Tuesday, May 2, 2023

#இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை உத்திகள்



————————————————————-
 
மாறி வரும் வெளியுறவுக் கொள்கை
****
கடந்த 75 ஆண்டுகளில்,  இந்தியாவின் வளர்ச்சி அடைந்திருக்கிறது;  ஐக்கிய நாடுகள் சபையிலும், பல்வேறு உலக அமைப்புகளிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் இணைந்த ஜி20 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பு நாடாக உள்ளது.  

ஒவ்வொரு நாடும் பிறநாட்டைச் சார்ந்து வாழும் உலகில் வெளியுறவு தொடர்பான காரணிகள் முதன்மை பெறுகின்றன. உலகப் பொருளாதார மாற்றங்கள், உணவுப் பொருள் தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் விலையேற்றம், பருவநிலை மாற்றங்கள், தொற்றுநோய் பரவல், நிலையற்ற அரசியல் சூழல் போன்றவை நமது வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்றன. 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு  நாட்டின் சுதந்திரம்,    பஞ்சசீலம், சர்வ தேசியம், உலக அமைதி, சர்ச்சைகளுக்கு நிதானமாக தீர்வு காண்பது ஆகியவற்றை இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைகளாக்கினார்.
  காலனி ஆதிக்கத்துக்கு எதிரான செயல்பாடு, மனித உரிமைகளுக்கான குரல், நிறவெறிக்கும் இனவெறிக்கும் எதிரான நிலைப்பாடு, வளரும் நாடுகளுடன் இணக்கமான ஒற்றுமை ஆகியவற்றை வெளியுறவுக் கொள்கையில் நேரு புகுத்தினார்.  உலக அமைப்புகளிலும் இந்தியா பங்கு பெற்று தீவிரமாக செயல்பட முடியும் என நேரு நம்பினார்.   உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றில் இந்தியா நிறுவன உறுப்பினரானது. 

இந்தியா அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்தது. 1947, 1949 ஆகிய ஆண்டுகளில் தில்லியில் ஆப்ரோ - ஆசிய மாநாட்டை இந்தியா நடத்தியது. 1955-இல் இந்தோனேசியாவுடன் இணைந்து பாண்டுங் உச்சி மாநாட்டை நடத்தியது. இறுதியாக, 1961-இல் பெல்கிரேடில் அணிசேரா நாடுகளின் இயக்கம் உருவானது. அணி சேரா நாடுகள் அமெரிக்காவுடனோ, சோவியத் யூனியனுடனோ நெருங்கிய நட்புறவு கொள்வதைத் தடுக்கவில்லை. 
 
1962-இல் சீனாவுடன் போரிட்டு, இந்தியா தோல்வியுற்றது. அப்போதெல்லாம் இந்தியாவின் அணிசேராக் கொள்கையை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்து வந்தது. ஆனால் தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வந்தது.  இந்தியாவின் சமூக, பொருளாதார வளா்ச்சிக்கு ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் உதவி செய்துள்ளன. பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் சேரவும் இந்தியா தயங்கவில்லை.      
லால் பகதூர் சாஸ்திரியின் காலத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் இரண்டாவது போரை எதிர்கொண்டது. அப்போது சோவியத் யூனியனுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவால், பாகிஸ்தானுடனான தாஷ்கண்ட் ஒப்பந்தம் சாத்தியமானது.   

இந்திரா காந்தி  1971-இல் நிகழ்ந்த பாகிஸ்தானுடனான போரில் வெ ற்றி பெற்றதும், வங்கதே ச விடுதலைக்கு இந்தியா உதவியதும் வரலாற்று சாதனைகள். பொக்ரானில் நடத்தப்பட்ட முதல் அணுவெடிச் சோதனை மூலம், இந்தியாவின் ஆயுத வலிமை பறைசாற்றப்பட்டது. 

