Tuesday, October 31, 2023

#தமிழ்நாட்டில்உள்ள நீர்நிலைகள்….. #இவை65000 ஏரிகள்குளம், குட்டைகள் பாசனங்கள்எங்கே? பாதுகாக்க எனது வழக்கு…. #ஆயக்கட்டு- பொதுமராமரத்து



————————————————————-
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க, அந்ந நீர் நிலைகளை உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஆயக்கட்டு,.
பாசனப் பரப்பு-ஆறு அல்லது அணை போன்ற நீர்நிலைகளின் துணை கொண்டு பாசனம் செய்யப்படும் வேளாண் நிலப்பகுதி யை கவனிக்க, பொது மராமரத்து பணிகள் என….. சீர் செய்ய,  நடுவன் ஆயம்(ombudsmen) அரசு் அமைக்கவும், அதன் மூலம் நீர்நிலைகளை நிர்வாகம் செய்யவும் உத்திரவு இட வேண்டி சென்னை உயர்தநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். அந்த வழக்கானது  என் ரிட் மனு எண்.30863/2023 மாண்பமை தலைமை நீதிபதி தலைமை எஸ்.வி.கங்காபூர்வாலா,






 நீதிபதி பரதசக்கரவர்த்தி்அடங்கிய டிவிஷன் பென்ஞ்ச் முன்பு விசாரனைக்கு  இன்று (31-10-2023)வந்தது. மூத்த வழக்கறிஞர் திரு. அரவிந்த பாண்டியனும் மற்றும் வழக்கறிஞர்கள் எ.பி.பசுபதி, வருன் ஆஜர் ஆயினர். அரசானது 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அரசானையின் மூலம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, தலைமைச் செயலர் தலைமையில் வழிகாட்டு குழு நீர்நிலைகளை பராமரிக்க அமைக்கப்பட்டுள்ளது என்றது. ஆனால் அக்குழுவின் பணிகள் என்ன, என்ன நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் இல்லை என எனது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆகவே, மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் மேற்படி குழுவினரால் இதுவரை பெறப்பட்ட புகார்கள் என்ன, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்ற ஓர் விரிவான நிலைமையை விளக்கும் அறிக்கையை அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஓத்திவைத்துள்ளது. எனது இந்த மனுவை ஏற்று தமிழக அரசுக்கு இது குறித்து தாக்கீதும் அனுப்ப உத்தரவுவிட்டுள்ளது.

எனது வழக்கிற்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. எச்.அரவிந்த பாண்டியன் அவர்கள் "சரி நீங்கள் (தமிழக அரசு) தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க, அந்ந நீர் நிலைகளை உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் எந்த வகையில் எப்படி எதையெல்லாம் சரி செய்து வைத்திருக்கிறீர்கள் என்பதை விவரமாக சொல்லுங்கள்."

நமது உண்மையான கவலையும் வைத்திருச்சலும் என்னவென்றால் 1947 இல் சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டில் 65,000 ஏரிகள், குளம், குட்டைகள் பாசனங்கள் (இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம்.) என்று நிரம்பி தழும்பி கொண்டிருந்த தமிழ்நாட்டில் இன்றைக்கு சரி பாதியாக 30,000 மட்டும் எஞ்சியுள்ளன.எல்லாவற்றையும் இழுத்து மூடி மண்ணை போட்டு அவரவர்கள் தொழிற்சாலைகளையும் கல்விக்கூடங்களையும் வீடுகளையும் கட்டிவிட்டு அதன் மூலம் பொருளீட்டி அனுபவித்து கொண்டிருக்கும் வேளையில் மீதம் வெறும் முப்பதாயிரம் குளம் குட்டைகள் தான் இன்று மானாவாரி விவசாயத்திற்கு நன்செய் பாசன விவசாயத்திற்கும் மிஞ்சி இருக்கிறது என்பதை மீண்டும் நீதிமன்றத்தில் தெளிவான வழக்காக முன் வைக்கிறோம். இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க உள்ள விவசாயிகள் இந்த பிரச்சனையை மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார்கள் என்பதை எச்சரிக்கையாக்கி இந்த வழக்கு மேலும் தொடர்ந்து நீதிமன்றத்தில் நீடிப்பதை இந்தப் பதிவில் சொல்லிக் கொள்கிறேன்.

நியாயமும் தர்மமும் சரியாகத்தான் நிறைவேறும் என்பதற்கு  மக்கள் இன்றைய அரசாங்கங்களை விட நீதிமன்றங்களை தான் அதிகம் நம்புகிறார்கள். ஆகவே இந்த குளம் குட்டைகளை அபகரித்திருப்பவர்கள் காவிரி நதிநீர் தாவாவிற்கு வெற்று விளக்கங்களைக் காகிதத்தில்  எழுதிக் காட்டிக் கொண்டிருக்காமல் அல்லது வெறும் வாயில் சொல்லிக் கொண்டிருக்காமல் தமிழ்நாட்டின் உரிமையான குடிநீருக்கும் விவசாயத்திற்கும் வேண்டியதை மக்களுடனும் விவசாயிகளுடன் இணைந்து போராடிப் பெற வேண்டும்.அதுவே அவசியம் என்பதற்காக தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டுகிறேன். வெறும் மாநில முதலமைச்சர்களின் நட்பும் கேளிக்கையும் அல்ல இது.

வாழ்வாதார உயிராதாரப் பிரச்சனையில் மெத்தனமும் அறிவற்ற அலட்சியத்தையும் காட்டினால் இந்த வழக்கு மேலும் தீவிரமாகும் என்பது திண்ணம்.

 #தமிழ்நாட்டில்_உள்ள_நீர்நிலைகள்…..
#இவை65000_ஏரிகள்_குளம்_குட்டைகள்_பாசனங்கள்_எங்கே? #பாதுகாக்க_வழக்கு….
#ஆயக்கட்டு_பொதுமராமரத்து 

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
31-10-2023.

