Monday, August 31, 2015

ஸ்மார்ட் நகரங்கள் - Smart City Infrastructure




தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், வேலூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தஞ்சாவூர் என 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

உத்திர பிரதேசம், ஜம்முகாஷ்மீர் மாநிலங்களில் கூடுதலாக சில நகரங்கள் அறிவிக்கப்படலாம். இதற்கு மத்திய அரசு துவக்கமாக முதலாமாண்டு 200கோடியும், பின் வரும் ஆண்டுகளில் தலா 100கோடியும் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. 98 நகரங்கள் இதற்காகத் திட்டமிடப்பட்டு இதுவரை 90 நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பதில் முதல் கட்டமாக டில்லி மற்றும் மும்பை இடையே 7 நகரங்கள் அமைய உள்ளது. வரும் 2019 ஆம் ஆண்டு முடிவில் டோலேரா , ஷென்ட்ரா-பிகின் , குளோபல் சிட்டி என மூன்று ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியாவில் உருவாகி இருக்கும் .

இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சாரம் வழங்கும் கிரிட்களில் இருந்து கழிவுநீர் குழாய்கள் வரை அனைத்தும் ஒரே கண்காணிப்பு தளத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். சிசிடிவி கேமிராக்கள், வயர்லெஸ் கருவிகள் , தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு முற்றிலும் தொழிநுட்ப வசதிகளோடு உருவாக்கப்பட்டிருக்கும்.

முற்றிலும் கணினி மயமாக்கப்படும் இந்த ஸ்மார்ட் நகரங்களுக்காக மென்பொருட்களைத் தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. குறிப்பாக தற்போது ஐ.பி.எம். நிறுவனம் ஸ்மார்ட் சிட்டிகளுக்கான மென்பொருட்களை உருவாக்க முன்வந்துள்ளது.

ஏற்கனவே ஐ.பி.எம் நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் கலிபோர்னியாவின் போக்குவரத்து வாகனங்களைக் கணக்கிட்டு வாகன நெரிசல்கள் ஏற்படும் முன்பே தகவல் தெரிவித்து அதனைச் சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளும் மென்பொருட்களை தயாரித்து அளித்துள்ளது.

பல தொழில்நுட்பங்களை கொண்டடங்கிய இந்த ஸ்மார்ட் நகரங்களில் தண்ணீர் முதல் அத்தனையும் எலெக்ட்ரானிக் கார்டுகளால் கணக்கிடப்படும். தற்போது சீனாவில் டியான்ஜின் எகோ சிட்டி , சுஃஷோ , குயங்க்ஷோ , ஸ்செகுசான் ஆகிய 4 இடங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைந்துள்ளது.

அகமதாபாத் விமான நிலையம் அருகில் உள்ள கிப்ட்(GIFT)-ல் தான் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டிகளினால் 5 லட்சம் மக்கள் நேரடியாகவும், லட்சக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-08-2015.

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_posts‬ #SmartCityInfrastructure

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...