Monday, February 5, 2024

#*அதிகாரம் மமதை,திமிர்,செருக்கு*.

#*அதிகாரம் மமதை,திமிர்,செருக்கு*. 
————————————
அதிகாரம் மற்றும் மமதை, திமிர் செருக்கு. (பரசுராமனுக்கு மமதையைப் பிரித்து (இராமநா. பாயி. 5)). என்பது ஒருவர் தன்னைத்தானே புரிந்து கொள்வதைத் தடுக்கிறது, இல்லையா? 

ஒரு அதிகாரத்தின், அதிகாரமய்யங்கள்,
ஆட்சியாளர்கள் வழிகாட்டியின் கீழ், நீங்கள் தற்காலிகமாக ஒரு பாதுகாப்பு உணர்வை, நல்வாழ்வு உணர்வைக் கொண்டிருக்கலாம், ஆனால் அது தன்னைப் பற்றிய முழு செயல்முறையைப் புரிந்துகொள்வதாகாது. 

அதிகாரம், அதன் இயல்பிலேயே என்னைப் பற்றிய முழு விழிப்புணர்வையும் தடுக்கிறது, எனவே இறுதியில் ஜனநாயக சுதந்திரத்தை அழிக்கிறது.
•••
உந்தன் கேள்வியில் அதிகாரம் சாயல் இருக்குமானால் நிச்சயமாக என்னுடைய பதிலில் திமிரின் சாடை இருக்கும்.

நீ என்னை புரிந்து கொள்ளவில்லை என்று நான் கவலைப்பட மாட்டேன் என்னை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் இன்னும் தகுதி பெறவில்லை என்று போய்க் கொண்டே இருப்பேன்.

பையன் ஆணவமாக இருந்தால் கம்பீரன் என்று கூப்பிடும் இந்த உலகம் பெண்களை திமிர் பிடித்தவள் என்று கூப்பிடுவார்கள் அப்படி கூப்பிட்டாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம்.

நீ எனக்கு மரியாதை கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உன் விருப்பம் ஆனால் நீ எனக்கு மரியாதை கொடுக்காமல் நான் உனக்கு கொடுக்க மாட்டேன் என்பதை தெரிந்து கொள்.

எனக்கு பின்னாடி பேசுறவன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவனுக்கு முன்னாடி போறது நான்.

தனிமையில் இருக்கிறாய் என்பதை நினைத்து தளர்ந்து விடாதே உனது பலம் தனிமைதான்.

சிங்கத்துக்கு எப்போதுமே எந்த இடத்திலும் தனி இடம் உண்டு அதுபோல் தான் நானும்.

நீ வலிமையாக இருக்க வேண்டுமென்றால் துண்டுகளை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்.

உருவத்துக்க் தான் முக்கியத் துவம் என்றால் யானை தான் காட்டுக்கு ராஜா ஆகியிருக்கும்.

கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்கிறான்.

ஒரு சிங்கம் ஆடுகளின் கருத்துகளைப் பற்றி பொருட்படுத்துவதே இல்லை.

அடுத்தவனை போல் இருக்க ஆசை படாதே உனக்கென்று தனித்துவம் உண்டு நாயைப் பார்த்து சிங்கமும் குறைத்தால் அவமானம்தான் மிஞ்சும்.

ஆயிரம் பேரைக் கூட எதிர்த்து நில் ஆனால் எப்போதும் ஒருவரைக்கூட எதிர்பார்க்காதே.

முடியுமானால் பிறரை விட அறிவாளியாய் இரு ஆனால் அதையும் அவர்களிடம் கூறாதே.

 கம்பீரம் என்பது உண்மைக்கு உரித்தானது அதை போய் களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதை சிங்கத்திற்கு உரித்தானது அதை நாய்களிடம் எதிர்பார்க்காதே.

தனித்து விடப்படும் போது தான் நம் பலமும் பலவீனமும் நமக்குத் தெரியவரும்.

இவ்வுலகில் அனைவரும் உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே.

நீ உன்னை நம்பினால் இந்த உலகம் உந்தன் காலடியில்.

நீ யாராக இருந்தாலும் உனக்கென ஒரு தன்மானம் திமிரு எப்பொழுதும் வைத்துக்கொள் யாருக்காகவும் எதற்காகவும் அதை எப்போதும் இழக்காதே.

#அதிகாரமய்யங்கள்
#ஆட்சியாளர்கள்
#அதிகாரதிமிர்

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
5-2-2024.


No comments:

Post a Comment