Thursday, March 31, 2016

நெருக்கடிநிலையும் ஆத்மாநாமின் அவசரமும்

உயிர்மை இதழில் திரு. ஆத்மாநாமினுடைய பத்தியை படிக்க நேர்ந்தது.  அவசர நிலை காலத்தில், கண்ணில் பார்த்த நிகழ்வுகளை அப்படியே படமெடுத்து எழுதியுள்ளது கவனத்தை ஈர்த்தது.

நெருக்கடிநிலையும் ஆத்மாநாமின் அவசரமும் 

நஞ்சுண்டன்

1975ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா பிரியதர்ஷிணி காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரநிலைக் (நெருக்கடிநிலை) காலம் விடுதலை பெற்ற இந்திய வரலாற்றின் இருண்ட பகுதியாகவே இன்றுவரை கருதப்படுகிறது. அவசரநிலை அமலிலிருந்தபோதே விமர்சித்துக் கவிதை எழுதுவது வம்பை விலைகொடுத்து வாங்குவதாகத்தான் இருந்திருக்கும். ஆத்மாநாம் இது தொடர்பாக இரண்டு கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று

அவசரம்

அந்த நகரத்தில்
இருவர் கூடினால் கூட்டம்
நால்வர் கூடினால் பொதுக்கூட்டம்
சாலையில் கூட்டமாகச் செல்லக் கூடாது
வீட்டுக்குள் யாரும் நடக்கலாம்
ஒவ்வொரு வீடும் தார்ச்சாலையால் இணைக்கப்பட்டிருக்கும்
மறைவிடங்கள் அங்கில்லை
குளிப்பவர்கள் கூட்டங்கூட்டமாகக் குளிக்க வேண்டும்
தண்ணீர் கிடைக்கும் நள்ளிரவில் மட்டும்
சிகரெட் பிடிக்கவும் அங்கு தடை
ஆஷ்ட்ரேயை அதிகாரி பார்த்தால்
மார்ச். 2016 63
அவரை நகரத்தின் சகாராவுக்கு அனுப்புவார்
அங்கே ஏற்கனவே உள்ளவரோடு சேர்ந்து
அதனைப் பசுமையாக்க வேண்டும்
நகரத்தில் தள்ளிப்போடாத அவசரம்
உள்நாட்டு மனத் தெளிவு
நகரத்தின் மக்களுக்குக் கிடைக்கும் ஒரே டானிக்
கடுமையான உழைப்பு
பத்திரிகைகளில் விளம்பரங்கள் இல்லை
அதை வாங்கு இதை வாங்கு என்று
மலிவாக ஏராளமாகக் கிடைத்தது
நகரத் தலைவரின் பொன்மொழிகள்
எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்
மந்திரிகள் அவரைப் புகழ்ந்தார்கள்
அரசாங்க அதிகாரிகள் புகழ்ந்தார்கள்
மக்கள் சுபிட்சமாக இருந்தனர்
அவசரமாக அவ்வப்போது ஒன்றுக்கிருந்து.

இது மிகச் சிறந்த அரசியல் கவிதை. கொடிபிடிப்பதும் வீதியில் இறங்கிக் கோஷம் போடுவதும் மட்டுமே அரசியல் செயல்பாடுகளல்ல. படைப்பின் மூலம் அடக்குமுறைக்கு எதிரான கருத்தாடலை முன்வைப்பதும் அரசியல் நடவடிக்கைதான். 

வரலாற்றுப் பின்னணியில் நான் இக்கவிதையை அணுகுவதால், இக்கட்டுரையில் ஏராளமான தகவல்கள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியவில்லை. நெருக்கடிநிலை தொடர்பாக இத்தலைமுறையினருக்கு இவற்றைச் சொல்வது அவசியம் எனக் கருதுகிறேன், அதன் முழுச் சித்திரத்தையும் இக்கட்டுரையில் தருவதும் சாத்தியமல்ல. கவிதை பற்றிய விவாதத்தைவிட வரலாற்றுத் தகவல்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதை நானும் உணருகிறேன்.

