Sunday, April 10, 2016

பிஜு பட்நாயக் நூற்றாண்டு விழா (1916 - 2016)

நவீன ஒடிசாவை வடிவமைத்தவர், ஆற்றலாளர், பிஜு பட்நாயக்-க்கு இப்போது நூற்றாண்டு விழா எடுக்கப்படுகின்றது. இவரை ஒரு முறை நெடுமாறன் அவர்களோடு டெல்லி சென்றபோது முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வீட்டில் அறிமுகமாகி சந்தித்ததுண்டு. இவர்தான் தலைவர் கலைஞர் அவர்களையும், எம்.ஜி.ஆரையும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்திக்க வைத்து, தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் இணைய வேண்டும் என்று 36 ஆண்டுகளுக்கு முன்னால் முயற்சி எடுத்தவர். அவசர நிலை காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனோடு இணைந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க முக்கிய பங்காற்றியவர். தி.மு.க.-அ.தி.மு.க. இணைப்பு குறித்து அன்றைக்கு கலைஞர் அவர்கள் தெரிவித்தக் கருத்துக்களும் இத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது.

பிஜு பட்நாயக் (1916–1997) பிஜு பாபு எனவும் அறியப்படுகிறார். மார்ச் 5, 1916 அன்று ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் பிறந்த பிஜயானந்தா பட்நாயக் லக்‌ஷ்மிநாராயண் மற்றும் ஆஷ்லதா பட்நாயக்கின் மகனாவார். கட்டாக்கில் உள்ள ரவென்ஷா கல்லூரியில் அவர் அறிவியல் கல்வி பெற்றார். அவரது மாணவப் பருவ நாட்களில் விளையாட்டுகளில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டவர், பல்கலைக்கழக கால்பந்து மற்றும் ஹாக்கி அணிகளுக்குத் தலைவராகவும் இருந்தார். ஏரோநாட்டிகல் டிரைய்னிங் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவில் வானூர்தியியல் பாடத்தில் கல்வி பயின்றார். இந்திய தேசிய ஏர்வேஸில் சேர்ந்த அவர், 1940 முதல் 1942 வரையிலான போரிலும் கலந்துகொண்டார். 1940-42 ஆண்டுகளில் நடந்த போரின் போது வான் வழிப் போக்குவரத்து ஆணையின் தலைவராகவும் பணியாற்றினார். அதற்குப்பின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடன் அவரது நடவடிக்கைகள் காரணமாக 1945 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார். மகாத்மா காந்தி, கோபபந்து தாஷ் மற்றும் மதுசூதன் தாஸ் ஆகியோரின் மூலம் ஈர்க்கப்பட்ட பட்நாயக் இந்திய சுதந்திர இயக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நேபாளிய ஜனநாயக இயக்கத்துடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்த பட்நாயக், 1947 ஆம் ஆண்டில் டச்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தோனேசியா நடத்திய தீவிரமான போராட்டத்தில் அவர்களுக்கு உதவும் கருவியாகவும் செயல்பட்டார். இந்தோனேசியா அதன் உயர்ந்த குடிமுறை சார்ந்த விருதான பூமி புத்ராவை (நாட்டின் குடிமகன் விருது) பட்நாயக்கிற்கு வழங்கியது. ஒரு இந்தியர் இறந்ததிற்காக மற்றொரு நாட்டின் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது இவர் ஒருவருக்காக மட்டுமே. "இந்தியாவின் கடற்கொள்ளையர்" என பட்நாயக்கை நேரு பாசமாக அழைப்பார். இந்தியப் நாடாளுமன்றத்தில் அவரது காலத்தின் போது, "தைரியம், இயக்கத்தன்மை மற்றும் பணிக்குரிய சுறுசுறுப்பு ஆகியவற்றை பிஜு பட்நாயக் கொண்டுள்ளார்" என நேரு கூறினார். இந்திய மாநிலமான ஒரிசாவின் முதலமைச்சராக இருமுறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் முதன் முறையும், 1990 முதல் 1995 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையும் முதலமைச்சராக இருந்தார்.

