Monday, October 28, 2019

அமர கவி பாரதி (பாஞ்சாலி சபதம்)

ஓரம் செய்திடாமே - தருமத்
துறுதி கொன்றிடாமே
சோரம் செய்திடாமே - பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே
ஊரையாளும் முறைமை - உலகில்
ஓர்புறத்துமில்லை
சாரமற்ற வார்த்தை! - மேலே
சரிதை சொல்லுகின்றோம்..
•••••••••••••••

"பொய்யுரைத்து வாழ்வார் - இதழில்
புகழுரைத்து வாழ்வார்
வையமீதில் உள்ளார் - அவர்தம்
வழியில் வந்ததுண்டோ?
செய்யொணாத செய்வார் - தம்மைச்
சீருறுத்த நாடி
ஐய நீயெழுந்தால் - அறிஞர் 
அவலமெய்திடாரோ?"...

-அமர கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...