1971இல் நடந்த பொதுத்தேர்தலில் இந்திராவின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று அவர் பிரதமரானார். அவரது தேர்தல் வெற்றி செல்லாது என எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அரசு இயந்திரத்தைத் தேர்தலில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது, வாக்காளர்களுக்குப் பணம் தந்தது போன்ற பலகுற்றச்சாட்டுகள் இந்திராவின் மீது சுமத்தப்பட்டன.ராஜ் நாராயண் சார்பில் பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷண் வாதாடினார். இந்தியப் பிரதமர் ஒருவர்நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டநிகழ்வும் முதல்முறை நடந்தேறியது. அரசு இயந்திரத்தைத்தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி நீதிபதி சின்ஹாஇந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது எனத்தீர்ப்பளித்ததோடு, மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அவர்தேர்தலில் போட்டியிடவும் தடைவிதித்தார்.

தீர்ப்பை எதிர்த்து இந்திரா உச்சநீதிமன்றத்தில்மேல்முறையிட்டார். வழக்கை விசாரித்த வி. ஆர். கிருஷ்ணகயர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆமோதித்ததோடுநாடாளுமன்ற உறுப்பினராக இந்திரா பெற்றுவந்தசலுகைகளுக்குத் தடைவிதித்துத் தேர்தலில் வாக்களிக்கும்உரிமையையும் நிராகரித்தார். ஆனால் இந்திரா பிரதமர்பதவியில் தொடரலாம் என 24 ஜூன் 1975 அன்றுகிருஷ்ணகயர் தீர்ப்பளித்தார்.

இந்திரா பதவி விலகக் கோரி மறுநாளே சோஷலிசத்தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி) தில்லியில்மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். அன்றுபிற்பகலில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலிஅகமதை இந்திரா சந்தித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புச்சட்டத்தின் அடிப்படையில் [Maintennance of InternalSecurity Act (MISA)] உடனடியாக - 25 ஜூன் 1975 -நாட்டில் அவசரநிலை அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் இந்திராவின் அரசியல் எதிரிகளானஜேபி, ராஜ் நாராயண், (குவாலியர் ராஜமாதா)விஜயராஜே சிந்தியா, மொரார்ஜி தேசாக, சரண்சிங்,மது தந்தவதே, அடல் பிகாரி வாஜ்பாக, அத்வானி, கிருபளானி உள்ளிட்ட பல தலைவர்கள் கைதானார்கள்.

பத்திரிகைகளுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள்.தலையங்கங்கள் உள்ளாக அனைத்துச் செய்திகளும்தணிக்கைக்கு உட்பட்டன. அவசரநிலை அமலுக்கு வந்தமறுநாள் வழக்கமான எட்டுப் பக்கங்களுக்குப் பதிலாகஇரண்டே பக்கங்களில் வெளியானது தினத்தந்தி. அதன்இரண்டாம் பக்கத்தில் கன்னித்தீவும் இடம்பெறவில்லை.கருத்துப்படத்தையும் காணவில்லை. ராம்நாத் கோயங்காஅவசரநிலையை மிகத் தீவிரமாக எதிர்த்தார். அவரதுஎக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு டெலிபிரிண்டர் வசதியும்துண்டிக்கப்பட்டது (அப்போது மின்னஞ்சல் கிடையாது!). மிகுந்த அடக்குமுறைக்கு ஆளான பத்திரிகைக்குழுமம் அவருடையதுதான். விளம்பரங்கள் எதுவும்கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளான கோயங்காதன் குடும்பத்துக்குச் சொந்தமான பேரளவு நகைகளைநேபாளத்துக்கு எடுத்துச்சென்று அங்கே அடகுவைத்துப்பத்திரிகைகளை நடத்தினார்.

