1969லிருந்து தமிழக முதல்வராக தலைவர் #கலைஞர் இருந்தபொழுது, திருநெல்வேலி தூத்துக்குடி இரண்டும் இணைந்த ஒன்றுபட்ட நெல்லைமாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நூற்று இருபது ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, “மிகவும் வேதனையோடு மதுவிலக்கை தளர்த்தியுள்ளோம் அதனால் மனத்தளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது எனக்கு” என்று மதுவிலக்கை குறிப்பிட்டு பேசியதாக தகவல்கள் கிடைத்தன.
இன்றைக்கு மதுவிலக்கு கோரி திமுக மகளிர் மாநாடு சென்னை அருகே படப்பையில் நடைபெறுகிறது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-08-2015
#LiquorBaninTamilNadu, #KSR_Posts #KsRadhakrishnan

No comments:
Post a Comment