Thursday, March 10, 2016

Mrs.Mangaiyarkarasi Amrithalingam

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கயர்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் புதன்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 83.
Good old memories, in my wedding 12/5/1986. Kalaignar, Pala.Nedumaran,Vaiko, Cpm leader P.Ramamoorthy, CPI leader S.Alagirisamy, LTTE Supremo V Prabhakaran, Baby Subramaniam along with all Sri Lankan Tamil Leaders attended along with Respected Amma Mangaiyarkarasi Amirthalingam. Justice Rathinavel Pandian, Justice V.Ramasamy and other judges of Madras High court along with Vijayakanth, former Union minister A.K.Antony and Ram Vilas Paswan presently gaitted the occasion. Amma Mangaiyarkarasi Amirthalingam graced the occasion and showered her speech moved me.She treated me as her son,its a personal loss to me.
இலங்கையில் தமிழர்கள் 1983ல் கொடூரமாக கொல்லப்பட்டபின் சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விடுதியில் மறைந்த அமிர்தலிங்கனாரும், மங்கையற்கரசி அம்மையாரும் நீண்டகாலம் தங்கியிருந்தனர். எனக்கும் திரு & திருமதி அமிர்தலிங்கனாருக்கும் இருந்த உறவும் மகன் தந்தை தாய் உறவாக இருந்தது. உடன் அவருடைய புதல்வர் மதுரை மருத்துவ கல்லூரியில் பயின்றார். அவரோடும் சகோதரர் பாசத்தோடு பழகியதுண்டு. அவரது பெயர் பகீரதன். மூத்த புதல்வர் காண்டீபன் லண்டனில் வசித்தார். அவரும் சென்னைக்கு வரும்பொழுது வீட்டிற்கு வருவதுண்டு. இப்படியான நெருக்கமான உறவுகள் என்னுடைய திருமணத்தில் நெடுமாறன், வைகோ அவர்கள் ஏற்பாடு செய்ய கலைஞர் நடத்தி வைத்தார். அந்த திருமணத்தினுடைய பணிகள் எப்படி நடக்கின்றன என்று முதல் நாளே திருமண மண்டபத்திற்கு வந்து அமிர்தலிங்க தம்பதியர் பார்த்துவிட்டு சென்று திருமணத்திலும் கலந்துகொண்டனர்.
அமிர்தலிங்கம் தம்பதியினரோடு அடையார் ஐ.ஐ.டி. அருகே உள்ள வால்ட்ரோப், சைனா, உணவு விடுதிக்கு இரவு நேரங்களில் பல சமயம் சென்றதுண்டு. அமிர்தலிங்கம் அம்மையார் துணிகள் எடுக்க தி.நகர் செல்லும்பொழுது எங்கே செல்கிறேன் என்று சொல்லமாட்டார். ஏனெனில் துணிக் கடைக்கு என்றால் நான் வரமாட்டேன் என்று நினைத்து தி.நகர் சென்றுதான் ஜவுளிக் கடைக்கு என்னை அழைத்துச் சென்று, துணிகள் வாங்கும்போது எனக்கும் விலை உயர்ந்த துணிகளை மறுத்தும் கையில் திணிப்பதுண்டு.


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...