Tuesday, July 18, 2023

முன் மாதிரியான மதிய உணவு திட்டத்தை பாரதியின் எட்டையாபுரத்தில் 66 வருடங்களுக்கு முன்பாக காமராஜர் தலைமையிலான சென்னை மாநில அரசு திட்டத்தை துவக்கிய நாள். (*18-07-1956*)

முன் மாதிரியான மதிய உணவு திட்டத்தை பாரதியின்
எட்டையாபுரத்தில் 66 வருடங்களுக்கு முன்பாக காமராஜர் தலைமையிலான சென்னை மாநில அரசு திட்டத்தை  துவக்கிய நாள். (*18-07-1956*)
—————————————
மதிய உணவுத் திட்டம், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என பாடிய பாரதியின்
எட்டையாபுரம், பாரதி மகாலில். ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்று (18-07-1956).இதே நாளில் அதாவது 66 வருடங்களுக்கு முன்பாக எட்டாயபுரத்தில் காமராஜர் தலைமையிலான சென்னை மாநில அரசு முன் மாதிரியான மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய சிறப்பான நாள்.

 18-07-1956 ம் ஆண்டு எட்டாயபுரம் மகாராஜா தலைமையில்  கல்வித்துறை நெறியாளர்( Director of public instructions) நெ.து.சுந்தரவடிவேலு முன்னிலையில் காமராஜர் துவக்கி வைத்து   நெ.து.சுந்தரவடிவேலுவின் மகனாகிய வள்ளுவன் மதிய உணவு சாப்பிடதை தொடங்கி வைக்கப்பட்ட நாள் இன்று.
 
எனது ‘#நிமிர_வைக்கும்_நெல்லை’நூல் பதிவு
(ஆசிரியர் : இராதாகிருஷ்ணன், கே.எஸ் ; பதிப்பகம் : பொதிகை-பொருநை-கரிசல்.)

#KSR_Post
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்.
18-7-2023


No comments:

Post a Comment