Saturday, December 29, 2018

திருப்பாவை. மார்கழி 14.

திருப்பாவை. மார்கழி 14.
*******************************
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.
விளக்கம்:

"உங்கள் வீட்டு புழக்கடைத் தோட்டத்து தடாகத்துள் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து, கருநெய்தல் மலர்கள் பூத்துக் குவிந்துள்ளன. காவியுடை தரித்த வெண் பற்களையுடைய தவசிகள், தங்கள் திருக்கோயில்களைத் திறக்க செல்லுகின்றனர். பெண்ணே! நீ எங்களை முன்னரே எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாமலிருந்தும் செய்யவில்லையே என்ற நாணம் துளியும் இல்லாதவளே! பேச்சு மட்டும் இனிமையாகப் பேசுபவளே! சங்கு, சக்கரம் தரித்து, விசாலமான திருக்கைகளையுடையவனும் தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடையவனுமான கண்ணபிரானின் பெருமைகளைப்பாட எழுந்திருப்பாயாக!

No comments:

Post a Comment

*ஈழவேந்தன்

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...