Thursday, November 30, 2023

எதுவுமே முடிவல்ல*...

*எதுவுமே
முடிவல்ல*...
எல்லாமே...
நல்லது
நடப்பதற்கான
தொடக்கமே..!

கசப்பான நினைவுகள்
காலம் முழுவதும் 
கசப்பதில்லை

நிகழ்வுகள் மாறும் போது
நினைவுகளும் இனிக்கும்

எல்லாம் சரியாயிடும் அப்படிங்கறது
நம்பிக்கை...

எல்லாத்தையும் சரி செஞ்சிடலாம் அப்படிங்கறது
 தன்னம்பிக்கை...



எல்லாத்தையும் சரி செஞ்சு தான் ஆகணும் அப்படிங்கறது
வாழ்க்கை...

 வாழ்க்கையை
மட்டும்
ஏற்றுக் கொண்டால்
போதும்...

எப்படி வாழ்வதென்பதை
விழும் ஒவ்வொரு
அ(நொ)டியும்
வழிகாட்டும்....

நாம் அனைவரும் அனுபவிக்கும் பொதுவான அதிருப்தி - சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி - விரைவில் திருப்திக்கான வழியைக் கண்டுபிடிக்கிறது. இதனால், நம் மனம் உறங்கிவிடுகிறது. 

துன்பத்தின் மூலம் அதிருப்தி அவ்வப்போது எழுகிறது; ஆனால் மனம் மீண்டும் மீண்டும் திருப்தி தரும் ஒரு தீர்வைத் தேடுகிறது.

இந்த"அதிருப்தி - திருப்தி" என்னும் சக்கரத்தில் மனம் சிக்கிக் கொள்கிறது. 

துன்பத்தின் மூலம் நம்மை தொடர்ந்து விழிப்புற செய்வது நமது அதிருப்தியின் ஒரு பகுதியாகும்.

அதிருப்தி என்பது விசாரணையின் வழியாகும். 

ஆனால் மனம் பாரம்பரியத்துடன், இலட்சியங்களுடன், கோட்பாடுகளுடன் இணைந்திருந்தால் விசாரணை இருக்காது.

30-11-2023.

No comments:

Post a Comment