பிஜு பட்நாயக் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற போது நேருவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நேருவின் நம்பகமான நண்பர்களில் இவரும் ஒருவரானார். பண்டைய காலங்களில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துடன் பாரம்பரியத் தொடர்புகள் வைத்திருந்த இந்தோனேசிய மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு நேரு பரிவு காட்டினார். ஜப்பானியர்கள் மூலமாக இந்தோனேசியா கைப்பற்றப்பட்ட போது, 1816 முதல் 1941 ஆம் ஆண்டு வரை டச் ஆளுமையின் கீழ் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் வீழ்ச்சியடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 17, 1945 அன்று இந்தோனேசிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூலமாக இந்தோனேசியாவின் சுதந்திரம் முடிவு செய்யப்பட்டது. இந்த நாடுகளின் மீது மீண்டும் ஆளுமையைக் கொண்டு வர டச்சு முயற்சித்தது, மேலும் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல்களையும் ஏற்படுத்தத் தொடங்கியது. ஜனாதிபதியாக டாக்டர் சுக்கரனோவின் புதிய அரசாங்கத்தின் கீழ், அரசாங்கத்தின் மேல் ஆதரவைப் பெறுவதற்காக வலிமை மிக்க கொள்கைப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். டாக்டர் சுக்கரனோவின் நம்பிக்கைக்கு பாத்திரமான துணைநிலைப் படை அதிகாரியான டாக்டர் ஜாஹ்ரிர் 14 நவம்பர் 1945 அன்று இந்தோனேசியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், இந்தியா அரசாங்கத்தின் இடைப்பட்ட தலைவராகவும் இருந்த நேருவுடன் அவர் நட்புறவுடன் இருந்தார். ஜூலை 1946 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் மறுசீரமைவுக்காக இந்தியாவின் மூலம் அனுப்படும் ஆடைவகைகள், விவசாயக் கருவிகள், டயர்கள் மற்றும் பிற பொருள்களைக்கு மாற்றாக 40,00,000 டன்கள் அரிசியை வழங்குவதாக இந்தோனேசிய அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

மார்ச் 23, 1947 அன்று, முதல் ஆசிய நாடுகளுக்கு இடையே ஆன கலந்தாய்விற்கு 22 ஆசிய நாடுகளுக்கு நேரு அழைப்பு விடுத்தார், இதில் முக்கியமாக ஜஹ்ரீருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மார்ச் 25 அன்று, டச்சுடனான ஒப்பந்தம் நிறைவு பெற்ற பிறகு கலந்தாய்வில் அவர் உரையாற்றினார். டச்சு பொய்யான காரணங்களைக் கூறி சிறியதாய் சிக்கல்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தது. இறுதியாக 21 ஜூலை 1947 அன்று இந்தோனேசியாவின் மேல் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுத்தனர். உடனடியாய் ஜனாதிபதி சுக்கரனோ, ஜாஹ்ரீருடன் கலந்தாலோசித்து, டச்சுக்கு எதிராக சர்வதேச பொது கருத்தை உருவாக்கும் படி கூறி அவரை நாட்டை விட்டுச் செல்லும் படி ஆணையிட்டார், மேலும் UNO முன்பாக இந்த விவகாரத்தை ஏற்கும் படி நட்பு நாடுகளை வேண்டினார். இந்தோனேசியக் கடல் மற்றும் வான்வழி மார்க்கங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டச்சிடம் இருந்து அதிகாரத்தைப் பெற அவர் முயற்சித்தார், ஆனால் அதில் அவர் வெற்றிபெற முடியவில்லை. மேலும் அவர் கடுங்கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த இக்கட்டான நிலைமையில் அவருக்கு உதவ நேரு முன்வந்தார். இந்தப் பொறுப்பை அவர் கைதேர்ந்த விமான ஓட்டியும், சாகசங்கள் புரிவதில் அதிக விருப்பம் கொண்டவருமான பிஜு பட்நாயக்கிடம் ஒப்படைத்தார். பிஜு பட்நாயக் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கையில் இறங்கினார். கலிங்க வரலாற்றை வாசிப்பதில் பேரார்வமிக்கவராக இருந்ததன் காரணமாக, முற்காலத்தில் கலிங்காவும் இந்தோனேசியாவும் எவ்வாறு கலச்சார ரீதியாக நீடித்திருந்த நட்புறவைக் கொண்டிருந்தனர் என்பதை பிஜு அறிந்திருந்தார், மேலும் இந்தோனேசிய மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் இழந்திருந்த பகுதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பு அமைந்ததையும் அவர் அறிந்திருந்தார். அனைத்து இடர்களையும் அவர் துணிவுடன் கடந்தார். அவர் ஜாவாவுக்கு பறந்து சென்று, 22 ஜூலை 1947 அன்று ஜாவா தீவுகளில் இருந்து சூல்தான் ஜாஹ்ரீரை அவரது சொந்த டகோட்டாவைக் கொண்டு சிங்கப்பூர் வழியாக 24 ஜூலை அன்று இந்தியாவுக்கு கூட்டி வந்தார். இறுதியில் அவரது இந்தத் திட்டத்தில் ஜாஹ்ரீர் வெற்றியடைந்தார். பிஜு பட்நாயக்கின் உன்னதமான மற்றும் வீரஞ்செறிந்த செயல்கள் இந்தோனேசிய அரசாங்கம் மூலமாக சரியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரது வீரஞ்செறிந்த செயல்பாட்டிற்கு, இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பூமி புத்ரா' விருது அளிக்கப்பட்டது, வெளிநாட்டவர்களுக்கு இவ்விருதை அவர்கள் தருவது மிகவும் அரிதாகும்.

