Monday, April 30, 2018

விடுதலைக் களம், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அமைப்பு சார்பில் உகாதி விழா.

நேற்று (29/04/2018) நாமக்கல் நாகராஜனை தலைவராக கொண்ட விடுதலைக் களம், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் திரு. சதாசிவம் எம்.பி, வேங்கடவிஜயன், ஜெகந்நாத் மிஸ்ரா போன்றோரோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
Image may contain: 6 people, people smiling
Image may contain: 4 people, people sittingஇந்த நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், திருமலை நாயக்கர், நீதிக்கட்சியின் நிறுவனர் பிட்டி தியாகராயர், சேலம் வரதராஜுலு நாயுடு, ஓமந்தூரார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு, ஆர்.கே, என்.ஆர். தியாகராஜன், உண்மையான, நேர்மையான கல்வித் தந்ததையாக விளங்கிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிஎஸ்ஜி கல்லூரி நிறுவனருமான ஜி. ஆர். தாமோதரன், ஜி.டி.நாயுடு, உழவர் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு, சென்னை எலமந்தா (முன்னாள் எம்.எல்.சி), மேலவை முன்னாள் தலைவர் அண்ணாவின் நன்பர் சி.பி.சிற்றரசு; இப்படியான பல ஆளுமைகளை குறித்து உரையாற்றினேன். 
அரசியல் களத்தில் நன்கறிந்த சீலநாயக்கன்பட்டி ஸ்டீல் சதாசிவம் அவர்கள், தூரத்தில் இருந்து அரசியலை சரியாகத் தெரிந்து உணர்ந்து பேசக் கூடியவர். 
Image may contain: 1 person
அவர் இறுதியில் பேசும்போது பல நற்கருத்துகளை வெளிப்படுத்தினார். மற்றும் பல உறுப்பினர்கள் கோவை, சென்னை, மதுரை, தேனி, விளாத்திகுளம், சாத்தூர், கோவில்பட்டி போன்ற பல ஊர்களிலிருந்து பங்கேற்றனர். விழாவை நாகராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அற்புதமான செயல்வீரர். பொதுத் தளத்தில் சேலம் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இளைஞர். அவருக்கு எனது பாராட்டுக்கள்.
Image may contain: 3 people, including வால்டேர், people standing, sky and outdoor
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-04-2018

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...