Thursday, November 17, 2022

கிராம ராஜ்யம் வேண்டும் என என்றும் எமது விரும்பும் நிலைப்பாடு.

*குலோத்துங்க சோழ மன்னன் முடிசூட்டும் நாள். அமைச்சர்களும் பல புலவர்களும் அரசரை வாழ்த்தினர்*

*அப்போது ஒளவையார் மன்னனை வாழ்த்திப்பாட எழுந்தார். மன்னரும் அவையோரும் ஒளவையார் என்ன பாடப்போகிறார் என்று மிகவும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒளவையார் ‘வரப்புயர’ எனச் சொல்லி, அமர்ந்துவிட்டார்*.
*இதைனைக் கேட்டோர் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. பின்னர் ஒளவையாரே இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாக சொல்வர்*.
*வரப்புயர நீர் உயரும்*
*நீர் உயர நெல் உயரும்*
*நெல் உயரக் குடி உயரும்*குடி உயரக் கோல் உயரும்*கோல் உயரக் கோன் உயர்வான்*

திக்கு தெரிய வடபுலத்தில் பணியில் இருந்தாலும் பிறந்த கிராமத்தில் விவசாய வேலைகளையும் கவனிப்பதுதான் மன நிறைவு.
உண்மையான ஆன்மா அங்குதான் உள்ளது. கிராம ராஜ்யம் வேண்டும் என  என்றும் எமது விரும்பும் நிலைப்பாடு.
#ksrpost
17-11-2022.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...