Wednesday, December 26, 2018

சுனாமி

இன்று (26-12-2018) சுனாமி என்கிற ஆழிப்பேரலை தனது கோர தாண்டவத்தை தமிழக கடலோர மாவட்டங்களில் நிகழ்த்தி 14 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதன் தாக்கத்தால் ஏற்பட்ட ரணங்களால் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் தங்களது வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர் உள்ளனர். அன்றைய தினம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்பட்டது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் இந்தோனேசியாவில் ஒரு எரிமலை வெடிப்பின் காரணமாக சுனாமி ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் இத்தகைய தொடர் சம்பவங்களால் இயற்கை நமக்கு ஏதோ சொல்ல வருகிறது. ஆனால் மனிதன் அதை ஏற்காமல் புறந்தள்ளுகிறான். ஒரு விடயம் இயற்கையோடு மானுடம் போட்டியிட முடியுமா?

மீண்டும் மீண்டும் 
சொல்லி கொண்டே உள்ளது
இயற்கை
என்னை நேசி என்றே?
ஆனால் மனிதா? நீ சிந்திக்காமல் மாயை வாழ்க்கை வாழ்கிறாய் .. ஆனால் உன்னிடம் சொல்லி கொண்டே இருப்பேன் 
சுனாமியாக 
நில அதிர்வாக 
வெள்ளமாக 
புயலாக 
வாழ்க்கையை தொலைத்த‌ மனிதர்களை நெஞ்சில் ஏந்துவோம் நினைவுகளை நேசிப்போம்...

#சுனாமி
#Tsunami
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
26/12/2018

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...