#பசும்பொன்தேவர்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் (Muthuramalingam

#பசும்பொன்தேவர்திருமகனார்
முத்துராமலிங்கத்தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடந்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர் எல்லா அரசியல்வாதிகளும் பசும்பொன்னை நோக்கி வருடம் தோறும் போய்  வருகிறார்கள். எதற்கு என்று பார்க்கத்தான் வேண்டி இருக்கிறது.













தேசிய திருமகன் என்று போற்றப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் அக்காலங்களில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் எல்லா அடித்தள மக்களையும் அரவணைத்து தனது நிலங்களை கூடப் பொதுவுடமை ஆக்கி சுதந்திர உணர்ச்சியை நாடெங்கிலும் எழுப்பவும் அதே சமயம் கீழைத் தேய ஆன்மீகமே இந்தியாவின் இறையாண்மை என்றும் சொல்லிக் கொண்டிருந்தவர்.

காங்கிரஸ்காராகவும் இல்லாமல்  ஒரு நில உடமைச் சுவான்தாராகவும் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் அதில் சலிப்புற்று ஆன்மீகப் பாதையையும் வீரத்தையும் தேடி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் வழியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். அன்றைய காந்தி உட்பட்ட காங்கிரஸின் சாத்வீக போராட்டங்களுக்கு மறு தலையில் வீரமும் விவேகமும் தேசியமும் தெய்வீகமும் பிற்கால இந்திய அரசின் ஆளுமைக்கு ஒரு புனித நடைமுறையைத் தர வேண்டும் என்று அகில இந்திய அளவில் குறிப்பாக  இந்தியாவின் தெற்கிலிருந்து தன் தீவிரவாதக் குரலை எழுப்பினார். கச்சவான ஒரு பொதுஉடமைத்தனம் அவரின்  மனதில் நடைமுறை சார்ந்து பண்படாத நிலையில் இருந்தது.அதை ஒரு துறவு மனநிலை என்று கூட நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

அன்றைய திராவிடம் பேசும் அனைத்து தலைவர்களும் தேசியத்தில் செல்வாக்கு பெற்றிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு கட்டுப்பட்டு தான் இங்கு பகுத்தறிவு கொள்கைகளைக்கூடப் பரப்பினார்கள். ஆனால் எப்போதும் இந்திய தேசியத்தில் அதீதப் பற்றுடன் இருந்த பசும்பொன் அவர்கள் சுதந்திரத்திற்கு பிறகான தமிழ்நாட்டில் முதலமைச்சராக வருவதற்கு காந்தியார் முன்மொழிந்த ராஜாஜியைத் தவிர்த்து விட்டுப் பச்சை தமிழனாகவும்  அடித்தள மக்களின் பிரதிநிதியாகவும்  காங்கிரஸில் உழைத்த காமராஜரை மதித்தார்.

அப்படியான ஒரு  தலைவரை சாதியப் பின்னணிகள் இல்லாமல் தேசிய தலைவராக பார்க்க வேண்டும்.

இந்த இந்த ஓட்டு பொறுக்கி அரசியல் தனத்திற்கு எல்லா மக்களையும் சமமெனக் கருதியபசும்பொன்னாரைப் பலியிடுவது எந்த வகையில் நியாயம்.

 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தலித்துகளுக்கான ஆலய பிரவேசத்தில் பசும்பொன்னாரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்று அறிந்தவர்களுக்கு இந்த சுயலாப ஓட்டுகளை வாங்க அவரைப் போய் போலியாக வணங்கி விட்டு வரும் அரசியல்வாதிகளை நன்றாகவே அடையாளம் தெரியும். உண்மையில் இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல்ச் செய்து கொண்டிருக்கிறார்கள் .மிகப்பெரிய தேசியத் தலைவரை மறுபடி மறுபடி இம்மாதிரி அரசியல்வாதிகள் போய் அஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தி  மீண்டும் அவரை அவரை அவர் பிறந்த சாதிக்குள் நான் அடைத்து விட்டுத்தான் வருகிறார்கள். எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!  இன்று பிறப்பால் அவரது சாதியைச் சேர்ந்தவர்கள் ஆதாயவாதப் பொறுக்கிகள் பசும்பொன்னாரை எங்கள் இனமான குலத் தலைவன்  என்று சொல்லி அவரை தங்கள் சாதி அடையாளத்திற்குள்ளே மீண்டும் மீண்டும்  குறுக்கி  வைக்கிறார்கள். இன்றைக்கு தேசிய தலைவர் ஆன பசும்பொன்னார்  தன் பிறப்படையாளச்சாதியை வைத்து ஏமாற்றி பிழைக்கும் அவரின் சொந்த சாதி சுரண்டல்வாதிகளுக்கு ஒரு அரசியல் மூலதனமாகிவிட்டார் !இதையா பசும்போன்னார் எதிர்பார்த்தார்? காலம் கலிகாலம்?