இதற்கிடையில் 1976 ஜனவரி 31இல் தமிழகத்தில்கருணாநிதி தலைமையிலான திமுக அரசுகலைக்கப்பட்டது. அவர் மகன் ஸ்டாலின் கைதாகிச்சிறைக் கொடுமைக்கு ஆளானார். எங்கள் ஊரிலும் என்உறவினர்களான திமுகவினர் பலர் இரவோடு இரவாகக்கைதானார்கள். பல அரசியல் தலைவர்களும் மாணவர்தலைவர்களும் காணாமல்போனார்கள். பிரபலமானராஜன் வழக்கை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.கள்ளிக்கோட்டை பிராந்தியப் பொறியியல் கல்லூரியில்படித்துக்கொண்டிருந்த மாணவர் தலைவர் ராஜன்1976ஆம் ஆண்டு மார்ச்சு முதல் நாள் போலீசாரால்கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகி இறந்தார்.ஆனால் அவர் உடல் இறுதிவரை கிடைக்கவேயில்லை.‘கணக்கன்’ என்ற பெயரில் அப்போது தினமணியின்ஆசிரியராயிருந்த ஏ. என். சிவராமன் எழுதியகட்டுரைகளின் மூலம்தான் தமிழகம் ஆள் கொணர்வுமனு (Habeas corpus) என்பதை அறிந்துகொண்டது.

கர்நாடகத்தில் கைதானோரில் ஒருவர் சினேஹலதாரெட்டி. சிறையில் மிக மோசமாக நடத்தப்பட்டதால்உடல் நலிவுற்றார். அதன் காரணமாகவே விடுதலையான64 மார்ச். 2016சில நாட்களுக்குள்ளாகவே இறந்தார். பட்டாபிராமரெட்டியின் மனைவியான சினேஹலதாதான் தங்கத்தாமரை விருது பெற்ற ‘சம்ஸ்காரா’ திரைப்படத்தில்கதாநாயகியாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதுபெற்றவர்.

செல்வாக்கு மிகுந்த தொழிற்சங்கவாதியாகவும்லோஹியா சோஷலிஸ்ட்வாதியுமாயிருந்த ஜார்ஜ்ஃபெர்னாண்டஸ் அவசரநிலைக் காலத்தில் சாகசவீரராயிருந்தார். கைதாவதைத் தவிர்க்கத் தலைமறைவாகப்பல மாநிலங்களிலும் திரிந்தார். 1976ஆம் ஆண்டுஜூன்மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் சேலம்மாவட்டத்தில் அரியானூர் என்னும் மிகச் சிறிய ரயில்நிலையத்தில் இன்ஜின் டிரைவருடன் அவரைப் பாதுகாப்பாக ரயிலேற்றிவிட்டவர் காலஞ்சென்ற வீரபாண்டிஎஸ். ஆ றுமுகம். அங்கிருந்து கல்கத்தா சென்ற ஜார்ஜ்ஜூன் 10ஆம் நாள் மதக் கூட்டமொன்றில் மக்களோடுகலந்து போலீசாரிடம் உயிருடன் பிடிபட்டார்.

அவசரநிலைக் காலத்தில் அரசு அலுவலகங்கள்பெருமளவு ஒழுங்குடன் செயல்பட்டன. குமாஸ்தாக்கள்லஞ்சம் வாங்குவதைத் தவிர்த்தார்கள். ரயில்கள்காலதாமதமின்றி இயங்கின. இந்திய மத்திய வர்க்கம்மகிழ்ந்ததென்னவோ உண்மை. எந்தக் கெடுதலிலும்சிறிதளவாவது ஏதேனும் நன்மை இருக்கும் என்னும்யின்-யாங் தாவோ தத்துவத்துக்கு இது சிறந்தஎடுத்துக்காட்டுதான். ஆனால் மக்களிடையே பயங்கலந்தபீதி பரவியிருந்தது. மனித உரிமைமீறல்கள் கட்டற்றுநிறைவேறின. கருத்துச் சுதந்திரம் அறவே இல்லை.கண்ணுக்குத் தெரியாத கில்லட்டின்கள் நாடெங்கும்இயங்கிக்கொண்டிருந்ததான எண்ணம் மக்கள் மத்தியில்பரவியிருந்தது.

நாட்டின் வளர்ச்சிக்கான இருபது அம்சத் திட்டத்தைஇந்திரா வகுத்துத் தந்தார். அதில் ஒன்று: பேச்சைக்குறைப்பீர். செயலைப் பெருக்குவீர். ஆனால் இன்றுகைப்பேசி சேவை நிறுவனம் ஒன்றின் விளம்பரம்சொல்கிறது: பேசு இந்தியா! பேசு!

