‘#குசேலோபாக்கியானம்’ என்ற தமிழ் இலக்கிய நூல் ஒன்று உண்டு,. அதன் ஆசிரியர் யார் தெரியுமா? இன்றும் இலக்கிய வரலாற்று நூல்களில் ‘வல்லூர் தேவராசப் பிள்ளை’ என்றிருக்கும், ஆனால், அதை எழுதியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. டாக்டர் உ.வே.சா.வின் குரு. இதைப் பற்றி அய்யர் அவர்களே அவர் எழுதிய தம் குருவின் வரலாற்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் தேவராசப் பிள்ளையின் பெயரைத்தான் குறிப்பிடுகின்றன. காரணம் மகாவித்துவான் மனமுவந்து சிஷ்யன் பெயரில் எழுதியிருக்கிறார் என்பதால், ஆனால் அக்காலத்தில் படைப்புக்கு ’ராய்லடி’ கிடையாது. இன்றும் கிடைப்பதில்லை என்பது வேறு பிரச்சினை.
14-9-2020
No comments:
Post a Comment