1947 ஆம் ஆண்டு வரலாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜம்மு காஷ்மீர் நடவடிக்கையில் பிஜு பட்நாயக் முக்கியப் பங்காற்றினார். ஆக்ஸ்ட் 1947 அன்று, இந்தியா ஆட்சிநிலையைப் பெற்றது, இதன் விளைவாக முன்பு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மாநிலங்கள் சுதந்திரமடைந்தன. இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையப்போவதாக அவர்கள் முடிவெடுத்தனர். காஷ்மீரின் ராஜா காஷ்மீரை சுதந்திரமாக ஆட்சி புரிய விரும்பினார். ஆனால் காஷ்மீரை 22 அக்டோபர் அன்று பாகிஸ்தான் பகுதியினர் தாக்கியபோது பிரச்சினை தொடங்கியது. அவர் விரைவாக அமைச்சர் குழுவை அழைத்து காஷ்மீர் இந்தியாவுடன் சேர்வதை ஏற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவெடுத்தார். 26 அக்டோபர் அன்று, ராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அச்சமயம் பாகிஸ்தான் காஷ்மீர் பிரதேசத்தின் பெரும்பகுதியைப் பிடித்திருந்தது, மேலும் ஸ்ரீநகரைப் பிடிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருந்தது.

