Sunday, October 27, 2019

தீபாவளி

கல்லூரியில் பியூசி புகுமுக வகுப்பு சேர்வதற்கு முன் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படிக்கிற காலம் வரை கிராமத்தில் 

 என்பதில் ஒரு நாட்டமும் ஆர்வமும் அதிகமாக இருந்தது.  எண்ணெய் வைத்து தலை  குளித்து விடியலில் புது துணிகளை அணிவது வாடிக்கை. எங்கள் கிராமத்தில் பொண்ணு டெய்லர் என்பவர் காஜா போட்டுக் கொண்டிருக்கிறேன், தைத்து கொடுத்து விடுகிறேன் என்று தன்னைச் சுற்றி பத்திருபது பேர் சூழ்ந்திருக்க சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆனால் தீபாவளி முடிந்த இரவு வரை புது துணிகள் சிலருக்கு தைத்துக் கொடுக்க முடியாததால் ஏமாற்றத்தில் அவர்கள் அவரை சபித்துக் கொண்டே போவதை எல்லாம் பார்த்ததுண்டு.

தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே துணிகளை கொடுத்து விடுவது வாடிக்கை. கிராமத்தை பொறுத்த வரையில் அதிரசம், முறுக்கு, சீடை தான் செய்வார்கள், மற்ற இனிப்பு வகைகள் கிராமத்தில் கிடையாது. இந்த முறுக்கு சீடையில் வெண்ணையும் நெய்யும் போடாமல் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் சுட்டால் மணமும் ருசியும் அதிகமாக இருக்கும். வெண்ணையில் சுடும் போது அந்த ருசி இருப்பதில்லை. பலரிடம் இந்த விஷயம் எடுபடவில்லை. கல்லூரிக்கு சென்ற பின் வேறு ஒன்றிலும் அக்கறை இல்லாமல் புது திரைப்படங்கள் என்ன வந்துள்ளன என்பதில் தான் ஆர்வம் இருக்கும். அப்போதெல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் தான் அதிக்கப்படியான திரைப்படங்கள் வெளியாகும். அந்த திரைப்படங்கள் நூறு நாட்களை தாண்டி வெள்ளி விழாவும் கொண்டாடியதுண்டு. தீபாவளி மலர் கல்கி, கலைமகள், அமுதசுரபி தான் அப்போது கண்ணில் படும். தீபாவளி அன்று *#ராஜா__வந்திருக்கிரார்*என்ற
கு.அழகிரிசாமியின் கதையில்
தீபாவளி அன்று வீடு  தேடிவரும் சிறுவன் .....கரிசல் பூமியின் கிராமத்து தீபாவளி....பற்றி முதன்முதலாக 1972ல் படித்ததாக நினைவு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-10-2019.

#KSRPostings
#KSRadhakrishnanPostings 

படம் -விகடன் தீபாவளி மலர் -2019.

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...