Wednesday, February 14, 2024

#*வலி;மையானவரின் வலிமிகுந்த வரிகள்*.

#*வலி'மையானவரின்
வலிமிகுந்த வரிகள்*.
————————————
என்னிடம் பெரிதாய்
முகமூடிகள் 
இருந்ததில்லை 

அதனால் ஏற்பட்ட
இழப்புகள்
கொஞ்சம் அதிகம்

இருந்த புன்னகை
முகமூடியையும்
பயன்படுத்தி 
பழசாக போய்விட்டது 

இனி 
தேவையில்லையென்று
 தோன்றுகிறது 

இப்பொழுது 
எனக்கே எனக்கான 
ஒரே ஒரு முகமூடி 

இயல்பாக 
சுதந்திரமாக இருக்க….
- யார் வரிகள் என தெரியல…எங்கோ வாசித்தது….

•••
பாதைகள் எப்போதும் வெற்றியை தீர்மானிப்பதில்ல:அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சி தான் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்.

நீங்கள் முன்னேறும் நேரம் பார்த்து முட்களைப் பாதையில் வீச பலர் வருவார்கள்; அதைக் கண்டு மிரளாது உங்கள் பயணத்தைத் தொடர்ந்தால் இலக்கை அடையலாம்.

ஒவ்வொரு பிரச்சனையும் சாலையில் உள்ள சிகப்பு விளக்கைப்போல,சிறிது நேரம் காத்திருந்து அது பச்சை நிறமாக மாறிய பிறகு செல்வதைப் போலத்தான் வாழ்க்கை.

வாழ்க்கை பிரச்சினைகள் மட்டுமே கொடுப்பதில்லை; பிரச்சினைகளைக் கடந்து செல்லும் வழியையும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது கவனத்துடன் கையாளுங்கள். வெற்றி நிச்சயம்.....

சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.

அயர்ந்து தூங்கினாலும் கச்சிதமாய் எழுப்பி விடுகிறது ஏதேனும் ஒரு கவலை.

எண்ணத்தில் என்னத்தையாவது போட்டு உலப்பிக்கொண்டே இருப்பவர்களுக்கு கவலையில் இருந்து விடுதலை கிடைப்பதில்லை.

எல்லாம் சரியாகிவிடும் என்ற வரி தான் பலரின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாட்களையும் நம்பிக்கையோடு நகர்த்துகிறது.

சோதனைகளை தாண்டிய சாதனை சிறகுகள் வந்தனிக்கிறது.. பெருமிதம் கொள்கிறது.. அந்த வெற்றிகளில் வெற்றி நிறைந்திருக்கும்…....

#வாழ்வியல்சிந்தனைகள்
#lifecoaching 
#வலி
#மையானவரின்_வலிமிகுந்த_வரிகள்

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
14-2-2024.


No comments:

Post a Comment