மிகவும் குறைவான நேரத்தில் எதிரிப் படையினரை தடுத்து நிறுத்துவதற்கு போர் படையைத் திரட்ட வேண்டி இருந்தது. ஒரு மணிநேரத் தாமதம் கூட நமது தேசத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அமையும். நேரமின்மை காரணமாகவும், தகவல் தொடர்பில் கடினம் இருந்ததாலும் படைகளை தரைவழியாக அனுப்புவதில் சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தன. வான்மார்க்கமாக படைகளை அனுப்புவது மட்டுமே சாத்தியக்கூறாக இருந்தது. மீண்டும் அது எளிய பணியாக இல்லை. பள்ளத்தாக்குகள் மிகவும் அதிகமான முகப்புகளைக் கொண்டிருந்தன, மேலும் பறப்பதற்கு மிகவும் கடினமாகவும் இருந்தது. இந்திய விமானங்கள் பனியில் உறைவதில் இருந்து தடுக்கும் கருவியையோ, அதிக உயர்த்தில் பறப்பதற்கு கண்டிப்பாக தேவையான ஆக்ஸிஜன் அமைப்பையோ அவர்களுக்கு வழங்கினர். ஸ்ரீநகரின் விமான தளம் நமக்கு சொந்தமாக உள்ளதா அல்லது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு விட்டதா என்பதும் சரியாகத் தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தப் போர் மிகவும் அச்சம் விளைவிக்ககூடியதாக இருந்தது. கட்டுக்கு அடங்காத எதிரிக்கு சாதகான சூழ்நிலையை ஏற்று நடப்பதற்கு தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட சிறப்பான, துணிச்சலான விமான ஓட்டிகள் தேவைப்பட்டனர்.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், பிஜு பட்நாயக் பங்கேற்று சீற்றமுடன் தேசத்திற்கு பணியாற்றத் தயாரானார். மற்ற எதைக் காட்டிலும் அவரது தாய்நாடு அவருக்கு முக்கிய ஒன்றாக இருந்தது. அவர் இந்தப் பணியை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டார். அவரது முயற்சிகள் வெற்றியடைந்தன. 27 அக்டோபர் 1947 10.00 மணி அளவில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் முதல் காலாட்படையினர் அணியை அவரால் இறக்கி விட முடிந்தது.

பட்நாயக்கின் அரசியல் யோசனைகளானது சமதர்மம் மற்றும் கூட்டாட்சிமுறை ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் சமமான வளங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்ற அவரது வலிமையான பரிந்துரைகளானது, ஒரிய ஆக்கக்கூறுகளில் அவரை ஒரு வெற்றியாளராக உருவாக்கியது.

1946 ஆம் ஆண்டு பட்நாயக் வடக்கு கட்டாக் தொகுதியில் இருந்து ஒரிசா சட்டமன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டில், முறையே ஜெகனாத் பிரசாத் மற்றும் சொரொதாவிடம் இருந்து அவர் வெற்றிபெற்றார். 1961 ஆம் ஆண்டில், மாநிலக் காங்கிரஸின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சியினர் 140 தொகுதிகளில் 82 இல் வெற்றியடைந்தனர், மேலும் 23 ஜூன், 1961 அன்று ஒரிசாவின் முதலமைச்சராக (சவுத்வார் தொகுதியில் பிரதிநிதியாக இருந்த) பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் காமராஜர் திட்டத்தின் கீழ் பட்நாயக் பதவியை இராஜினாமா செய்த 2 அக்டோபர் 1963 அன்று வரை அந்தப் பதவியில் அவர் நீடித்தார். அவரது 45வது வயதில் ஒரிசாவின் முதல்வராக இருந்தார்.

1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்திரா காந்திக்கு நெருங்கிய நண்பராக பட்நாயக் இருந்தார். எனினும், 1969 ஆம் ஆண்டு தலைவர் தேர்தலின் போது அவர்கள் இருவரும் மோதிக்கொண்டனர். அவர் காங்கிரஸை விட்டு வெளியேறி உட்கல் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சியை ஆரம்பித்தார். 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியினர் போதுமான வெற்றியைப் பெற்றனர். பட்நாயக் அவரது பழைய நண்பரான ஜெயப்பிரகாஷ் நாராயணுடன் மீண்டும் நட்புறவைப் புதுப்பித்துக் கொண்டார், மேலும் ஜெ.நா இயக்கத்தில் இணைந்தார் 1974 ஆம் ஆண்டு இந்த இயக்கம் வேகம் பெற்றது. 1975 ஆம் ஆண்டு அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, கைது செய்யப்பட்ட எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவராக பிஜு பட்நாயக்கும் இருந்தார்.