இந்திரா முழுக்க சர்வாதிகாரியானார். அரசுநிர்வாகத்தில் அவருடைய இளைய மகன் சஞ்சககாந்தியின் தலையீடு அதிகரித்தது. அவர் தூண்டுதலால்லட்சக்கணக்கான இளைஞர்களுக்குக் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு செய்வித்தது இந்திய முஸ்லிம்களிடையேபெரும் பீதியை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சியினரின் வாழ்க்கை சிறைச்சாலைகளின்இருண்ட அறைகளுக்குள் முடங்கியது. ஒருவழியாகஅவசரநிலை 1977ஆம் வருட ஆரம்பத்தில் முடிவுக்குவந்தது.

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட பின்னணியையும்அக்காலகட்டத்தில் நடந்த சம்பவங்களையும் நாட்டில்நிலவிய அசாதாரண சூழலையும் அறிவது ஆத்மாநாமின்கவிதையை மேலதிகமாகப் புரிந்துகொள்ள உதவும்.இவை பற்றிய எந்தத் தகவலையும் அறியாமலும்இக்கவிதையை அணுக முடியும் என்பதை மனத்தில்கொண்டே இதை எழுதுகிறேன்.

ஆத்மாநாமின் இக்கவிதை எந்த இதழிலும்வெளியாகவில்லை. ஞானக்கூத்தன் இதைக் கையெழுத்துப்பிரதியாகவே படித்ததாக நினைவுகூர்கிறார். ஆத்மாநாம்இறந்த பிறகு வந்த தொகுப்புகளில் இக்கவிதை உள்ளது.அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்டுச் சில ஆண்டுகள்கழிந்து இந்திய மொழிகள் பலவற்றிலும் அதை விமர்சித்துஎழுதப்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துமெல்லிசான ஒரு தொகுப்பு வந்தது. அதில் இக்கவிதையின்மொழியாக்கமும் இடம்பெற்றது. ஆங்கிலப்படுத்தியவர்ஓர் அமெரிக்கர். எனக்கு இத்தொகுப்பு இதுவரைபார்க்கக் கிடைக்கவில்லை.

எதிர்ப்பைக் காட்டும் பாடல்கள் தமிழில் ஏராளம்.மன்னனோடு முனிவு கொண்டு காமரும்பூங்கச்சிமணிவண்ணனைப் பைநாகப் பாக சுருட்டிக்கொள்ளவும்மீண்டும் பாகபடுத்துக்கொள்ளவும் பாடிய புலவனையும்தமிழகம் கண்டிருக்கிறது. கொடுங்கோன்மை வேறொருநாட்டில் வீழ்ந்ததை வரவேற்று எழுதப்பட்ட கவிதையும்தமிழில் உள்ளதுதான் நாம் சிலாகிக்க வேண்டியவிஷயம். அதுவரை ரஷ்யாவில் நடைபெற்றுவந்த ஜார்மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து 1917இல்வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சி நடந்தது. அதைவரவேற்று மகாகவி பாரதி உணர்ச்சி மிகப் பாடினார்.ஜாரின் கொடுங்கோலாட்சியின் வீழ்ச்சியையும் ரஷ்யப்புரட்சியையும் வரவேற்றுப் பாடிய முதல் கவிஞன்பாரதிதான் என்பது ஐதீகம்.

புதிய ருஷியா

மாகாளி பராசக்தி உருசியநாட்டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென்றெழுந்ததுபார் யுகப்புரட்சி; கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள்புடைத்தார் வானமரர் பேககளெலாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர்!
இரணியன்போலரசாண்டான் கொடுங்கோலன் ஜாரெனும் பேரிசைந்த பாவி
. . .
தருமந் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்
பொகசூது தீமையெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந் தோங்கினவே அந்த நாட்டில்
. . .
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் இவ்வாறங்கே
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில்
. . .
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜாரரசன்
. . .
திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோலே!

