ்ஜியம் என்கிற அரசியல்உள்ளடக்கத்தைகொண்டிருந்ததைத் தவிர அதில் வேறு ஒன்றும் தவறில்லை.(Portrait of Bhagwan Ram, Goddess Sita and Laxman In Original Copy of Indian Constitution 1950) Artist,Nandalal Bose, a great Bengali and Indian and a pioneer in modern India art, hailing from Shantiniketan, West Bengal. Prem Behari Narain Raizada (1901–1966) was an Indian calligrapher. He is notable for being the calligrapher who hand-wrote the Constitution of India.

பின்னாளில் அரசியல் தலைமைக்கு வந்த இந்திரா காந்தி செக்யூலர் இந்தியா  42வது அரசியல் சாசனத்தை திருத்தத்தை கொண்டு வந்தார். 1976 இல் இந்திய அரசியலமைப்பின் நாற்பத்தி இரண்டாவது திருத்தத்துடன் ,  அரசியலமைப்பின் முன்னுரை இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அறியப்பட்டது. மதசார்பற்ற (Secular)என சொல்வது பிழை. சரியாக மத நல்லிணக்க (communal harmony )என்றுதான்அழைக்க வேண்டும்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் உண்மையில் பல மதங்களை உள்ளடக்கி இருக்க கூடிய பல நம்பிக்கைகளை பல வழிபாடுகளை நம்பி இருக்கக்கூடிய இந்தியாவில் அது எப்படி செக்யூலர் கவர்ன்மெண்டாக இருக்க முடியும்.எல்லா மதங்களும் தங்களுடைய இருப்பை இந்த இந்தியாவில் தங்களது நம்பிக்கை சார்ந்த இருத்தலியலாக நிலைநாட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி எனில் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று எப்படி சொல்வது? மதங்கள் இருக்கத்தானே செய்கிறது ஆகவே இதை அனைத்து மதங்களின்  நல்லிணக்க நாடு என்று தான் சொல்ல வேண்டும்.

மதச் சார்பற்ற நாடு என்பது தவறான விவாதம் ஆகும்.அப்படி அல்லவெனில் இந்த நாட்டில் ஒரு மதமும் இருக்க கூடாது.

இந்துத்துவம், சீக்கியம்,இஸ்லாம் கிறிஸ்துவம், ஜைனம், பொளத்தம், யூதம் உட்பட பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட நாடு இந்தியா!! என்பதை ஏற்றுக் கொள்ளுபவர்கள் அத்தனை மதங்களையும் உள்ளடக்கி நல்லிணக்கம் கண்ட நாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் அடிப்படையில்தான் இங்கு அனைத்து மதத்தினரும் தங்களது இருத்தலியில் வாழ்வை அமைதியாக மேற்கொள்கிறார்கள்!

இவ்வளவு வேற்றுமையிலும் ஒருங்கிணைக்கப்பட்டு சகோதரத்துவத்துடன்  வாழும் சகிப்புத்தன்மை கொண்ட வேறு நாடுகள் உலகில் எங்கும் இல்லை!

என்பதை ஜனநாயக பூர்வமான அறிவுடையோர்   தங்களது நாட்டின் பெருமிதமாக ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள்.

அந்த வகையில்இது ஒற்றை மதம் சார்ந்த நாடு கிடையாது மாறாக பல மதங்களின் நல்லிணக்க நாடு மட்டுமல்ல அதற்குரிய ஜனநாயக மாண்பை காப்பாற்றும் வல்லமை உடைய அரசியல் வலிமையும் உடைய நாடு என்பதுதான் எனது பார்வை!!இன்றைய ஊடகங்களில் வெறுமனே ஸ்டண்ட் அடித்துக் கொண்டு அதை மாற்று இதை மாற்று என்று கூக்குரல் எழுப்பிக் கொண்டிருப்பது வெட்டிவேலை.

Some of the most well known examples for states considered "constitutionally secular" are the United States, France, Turkey, India, Mexico, and South Korea, though none of these nations have identical forms of governance with respect to religion

இப்படித்தான் செக்யூலர் என்பது பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இங்கெல்லாம் மதங்கள் இல்லை என்பவர்கள் கை தூக்குங்கள்.

இல்லையெனில் மனச்சான்றின் படி ஞாபகம் கொள்ளுங்கள்

 நாம் கண்ணீர் விட்டா வளர்த்தோம் பல்வேறு காலனிய
ஆதிக்கங்களுக்கு அப்பால் செந்நீர் ஊற்றி அல்லவா தேசப்பயிர் காத்தோம்.

மற்றபடி இந்தியாவில் வாழ முழு சுதந்திரத்தையும் அனுபவித்துக் கொண்டு முரண்பாட்டின் அரசியலால் அடையாளம் பெற நினைப்பது  அபத்தம்.

••••

எழுதப்படாத அரசியலமைப்பு சட்டங்கள் (Unwritten Constitutions) மரபுகள், நடை முறைகள் என பின் பற்றும் நாடுகள்.
———————————————————-
இங்கிலாந்து ,UK , ஆனால் முதல் அரசியலமைப்பு சட்ட ஆவனம் மகா சாசனம்(Magna carta-Magna Carta Libertatum commonly called Magna Carta is a royal charter of rights agreed to by King John of England at Runnymede, near Windsor, on 15 June 1215)நடை முறைக்கு வந்தது.

கனடா.

சவூதி அரேபியா. ...

நியூசிலாந்து. ...

இஸ்ரேல். இஸ்ரேல் அரசு ஒரு எழுதப்படாத அரசியலமைப்பின் கீழ் செயல்படுகிறது மற்றும் ஜூன் 30, 1950 இன் ஹராரி முடிவின்படி செயல்படுகிறது, இது இஸ்ரேலிய அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

#Constitutions #ConstitutionsofIndia
#Unwritten_Constitutions
#Magna_Carta #செக்யூலர்
#இந்தியஅரசியல்சாசனம் #மதசார்பற்ற #Secular #மதநல்லிணக்க 
#communalharmony

#KSR_Post
24-1-2024

No comments:

Post a Comment