1977 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்ட அவர் லோக் சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டு, முதன் முறையாக எஃகு மற்றும் தாதுப் பொருள்களுக்கான மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். 1979 ஆம் ஆண்டு வரை மொரார்ஜி தேசாய் மற்றும் சரன் சிங் ஆகியயோரின் இரு அரசாங்கங்களிலும் பதவியில் நீடித்திருந்தார். 1985 ஆம் ஆண்டு இந்திரா காந்தி இறந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் அலையின் காரணமாக ஜனதா தள வேட்பாளராக கெந்த்ரபாராவில் இருந்து 1980 மற்றும் 1985 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.. 1989 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தோல்வியடைந்ததுடன், அரசியல் பலரறி நிலையில் இருந்து பின் தங்கினார். எனினும், இக்கட்டான சூழ்நிலையில் வி.பி. சிங் பிரதமர் பதவி வகிப்பதிற்கு பின்னணியில் முக்கியப் பங்கு வகித்ததில் இருந்து, மீண்டும் ஒரிசாவிற்கு சென்று சட்டமன்ற தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்தார். 1990 ஆம் ஆண்டில் மாநில சட்டமன்ற தேர்தலில் ஜனதாத் தளம் அதிக வாக்குகளைப் பெற்றதுடன் (சட்டமன்ற இருக்கைகளில் மூன்றில் இரண்டு பங்கு), 1995 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக ஒரிசாவில் பிஜு பட்நாயக் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1996 ஆம் ஆண்டு கட்டாக் மற்றும் அஸ்கா வாக்காளர் தொகுதிகளில் இருந்து லோக் சபாவிற்கு பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 17, 1997 அன்று அவருக்கு இதயத்தில் சுவாசம் கோளாறில் இறக்கும் வரை அப்பதவியில் அவர் நீடித்திருந்தார்.

1992 ஆம் ஆண்டில், பிஜயானந்தா பட்நாயக் பின்வரும் மேற்கோளை ஒரிசா மக்களுக்காக விட்டுச் சென்றார்;

"என் கனவில் 21வது நூற்றாண்டில் இந்த மாநிலத்தை முன் நடத்திச் செல்லும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை நான் கொண்டிருப்பேன். அவர்கள் பெருமிதத்தையும், தன்னம்பிக்கையையும் தன்னுள்ளே கொண்டிருப்பர். அவர்களைத் தவிர வேறு யாரிடமும் அவர்கள் இரக்கத்தைப் பெற மாட்டார்கள். அவர்களது மூலைகளின் நுண்ணறிவு மற்றும் திறன்களைக் கொண்டு, கலிங்காவின் வரலாற்றை மீண்டும் கைப்பற்றுவர்" என்றார்.

பட்நாயக் தனது பணியைத் திறம்படச் செய்துமுடிப்பவர் ஆவார். சுதந்திர இயக்கத்தில் அல்லது அரசியலில் அல்லது ஏழ்மை அகற்றுபவராகவும் பணிகளை மேற்கொண்டார். அவர் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். பிஜு பாபுவின் இதயத்திற்கு மிகவும் பிடித்த பெயராக கலிங்கா இருந்ததால், கலிங்கா டியூப்ஸ், கலிங்கா ஏர்வேஸ், கலிங்கா இரும்புப் பணிகள், கலிங்கா ரீபேக்டரிகள் மற்றும் ஒரியாவின் தினசரி செய்தித்தாளான கலிங்கா போன்றவற்றை உருவாக்கினார். 1951 ஆம் ஆண்டில் UNESCOக்கு பொறுப்பில் நம்பிக்கைக்குரியதாகவும் மக்கள் பலரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முனைவாக்கத்திற்காகவும் சர்வதேச கலிங்கா பரிசு என்பதனை பட்நாயக் உருவாக்கினார். ஹிராகுட் அணை, பரதீப் கோட்டை, ஒரிசா வான்வழி மையம், புவனேஷ்வர் விமானநிலையம், கட்டாக்-ஜகத்பூர் மஹாநதி நெடுஞ்சாலை பாலம், ரூர்கேலா ரீஜினர் எஞ்ஜினியரிங் காலேஜ், ரூர்கேலா இரும்புத் தொழிற்சாலை மற்றும் சவுத்வார் மற்றும் பார்பில் தொழிலகப் பட்டைகள் உள்ளிட்டவைகளை இந்த செயல்திட்டம் கொண்டிருந்தது. கால்பந்தில் கலிங்கா கோப்பையையும் அவர் உருவாக்கினார்.

