Wednesday, April 25, 2018

இந்திய அரசியல் சட்டம் தேசத்தாயின் தலையில் இருக்கிறதா ?

இந்திய அரசியல் சட்டம் தேசத்தாயின் தலையில் இருக்கிறதா ?
அல்லது பணம் இருக்கும் மனிதர்களின் செருப்புக்கு கீழாக அழுக்கடைந்து இருக்கிறதா...?
————————————————-
(வனபாரதி மீடியாவின் பதிவு)
Image may contain: outdoor, nature and water
தாமிரபரணி ஆற்றின் கரையில் நூறு வருடங்கள் வயதுடைய ஆற்று நொச்சி மரம் ஒன்று வெட்டி சாய்க்கப்பட்டு இருக்கிறது ?
கேட்டால் பொதுப்பணித்துறை அனுமதி அளித்து வேலியிட்டு ஆற்றை அபகரிக்கும் அனுமதி கடிதம் தந்து உள்ளதாக பதில் வருகிறது....?
உண்மையில் பொதுப்பணித்துறை அத்தகைய அனுமதி கடிதம் ஏதேனும் எந்த ஒரு தனி நபருக்கும் வழங்கி உள்ளதா ?
பணம் இருந்தால் ஆற்றையும் அபகரிக்க லாம் என்று இந்திய சட்ட திட்டங்களில் ஏதும் சொல்லப்பட்டதாகவும் தெரியவில்லை ?
இந்திய அரசியல் சட்டம் தேசத்தாயின் தலையில் இருக்கிறதா ?
அல்லது பணம் இருக்கும் மனிதர்களின் செருப்புக்கு கீழாக அழுக்கடைந்து இருக்கிறதா....?
சம்பந்த பட்ட அதிகாரிகள் தார் பாலைவணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டியவர்கள்...
அவர்கள் பால் சுரக்கும் தாமிரபரணி தாய் மடியில் பணி செய்ய லாயக்கு அற்றவர்கள்....
வேதனையுடன்....

#KSRpostings

#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-04-2018

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...