Tuesday, December 18, 2018

தூர்தர்ஷன் காலம் 1980களில்...... #நிகழ்ச்சி.

ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
 #சுரபி தூர்தர்ஷன் காலம் 1980களில்......
#நிகழ்ச்சி.
ஒவ்வொரு ஞாயிறு இரவு 9.30க்கு,அரை மணி நேர நிகழ்ச்சி.  பொது அறிவை வளர்க்கும் ஆச்சரியமான பல விசயங்களைப் பற்றி பேசுவார்கள். நம் இந்திய நாட்டின் வரலாறு, கலாசாரம், பண்பாடு,பழக்க வழக்கங்களைப் குறித்து ஆய்வு,தரவுகளை சொல்லும்  நிகழ்ச்சி. சில நேரங்களில் வெளிநாட்டுத் தகவல்களும் வரும். டைட்டிலில் வரும் இசை மனதை மிருதுவாக வருடக்கூடியது., இதைத் தொகுத்து வழங்கிய ரேணுகா ஷஹானேவிற்கு (Hum aapke hain kaunல் மாதுரி தீக்ஸித்தின் அக்கா) தீவிர ரசிகன் அடியேன். தொகுத்து வழங்கியவர் சித்தார்த். இம் மாதிரி இப்போது நிகழ்ச்சிகளை
பார்க்க முடியவில்லை.
#ksrpost


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...