Monday, November 30, 2020

 


#படைப்பாளி_மதுரை_மணிக்கொடி #கர்ணன்_மறைவு
ஜி.நாகராஜன், கர்ணன், நெல்லை
எஸ்.வேலாயுதம் ப.சிங்காரம் ஜியாவுதீன்,என நீளமான பட்டியல் ...
கர்ணனின் ரத்த உறவு என்ற கதை, விகடனில் வந்த நினைவு....
ஆழ்ந்த இரங்கல் .



திரு Muthu Krishnan பதிவு

காலத்துடன் கரைந்தார் எழுத்தாளர் கர்ணன்...

மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரத்தில் ஒரு சிறிய தையல் கடை நடத்திவந்தார் எழுத்தாளர் கர்ணன். கடந்த 55 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்திற்கு பெரும் கொடைகளை வழங்கியிருக்கிறார்.

எழுத்தாளர் கர்ணணில் எழுத்துக்கள் கல்கி, அமுதசுரபி, தாமரை, செம்மலர், கலைமகள், தீபம், தினமணிக் கதிர், கனணயாழி, விகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. மணிக் கொடி காலம் தொட்டு சமகாலம் வரை அனைவரையும் அறிந்து வைத்திருந்தார், அனைவரையும் வாசித்தார், பலருக்கு அவரது விமர்சனங்களை போஸ்ட் கார்டிலும் கடிதமாகவும் எழுதிவும் செய்தார்.

1990களின் மத்தியில் மதுரையில் இலக்கிய நிகழ்வுகளுக்கு செல்லத் தொடங்கிய காலத்தில் அவரை தொடர்ச்சியாக சந்திக்க தொடங்கினேன். மதுரையில் இலக்கிய கூட்டங்கள் அனைத்திற்கு தனது துணைவியாருடன் தான் வருவார். அப்படி வாழ்வு இலக்கியமும் ஒன்றேன வாழ்ந்தவர். நான் கோரிப்பாளையம் பக்கம் செல்லும் போது எல்லாம் அவரது தையல் கடைக்கு ஒரு எட்டுச் சென்று விருவேன். அவரது கடையில் தமிழ் சூழலில் வெளியாகு அனைத்து சஞ்சிகைகளையும் பார்க்கலாம்.

நம்மை பார்த்ததும் அவர் நமக்கு அளிப்பது அவரது புன்னகையை, புன்னகையால் நம்மை அப்படியே அனைத்துக் கொள்வார். புன்னகையின் வழியே பெரும் உறவையும் ஈரத்தையும் நம் மீது பாய்ச்சுவார். நாம் ஏதேனும் ஒரு சஞ்சிகையை, புத்தகத்தை உற்று பார்த்தால் போது இதை உடன் எடுத்துச் செல்லுங்கள், கிடைப்பதை எல்லாம் வாசியுங்கள் என்பார்.

வாழ்க்கை அவர் மீது எந்த கருனையையும் காட்டாமல் தொடர்ச்சியாக வறுமையில் தான் வைத்திருந்தது. வறுமையின் பிடியில் வாழ்நாள் முழுவதும் சிக்கித்தவித்தார், பின்னர் எழுத்தாளர் ஜி.நாகராஜனின் மிக நெருங்கிய நண்பர் என்றால் அவரது நிழல் இவர் மீதும் படிந்திருக்கும் தானே. அவரை சந்திக்கும் போது எல்லாம் ஜி.நாகராஜனுக்கு அவருக்கு இருந்த நட்பை பற்றி கேட்டிருக்கிறேன், அப்படியே ஒரு காட்சியை போல் அவர் தங்கள் நட்பை சந்தித்த தருணங்களை நடந்த உரையாடல்களை விவரிப்பார்.

மதுரை மண்ணில் வாழ்ந்த ஜி.நாகராஜனின் நண்பர்களில் இருவர் தான் அவரை பற்றி என்னுடன் உரையாடினார்கள், அதில் ஒருவர் இன்று என்னிடமிருந்து விடைபெற்றது போல் இருந்தது.

கடந்த பத்து ஆண்டுகளாகவே அவர் பேச்சில் ஒரு பெரும் சோர்வு இருந்தது. இலக்கிய சூழல் வணிகமாக மாறிவிட்டது குறித்து மிகவும் சங்கடப்படுவார். மனதில் பெரும் சங்கடங்களை சுமந்தபடி எழுத்தாளர் கர்ணன் இன்று மதுரையில் காலமானார்.

நாளை மதியம் அவரது இறுதிப் பயணம் மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் இல்லத்தில் இருந்து தொடங்கும்.

நாவல்
1) உள்ளங்கள் 1980
2) காந்தத் தூண்டிலில் சிக்கிய கனவுகள் 1978
3) மயங்காத மனசுகள் 2003
4) ஊமை இரவு 2009
5) பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் 2008
6) மறுபடியும் விடியும் 2008
7) திவ்யதாரிணி 2011.

சிறுகதைகள்

1) கனவுப்பறவை 1964
2) கல்மனம் 1965
3) மோகமுக்தி 1967
4) மறுபடியும் விடியும் 1968
5) புலரும் முன்… 1974
6) வசந்தகால வைகறை 1977
7) பட்டமரத்தில் வடிந்த பால் 1994
😎 இந்த மண்ணின் உருவம் 1999
9) மாறும் காலங்களில் இதுஒரு மதன காலம் 2002
10) இசைக்க மறந்த பாடல் 2004
11) முகமற்ற மனிதர்கள் 2004
12) நெருப்பில் விளைந்த நிலவுப்பூ 2009
13) பொழுது புலர்ந்தது 2013
14) வாழ்ந்ததின் மிச்சம் 2015

கட்டுரைகள்

1) கி.வா.ஜ. முதல் கண்ணதாசன் வரை 2011
2) அகம் பொதிந்தவர்கள் 2012
3) வாழ்விக்கும் மனிதர்கள் 2014
4) வெளிச்சத்தின் பிம்பங்கள் 2015

வரலாறு
1) அவர்கள் எங்கே போனார்கள் 2005
2) சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு 2011
3) இன்று இவர்கள் 2013
4) இந்தியாவின் எரிமலை 1979
5) விடிவை நோக்கி 1980
6) ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் 1981
7) சிட்டகாங் புரட்சி வீரர்கள் 1981

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...