Saturday, October 26, 2019

இன்று, #உலகத்தில்_நாடாளுமன்ற #அமைப்புமுறை_பிரிட்டனில்_அமைந்த #நாள்.

இன்று, #உலகத்தில்_நாடாளுமன்ற #அமைப்புமுறை_பிரிட்டனில்_அமைந்த #நாள். 
————————————————
#ஜனநாயகம் (democracy) கிரேக்கத்தில் பிறந்தது. #குடியரசு (republic) ரோமில் தோன்றியது. கிரேக்கத்தில் பிறந்த ஜனநாயகம் விரிவடைந்து நாடாளுமன்ற முறையாக (west minister form) இங்கிலாந்தில் 1707இல் அமைந்தது,இன்றைய நாள்.

குடியரசு (republic) பிரான்சிலும், அமெரிக்காவிலும் சென்றடைந்து குடியரசு தலைவர் ஆட்சியாக கோலோச்சுகின்றது. இங்கிலாந்து, அதாவது பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபுகளும், வழிவழியாக வந்த நடைமுறைகளத் தான் அரசியலமைப்பு முறையாக இந்த மூன்று நாடுகளிலும் வகுத்துள்ளனர். 

நாடாளுமன்ற முறையின் தாய் இங்கிலாந்து (mother of parliment).
கடந்த 2012ல் பிரிட்டிஷ் நாடாளுமன்ற (லண்டன்) வளாகத்தில் உரையாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஈழத் தமிழர்கள் அழைத்திருந்தனர். பிரிட்டிஷ் நார்வே மற்றும் பல நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்றனர். அந்த நிகழ்வுக்கு என்னை அழைத்ததை குறித்து கி.ரா.விடம் சொன்ன போது, கி.ரா., “சபாஷ்! சென்று வாருங்கள். இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்ல உங்களுக்கு வாய்ப்புகள் சில நேரங்களில் மறுக்கப் பட்டதெல்லாம் எனக்கு தெரியும். லண்டன் பாராளுமன்றத்தில் பேசக் கூடிய நிலையை எண்ணி நானும் மகிழ்கிறேன் நீங்களும் மகிழ்ந்திருங்கள். இந்திய நாடாளுமன்றத்திற்குச் சென்ற எம்.பிக்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைக்குமா?என்று எண்ணிப் பாருங்கள். அதுவே உங்கள் தகுதி” என்ற போது அந்த வாய்ப்பு குறித்து உண்மையிலேயேநெகிழ்ச்சியடைந்தேன்.

The first Parliament of Great Britain met today in 1707, following the Act of Union between Scotland and England. When the new parliamentary session began English parliamentarians warmly welcomed their new Scottish colleagues in the Lords and Commons.

The honeymoon was short, however. Scottish MPs had to accustom themselves to a cut-and-thrust style of debate in the Commons which was very different from the slow formality to which they had been accustomed in Edinburgh.

Learn about the Act of Union: https://goo.gl/ZqHekC

'The House of Commons in Session', oil painting by Peter Tillemans © Parliamentary Art Collection, WOA 2737

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-10-2019.

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#Parlimentarysystem


No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...