Tuesday, May 2, 2023

#தமிழக கனிமவளத் திருட்டு!



—————————————
 எந்தவிதமான உரிய முன் அனுமதியும் இல்லாமல் திருநெல்வேலி தென்காசி வழியாக கேரளாவுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் மணல், ஜல்லி, கற்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதை புகைப்படத்தோடு சிலநாள்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தேன். 
  
தென்காசி - செங்கோட்டை வழியாக மட்டுமல்லாமல், கன்னியாகுமரி - களியக்காவிளை வழியாகவும் கேரளாவிற்கு இதுபோன்று கடத்தப்படுகின்றன. தேனி மாவட்டம் கம்பம் வழியாக இப்படி சட்டவிரோதமாக இயற்கை வளங்களைக் கடத்துவதும் நடந்து கொண்டே இருக்கிறது.கோவையிலிருந்து  அட்டப்பாடி, பாலக்காட்டை நோக்கியும் தினமும் இப்படிக் கடத்தப்படுவது செய்திகளாக வருகின்றன. 

தமிழக அரசு இதைக் கவனிப்பதும் இல்லை. தமிழக அரசின் ஆசியோடுதான் இது நடக்கிறதா என்பது ஒரு கேள்வி.
 அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள், ‘‘ஒரு யூனிட்டுக்கு ரூ.300 மாமூல் அளித்தால் கடத்தப்படுகின்ற லாரிகள், எளிதாக நகரும்’’ என்று. அப்படி என்றால் ஒரு லாரிக்கு குறைந்தபட்சம் நான்கு யூனிட்டுகள் என்று வைத்துக் கொண்டால் கூட ரூ.1200 மாமூல் கிடைக்கின்றது. இந்த பகற்கொள்ளை மூலம் லாபம் அடைபவர்கள் யார் என்று தெரியவில்லை. 
 இப்படி கடத்தப்படுகிற மணல், ஜல்லி, கற்களை கேரளாவில் பல மடங்கு விலை கொடுத்து வாங்குவதற்கும் தயாராக உள்ளார்கள். கேரளாவுக்கு 

தமிழகத்திலிருந்து நான்கு வழிகளின் வழியாக இப்படி இயற்கை வளங்கள், நமது நீர் ஆதார சிக்கலில்  செல்லும்போது தனிப்பட்ட சிலரும், அதிகார வர்க்கமும் சம்பாதிக்கின்ற பணத்தைக் கணக்கெடுத்தால் அது நமக்கு வேதனையைத் தருகின்றது.

#தமிழக_கனிமவளத்_திருட்டு!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
2-5-2023

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...