Thursday, July 20, 2023

*வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு படிநிலையிலும், மக்கள் இணைந்து கொண்டே இருப்பார்கள். இதிலிருக்கும் மறுக்கக்கூடாத உண்மை இணைந்தவர்கள் அத்தனை பேரும் தொடர்ந்து உடன் வருவதில்லை. சிலர் தொடர்வதும், பலர் விலகுவதுமாகத்தான் மனிதர்களின் பிணைப்பு இருக்கும்*.




உடனிருப்பவர்களைவிட, விலகிப் போனவர்களில் சிலர் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாக இருப்பார்கள். தொடர்ந்து நினைவில் நின்றிருப்பார்கள். அதனாலோ என்னவோ, அவர்களுடைய விலகல் தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டேயிருக்கும். எத்தனையோ உடனிருந்தாலும், இல்லாத ஒன்றுக்கு ஏங்கும் வகையிலானதுதானே மனித மனம்.

ஒரு உண்மையை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும், விலகிச் சென்றதால் அழுத்தம் கொடுக்கும் வகையினர் எவரும், உங்களுக்காக உங்களோடு இணையவில்லை. தமக்காக உங்களோடு இணைந்தவர்கள். இந்த உண்மை ஆழ்ந்து புரிந்து விட்டால், இல்லாதவர்களை விடுத்து, உங்களுக்காக உங்களோடு இருக்கும் ஒருவரைக் கொண்டாடுவீர்கள்.

நதியின் நோக்கம் பயணிப்பது, ஒதுங்குகின்றவைகளை கழித்துவிட்டு, இணைகின்றவற்றை மட்டும் உடன் எடுத்துச் செல்லும். அணையில் சிறை பிடித்தால் மட்டுமே தேங்கும். தானாகத் தேங்கும் பழக்கம் மனிதர்களைப் போன்று நதிகளுக்கு இல்லை.

You start dying slowly ;

 if you do not travel,
 if you do not read,
 If you do not listen to the sounds of life,
 If you do not appreciate yourself.

 You start dying slowly :
 When you kill your self-esteem,
 When you do not let others help you.

 You start dying slowly ;
 If you become a slave of your habits,
 Walking everyday on the same paths…
 If you do not change your routine,
 If you do not wear different colours
 Or you do not speak to those you don’t know.

 You start dying slowly :
 If you avoid to feel passion
 And their turbulent emotions;
 Those which make your eyes glisten
 And your heart beat fast.

 You start dying slowly :
 If you do not risk what is safe for the uncertain
 If you do not go after a dream
 If you do not allow yourself
 At least once in your lifetime
 To run away from sensible advice

 Don't let yourself die slowly
 Do not forget to be happy!

- #Pablo_Neruda 

சில சமயங்களில்
எனக்கு ஒன்றுமே தோன்றுவது கிடையாது
என்ன செய்வோம் என்று எந்த ப்ளேனும் இருக்காது
யாருடனும் பேசத்தோன்றாது
இறைவனிடம் போய் கையேந்தவும் தோன்றாது
எப்படிப்பட்ட உணவையும் ருசித்துண்ணத்தோன்றாது
எந்தப்பாடலையும் கேட்க முடியாது
எந்தப்படத்தையும் பார்க்க முடியாது
எங்கேயும் போய்வரப்பிடிக்காது
அழ முடியாது 
சிரிக்க முடியாது

இப்படித்தான்
நான் மெல்லம் மெல்லமாய்
தவண்டு தவண்டு
ஏறிக்கொண்டிருக்கின்றேன்
அந்தப்பெரும்மலையின் மேல்

நான் நாடாமலேயே
இத்தனை இத்தனை வலிகளை
என்னில்
ஏன் சுமந்துகொண்டிருக்கவேண்டும்
என்றறிந்துவிட…

#ksrpost
20-7-2023.

No comments:

Post a Comment