Wednesday, December 23, 2020

 


1.நீ வணங்கினால், உன்னை எட்டி உதைக்கும், நீ எட்டி உதைத்தால், உன் கால்களுக்கு முத்தமிடும். இதுதான் சமுதாயம்.

2.சமுதாயத்தைக் கண்டு சதா தேவையற்ற பிரச்சனைகளுக்கு பயப்படும் ஒருவன் ஒருகாலமும் ஒரு சகாப்தத்தை உண்டு பண்ணவே முடியாது.
3.சமுதாயம் என்பது ஒரு சறுக்குமரம். இதில் வழுக்கி விழத்தான் அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.
4.சமுதாயம் என்பது ஒரு வினோதமான சாலை. அதில் சில இடங்கள் கரடு முரடாகவும், சில இடங்கள் சமமாகவும், சில இடங்கள் வெளிச்சமாகவும், சில இடங்கள் ஒரே இருட்டாகவும் இருக்கும்.
5.பலர் தன்னை வணங்குவதைக் கண்டு எவனொருவன் தான்தான் உயர்ந்தவன் என்று எண்ணிக் கொள்கிறானோ, அப்போதே அவன் வணங்கியவர்களின் கால் தூசுக்குச் சமமாகி விடுகிறான்.
6.மனிதன் வெய்யிலுக்காகவும், மழைக்காகவும் தான் வீட்டைக் கட்டிக் கொள்கிறான். பின் அதில் இருந்து கொண்டே, வெய்யிலுக்காகவும், மழைக்காகவும் ஏங்குகிறான்.
7.பேச்சுவீரன் காரியத்தை மட்டும் விட்டு விடுவான். ஆனால், காரியவாதி பேச்சை மட்டும் விட்டு விடுவான்.
8.உன்னைப் பற்றி நீயே தாழ்வாக நினைக்காதே! தாழ்ந்து போவதற்கு அது வழி வகுத்துவிடும்.
9.மற்றவரின் செயலுக்கு நீ குறை சொல்வது சுலபம். நீ குறையில்லாமல் செய்வது மிகவும் கடினம்.
10.பிறர் படும் துன்பத்தை உற்றுப்பார். உன் துன்பம் குறைவாகத் தோன்றும்.
11.தோல்வியைக் கண்டு சிரி, முயற்சியைக் கை விடாதே. வெற்றி உன் காலடியைத் தேடி வரும்.
12.நீ துணிவோடு முயற்சி செய். வளர்ச்சியின் வித்து தானாக முளைக்கும்.
13.நீ இரக்கம் மிகுந்தவனாக இரு..........ஆனால், என்றும் ஏமாந்தவனாக இருக்காதே..

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...