கண்ணீர் விட்டா வளர்த்தோம்
சுதந்திரப் பயிரை செந்நீரால் காத்தோம் என்கிற தலைவர்கள் எல்லாம் மறைந்து அதிகாரத்தை பயன்படுத்தி கொழுத்த பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் இன்றைய கொள்ளை கும்பல்களைத்தான் நாம்  அரசியல் தலைமைகளாக  ஏற்றுக் கொண்டிருக்கிறோம் . சரி அவர்கள் உண்மையில் என்ன வகைத் தேசியம் பேசுகிறார்கள் என்று கூட நமக்குத் தெரியவில்லை என்று நினைக்கும் போது மனம் நொந்து போவதை தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது?  பிரிட்டிஷாரின்தொடக்க காலத்தில் இருந்து ஜனநாயக முறையைப் பின்பற்றி தமிழ்நாட்டின் சட்டசபையில் இருந்த முதலமைச்சர்கள் இந்தியாவின் முதல் ஐந்து ஆண்டு திட்டங்களுக்குள் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்வதில் மிகச்சிறந்த செயல்முறை வீரர்களாக இருந்தார்கள். வடக்கே பால கங்காதர திலகர் பட்டேல் சுபாஷ் சந்திர போஸ் தெற்கே  சிதம்பரனார், பாரதி, சிவம்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இவர்களை எல்லாம் இணைத்து காண்பவர்களுக்கு தான் பழைய உண்மை  வரலாறு சரியாகப் பிடிப்படும்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேவருக்கு அவர் பிறந்த இடத்தில் மிகுந்த பொருட்செலவில் மண்டபம் கட்டுவதாக எல்லாம் சொல்லி குறிப்பிட்ட அம் மக்களின் ஓட்டை வாங்க முயலுகிறார். போக இந்த அரசு பசும்பொண்ணாருக்கு  செய்யக்கூடிய பணிகள் குறித்து தினசரி பத்திரிகையான தினத்தந்திக்கு மட்டுமே விளம்பரம் கொடுக்கிறார்கள். மற்றும் வேறு எந்த பத்திரிகைகளிலும் இந்த அரசு விளம்பரங்கள் கண்ணில் கூடப் படவில்லை. எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்!  தேசியத் தலைவர்
பசும்பொன்னாரின் நினைவிற்காக முடிந்தவரை முதல்வர் ஏதாவது செய்யட்டும் வரவேற்போம். நமக்கு அட்டி ஏதுமில்லை. இந்தத் தந்திரங்களை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைப்பதுதான் அறிவீனம்!

சரி போகட்டும்! இதேபோல் வ உ சிக்கு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு வகையான தலைவர்களுக்கு கக்கனுக்கு காமராஜருக்கு வழிபாடுகள் நினைவுச் சின்னங்கள் என்று வருடம் தோறும் போய் சிறப்பு செய்வது போல அமைப்புகள் இருக்கிறதா. இன்னும் முதல் தலைமுறை தலைவர்களுக்கு எந்த நினைவுச் சின்னமும்  ஏன் அவர்கள் புதைத்த இடம் கூட அடையாளம் தெரியாமல் போய்விட்டது! நாத்திகம் பேசியவர்களுக்கு ஓட்டு வங்கி என்றால் பகுத்தறிவு இல்லாமல் போய்விடுமா? இல்லை அவர்களும் உண்மையில் தேசிய தலைவர் பசும்பொன்னாரை ஒரு சாதியைச் சேர்ந்தவர் என்றுதான் கருதுகிறார்களா?
இது அவருக்கு செய்யும் அநீதி இல்லையா? பீற்றல் வேறு!

 இன்னும் சொல்ல என்ன இருக்கிறது முழுவதும் சுயநல கூட்டங்கள்.

பசும்பொன் தேவர் மொழிகள் சில…..
••
நான் பேசுவது.. எழுதுவது.. 
சிந்திப்பது.. சேவை செய்வது 
எல்லாமே என் தேசத்திற்காகவே 
எனக்காக அல்ல.

தான் வாழ பதவி தேவை என்று 
கருத்துபவர்களிடம் உண்மைக்கு 
எதிரானவற்றை தான் 
எதிர்பார்க்க முடியும்.

பதவியை ஒரு சேவையாக 
கருத்துபவர்களிடமே ஆட்சி 
இருக்க வேண்டும்.. 
அப்படி இல்லாமல் போனால் 
மக்களுக்கு நலன் என்பது 
வெறும் கனவு தான்.

எவன் ஒருவன் தன் சாதி 
பெயரை முன்னிலைப்படுத்தி 
அரசியல் செய்கின்றானோ 
அவனே சமுதாயத்தின் 
முதல் எதிரி.

சாத்திய சிந்தனை கொண்டவன் 
அரசியலுக்கு வந்தால் 
நாடு நாசமாகி விடும்.. 
அவன் பாவி.. சாதிய எண்ணம் 
கொண்டவன் இறைவனை 
வழிபடவே தகுதியற்றவன்.

பணம் கொடுத்து ஓட்டு 
கேட்பவன் பாவி.. 
பணம் பெற்று ஓட்டு போடுபவன் 
நாட்டுத் துரோகி.!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-10-2023.

# Preservation of Tamilnadu water storages and structures -தமிழகநீர்நிலைகள்

Tomorrow 31-10-2023 , my PIL,
Preservation of Tamilnadu water storages and structures viz lakes 
Tanks, Cannels writ petition coming for hearing

#தமிழகநீர்நிலைகள்



Monday, October 30, 2023

அண்ணா உடன்பழ.நெடுமாறன்1950களில். அண்ணாமலைபல்கலை கழகத்தில் படித்த போது மாணவர்திமுக நிர்வாகி நெடுமாறன். ஹோம்லேண்ட் ஆங்கில திமுக ஏட்டுக்கு நிதியளிப்புக்கு, அங்கு அண்ணா நடித்தம் நாடகம் நடந்தது.

அண்ணா உடன்பழ.நெடுமாறன்1950களில்.
அண்ணாமலைபல்கலை கழகத்தில்
படித்த போது  மாணவர்திமுக நிர்வாகி நெடுமாறன்.
 ஹோம்லேண்ட் ஆங்கில திமுக ஏட்டுக்கு நிதியளிப்புக்கு, அங்கு அண்ணா நடித்தம் நாடகம் நடந்தது.
 முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி எஸ் . இராமச்சந்திரன், வி. வி. சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய பங்கு ஆற்றினர். திண்டுக்கல் ஆழகர்சாமி, பூவை இராமனுஜம் உள்ளனர். இந்த நிகழ்வில் நாவலர், மதியழகன் பங்கேற்றனர்.






