Saturday, February 17, 2024

*இந்தியில் பெயர் வைப்பது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் நடந்திருக்கிறது. 18 ஆண்டுகள் மத்திய மந்திரியாக திமுகவினர் இருந்தனர் . அப்போது இதற்கு வாய் திறக்கவில்ல.

*இந்தியில் பெயர் வைப்பது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் நடந்திருக்கிறது.  
18 ஆண்டுகள் மத்திய மந்திரியாக திமுகவினர் இருந்தனர் . அப்போது இதற்கு வாய் திறக்கவில்ல.இப்படி நிலமை இருக்கு கனிமொழி  பேசுகிறார்* தனது மதுவிலக்கு பேச்சியை போல⁉️
*உ-ம் இந்திரா ஆவாஸ் யோஜனா. இது மாற வேண்டுமானால் மத்திய அரசின் அலுவல் மொழி மாற வேண்டும் அதைச் செய்ய திமுக முயன்றதுண்டா*? குறைந்த பட்சம் இந்திக் கூட்டணியின் செயல் திட்டங்களில் அதை இடம் பெறச் செய்யும் திராணியாவது  இவர்களுக்கு உண்டா? நிதீஷ் பேச்சை மறுக்காமல் வாயை மூடிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.

கனிமொழியின் தமிழ் மொழி அபத்தங்களும் இந்திய தேசிய நாடாளுமன்றமும்.

மத்திய அரசின் திட்டங்கள் எங்களுக்குப் புரியாத மொழியில் இருக்கிறது என்று தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்கள் மொழிதான்  மத்திய மாநில உறவுகளில் இணக்கம் காண முடியாப் பிரச்சினையாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

நான் கேட்கிறேன் சுதந்திரத்திற்கு பிறகு 1967 ஆட்சிக்கு வந்த இந்த திமுக குடும்பத்தில் கடந்த 50 வருடங்களாக மத்திய மாநில அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்று வந்த நிலையில் அதாவது மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று உரிமைகளைக் குறிப்பாக  கேட்டபோது இந்த மொழிப் பிரச்சனைகள் இடைஞ்சலாக இல்லையா கனிமொழி அவர்களே? இல்லை நான் கேட்கிறேன் மாறன் குடும்பம் உள்ளிட்ட திமுகவிற்கு ஹிந்தி தெரியாதா? உங்கள் குடும்பங்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை கொண்டகின்றனர்.

டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே மொழிதான் பிரச்சனையா?
உங்களது பேச்சு அபத்தமாக இருக்கிறது!

இல்லை பிஜேபி தவிர டெல்லியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே பிரச்சினையைத் தான் தொடர்ந்து கிளப்புவீர்களா?

எத்தனை முறை டெல்லிக்கு திமுக காவடி தூக்கி இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதா?

அது மாநில உரிமைகளுக்காகத் தான் என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் அதை எந்த மொழியில் கேட்டுப் பெற்றீர்கள்?

ஆங்கிலத்திலா? தமிழிலா?

இருமொழிக் கொள்கையா? மும்மொழிக்கொள்கையா?

பிரிட்டிஷார் ஆண்டபோது இரு மொழி கொள்கையை ஏற்றுக்கொள்வீர்கள்.

இந்திய தேசியம்  ஒருமைப்பாடு கண்டபோது மட்டும் ஹிந்தியை மறுப்பீர்கள்.

தமிழ்நாட்டில் நீங்கள் தமிழ் பேசுவது மாதிரி வடநாட்டில் பல மாநிலங்களில் மக்கள் இந்தியைப் பேசுகிறார்கள்.

ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தில் பல்வேறு மொழிகளைப் பேசி நீங்கள் உங்கள் கோரிக்கைகளை குறிப்பாக தமிழில் பேசி முன் வைக்கவில்லையா?

அதற்கான மொழிபெயர்ப்புக் கருவிகள் அங்கு இல்லையா?
பிறகு எப்படி நீங்கள் உங்கள் உரிமைகளைத்தமிழ்நாட்டிற்கு கேட்டு எந்த மொழியில் பெறுகிறீர்கள்.

நான் கேட்பது நீங்கள் இந்தியில் பேசவில்லை என்பதால் அங்கு உங்களது உரிமைகள் மறுக்கப்படுகிறதா? இல்லை அதற்கான கோரிக்கைகளை ஒருவேளை நீங்கள் ஆங்கிலத்திலோ தமிழிலோ பேசினாலும் பரிசீலிக்கப்படுகிறதா இல்லை நீங்கள் பேசுவது புரியவில்லை என்று நாடாளுமன்ற அவையில் ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்ட எம்பிக்கள் மறுக்கிறார்களா?

மொழி எதுவாயினும் கோரிக்கைகள் நலன்கள் திட்டங்கள் யாவும் கடந்த 75 ஆண்டுகளாக பல மாநில மொழிகள் வழியே மத்திய அரசு பல யோஜனா திட்டங்களை இந்தியா முழுக்க நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறது. அது தமிழ்நாட்டை விதிவிலக்காகக் கருத வில்லை. உங்கள் மனச்சான்றைத் தொட்டு சொல்லுங்கள் வடநாட்டில் திமுகவிற்கு செல்வாக்கை உண்டு பண்ணுவதில் உங்களது பங்கு என்று எதுவும் இல்லையா?

திமுகவின் குடும்ப உறுப்பினர்கள் இந்தியா முழுக்க எங்கெங்கெல்லாம் அல்லது இந்தியாவிற்கு வெளியே கூட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது நீங்கள் அறியாததா?

எடுத்தேன் கவிழ்தேன்  என்கிற மாதிரி எதையாவது பேசி குட்டையைக் குழப்ப வேண்டாம்.
கலைஞரின் மகள் என்று நிலையில் லிப்டில் உயரலாம். நாங்கள பாடிகற்ள் ஏறி வரவே ஆயிரம் தடைகள்…
உங்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி எம்பி வேட்பு மனு மறுமுறையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஜாலியாக இருங்கள்.

தனிமையில் அமர்ந்து நீங்கள் என்ன பேசி இருக்கிறீர்கள் என்பதை யோசியுங்கள் உங்களுக்கே விளங்கும்!

#ksrpost
17-2-2024.




No comments:

Post a Comment