Saturday, October 25, 2014

இதுவரை நடைப்படுத்தாத பயனற்ற நமது சட்டங்கள் எழுநூறா?

இதுவரை நடைப்படுத்தாத பயனற்ற நமது சட்டங்கள் எழுநூறா?
---------------------------------------------------------------------------------
நமது நாட்டில் கறிக்குதவாத, நடைமுறையில் இல்லாத கிட்டத்தட்ட 700 சட்டங்கள் வெறும் எழுத்துக்களாகவே நூற்றாண்டுக்கு மேல் இருக்கின்றன. இதில் 200 சட்டங்கள் இன்றைக்கு செயல்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று, பிரதமர் அலுவலக முன்னாள் செயலாளர் ஆர்.ராமானுஜம் தலைமையில் அமைந்த குழு ஆய்ந்து கண்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடைமுறையில் உள்ள இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 248வது சட்டக் கமிஷன் அறிக்கையும் இதுகுறித்து பரிந்துரை செய்துள்ளது.

வெறும் சட்டங்களின் எண்ணிக்கையில் மட்டும் இல்லாமல், மக்கள் நல அரசுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் பிரச்சினைகள், நாட்டில் இன்றைக்கு சவாலாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நதி நீர் வாரிய சட்டத்தை (River Board Act) இதுவரை நடைமுறைப்பபடுத்தவே இல்லை. அந்த சட்டம் அமல்படுத்தப் பட்டிருந்தால் மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும். இதுவரை பயனளிக்காத சட்டப் புத்தகங்களை சட்ட அமைச்சகத்தில் அடுக்கி வைத்துக் கொண்டும், பயனுள்ள சட்டங்களையும் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம்.




R. Ramanujan, Former Secretary in the Prime Minister’s office, headed a committee which identified more than 200 laws which are irrelevant today. Law Minister Ravi Shankar Prasad is even more enthusiastic. He says 287 laws. Some of which are a century and a halt old. Will be scrapped this winter. He wants ro remove another 700 acts of Parliament which have permitted the government of the day to spend money from the Consolidated Fund of India.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...