Sunday, April 24, 2016

அகத்தியர் மலையும் யுனெஸ்கோவும்

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியர் மலை புராதனமானது. மொத்தத்தில் இந்திய வனத்துறை இந்தப் பகுதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் பாதுகாப்பான பகுதி என்று அறிவித்துள்ளது. மொத்தப் பரப்பளவு 3500 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் தமிழகம் 1672 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ளது. கேரளா 1828 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இங்கே பல்வேறு விலங்கினங்கள், தாவரங்கள் என்ற நிலையில் அமைதியான பகுதியாகும். கைபேசி கூட தொடர்புக்கு அப்பால் உள்ள இடம். களக்காடு, முண்டந்துறை புலி காப்பகங்கள், கன்னியாகுமரி காட்டு விலங்குகள் காப்பகங்கள் இதில் உள்ளடக்கியது. இங்கு குறிப்பாக யானைக் கூட்டங்களும், புலிகளும், சிறுத்தைகள் போன்ற விலங்கினங்கள் உள்ளன. கேரள பகுதியில் நெய்யாறு, பெப்பரா, செந்தூரணி என்ற விலங்கின காப்பகங்களும் இந்த இடத்தில் அமைந்துள்ளன. சுற்றுலா மையமும், அமைதியான வனச்சூழலும் நிறைந்த இப்பகுதியை யுனெஸ்கோ அங்கீகரித்து உலகத்தின் கவனத்தை ஈர்க்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இதை வரவேற்போம். நிமிர வைக்கும் நெல்லைக்கு இது ஒரு கீர்த்தி.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...