ஜாரின் கொடுங்கோலாட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் பற்றிப் பாரதி பத்திரிகைகளின் வாயிலாகத்தான் படித்தறிந்திருக்க வேண்டும். அதாவது இவைபாரதிக்கு ‘சேகமை’. அதனால்தான் அவர் கவிதைமரபானதாகவும் செய்தி சொல்லும் தன்மையுடனும்வெளிப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கவிதைகளைப்பொருத்தளவில், தான் சொல்ல நினைப்பதை வாசகன்முழுவதுமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதைவிட்டுமார்ச். 2016 65வேறெங்காவது போகவிடக் கூடாது என்னும் பிரக்ஞைகவிஞருக்கு இருப்பது இயல்பு.

அப்படியானால் பாரதியின் கவிதைக்கும் பத்திரிகைச்செய்திக்கும் என்ன வித்தியாசம் என்னும் கேள்விஎழுகிறது. பெயர்கள், தேதி, இடம் போன்றவற்றைத்துல்லியமாகத் தந்து படிப்பவர் மனத்தில் குறிப்பிட்டபதிவை அல்லது எண்ணத்தைப் பத்திரிகைச் செய்திஏற்படுத்த முனைகிறது. காலவோட்டத்தில் மிகக்குறிப்பான புள்ளியில் செய்தியைப் பொருத்துகிறது.ஆனால் மேற்சொன்னது போன்ற கவிதைகள் பெயர்கள்,தேதி, இடம் போன்றவற்றைத் துலக்கமாகக் குறிப்பிடாமல்

காலவோட்டத்தில் மிகக் குறிப்பிட்ட ஒரு புள்ளியில்சொல்லப்படும் சம்பவங்களைப் பொருத்தும்முனைப்புகூட இல்லாமல் - சொல்லிச் செல்லும்.கடிவாளமிட்டதுபோல் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைநோக்கி வாசகனைச் செலுத்த முயலும் தன்மை இப்படிப்பட்ட கவிதைகளுக்கு இருக்கும். இவற்றை நேரடித்தன்மை கொண்டவை எனலாம். கவிதையில் சொல்லப்படும் விஷயத்துக்கும் கவிஞருக்குமுள்ள சேகமைத்தொடர்பு கவிதையை நேரடித் தன்மை கொண்டதாக்கிவிடுகிறது.

நான் பாரதியைக் குறைத்து மதிப்பிடுவதாகத்தவறாகக் கருதிவிடாதீர்கள். நான் விவாதிப்பது கவிதைக்கரு ‘சேகமை’ என்னும் காரணத்தால் கவிதை வெளிப்படும் முறை பற்றி. ரஷ்யப் புரட்சி பாரதிக்கு சேகமைஆகிவிட்டதால் இது போன்ற வெளிப்பாடுதான்சாத்தியம். இது பாரதியின் குறைபாடல்ல. அக்காலத்தியகவிதை வளர்ச்சியின் எல்லை. அவ்வளவுதான். இந்தக்குறைந்தபட்ச வரையறைக்குள் பாரதி தன்படைப்பாற்றலைக் காட்டியிருக்கிறார். பாடல் தன்மைமிக்க இக்கவிதை காலங்கடந்தும் படைப்பின் பிறவகைமைகளுக்கு ஏதுவாக விளங்குவதற்குச் சிறந்தஎடுத்துக்காட்டு ஒன்றுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், தொழிலாளர்களைச்சுரண்டும் சிமெண்ட் தொழிற்சாலையின் நிர்வாகத்தைஎதிர்க்கும் கதைக் கருவைக் கொண்ட திரைப்படம்ஏழாவது மனிதன் (1982). பல விருதுகளைப் பெற்றது.படத்தின் அனைத்துப் பாடல்களும் பாரதியுடையவை.இசை எல். வைத்தியநாதன். பாடல்களில் ஒன்று ‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி’.

‘புரட்சி’ பாரதி உருவாக்கிய சொல். சோஷலிஸ்ட்தலைவர் ராம் மனோஹர் லோஹியா ஒருமுறை ம. பொ.சி.யின் வீட்டுக்கு வந்திருந்தாராம். புரட்சி என்னும்சொல் அவரை மிகவும் ஆகர்ஷித்திருந்தது. இந்தியின்‘க்ராந்தி’க்குப் பதிலாகப் புரட்சியைப் பிரபலமாக்கப்போவதாக அப்போது லோஹியா கூறியதாக ஞானக்கூத்தன் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்றுபுரட்சி தேகவழக்காகச் சிதைந்துவிட்டது.