பிரதீப் துறைமுகம் , பட்நாயக் பிரதீப்பில் ஒரு துறைமுகம் கட்டுவதில் முனைப்புடன் இருந்தார். பிரதீப் துறைமுகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்குவதற்கு மத்திய அரசாங்கம் மறுத்த போது, அவர் கூறியதாவது: இந்திய அரசாங்கம் நரகத்திற்குச் செல்லும். மாநில அரசாங்கம் மற்றும் என்னுடைய சொந்த பணத்துடன் நான் துறைமுகத்தைக் கட்டுவேன் என்றார். மேலும் அதற்காக அவர் ரூபாய் 1.60 பில்லியனை செலவழித்தார். பின்னர், நேரு அந்த செயல்திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்தார். இன்று அது ஒரிசாவின் மிகவும் புகழ்வாய்ந்த துறைமுகமாக இருக்கிறது.

நேரு மற்றும் பட்நாயக் , பட்நாயக்கை "இந்தியாவின் கடல்கொள்ளையர்" என நேரு பாசமுடன் அழைத்தார். ஒரிசாவிற்கு அதிகமான உதவியை வழங்குவது பற்றிய தனது முடிவிற்கு நேரு பாராளுமன்றத்தில் நேரு விமர்சிக்கப்பட்ட போது, அதற்கு தனது பதிலில் நேரு, '"துணிச்சலும், இயக்கத்தன்மையும், பணியை செய்வதற்கு உற்சாகமும் நிறைந்தவர் பிஜு பட்நாயக். அதனால் ஒரிசாவிற்கு அதிக உதவியை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை" என்றார். 1962 ஆம் ஆண்டில் சீனர்களின் படையெடுப்பின் போதும் அதைத் தொடர்ந்து வந்த நெருக்கடி நிலையின் போதும், நேரு அடிக்கடி ஒரியத் தலைவரின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டார். சிலசமயங்களில் நேருவின் அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்பு ஆலோசகராகவும் பட்நாயக் செயல்பட்டார். 'இராணுவ விவகாரங்களில் பட்நாயக்கின் பரிச்சயம் மூலமாக பிரதமர் ஈர்க்கப்பட்டிருந்தார்,' என்று அந்நேரத்தில் ஒரு அரசியல் விமர்சகர் எழுதினார். 'விடியல் இயக்கத்திற்கான ஒரு வெற்றியாளருக்கான நேருவின் தேடல் பார்வையானது பிஜுவின் மேல் நிலைத்தது' என்பது பின்னர் சிறிய ஆச்சரியமாகும்.

ஊழலுக்கு எதிரான நிலை , ஊழலுக்கு எதிராக அவர் போராடுகையில் 'பிழை செய்யும் அனைத்து அதிகாரிகளையும் அடிக்க வேண்டும்' என்று ஒரு முறை கூறினார். எனினும் அவரது அரசாங்கம் அவலமான வகையில் ஊழலைக் கட்டுப்படுத்தவும், வீழ்த்தவும் தவறியது.

இறப்பில் , பட்நாயக்கின் 79வது பிறந்தநாளில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு நீங்கள் இறக்க விரும்புகிறீர்கள் என வினவியதற்கு, அவர் திறமையாகப் பதில் கூறியபோது, 'ஒரு விமான விபத்திலோ அல்லது நீண்டகால பிணியின் மூலமாகவோ இறக்க விரும்பவில்லை. நான் திடீரென இறக்க விரும்புகிறேன், கீழே விழுந்தவுடன் இறக்க விரும்புகிறேன்' என்றார்.