ராஜீவ்  காந்தி பிரதமராக இருந்தபோ து, நாட்டை நவீனமயமாக்குவதும், தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பதும் வெளியுறவுக் கொள்கையின் இலக்குகளாக மாறின. அதற்காக அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த அவர் முனைந்தார்.
 பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, உலக பொருளாதாரத்துடன் இயைந்து செல்லும் வகையில், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 
 
வாஜ்பாய் காலத்தில் அணு ஆயுதத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

நரசிம்ராவ் காலத்தில்,மன்மோகன் சிங்   இந்தியாவை  உலகமயமாக்கல் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக ஆக்கினார் என்றாலும் பாகிஸ்தானுடனான நட்புறவு இல்லை.  சீனாவுடனான உறவோ எல்லையில் மோதலாக நீடிக்கிறது. காஷ்மீர் பிரச்னைக்கோ, சீனாவுடனான எல்லைத் தகராறுக்கோ தீர்வு காணும் வாய்ப்பு அண்மையில் தென்படவில்லை. 
அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பது, இலங்கையில் நிலையற்ற அரசியல் சூழல் ஏற்பட்டிருப்பது, மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளும் இலங்கையில் நேரிட்ட பொருளாதார வீழ்ச்சியைப் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக நேரும் வாய்ப்பு இருப்பது நமது வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பைஏற்படுத்தலாம். அண்டை
நாடுகளில்   நிலையற்ற தன்மை நிலவும்போது, பயங்கரவாதம் பெருகவும், அகதிகள் வருகை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவுப்பொருட்கள் பற்றாக்குறை, பணவீக்க உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. தொலைதூர நாடுகளின் விவகாரங்களால்நாமும்பாதிப்புக்குள்
ளாவோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. 

தெற்காசிய புவிசார் அரசியலை கையாள்வதும், முக்கியமாக இந்தியாவிற்கு வடக்கே உள்ள சீனாவையும், மேற்கே உள்ள பாகிஸ்தானை கையாள்வதும் ஒருங்கிணைந்த மற்றும் சிக்கலான வெளியுறவு கொள்கைகளில் அடங்கும்.அதேபோன்று இந்தியாவுடன் பொதுவான வரலாற்று வேர்களை கொண்ட சிறிய நாடுகளான நேபாளம், வங்காள தேசம், இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படுவதும் இதில் அடங்கும்.  
 
சீனா மற்றும் இந்தியாவுடன் இந்நாடுகள் கொண்டிருக்கும் உறவுகள் பெரும் ஏற்ற இறக்கங்களை கண்டுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும், பொருளாதார நலன்களுக்கும் இவை முக்கியமானவையாக உள்ளன.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை மோடி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதே வேளையில் வளைகுடா நாடுகள், தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளையும் நல்ல முறையில் பேணி வருகிறது 

பாகிஸ்தான்: (3,323 கி.மீ.எல்லை)பாகிஸ்தானுடனான உறவில், தற்காப்பு முறையை தவிர்த்து எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன், அதே சமயத்தில் பயங்கரவாத நாடு என்பதில் சமரசம் செய்து கொள்ளாத முறையில் இந்தியா முன்னெடுக்கிறது.   

பாகிஸ்தான் ஒரு முக்கிய பயங்கரவாத உற்பத்தி கூடமாக மாறி, இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்பி வருகிறது. பாகிஸ்தான் இந்த நிலைமையை மறுக்கவில்லை. இந்தியாவின் அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவுகள் மேம்படுவதன் மூலம் அந்நாடுகள் வளர்ந்து, அது இந்தியா-பாகிஸ்தானிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க உதவும் என்ற நம்பிக்கையில் இந்தியா உள்ளது.
செய்ய வேண்டியவை:
1) பாகிஸ்தானின் அனைத்து எல்லை தாண்டிய பயங்கரவாதங்களையும் நிறுத்தச் செய்தல்
2) பன்னாட்டு அரங்குகளில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்புவது நிறுத்துச் செய்தல்.
 
சீனா: ( 3,488 கி.மீ.எல்லை):
சீனாவுடனான உறவுகள், பரஸ்பர சந்தேகம் மற்றும் மோதல் போக்குகளில் இருந்து, ‘போட்டி மற்றும் ஒத்துழைப்பு’ என்ற போக்கிற்கு மாறி வருகிறது. உலகின் மிகப் பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
செய்ய வேண்டியவை:
1) எல்லைப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு
2) ராணுவ மோதல்களைத் தவிர்த்தல்
3) உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு சீனா அளிக்கும் ஆதரவைக் குறைத்தல்
4)காஷ்மீர் பிரச்னையில் சீனா நடுநிலை வகித்தல்
5) இந்திய உள்கட்டுமான  திட்டங்களில் சீன முதலீடு, தொழில்நுட்பத்தை அதிகரித்தல்
6) இரு நாடுகளின் வர்த்தகப் பற்றாக்குறையை சமன்படுத்துதல்
 
