சமீபத்தில் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு கோவில்பட்டிக்கு திரும்பும் வழியில் எட்டயப்புரத்தில் பாரதி நூற்றாண்டு விழாவை ஒட்டி துவக்கப்பட்ட பாலிடெக்னிக் சுற்றுச் சுவர்களில் பாரதியாருடைய வரிகள் கண்ணை கவர்ந்தன. அவற்றை அங்கு பயிலும் மாணவிகளே எழுதியது என்று கேள்விப்பட்டேன். 1982ல் பாரதி நூற்றாண்டு விழாவில் எட்டயபுரத்தில் பல்தொழில்நுட்ப கல்லூரியும், நூற்பாலையும் தொடங்கப்பட்டது. வரலாற்றில் பெயர்பெற்ற எட்டயபுரத்திற்கு சிறப்பு செய்கின்ற வகையில் இந்த இரண்டும் அடையாளங்களாக உள்ளன. பாரதியை தேசிய கவிஞராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்தும் மத்திய அரசு பாரா முகமாக இருக்கின்றது. இது கவனிக்கப்படவேண்டிய செய்தியாகும். எட்டயபுரத்தைப் பற்றியும், எட்டப்பனைப் பற்றியும், நாவலர் சோமசுந்தர பாரதியை பற்றியும், புலவர் சீதக்காதியைப் பற்றியும், அங்கு வளர்ந்த கலைகள், இசை, ஆகியவற்றைப் பற்றி பல பதிவுகள் செய்துள்ளேன். இருப்பினும் பல்தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவிகளின் இந்த பணியை பாராட்டவேண்டும்.
Monday, April 11, 2016
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...







No comments:
Post a Comment