ஒரிசாவிற்காகவும், ஒரிய மக்களுக்காகவும் , 'ஏழ்மையாகப் பிறப்பதில் தவறில்லை, ஆனால் காலம் முழுவதும் அவ்வாறே நீடித்திருப்பது பெருங்குற்றமாகும்'. 'எனக்கு நம்பத்தகுந்தவராக இருக்கத் தேவையில்லை, ஆனால் மாநிலத்தின் ஊழ்வினைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்'. 'ஒரிசா ஏழ்மையான மக்கள் வாழும் செல்வமிகுந்த மாநிலமாகும்'. 'அதனால் உங்கள் மாநிலத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும், வருத்தப்படக்கூடாது' என்றார்.

ஒரிய அரசாங்கம் பல்வேறு கல்வி நிலையங்களின் பெயருக்குப் பின்னால் பிஜு பட்நாயக்கின் பெயரை இட்டுள்ளது. புவனேஸ்வரில் பிஜு பட்நாயக் விமானநிலையம், பிஜு பட்நாயக் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி (BPUT) மற்றும் பல அவற்றில் அடங்கும்.

கியான் பட்நாயக் என்பவரை பிஜு பட்நாயக் திருமணம் செய்து கொண்டார். பிஜு பட்நாயக்கின் மகனான நவீன் பட்நாயக் தற்போது ஒரிசாவின் முதலமைச்சராக உள்ளார். அவரது மகளான ஜிட்டா மேத்தா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.அவரது மூத்த மகனான பிரேம் பட்நாயக் டெல்லியைச் சார்ந்த தொழிலதிபர் ஆவார்.

தி.மு.க. - அ.தி.மு.க. இணைப்பு குறித்தான அன்றைய பிஜு பட்நாயக்கின் முயற்சிகள்


கலைஞர்: என்னிடம் தொலைபேசியில் கூறியவாறு, 12-9-79 அன்று பிஜு பட்நாயக் சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்து தி.மு.க., அ.தி.மு.க., இணைப்புக் குறித்துப் பேசினார். நீண்ட நேரம் இருவரும் விவாதித்த பிறகு; ஏற்கனவே நான் கழகப் பொதுச்செயலாளருடனும் கழக முன்னணித் தலைவர்களுடனும் கலந்து பேசி எடுத்த முடிவுக்கேற்ப ; இரு கட்சிகளும் இணைந்திடச் சில நிபந்தனைகளைச் சொன்னேன்.

1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும்.

2. அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.

3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி. ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.

4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.க.வில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.

5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

6. முக்கியமான விஷயம் : எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

இவற்றைக் கேட்டவுடன்; பிஜு பட்நாயக் அவர்கள் மிகவும் மகிழ்ந்து உற்சாகத்துடன் “இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ள எந்தக் கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர். இல்லம் செல்கிறேன். இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்” என்றார். அதற்கு நான்; “அவரைச் சந்திப்பதில் எனக்கொன்றும் மறுப்பு இல்லை. சந்திப்பதற்கு முன்பு கழக முன்னோடிகள் அனைவரிடமும் நான் கலந்து பேச வேண்டும். பொதுச் செயலாளர் வெளியூர் சென்றுள்ளார். இன்று மாலையில்தான் வருகிறார். அவரையும் மற்றவர்களையும் கலந்து பேசிக் கொள்கிறேன். எனவே சந்திப்புக்கு நாளைய தினம் ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். மறுநாள் 13-9-1979 அன்று சந்திக்க முடிவாயிற்று.

அதற்குள் மாநில முழுவதுமுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்கள் அனைவரும் 13ந்தேதி காலையில் சென்னை வந்து சேர்ந்திடவே - அவர்களின் கருத்துக்களையும் நானும் பொதுச் செயலாளரும் கேட்டறிந்தோம். அதன்பிறகு அன்று 11 மணியளவில் பிஜுபட் நாயக் முன்னிலையில் நானும் எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்துப் பேசினோம். அப்போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், அ.தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிறகு நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம். பிஜுபட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும் நிபந்தனைகளும் உண்மைதானா என்று எம்.ஜி.ஆர். வியப்புடன் கேட்டார். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு தி.மு.க. என்ற பெயரில்தான் ஏற்கனவே பல இடங்களில் கட்டிடங்கள், சொத்துக்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், தி.மு.க. என்பதுதான் அண்ணா உருவாக்கிய கழகம்; எனவே அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கி னேன். அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்து விடப் போகும் கட்சியின் கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜு பட்நாயக்கிடம் கூறிய மற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கி னேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லா மல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதிட்டுக் கூறினார்.