#அண்ணா
 #பழ_நெடுமாறன்
#அண்ணாமலைபல்கலைகழகம்
#மாணவர்திமுக_1950களில்
#முன்னாள்அமைச்சர்கள்_எஸ்டி_சோமசுந்தரம்_பண்ருட்டி_எஸ்_இராமச்சந்திரன்_விவி_சுவாமிநாதன்.
#திமுக #DMK 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-10-2023

# *இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம்* -நகுலன் இன்றைய அரசியல் கட்சிகள் மிக தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்

# *இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல் 
போகிறோம்* -நகுலன்

இன்றைய அரசியல் கட்சிகள் மிக தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அதுபோக இந்த ஐடி விங் காரர்கள் மொத்த ஊடகத்தையும் கையில் எடுத்து தான்ஆதரிக்கும்  தலைவர்களுக்கு எதிராகப் பேசுபவர்களை இவர்களே உருவாக்கி ஆதரவாகப் பேசுபவர்களை எதிரே அமர வைத்து மோத வைத்து அவர்களை  ஒரு விவாத பொருளாகவே எப்பொழுதும் லைம் லைட்டில் வைப்பதில் விற்பன்னர்கள் .இந்த ஐடி விங் காரர்கள்   செயல்படாத அரசாங்கத்தை கூட தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறஒருஅரசாங்கமாகக்காட்டு
வதில் கைதேர்ந்தவர்கள்.

ஒரு காலத்தில் மதன் மித்ரா லேகிய விளம்பரங்களை போல லக்ஸ் சோப்பு பெடிக்ரிம் நாய் உணவுகள் குப்பை பொறுக்கும் எந்திரங்கள் போல
 இந்தத் தலைவர்களை ஒரு விற்பனைப் பொருளாக்கி திரும்பத் திரும்ப காட்டுகிறார்கள்.

அதைத் தங்களுக்கு விளம்பரமாக பயன்படுத்திக் கொள்ளும்
தலைவர்களும் கட்சிக்காரர்களும் அவர்களைக் காட்டிலும் மிகத் தெளிவானவர்கள். தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்து விட்டால்ப் போதும் வாக்கு கிடைத்து விடும் என்று தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய ஜனநாயகத்தின் கோலம் வேடிக்கை வெக்கக்கேடு.ஒரு பக்கம் ஊடக வெளிச்சம் இன்னொரு பக்கம் பணம் செல்வாக்கு இது இரண்டும் இருந்தால் இன்று ஒருவர் அரசாங்கத்தை பிடித்து விடலாம் என்கிற அளவில் இந்த அவலமான போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உண்மை ஒரு எட்டு எடுத்து வைப்பதற்குள் பொய் உலகைச் சுற்றி வந்துவிடும் என்பார்கள் வேறு வழியில்லை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஊடகங்கள் எல்லாம் வெறும் நாடகங்கள் என்கிற உண்மை புரிதல் வேண்டும் அரசாங்கமும் என்பதே வியாபாரமாக ஆகிவிட்டது.

இந்த லட்சணத்தில் ஆயிரம் கூட்டணிகளை வைத்துக் கொள்கிறார்கள். கூட்டணியில் இல்லாத போது மிக கேவலமாக தம்மை திட்டிய அசிங்கப்படுத்திய சவால் விட்ட கட்சி அமைப்புகளை எல்லாம் மறுபடியும் கூட்டணியில் சேர்த்து அவர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு செல்வதை பார்க்கும் போது அரசியல் ஒரு சாக்கடை என்று சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

இவையாவும் சாதி மத கூட்டணிகள் !அந்த சாதிகளுக்கு ஒரு நீதி அந்த நீதிகளுக்கு ஒரு ஒரு தேவை இதற்கு ஒரு அரசு அதிகாரம் அதற்கான  கூட்டணிகள் வெட்க்கமின்றிக் கைகோர்த்து திரிகின்றன !இப்பொழுது இருப்பவர்கள் எல்லாம் கொள்கைவாதிகள் அல்ல சாதியை வைத்து சுற்றுப்புறத்தில் தனக்கான  சாதிஅடியாட்களை சேர்த்துக்கொண்டு தன் சுயலாபத்தை பெருக்கிக் கொள்ள கூட்டணி சேரும் கும்பல்கள்தான்.! இதைச் சொன்னால் பிழைக்கத் தெரியாத முட்டாள் என்று நம்மளை ஒதுக்குவார்கள்.

என்னிடம் நண்பர்களாக இருப்பவர்கள் என்னால் பலன் பெற்றவர்கள் கூட நீங்கள் ஏன் அந்தக் கட்சிக்கு போனீர்கள் ஏன் அவரிடம் போனீர்கள் ஏன் இங்கே சென்றீர்கள் என்று ஓயாது குற்றம் சொல்கிறார்கள். தன்மானமும் சுயமரியாதை என்ற நிலையில் நான் இந்த முடிவுகள எடுத்தேன். கட்சிகள் கூட்டணிகளை விருப்பம் போல மாற்றி மாற்றி நேற்று ஒர் பேச்சு இன்று வேறு பேச்சு என்று  அர்த்தமற்ற  மாற்றி அமைப்பது எப்படி நியாயம்? என் உழைப்பு எடுத்துக்கொண்டு
என்னை  மதிக்க வேண்டும் அல்லவா.. நேற்று உங்களை திட்டி தீர்த்தவர்களுக்கு மரியாதை, பதவிகள் அள்ளி தரும் போது நம் சுயமரியாதை அந்த இடத்தை விட்டு விலகி போ என என்னை சொல்கிறது. இதில் பிழை ஒன்றும் இல்லை. இவர்கள் விருப்பம் போல
1967 இல் இருந்து  தேர்தல்களில் அறமற்ற கூட்டணிகளை மாற்றும் போது; நான் தன்மானம் என முடிவு எடுத்ததுதான் ரௌத்திரம் -அறச்சீற்றம்! என புரிதல் தேவை.