ஆத்மாநாம் அவசரநிலையின்போது கைதாகுமளவுக்குச் சென்றிருக்காவிட்டாலும், அதன் கொடுமைகளைநேரடியாகவோ அருகிலிருந்தோ அறிந்திருக்கிறார்.வேறுவிதமாகக் கூறுவதென்றால், இந்தியாவின்அவசரநிலையும் அதன் தாக்கங்களும் ஆத்மாநாமுக்கு66 மார்ச். 2016‘அண்மை’. ஆகவே ஆத்மாநாமின் கவிதை அவசரநிலைதொடர்பான செய்தி சொல்வதாக இல்லாமல் பகுதிஉருவகமாகவும் அது குறித்த அவரது கருத்தாடலைவாசகனுக்கு உணர்த்துவதாகவும் வெளிப்பட்டுள்ளது.

கசடதபற, பிரக்ஞை போன்ற சிறுபத்திரிகைகளிலும்வாராந்தரி ராணி இதழிலும் ஒருசேர வெளியாகும்கவிதைகளை எழுதியவர் ஆத்மாநாம். மிக எளியநடையில், நாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகளிலேயேஅவர் எழுதினார். தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஆத்மாநாம் மிகச் சிறியவயதில் ‘அவசரமாக’ப் போகவிட்டது நம்துரதிருஷ்டந்தான்.

Robert B. Downs எழுதிய The Books that Changed theWorld ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியபுத்தகம். 1956இல் முதலில் வெளியான இந்நூல் பலபதிப்புகளைக் கண்டுள்ளது. இதை ஏ. ஜி. வேங்கடாச்சாரிமொழிபெயர்ப்பில் உலகத்தை மாற்றிய புத்தகங்கள் எனநேஷனல் புக் ட்ரஸ்டிற்காகக் கலைமகள் காரியாலயம்1972இல் வெளியிட்டது. ராபர்ட் பி. டவுன்ஸ் குறிப்பிடும்உலகத்தை மாற்றிய புத்தகங்களில் முதலாவது நிகோலோமாக்கியவெல்லியின் மன்னன் [The Prince (1513)].அரசாளும் முறை பற்றி விளக்கும் இந்நூலால் உலகின்பல சர்வாதிகாரிகள் பெரும் பயனடைந்தனர். ஐந்தாம்சார்லஸ் சக்ரவர்த்தி, காதெரின் டி மெடிசி, இங்கிலாந்தின்ஆலிவர் கிராம்வெல், பிரஷ்யாவின் மகா பிரெடெரிக்,நெப்போலியன் போனபார்ட், ஜெர்மனியின் பிஸ்மார்க்,அடால்ஃப் ஹிட்லர் போன்றோர் இப்பட்டியலில்அடக்கம்.

அரசாளுவோருக்கு மாக்கியவெல்லியின் சிலஅறிவுரைகள்:

‘புத்திசாலியான ஒரு மன்னன் தன் பிரஜைகளைஅடக்கி ஆள்வதற்குக் கையாளும் பல சாதனங்களில்தண்டனை கிடைக்குமோ என்ற பயமும் ஒன்றாகும்.’

‘மன்னனிடம் மக்கள் பயப்படுவதைவிட நேசிப்பதுசிறந்ததா அல்லது நேசிப்பதைவிடப் பயப்படுவதுமேலானதா? இரண்டும் சேர்ந்திருக்கவே விரும்புவோம்என்ற பதில் ஒருவேளை அளிக்கப் பெறலாம். ஆனால்அன்பும் அச்சமும் ஒன்றாகச் சேர்ந்திருப்பது சாத்தியமல்ல.இரண்டில் ஒன்றை வரித்துக்கொள்வதாயின் நேசத்தைவிடஅச்சமே அதிகப் பத்திரமானது.’

