Saturday, July 1, 2023

திருக்குறள், சில பகுதிகள்….



திருக்குறள் சில பகுதிகள்….

1. அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு

2. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம்

3. செயற்கு அரிய செய்வார் பெரியர்

4. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்

5. அறத்தான் வருவதே இன்பம்

6. அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

7. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்



8. பெண்ணின் பெருந்தக்க யாவுள!

9. கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

10. மங்கலம் என்ப மனைமாட்சி

11. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்

12. குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்

13. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்

14. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ’இவன் தந்தை என் நோற்றான் கொல்!’ எனும் சொல்

15. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

16. அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

17. அன்பின் வழியது உயிர்நிலை

18. இனிய உள ஆக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று

19. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

20. நன்றி மறப்பது நன்றன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று

21. தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்

22. அடக்கம் அமரருள் உய்க்கும்

23. யாகாவார் ஆயினும் நா காக்க

24. தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு

25. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

26. நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம்

27. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

28. பிறன் மனை நோக்காத பேராண்மை

29. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

30. ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்

31. ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!

32. சொல்லுக சொல்லில் பயன் உடைய!

33. தீயவை தீயினும் அஞ்சப்படும்!

34. கைம்மாறு வேண்டா கடப்பாடு

35. ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம் பேரறிவாளன் திரு

36. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை

37. ஈதல் இசைபட வாழ்தல்

38. தோன்றின் புகழொடு தோன்றுக

39. வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்

40. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம்

41. வலியார்முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து

42. வாய்மை எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும் தீமை இலாத சொலல்

43. பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்

44. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க

45. பொய்யாமை அன்ன புகழ் இல்லை

46. அகம் தூய்மை வாய்மையால் காணப்படும்

47. சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு

48. தன்னைத் தான் காக்கின், சினம் காக்க

49. இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்

50. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்

51. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்

52. உறங்குவதுபோலும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு

53. பற்றுக பற்று அற்றான் பற்றினை

54. மெய்ப்பொருள் காண்பது அறிவு

55. நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும்

56. கற்க கசடற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

57. எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு

58. கற்றனைத்து ஊறும் அறிவு

59. கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

60. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

61. செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

62. எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்

63. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை

64. அறிவு உடையார் எல்லாம் உடையார்

65. பெரியாரைப் பேணித் தமராக் கொளல்

66. எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

67. வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்

68. ஆற்றின் அளவு அறிந்து ஈக

69. கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து

70. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்

71. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்

72. தேரான் தெளிவும் தெளிந்தான்கண…

No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...