கொள்கைகளில் வேறுபாடு ஏற்படும் போது அது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போகும்போது அதை நிறைவேற்ற தகுதியுடைய அமைப்புகளின் பின்னால் செல்வது ஒன்றும் தவறல்ல. அவர்களைப் போல கூட்டணி கட்சிகளை மாற்றிக்கொண்டு சுய லாபம் அடையலாம் என்கிற எண்ணத்தில் நான் செல்லவில்லை. நான் சென்றதெல்லாம் அந்த கட்சித் தலைமை எடுக்கும் உறுதியான கொள்கை முடிவுகளுக்குப் பின்னால் அதன் அடிப்படையில் அங்கே சேர்ந்து அந்த இடத்திற்கும் காலத்திற்கும் செயலுக்கும் பொறுப்பாக இருந்திருக்கிறேன். நிறைய வேலைகளை செய்து கொடுத்திருக்கிறேன்.  கொள்கை மீதான பிடிப்பு அதன் வழியாக அமைப்பை காப்பாற்ற வேண்டும் என்கிற நற்சிந்தனை தான் அதற்கு காரணமாக இருந்தது.

அக்காலத்தில் எல்லாம்  மக்களைத் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்தார்கள். பல இடங்களில் விழா நடத்தி அரசு நிர்வாகத்தின் மூலமாக மனுக்களை பெற்று வகுப்பு வாரியாக எந்தெந்த பகுதி என்னென்ன பிரச்சனை என்றெல்லாம் ஆராய்ந்து புண்ணுக்கு மருந்து இட்டு தீர்வு செய்தார்கள்.

இன்றைய அரசியல்வாதிகள் எங்கே எந்த இடத்தில் புறம்போக்கு நிலம் இருக்கிறது! யாரிடம் இருந்து எந்த சொத்து கைமாறுகிறது! எங்கே மணல் கொள்ளையிடலாம்! எங்கே இடங்களை வாங்கி போடலாம் பின்னாளில் விற்பதற்கு போவதாக எங்கே  குறைந்த விலையில் வயிற்று வலிக்காரனிடம்  இருக்கிறது.! அனாதைச் சொத்துஎது? எங்கே வியாபாரம் செய்தால் பங்கு வர்த்தகத்தில் லாபம் பெறலாம் அதில் கிடைக்கும் பணத்தை மக்களுக்கு கொடுத்தால் ஓட்டையும் வாங்கிவிடலாம் பேராசை பிடித்து வாழ்றார்கள். இப்படியான புள்ளியில் வந்து நிற்கிறது இந்த அரசியல் அவலம். தனியார்கள் குடி தண்ணீரை விற்கிறார்கள் அரசு மதுபானம் விற்கிறது ?என்ன வகையான சுரண்டல் இது? இதற்கிடையில் பாழ் பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு மனித சமூகம்.

எனக்கு புத்திசெல்வர்களுக்குச் சொல்லிக்கொள்ள என்னிடம் ஒன்றுதான் இருக்கிறது!
வேறுபாடுகளும் மாறுபாடுகளும் தோன்றும் போது ஒரு மனிதன் எடுக்க கூடிய முடிவுகள் தான் நானும் எடுத்தது! என்னை ஓரங்கட்டுகிறார்கள் புறம் தள்ளுகிறார்கள் எதற்கென்று புரிந்துகொள்கிறேன். அது குறித்து கவலைப்படவோ சிக்கலாகிக் கொள்ளவோ நான் எப்போதும் தயாராக இல்லை! என்னை பொறுத்தவரை நிம்மதியாக தான் இருக்கிறேன்! ஒரு எதிர்ப்பு குரல் கொடுக்கக் கூடிய வலிமையுடன் இருக்கிறேன்! இவர்களின் இத்தகைய போக்கு அப்போதே தொடங்கிவிட்டது .கவிஞர் கண்ணதாசன் ஈவிகி சம்பத் இரா செழியன் தமிழருவி மணியன் எல்லோரின் மீதும் இத்தகைய நடவடிக்கை தான் எடுத்தார்கள். காங்கிரஸ் ஜனதா கட்சி போன்ற அமைப்புகள் இருந்த தீவிர சிந்தனையாளர்களை அவர்களின் அறிவை மலினப் படுத்தினார்கள் என்னை மட்டும் ஓரம் கட்டவில்லை இப்படியான முக்கியமான நபர்களை எல்லாம் கூட இவர்கள் ஓரங்கட்டி அரசியலுக்ப்பால் வெளியேதள்ளினார்கள்.அவர்களின்நோக்கம் நிறைவேறி விட்டது.அதைப் பெருமையாக  கூறிக்கொண்டு  மற்றவர்களைப் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் அற்பப்பதர்களெல்லாம் கூட்டணி வைத்து பிழைத்துக் கொண்டிருப்பதை வசதியாக மறந்துவிட்டு அறிவுரை சொல்ல வரும்போது  இது ஒரு பிழைப்பா என்று தன்மானமும் சுயமரியாதை உள்ள ஒருவருக்கு  தோன்றுவது  அறச் சீற்றமின்றி வேறென்ன.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
29-10-2023.


