Monday, May 11, 2015

ஜெயலலிதா தீர்ப்பு

அன்புக்குரிய நண்பர் மோகன் குருசாமி இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் அறியப்பட்ட அரசியல் சமூகப் பொருளாதார அறிஞர்.
திரு வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது அவருக்கு நெருக்கமாக இருந்தார். அவருடைய அரசுக்கு ஆலோசகராகவும் விளங்கினார். அப்போதிருந்தே நான் நன்கு அறிவேன்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், தற்போது  டெல்லியில் வசிக்கின்றார்.  பா.ஜ.க தலைவர்களுக்கு நெருங்கிய நண்பரும் கூட. ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பைக் குறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருப்பது,

“வருமானத்துக்கு அதிகமாக செகந்திராபாத்தில் பண்ணை வீடும், நீலகிரி மாவட்டத்தில் எஸ்டேட்டுகளும், நகைகளும், தமிழகத்தில் பலவிதமான சொத்துகளும் ஜெயலலிதாவுக்கு இன்றைக்கும் இருப்பது கண்முன் தெரிகின்றது.

கீழாண்மை நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா ஜெயலலிதாவுக்கு  தண்டணை வழங்கினார் என்பதும் நம்  அனைவருக்கும் தெரிந்ததே!. ஆனால் கர்நாடக உயர்நீதி மன்றம் இதையெல்லாம் கவனிக்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதைப் போலவே சல்மான் கானுக்கும் நேற்றைக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் செல்வம் கொழித்தவர்கள் குற்றம் செய்தால் தண்டிக்கப்பட மாட்டார்களா” என்று மோகன் குருசாமி வினா எழுப்பியுள்ளார்.


Right view of Mr . Mohan Guruswamy....

 "Jayalalitha's acquittal is literal proof that Justice is Blind and that the Law is an Ass. Her disproportionate assets are there for all to see. The property and farm in Secunderabad, the tea garden in the Nilgiris, the jewellery and the properties in TN and elsewhere are there for all to see. They are common knowledge. But the Karnataka High Court cannot see that nor can it see what the well regarded Judge Michael D'Cunha,who convicted her, saw. Read this with how Salman Khan was given bail and one can only wonder if the rich and powerful can ever be punished in this country? "




இதேபோல நேற்றைக்கு எனக்கு வாட்சப் செயலியில் வந்திருந்த செய்தியையும் நேற்றே முகநூலில் எழுதி இருந்தேன். see more : 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-05-2015.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...