உலகின் எல்லா சர்வாதிகாரிகளும் மாக்கியவெல்லியின்மேற்கண்ட அறிவுரைகளைச் சிரமேற்கொண்டு தங்கள்குடிமக்களை அச்சத்திலேயே வைத்திருந்தனர்.

நான் எப்போதும்சொல்வதுபோல் இந்தநவீன கவிதையையும் பலகோணங்களிலிருந்துஅணுக முடியும். கவிதைஅதற்கான திறப்புகளைத்தன்னுள்ளே கொண்டுள்ளது. அடக்குமுறைக்குப் பல பரிமாணங்கள். கவிதையில்வரும் நகரத்தை ஆட்சிபுரியும் அதிகாரம் எப்படி மக்களிடம் அச்சத்தைத் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கிறதுஎன்பதை மட்டும் இப்போதைக்குப் பார்த்துவிடலாம்.

சிகரெட் பிடிக்கவும் நகரத்தில் தடை. மீறி யாரேனும்சிகரெட் பிடித்தால் - அதுகூட வேண்டாம் வெறுமனேஆஸ்ட்ரேயை வைத்திருந்தாலே போதும் - அவர்நகரத்தின் தண்ணியில்லாக் காட்டுக்கு அனுப்பப்படுவார்.அதாவது தண்டிக்கப்படுவார். இந்தத் தண்டனைதருவதே அடக்குமுறை ஆட்சியில் அலாதியானது. எந்தவிதியையேனும் மீறினால் தண்டனை. அதுதண்டனைக்குரிய மீறலா என்பதெல்லாம் பொருட்டல்ல.எல்லாம் சரியாக இருக்கின்றன, மீறுபவர் மட்டுமேசரியாக இல்லை. எனவே தண்டனை. இதுதான்விதிமீறல் - தண்டனையின் கருத்தாடல். சுருக்கமாகச்சொன்னால் மீறினால் தண்டிக்கப்படுவோம் என்னும்பயத்திலேயே குடிமக்களை வைத்திருக்கும் உத்தி.

தண்ணீர் கிடைக்கும் நள்ளிரவுகளில் மட்டும் நகரமக்கள் குளித்துக்கொள்ள வேண்டும். அன்று நள்ளிரவுகுளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்குமா, கிடைக்காவிட்டால்என்ன செய்வது என்னும் பயத்திலேயே அவர்கள்ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய கட்டாயத்தில்வாழ்கிறார்கள்.

இப்படி - மேலோட்டமாகப் பார்ப்பதற்கு வேடிக்கையான செய்திகளைச் சொல்வதுபோல் தோன்றினாலும்- பயம் பிடித்தாட்டும் ஒன்றாக நகர மக்களின் வாழ்க்கைஅமைந்துள்ளதைக் கவிதை சொல்கிறது.இது நவீன கவிதையின் சாத்தியப்பாடு. நேரடித்தன்மையை முற்றாக விலக்கியுள்ள கவிதை இது.அவசரநிலைக் காலத்தில் நடந்தவையாக நான்குறிப்பிடும் நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் நிகரான பதிவுஆத்மாநாம் கவிதையில் இருக்கும் என எதிர்பார்க்கக்கூடாது.

குறிப்பிட்டதொரு நகர மக்களின் வாழ்க்கையைச்சித்தரிப்பதாக வெளிப்பட்டுள்ள கவிதையில் அவர்களுக்குள்ள சுதந்திரம் எள்ளல் தன்மையுடன் விவரிக்கப்படுகிறது. அடக்குமுறைக்குட்பட்ட வாழ்க்கையைஉருவகமாகச் சொல்லும் இக்கவிதை இந்தியாவில்அவசரநிலைக் காலகட்டத்து வாழ்க்கையைச் சித்தரிக்கும்நோக்குடன் எழுதப்பட்டிருந்தாலும், பொதுவாகசர்வாதிகாரத்துக்குள்ளான எந்ந நாட்டின் வாழ்க்கைக்கும்பொருந்திப்போவதை உணரலாம். அதாவதுஆத்மாநாமின் கவிதைக்கு உலகளாவிய தன்மைகிடைக்கிறது. வேறென்ன சொல்ல!


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...