#*ரா.கிருஷ்ணசாமி நாயுடு*

#*ரா.கிருஷ்ணசாமி நாயுடு*



#*ஆர்கே*
 #ராவனாகிணா
#*தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் சீர்மிகு தலைவர்*.
—————————————
மனித நேய பண்பாளர் ராகிணா.
காமராஜரின் தோழர்…. 
அந்த காலத்தில் நட்போடு சைக்கிளில் காமராஜரை கிராம்களுக்கு அழைத்து செல்வர்…
தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் சீர் மிகு தலைவர்.
அமைச்சர் பதவி தேவையில்லை என காங்கிரஸ் ஊழியன் என்ற அடையாளம் போதும் என கட்சிக்கு உழைத்தவர்.
இன்று அவரின் 50 வது ஆண்டு நினைவுநாள் 




 ரா.கிருஷ்ணசாமி நாயுடு (ஜனவரி 5 - 1902 - அக்டோபர் 30, 1973)முன்னாள் மேலவை-சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைப் போராட்ட முக்கியமான தளபதி. ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த பி. ராமசந்திரபுரம் கிராமத்தில் 1902 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். 1922 இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 இல் ஆகஸ்டு இயக்கம் ஆகியவற்றின் போது சிறை சென்றார்.












இவர் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று முறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968 முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 1926இல் தனது கிராமம் பி.ராமசந்திரபுரத்தில், சேலம் பெ. வரதராஜுலு நாயுடு தலைமையில் தேசிய காங்கிரஸ் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா. கி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார். 1959 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962 முதல் 1967 வரை அதன் தலைவராகவும் இவர் இருந்தார்.[6]




15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தார். அவருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமான செய்தி.

வினோபா பாவே பூமிதானக் கொள்கைக்காக ஏழை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார். இவர் கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.

இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின், முதல் சட்டமன்றத்திற்கு 1952 இல் எதிர்க்கோட்டை தொகுதியில் இருந்தும்,1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும்,1962 சட்டமன்றத் தேர்தலில்,ராஜபாளையம்தொகுதியிலிருந்தும்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இவருக்கு கடிதம் போட்டலும் பதில் கடிதம் எழுதுவார். எளிமையான வாழ்க்கை முறை…..

தியாகி என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படாத வகையில் சுதந்திரபோராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோது தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்கமறுத்த உத்தமர் தலைவர் ரா.கி அவர்கள்.

சேவையில் தொண்டராகி தியாகத்தால் தலைவராகி
பார்வையில் எளியோராகி பண்பில் உயர்ந்தோராகி
நாவையும் காப்போராகி நாவண்மை மிக்கோராகி
தேவையை குறைத்த காந்தி சீடராம் எங்கள் ராகி
நாணய விளக்கே ! ஓயா
நற்பணிக் குன்றே ! என்றும்
ஆணவமில்லா வேந்தே !
அயர்வில்லா தேசபக்தி.
நீணெடுங்காலம் கொண்டோய் !
நீ எமை விட்டுச் சென்று
நாணடந்தாலும் நாங்கள்
நாளெல்லாம் நினைப்போம் உன்னை.
-#கவிஞர்_கண்ணதாசன்

R. KrishnasamyNaidu
was former Member of the LegislativeAssembly.

R.Krishnasamy naidu Born : 05.01.1902. Died : 30.10.1973.

He was elected to theTamilNadulegislative assembly as anIndianNationalCongress candidate from Srivilliputhur constituency in 1957 election and from Rajapalayam constituency in1962 election

An ardent social worker and a keen co-operator;Agriculturist;interested in composing Tamilverses;reading books and hearing carnatic music.

Member Madras Legilative Assembly 1952- 67.

Joined in the Indian National Congress in 1922.

Underwent imprisonment for one year in 1930.

during the Civil Disobedience Movment.

President Tamil nadu Congress Committee. 1962.

President Srivilliputhur panchayath Board.

Chairman Estimates committee of the Madras Legislative Assembly.1960.


#ரா_கிருஷ்ணசாமிநாயுடு
#ஆர்கே

#ஸ்ரீவில்லிப்புத்தூர்
#தமிழநாடு_காங்கிரஸ்கமிட்டியின்_சீர்மிகுதலைவர்.
#RK
#R_Krishnasamynaidu

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-10-2023.

Sunday, October 29, 2023

#எனது சுவடு-45 கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். #ksrvoice, #radhakrishnan, #ksradhakrishnan, #ksr, #ksrpost, #tamilnadu,

#எனது சுவடு-45

கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

#ksrvoice, #radhakrishnan, #ksradhakrishnan, #ksr, #ksrpost, #tamilnadu, 
# KrishnasamiThulasiahVandayar, ##politicalparties, #kamarajar, #Indiragandhi, #Kakkan, #MGR, #Kalaignar, #Omandoorar, #Rajaji, #Vaidhiyanadhariyer, #Muthuramalingadevar, #RajaramNaidu, #Amaravathyprison, #Pazhanikumarpillai, #Danushkodinadar, #Thirumangalpulimeenatshiiyer, #TheniNRThiyagarajan, #Nedumaran, #Chidarammudaliyar, #Chidambarambharati, #TSArunachalam, #MPDamodaran, #Krishnasamyvandayar, #TTKrishnamachari, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #இராதாகிருஷ்ணன், #அரசியல், #கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #கேஎஸ்ஆர்வாய்ஸ், #அரசியல்கட்சிகள், #எனதுசுவடு, #காமராஜர், #காங்கிரஸ், #கக்கன், #எம்ஜிஆர், #கலைஞர், #இந்திராகாந்தி, #ஓமந்தூரர், #ராஜாஜி, #வைத்தியநாதஐயர், #முத்துஇராமலிங்கதேவர், #இராஜாராம்நாயுடு, #அமராவதிசிறை, #மாபொசி, #தியாகிபழனிகுமார்பிள்ளை, #விருதுநகர், #தனுஷ்கோடிநாடார், #திருமங்கலம்புலிமீனாட்சிசுந்தரம்ஐயர், #தேனிஎன்ஆர்தியாகராஜன், #நெடுமாறன், #சிதம்பரம்முதலியார், #சிதம்பரம்பாரதி, #டிஎஸ்அருணாசலம், #எம்பிதாமோதரன், #கிருஷ்ணசாமிவாண்டையர், #முஇலட்சுமணன், #டிடிகிருஷ்ணமாச்சாரி, https://youtu.be/AkTC93v7vgY?si=eUTbKaVrqJx0oCLs

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
29-10-2023,

#*இன்றைய அரசியல்….* '*வலியின்றி வரலாறில்லை*'

#*இன்றைய அரசியல்….*
'*வலியின்றி வரலாறில்லை*'
—————————————
*என் கோபம் எல்லாம் உனக்கு
திமிராகத் தான் தெரியும்..
ஆனால் உனக்கு
தெரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று*…….

