Tuesday, February 24, 2015

நாளந்தா சர்ச்சை.

நேற்றைக்குக் குறிப்பிட்ட (24-02-2015)
நாளந்தா பல்கலைக்கழக  முறைகேடுகள்.
***

நாளந்தா பல்கலைக்கழகத்தின் கீர்த்தியினையும் வரலாற்றையும் அறிந்த நாம் பெருமைப் பட்டுள்ளோம். ஆனால், அங்கும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதுவும் நோபல்பரிசு வாங்கிய அமர்த்தியா சென் மீது குற்றச்சாட்டு என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? குற்றச்சாட்டுகள் பற்றி கடிதம் எழுதியவரோ டாக்டர். அப்துல்கலாம்.

இந்திய குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் மெண்டர் (Mentor) ஆக இருக்கின்றார். அவர் 2011ம் ஆண்டு, அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா-வுக்கு பல்கலைக்கழகத்தில் நடக்கும் தவறுகள் குறித்து எழுதிய கடிதம் நம்மை நம்ப மறுக்கவைக்கிறது.
இந்தப்பிரச்சனையில் இடையிடையில் வில்லங்கப் பேர்வழி சுப்பிரமணியசுவாமி வேறு குறுக்குசால் ஓட்டுகிறார்.

ஆனால், அமர்த்தியா சென்னோ நேர்மையானவர் என அறியப்பட்ட நோபல் பரிசு பெற்றவர்.
______________________________________________________________________________

_________________________________________________________________________

அக்கடிதத்தில் குறிப்பிட்டவாறு அமர்த்தியா சென்,
தன் பதவிக்கு பெற்ற ஊதியத்திற்கு ஏற்றவாறு பணி செய்யவில்லை என்றும், தனக்கு வேண்டப்பட்டவர்களை அதிக சம்பளத்தில் பதவியில் அமர்த்தினார் என்றும், நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஏர் இந்தியா விமானங்களில் பிசினஸ் க்ளாஸ் வகுப்பில் இலவசமாக பயணம் செய்தார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2000கோடி ஊழல்கள் நடைபெற்றதாக தணிக்கைத் துறையே கூறியுள்ளது.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...