Thursday, December 27, 2018

கல்வி கூடங்களில் மதிய உணவு திட்டம் மூடப்படுமா.....? அதன் வரலாறும் இன்றைய நிலையும்

கல்வி கூடங்களில் மதிய உணவு திட்டம் மூடப்படுமா.....?
அதன் வரலாறும் இன்றைய நிலையும் 
———————————————
இன்று சத்துணவு திட்டம் என சொல்லப்படும் 
அன்றைய மதிய உணவு திட்டத்தை துவக்கியது யார்?   
1912 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வெளியூர்களில் இருந்து வந்து மெட்ராஸ் எனப்படும் சென்னை மாகானத்தில் தங்கிப் படிக்க வரும் மாணவர்களுக்கு அப்போது எளிதாக உணவு கிடைக்கவில்லை. குஷ்டரோகிகளையும் பார்ப்பனர் அல்லாதவர்களையும் ஒரே நிலையில் பார்த்தனர் சனாதனிகள்.சில உணவுகூடங்களில இவர்களை உள்ளே நுழையக் கூடாது என பலகையில்  எழுதி வைத்தனர். அப்போது தான் சி.நடேசனார் திராவிடர் இல்லம் ( Dravidian association Hostel) துவங்கி வசதியற்றோருக்கு தங்க இடமும் இலவச உணவும் கொடுத்தார். 

அதன் பின்னர் பனகல் அரசர் ஆட்சியில்  அதனை தொடர்ந்து 1920 ஆம் ஆண்டு சென்னை மேயர்  பிட்டி.தியாகராதயர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நகராட்சி பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். 

அதே பிட்டி.தியாகராயர் காலத்தில் கல்வி வளர்ச்சி பெற்றது.  அண்ணாமலை செட்டியாரை அணுகி  அவருடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஆந்திர பல்கலைகழகங்களை தன் சொந்த பணத்தை செலவிட்டு துவங்கினார். இது கடந்த கால வரலாறு.

காங்கிரஸ் ஆட்சியில் காமராசர் மதிய உணவு திட்டத்தை பரவலாக்கினார் , அதன் துவக்கம் நீதிக்கட்சி ஆட்சிகாலம். காமாராசர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வர காரணமாக இருந்தவர்  கல்வித்துறையின் இயக்குனராக இருந்தவருமான  பெரியாரின் சீடருமான என்.டி.சுந்தரவடிவேலு .  
'தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் இத்ஜெகத்தினைஅழித்திடுவோம்' என்று பாடிய பராரதியின் எட்டையபுரத்தில்
காமராஜர் முதன் முதலாக மதிய உணவு
திட்டத்தை சென்னை மாகாணம் முழுவதற்கும் தொடங்கி வைத்தார்.
எம்.ஜி.ஆர் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை நடைமுறை படுத்தினார்.
கடந்த 1989இல் ஆட்சிக்கு வந்து
எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு 
திட்டத்தில் முட்டையும் சேர்த்து சத்துணவாக செயல் படித்தினார்.

இப்போதைய நிலை என்ன?மதிய உணவு திட்டத்திற்கு மூடுவிழா நடத்தி அரசு பள்ளி என்ற கட்டமைப்பையே சீர்குலைக்க நினைக்கும் மத்திய மாநில அரசுகளின் செயல் பாடுகள் உள்ளன.

தமிழகத்தில் இயங்கிவரும் 43,200 மதிய உணவு வழங்கும் மையங்களின் மூலம் 50லட்சம் மாணவர்கள் இதுவரை பயன்பெற்று வந்தனர். இப்படி இயங்கிக்கொண்டிருந்த மையங்களில்  8000மையங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கான காரணமாக மத்திய அரசு இந்த மையங்களில் வேலைசெய்யும் நபர் ஒருவருக்கு மாதம் இதுவரை வழங்கிவந்த ருபாய் 1000த்தை போன மாதத்தோடு நிறுத்திவிட்டது.எனவே தமிழக அரசுக்கு கூடுதல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டத்தை காரணம் காட்டி இந்த முடிவினை தமிழக அரசு எடுத்திருக்கிறது. 

மதிய உணவினை நம்பியே ஏராளமான பள்ளி செல்லும் ஏழை குழந்தைகள் குறிப்பாக கிராம புறங்களில் அரசு பள்ளிக்கு வருகை தந்தனர். இந்நிலையில் மதிய உணவு வழங்குவதை நிறுத்தினால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிடும் ஏற்கனவே அரசின் தவறான கொள்கைகளால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. இதனை காரணமாக வைத்தே கடந்த மாதம் தமிழக அரசு 3003 அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தியது. 

இப்போது மதிய உணவு திட்டமும் கைவிடப்பட்டால்  அரசு பள்ளி என்ற ஒன்றே இருக்காது.ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகி விடும். மாகாணம் 

#மதியஉணவு
#சத்துணவுதிட்டம் 
#ஆரம்பக்கல்வி
#middaymeals
#schools
#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27/12/2018

No comments:

Post a Comment

*ஈழவேந்தன்

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...