நேபாளம்: (1,751 கி.மீ.எல்லை)
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அமைந்துள்ள நேபாளம் ஒரு அமைதிப் பகுதியாக கருதப்படுகிறது. இந்தியாவின் உள்நோக்கங்கள் பற்றிய சந்தேகம் நேபாளத்திற்கு உள்ள நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் நேபாளத்தின் ஆதரவை பெறவும், நேபாளத்தில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு சாதகமாக நேபாள அரசியல் சாசனத்தை திருத்தி அமைக்கும் முயற்சிகளினாலும் அது முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளது.
2015-இல் நேபாளம் மீது இந்தியா விதித்த பொருளாதார தடையினால், இந்தியா மீது பெரும் அதிருப்தி உருவானது. அந்த பொருளாதார தடையினால் கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வுகள் ஏற்பட்டதாக ஓ.ஆர்.எப். அமைப்பின் தெற்காசிய வாராந்திர அறிக்கை குழுவின் உறுப்பினரான சோகினி கூறுகிறார். நேபாளத்தின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய விஷயம் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
செய்ய வேண்டியவை:
1) எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு
2) இந்திய வம்சாவளியினரான நேபாள குடிமக்கள் பாரபட்சமில்லாமல் நேபாளத்தில் நடத்தப்பட
தல்
3) இந்தியாவில் உள்ள நேபாள எதிர்ப்புணர்வுகளை மட்டுப்படுத்துதல்
4) நேபாளத்திற்கு மனிதாபிமான
5) நேபாளத்திற்கு குழாய் இணைப்பு, ரயில்வே தடங்களைக் கட்ட இந்தியா உதவி செய்தல்
6) வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா கடன் உதவி செய்தல்
 
வங்காளதேசம்: ( 4,096 கி.மீ.எல்லை)
இந்தியாவுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையே பல பிரச்னைகள் உள்ளன; ஓட்டைகள் மிகுந்த எல்லைகளின் வழியாக அசாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களுக்குள் மக்கள் நுழைவதும், டீஸ்டா நதி நீரை பகிர்ந்து கொள்வதிலும், மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் பிரச்னையும் இவற்றில் முக்கியமானவை.
டீஸ்டா நதி நீர் ஒப்பந்தம், 2011 செப்டம்பரில், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் வங்காளதேசம் சென்ற போது கையெழுத்தாக இருந்தது. ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுப்பிய ஆட்சேபனைகளினால், இது கடைசி நிமிடத்தில் தள்ளிவைக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் பொதுவான 54 நதிகளின் விஷயத்தில், பரஸ்பரம் இரு தரப்பினரும் ஏற்கத் தக்க ஒரு தீர்வை கண்டடைவதில் முன்னேற்றம் காண்போம் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
செய்ய வேண்டியவை:
1) குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதை வங்காளதேசத்தை ஏற்கச் செய்தல்
2)  டீஸ்டா நதிப் பிரச்னைக்குத் தீர்வு
3)  இந்தியாவிற்குள் சட்டவிரோதக் குடியேற்றம் நிகழ்வதைத் தடுத்தல்
4) முறையான தூதரக உறவுகள் மூலம் ரோஹிங்கியா அகதிகளை அவர்களுடைய சொந்த நாடான மியான்மருக்குத் திருப்பி அனுப்புதல்
5) எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு

இலங்கை:
சமீப வருடங்களில் சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கத்தின் காரணமாக, இலங்கையை முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இந்தியா கருதுகிறது.  
உள்கட்டுமான திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை பெற்றதில் இருந்தும், ஹம்பன்டோட்டா துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்த விதமும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியது. இறுதியாக, இலங்கைக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை, மோடி அரசை செயலில் இறங்க உந்தியது. ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புகளுக்கு முன்னரே, இலங்கையில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் நடக்கும் சாத்தியங்கள் பற்றி இந்தியா இலங்கையை எச்சரித்தது. இது இந்தியா இலங்கை உறவை பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, பாகிஸ்தானின் ஆதிக்கத்தை எதிர் கொள்ள உதவியது.
செய்ய வேண்டியவை:
1) சீனாவின் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை வெளியேறச் செய்தல்
2)  இலங்கையின் வளர்ச்சிக்கான உதவிகளை இந்தியா அளித்தல்
3)  நேர்மறையான செயலூக்கம் உள்ள இருநாட்டு உறவை மேம்படுத்துதல்.

#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்.
2-5-2023.

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...