தேசபக்தி குறித்து 1894 ல் டால்ஸ்டாய் கூறியது,

"எளிமையான, தெளிவான ஐயத்துக்கிடமற்ற அர்த்தத்தில் தேசபக்தி என்பது ஆட்சியாளர்கள் தங்கள் ஆவல்களையும் ,பேராசைமிக்க இச்சைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு வழி,ஆளப்படுபவர்களுக்கு மனித மேன்மை , பகுத்தறிவு, உணர்வு இவற்றைத் துறந்து அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அடிமைத்தனத்துடன்  கூடிய மயக்கத்திலிருத்தல் ஆகும்."

இன்றைய அரசியல் கட்சிகள் மிக தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். குறிப்பாக தகவல் தொழில்நுட்ப மின்னணு காலத்தில் ஐ டிவிங் என்று சொல்லக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த தலைவர்களுக்கு  எவ்வித சிறப்புகள் இல்லை  என்றாலும்  பிம்பமாக கட்டி பொது வெளியில் சிறப்பாக காட்டிக் கொள்ளவும்,குறிப்பிட்ட செய்தி-மீடியா வெளிச்சம் கிடைப்பதற்கான எல்லா தந்திர உபயங்களையும் கையாளுகிறார்கள் அவர்களுக்கு தேவையான பணமும் அதற்கு அளிக்கப்பட்டு வருகிறது. விடையறிந்திடவே இயலாத, புரியாத புதிராக  இந்த சிலரின் பொது வாழ்க்கை...!

முதல்வர்களோ மந்திரிகளோ கட்சி தலைவர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ எப்போதும் சுறுசுறுப்புபாக ஊர்ஊராக அலைந்து மக்கள் நலத்திட்டங்களிலேயே எந்நேரமும் சிறப்பாக அவர்களின் இதய சுத்தி யோடு ஈடுபட்டுக் கொண்டிருப்பது மாதிரி இந்த ஊடகங்கள் உண்மையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட ஒலி மற்றும் ஒளிபரப்புகின்றன.

காலையிலிருந்து கட்சிப் பணி ஆட்சிப் பணி என்று மக்களின் முன்பாக இந்த தலைவர்களின் முகத்தை திரும்பத் திரும்பத் திரும்பதிரும்பகாட்டிக்கொண்டிருக்கிறார்
கள்.கொள்கையோ வாக்குறுதிகளோ எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டன. அதெல்லாம் இனி இந்த தலைவர்களுக்கு தேவையில்லை!மேடைகள் விழாக்கள் பரிசுகள் அன்பளிப்புகள் என்று ஒரு திருவிழா கோலத்தை இந்த வீடியோக்கள் மீண்டும் மீண்டும் மக்களின் முன்பு பலமுறை ஒரு தடவை எடுத்த காட்சியை பலமுறை போட்டு போட்டுக் காட்டுகிறார்கள்

அதுபோக இந்த ஐடி விங் காரர்கள் மொத்த ஊடகத்தையும் கையில் எடுத்து தான்ஆதரிக்கும்  தலைவர்களுக்கு எதிராகப் பேசுபவர்களை இவர்களே உருவாக்கி ஆதரவாகப் பேசுபவர்களை எதிரே அமர வைத்து மோத வைத்து அவர்களை  ஒரு விவாத பொருளாகவே எப்பொழுதும் லைம் லைட்டில் வைப்பதில் விற்பன்னர்கள் .இந்த ஐடி விங் காரர்கள்   செயல்படாத அரசாங்கத்தை கூட தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறஒருஅரசாங்கமாகக்காட்டு
வதில் கைதேர்ந்தவர்கள்.

தலைவர்களும் கட்சிக்காரர்களும் அவர்களைக் காட்டிலும் மிகத் தெளிவானவர்கள். தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்து விட்டால் வாக்கு கிடைத்து விடும் என்று தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஊடக வெளிச்சம் இன்னொரு பக்கம் பணம் செல்வாக்கு இது இரண்டும் இருந்தால் இன்று ஒருவர் அரசாங்கத்தை பிடித்து விடலாம் என்கிற அளவில் இந்த அவலமான போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரும் கோடீஸ்வர கட்சி என்பதை தவிர என்ன கொள்கையை அது இனி மக்களிடம் சொல்லி அவர்களை ஏமாற்ற பார்க்கிறது ஒரு திட்டமும் நிறைவேறவில்லை கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாய் போய்விட்டது போய்விட்டது. இலவச ஏமாற்று வேலைகளில் தமிழர்கள் இனம் புரியாது குழம்பி கிடக்கிறார்கள்.  ஒரு கம்பெனி விளம்பரங்கள் மாதிரி   இந்த கட்சி சென்னை சில்க்ஸ் மற்றும் நகர்ப்புற அல்சாமால்களில் குடி கொண்டு விட்டது. எல்லாம்  விளம்பரம் தான். வியாபார பொருள்கள் Pears, lux  soapகள் Horlics என விளம்பரங்கள் தொலைகாட்சி, ஏடுகள் வருவது போல அரசியல் வியாபாரா சர்க்கு ஆகி விட்டது. கட்சிகளின் அரசியல் இன்று இப்படி மடை மாறிவிட்டது.

