Friday, November 25, 2022

Radhika Santwanamu was the first book to be banned in Madras presidency ராதிகா சாந்தவனம் ஆவுடையக்காளின் பாக்கள. Avudai Akkal and ‘Radhika Santawanam’ by Muddupalani in Tamil very soon

Radhika Santwanamu was the first book to be banned in Madras presidency ராதிகா சாந்தவனம் ('ராதிகா சாந்த்வனமு')ஆவுடையக்காளின் பாக்கள.
Avudai Akkal and  ‘Radhika Santawanam’ by Muddupalani in Tamil very soon
—————————————
இன்றைய  (25.11.2022) ஆங்கில இந்து ஏட்டில் முத்துப்பழனியின்  ‘ராதிகா சாந்தவனம் ’ நூல் குறித்த  செய்தி தமிழ்நாடு இன் ஃபோகஸ் பகுதியில் வந்துள்ளது.
  ‘ராதிகா சாந்தவனம் ’  என்ற இந்த நூல், பலரும் அறியாத நூலாகும். பின் நவீனத்துவத்தை அந்த காலத்திலேயே திறம்பட சொல்லிய இந்த நூலின் பாக்களின் கதைக்களம், தஞ்சாவூர்,  காவேரி டெல்டா பகுதியாகும். முத்துப்பழனி தெலுங்கில் எழுதி சுவடிகளாக இருந்த நூலை, இசைவாணி நாகரத்தினம்மா அச்சில் கொண்டு வந்தார். 






  1912 -இல் -ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் -  இந்தியாவிலேயே முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட நூல் இது. பின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, இந்த நூலுக்கான தடையை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தஞ்சையின் மராட்டிய அரசர் பிரதாபசிம்மனின் ராஜ நர்த்தகியாக இருந்த முத்துப் பழனி தெலுங்கில் எழுதிய நூல்.
17ஆம் நூற்றாண்டின் இறுதியில்
ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட இந்நூல் 1887ஆம் ஆண்டு திருக்கடையூர் கிருஷ்ண ராவினால் பதிப்பிக்கப்பட்டது. குஜிலி புத்தகமாக வெளியானது அப்போது.
இந்தப் புத்தகத்தைத்தான் பின்பு பெங்களூர் நாகரத்தினம்மாள் மூலத்துடன் சரிபார்த்துப் பிழை திருத்தம் செய்து தன் முன்னுரை ஒன்றுடன் வெளியிட்டார். ஆபாசமான பாடல்களைக் கொண்ட நூல் தடைசெய்யப்பட வேண்டுமென்ற விவாதம் தீவிரமாகி, நூலைத் தடை செய்யலாம் என்று 27 செப்டம்பர் 1911 ஆம் ஆண்டு பிரிட்டீஷ்  அரசு உத்தரவை வெளியிடுகிறது. அப்போது தடை செய்யப்பட்ட நூல் விடுதலைக்குப் பிறகே தடை விலக்கப்பட்டது.

 18 - ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல், 584 பாடல்களைக் கொண்டது.  சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட இருக்கிறோம். டெல்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியை தி.உமாதேவி மொழிபெயர்த்த நூலை ஏற்கெனவே காவ்யா வெளியிட்டிருக்கிறது.
  இதே காலகட்டத்தில்தான் ஆவுடையக்காளின் பாக்களும் எழுதப்பட்டன.  பாரதி கவிதை எழுத ஆதர்சனமாகத் திகழ்ந்தவர் ஆவுடையக்காள். இளம் வயதில் விதவையான ஆவுடையக்காள்,  அன்றைக்கே பின் நவீனத்துவ கருத்துகளை முன்னெடுத்து தன்னுடைய உரிமைகளையும் சமூக சூழல்களையும் குறித்து எழுதிய கவிதைகள் அவசியம் கவனிக்கப்பட வேண்டியவையாகும். குற்றாலம் பகுதியில் உள்ள மேற்கு  தொடர்ச்சி மலை வனத்தில் ஐக்கியமாகி தனிமையில் இந்த பாக்களை அவர் வடித்துள்ளார். 
 ஆவுடையக்காள் பாடல்கள், ராதிகா சாந்தவனம் ஆகிய இரண்டு நூல்களையும் கொண்டு வர ஆதிரா முல்லை, நண்பர் ஆர்.ஆர்.சீனிவாசன், மற்றும் கவிஞர் குட்டி ரேவதி ஆகியோர் முன்னெடுப்புப் பணிகளைச் செய்து வருகிறார்கள். கதை சொல்லி, பொதிகை – பொருநை – கரிசல் கட்டளை அமைப்பின் மூலமாக  இந்த இரண்டு நூல்களையும் அச்சில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இந்தப் படைப்புகள் பெருமையைச் சேர்க்கும். 

Radhika Santwanamu was the first book to be banned in Madras presidency 
Radhika Santwanamu, an erotic work of 584 poems in Telugu written by poet – courtesan Muddupalani in the 18th Century, was the first book to be banned in 1912 in Madras Presidency for obscenity. A new edition brought out by Bangalore Nagarathnamma attracted the ban, which was revoked around independence.
The Hindu, 25th  Nov 22.

There is a popular misconception that Post Modernism came from the West. In reality, though India has seen progressive writers in the regional language even in ancient times. In Tamil Nadu, we had progressive poets from the Sangam era such as Andal, Avudai Akkal, Avvaiyar and Karaikalammaiyar, who expressed feminist thoughts and socially revolutionary ideas. Telugu poet, Muddupalani, a courtesan in the 18th century, came up with a collection of 584 poems, some of which propagated sexual liberation of women. 
On behalf of Kadhai Solli,Podhigai-Porunai- Karsal  poet @adhiramullai Adhira Mullai, -RR Srinivasan and poet Kutty Revathy have taken initiatives to publish the works of Avudai Akkal and  ‘Radhika Santawanam’ by Muddupalani in Tamil very soon. Ms. Sandhya Mulchandani has previously translated “‘Radhika Santawanam”  in English.

#ksrpost
25-11-2022


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...