Sunday, March 29, 2020

கரானாவுக்கும்_ஹார்வர்டு பல்கலைக்கழத்திற்கு_நிதி*_*வழங்கியராஜீவ்_படுகொலை_சிறைக்கைதி*

*கரானாவுக்கும்_ஹார்வர்டு  பல்கலைக்கழத்திற்கு_நிதி*_*வழங்கியராஜீவ்_படுகொலை_சிறைக்கைதி*
————————————
ராஜீவ்  படுகொலையில் சிறையில் வாடுகின்ற ஏழுவரில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் அருப்புக்கோட்டை  தம்பி ரவிச்சந்திரன், கரோனா நிதிக்காக முதலமைச்சர் நிதிக்கு மதுரை சிறையில் இருந்து சிறைவாச சம்பளத்தொகையில் 5000  அனுப்பியுள்ளார். அதுமட்டுமல்ல அமெரிக்கா ஹார்வர்டு பல்கலை
கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.20000 நிதி  நன்கொடை நிதி அனுப்பினார். இவை யாவும் சிறையில் அவர் பணியாற்றிக் கிடைத்த ஊதியத் தொகையாகும். இவர் தான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக அறிமுகமானவர். கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இவருக்கு ஊடக வெளிச்சமே கிடையாது. இது பற்றிய இன்னொரு விடயமும் கவனிக்கப்பட வேண்டும். ராஜீவ் காந்தி கொலையில் அந்த ஏழு பேரின் பெயரைகளையும் முழுமையாக உச்சரிக்கப்படுவதில்லை. அந்த ஏழு பேரினுடைய தியாகம் அளப்பரியது. அப்பாவியான இவர்களை சரியான புலனாய்வு விசாரணை இல்லாமல் இந்த வழக்கில்  தங்கள்  இளமையை தொலைத்து காலத்தை தள்ளுகின்றனர். எனவே எழுவரின் தியாகமும் ஒருவொருக்கொருவர் குறையில்லாது சமமானவை என்பதை ஆரோக்கியமாக புரிதுக் கொண்டால் சரி.




கே. எஸ். இராதாகிருஷ்ணன்
29.03.2020
#ksrposts

#கரானா
#ராஜீவ்_படுகொலை

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...