Sunday, April 29, 2018

கமலாதேவி சட்டோபாத்தியாயா

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட 15 பெண்களின் பட்டியலை ஒரு இணைய இதழ் வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில் கமலாதேவி சட்டோபாத்தியாயாவை (Kamaladevi Chattopadhyay) உறுப்பினராக நியமிக்கும் விவாதம் வந்தது. அப்போது பண்டித நேருவும், படேலும் அவரை நியமிக்க விரும்பவில்லை. 

ஏனெனில் அவர் எதிர்த்து பல்வேறு வாதங்களை புரிவார். அதனால் பிரச்சனைகள் ஏற்படும் என்று அவரை தவிர்த்ததாக தி எக்கனாமிக் பொலிட்டிகல் வீக்லி இதழில் செய்தி வந்துள்ளது. 

இவர் யாரென்றால்; மத்திய முன்னாள் அமைச்சருமான கமலாதேவி சட்டோபாத்யாயா தான் இந்தியாவில் முதன்முதலாக தேர்தல் களத்தில் சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட பெண்மணி. கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரருடைய மனைவி ஆவார்.இவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.. 

#கமலாதேவி_சட்டோபாத்யாயா
#இந்தியஅரசியலமைப்புச்சட்டம்
#Constitution_of_India
#Kamaladevi_Chattopadhyay
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-04-2018

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...