Thursday, August 23, 2018

Kuldip Nayar குல்தீப் நய்யார்

மூத்த பத்திரிக்கையாளரும், ஜனநாயகத்தின் காவலருமான நண்பர் குல்தீப் நய்யார் தனது 95வது வயதில் இன்று காலமானார். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நீதிபதி வி.எம். தார்குன்டே (V.M.Tarkunde) மனித உரிமைகள் குறித்தான கூட்டம் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்திற்கு பங்கேற்க வந்தபோது தாக்கப்பட்டார். அந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் எல்லாம் கண்டன அறிக்கையும், மயிலாப்பூர் மாங்கொல்லையில் கண்டனக் கூட்டங்களையும் நடத்தினோம். அவருடைய நண்பரான குல்தீப் நய்யார் இந்த நிகழ்வுகளைக் குறித்து டெல்லியிலிருந்து என்னை அழைத்து விசாரித்தார். 

இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் ஆசிரியராகவும் இருந்தார். அவசர நிலை காலத்தை எதிர்த்து வலுவான அமைப்பை உருவாக்க காரணமாகவும் இருந்தார். 
அவ்வப்போது இந்திய அரசியலில் நல்வினைகளுக்காக குரல் கொடுத்தவர். இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார். இவர் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்த மறைந்த ராஜேந்தர் சச்சார் அவர்களின் உறவினரும் ஆவார். 

இவருடைய புத்தகங்கள் பல புகழ்பெற்றவை. அவசரநிலை காலத்தை குறித்து ‘The Judgment - Inside story of the emergency in India’ என்ற தலைப்பில் 1977ஆம் ஆண்டில் புத்தகத்தை வெளியிட்டார். கடந்த 2012ஆம் ஆண்டில் ‘Beyond the Lines’ என்ற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் சமகால அரசியல் நிகழ்வுகள் பல்வேறு தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும். 

அவர் மறைவு வேதனையடையச் செய்கிறது. அவரும், அவருடைய சுவடுகளும், தடங்களும் எதிர்கால சமூகத்திற்கு வழிகாட்டும். 

#பொது_வாழ்க்கை
#Public_life
#Kuldip_Nayar
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-08-2018

Veteran Journalist Kuldip Nayar seen in the picture (left) protesting against "Press Defamation Bill" along with late Journalist Khushwant Singh in 1988.




No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...