Tuesday, February 27, 2024

தமிழக தன்நல அரசியல்….

#ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இருப்பேன் என்றார்…
பிறகு இல்லை என்றார்.

பின்,இமயமலை சென்றார்
அயோத்தி சென்றார்
சசிகலாவின் புதிய வீட்டுக்கு சென்றார்
கலைஞர் சமாதிக்கும் சென்றார்.. அதை தாஜ் மகால் என்றார்.
இதுவரை இப்படியாக,தான் ஒரு நல்ல நடிகர் என காட்டி விட்டார். 

இதில்,இன்னொரு சேதி; ஒடிசா முதலமைச்சர் · பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரான நவீன் பட்நாயகின் நடவடிக்கையை பாரீர்…..

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தன் தந்தை பிஜூ பட்நாயக்கின் -  பூரியில்  ஸ்வர்க்துவாரில் -,1997 ல் அமைத்த  நினைவிடத்தை - சமாதியை அகற்ற உத்தவிட்டார். 

அவரின் நினைவு  கல்லில் வாழ்வதை  விட மக்களின் மனதில் வாழ்ந்தால் போதும் என கருத்து தெரிவித்துள்ளார்!! 

மக்களின் இறுதி சடங்கினை நடத்த ஸுவர்கதுவாரில் குறைந்த இடமே இருப்பதால் அச்சமாதி அகற்றப்பட்டதாம். 

அந்த மாநிலத்தில் நாம் சினிமா போஸ்டர்களே பார்க்க முடியாது. 

கோயில்கள் மட்டும் அங்கே பிரமாண்டம் இல்லை. பட்நாயக் வம்சத்தினரின் மனதும் பிரமாண்டம்!! 

கர்நாடக காரன் காவிரியில மேகேதாட் அணை கட்டுறான், ஆந்திரா காரன் பாலாறுல 23 வது தடுப்பு அணை கட்டுறான், கேரளா  காரன்  முல்லை பெரியாறில்  குறுக்கே அணை  கட்டுகிறான்  இவங்க அதைப்பத்தி எந்த கவலையும் இல்லாம கல்லறை கட்டி படையல், சப்பல் கட்டை அடித்து சாமி கும்பிட்டு இருக்காங்க பகுத்தறிவை போதிக்கும்  விடியல், மணல் - போதை பொருள் மாடல்.




#பட்நாயக் #ஒடிசா
#patnaik #odhisa

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh