Tuesday, November 4, 2014

மகிழ்ச்சியாக உள்ளது....

மகிழ்ச்சியாக உள்ளது.... 
----------------------------------
முகநூலில் நான் எழுதிய குறிப்புகள், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகு, பத்திரிகைகளில் செய்திகளாக வருவதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு இன்றைய (04.11.2014) தினகரன் ஏட்டின், 10ம் பக்கத்தில், கடந்த வாரம் பிரிட்டிஷ் காலத்தில் நடைமுறைக்கு வந்த சட்டங்களில் மொத்தம் 700 சட்டங்கள் நடைமுறைக்கு வராமல் பயனற்ற சட்டங்களாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 258 சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற இருப்பதாக எழுதிய முகநூல் குறிப்பு, இன்றைய தினகரனில் வெளிவந்துள்ளது. சீன - இலங்கைக்கு இடையே, இராணுவம், பொருளாதாரம், வணிகம் குறித்து போடப்பட்ட ஒப்பந்தங்களை பற்றி பல முறை முகநூலில் எழுதப்பட்டது. இன்றைக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில், இதுகுறித்து கட்டுரை வெளிவந்துள்ளது. சேது சமுத்திரத்தை ஆய்வு செய்ய நிதின் கட்கரி வருகிறார் என குறிப்பிட்டது, இன்றைக்கு தான் செய்தியாக வந்துள்ளது. இப்படி பல செய்திகள். இவற்றை பார்க்கும் பொழுது முகநூலில், முன் கூட்டி குறிப்பிடப்பட்ட செய்திகள், பயனுள்ள வகையில் அமைந்துள்ளது என்று நம்புகிறேன்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

*Sometimes you might feel like giving up on everything*.

*Sometimes you might feel like giving up on everything*. You might have both good  and bad days, but more bad than good or so it seems. Ever...