பின்னர் இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக் கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்து பிஜு பட்நாயக்கிடமும் அங்கிருந்த இரு கட்சிகளின் தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள், புகைப்படக் காரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு கை குலுக்கினர். புகைப்படமெடுத்தனர்.  நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த போதும் நான், எம்.ஜி.ஆர். இருவருமே இரு கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம்.

செப்டம்பர் 13ம் தேதி நாங்களிருவரும் பிஜுபட் நாயக் முன்னிலையில் சந்தித்துப் பேசியதற்கு மறுநாள் 14-9-79 அன்று வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க.,  அ.தி.மு.க. இணைப்புப் பற்றி உறுதியான கருத்து எதுவும் தெரிவிக்காதது மட்டுமல்ல; அவரை மேடையில் வைத்துக் கொண்டே அவரது அமைச்சர்கள் தி.மு. கழகத்தையும், என்னையும் மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகவும் தாக்கிப் பேசியிருக்கிறார்கள். சேப்பாக்கம் அரசினர் விடுதியில் நாங்கள் சந்தித்துப் பேசிய பிறகு வேலூர் பொதுக் கூட்டத்திற்கு இடையில் என்ன நடந்தது என்று தெரியாது. வேலூருக்குப் பிறகு இணைப்புப் பற்றிப் பேச்சுத் தொடரவில்லை.

வேலூர் கூட்டத்துப் பேச்சுக்களினால் புண்பட்ட தி.மு.கழக முன்னணியினரும்; இணைப்பு என்பதில் தங்களுக்குள்ள மாறுபாடான கருத்தைத் தலைமைக்குத் தெரிவிக்கத் தொடங்கினர். யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தினர், என்னை அணுகி, “தொடர் நடவடிக்கை என்ன?” என்று கேட்டபோது “இரு தரப்பிலும் தொடர் நடவடிக்கை இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் உடன்பாடுகள் வெவ்வேறாகதானிருக்கக் கூடுமெனக் கருதுகிறேன்” என்று பதில் அளித்தேன். ஆனால் பிஜுபட்நாயக், தனது முயற்சி வெற்றி பெற்று விட்டது என்ற மகிழ்ச்சியுடன் தில்லியிலிருந்து எனக்குத்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்து இணைப்புக்கான அடுத்த முயற்சிகள் எப்படியிருக்கின்றன என்று விவரம் கேட்டார். நான் அவரிடம்  வேலூரில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டம் பற்றியும் அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் பேசிய கருத்துக்கள் இணைப்புக்கான அடிப்படையில் இல்லாதது மட்டுமல்ல; இணைப்புக் கூடாது என்ற நிலையில் இருந்தது என்பதையும், எனவே தி.மு.க. முன்னணியினரும், பல்வேறு மட்டங்களில் உள்ள செயல்வீரர்களும் இணைப்புக்கு இப்போது சாதகமாக இல்லையென்று கூறினேன். அவர் என்னை உடனே புறப்பட்டு தில்லி வருமாறு கேட்டுக் கொண்டார்.

அவருடைய நூற்றாண்டில் அவர் நினைவை போற்றுவோம்.

திமுக -அதிமுக இணைய பிஜு பட்நாயக் ஈடுபட்டார்! நானும் எம்.ஜி.ஆரும் தனிமையில் பேசினோம்! கலைஞர் கடிதம்!

http://orkut.google.com/c7222740-t32c1c8514b251a19.html

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...