தனக்கான  செய்தியாளர்கள்,வெறும் பிம்ப ஊடக அரசியல் தொழில்நுட்ப வாதிகளை வைத்துக்கொண்டு அவர்களை நம்பி மட்டும் இனிமேல்  கொண்டு செலுத்த முடியாது அவை மாறும் எதார்த்தங்களாலும் மாறி மாறி ஆட்டம் போடும் மூலதன விளையாட்டுகளால் ஒரு பின்ன நவீன முறையில் மூலதனத்தில் விளையாடும் ஒரு பொம்மை அமைப்புகள்! அதை நம்பி தன் கொள்கைகளை  அது இருந்தால் அல்லது அது இருக்கிறதாக நம்பிக் கொண்டால் கூட மக்களிடம் கொண்டு போய் அதனை சேர்ப்பதில் தத்துவம் ஏதுமில்லை வெறும் பணம் மட்டும் தான் இறுதியில் உங்களிடம் இருக்கிறது.

உண்மை ஒரு எட்டு எடுத்து வைப்பதற்குள் பொய் உலகைச் சுற்றி வந்துவிடும் என்பார்கள் வேறு வழியில்லை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.ஊடகங்கள் எல்லாம் வெறும் நாடகங்கள் என்கிற உண்மை புரிதல் வேண்டும் அரசாங்கமும் என்பதே வியாபாரமாக ஆகிவிட்டது. தொலைகாட்சிகள், செய்திதாட்கள் நடு நிலை, அறத்தை தவறி விட்டது. இவை கட்சி, சாதி சார்பாக சென்று விட்டது. உண்மையில், நல்ல கள நேர்மையாளர்களுக்கு மற்றவர்களின் அங்கீகாரம் ஒருவருக்கு தரும் அந்த மன நிறைவான சந்தோஷம்.அதற்கு ஈடு இணை, 
இந்த அகில உலகத்தில் வேறு எதுவும்  இல்லை என்பதை எவருக்கு அக்கறை இல்லை. போலி பாசாங்கு செயவர்களை உயர்த்தி செய்திகளாக வரும்.

நீங்கி நிரைதலே நிதர்சன வாழ்க்கையின் நிலையான தத்துவம் ....நீங்கலை நிதானித்தால் நிலைத்திறுப்பது அர்த்தமற்ற வேடிக்கை நிலைப்பில் மயக்கம் என்றால் அது தீராத வேட்கை நிலைப்பது நிஜமா? நீங்குதல் நிஜமா? நிஜமே இங்கே நிஜம் இல்லை பொய் என்று உரைப்பதில் பொருளும் இல்லை. மாயை எல்லாம். நல்லவர்கள், நற்பணிகள் மதிப்பற்றது இங்கு….ஏன் என்றால் 
பாசாங்கு கூட்டம்.

ஒரு காலத்தில் இந்திராவே இந்தியா என்று முழக்கமிட்ட அலைவரிசை மிக மோசமான முறையில் முடிந்துவிட்டது! அதேபோல்  குடும்பம் தான் அரசியல் என்கிற வரலாறும் சிதையும் போது உங்களுடன் இந்த ஐடி விங், இன்று தூக்கி பிடிக்கும் சில செய்தியாளார்கள, உங்கள் காலை வணங்கியவர்கள்  யாரும்  உடன்வர மாட்டார்கள்! அவர்கள் உண்மையில் தங்கள் சுய லாபங்களுக்காக அப்போதும் உங்களைக் கைவிடுவார்கள். அதைக் காப்பாற்ற மாற்றுக் கட்சிகளுக்கு இடம்பெயர்வார்கள்! ஏனெனில் அவர்கள் தங்களுடைய உடைமைகளை பாதுகாக்கவே திரும்புவார்கள்! பலவற்றைகாலம்  உண்டாக்கும் .அப்போது விசாரணைக்குள்  வருவீர்கள். கவலைகள் சலனங்கள் தொடங்கும். எனவே இயக்க நெறி கொள்கைகள் மட்டுமே கை கொடுக்கும்.

••••
தெளிவின்கண் ஆற்றும் 
      திறன்வழி ஆக்கம்
களித்திடும் வாழ்க்கையின் 
      காப்பு.
-Vanathi Chandharasekaran
வானதி சந்திரசேகரன் #குறள்_வெண்பா
••••
இவ்வளவு பின்னடைவுக்குள்ளான காலத்துல ஒரு நல்ல தலைமை என்ன செய்யணும்னா, எங்கேயாவது ஏதாவது கிடைக்குமான்னு இடைவிடாது தேடணும். கொஞ்சமே கொஞ்சம் ஒத்து வருகிற மாதிரியான ஆளுங்க யார் கிடைச்சாலும் அவங்ககிட்டப் போய் உட்காரணும்.விவாதிக்கனும்… செயல் படனும்….. '#வலியின்றி_வரலாறில்லை
•••••
புதிய மாதவி வரிகள்…
மறதியும் கூட
நம்மை 
மீண்டும் அப்படியே
பார்க்க துடிக்கிறது.
...
அப்படியே இருப்பது
எப்படி!?
தயங்குகிறாய்.
ஏ.. என் செல்ல முட்டாளே..
ஒரு முறை
அப்படியே வந்து
நடித்துவிட்டுப் போ.
இப்போதெல்லாம்
ஒப்பனைகள்
பழகிவிட்டது.
நடித்து நடித்து
நம் நிஜங்கள்
மறந்தும் போனது.
நடித்தாவது
அதை மீட்டெடுப்போமா
-@pudhiyamadhavi

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
29-10-2023.


*Famous The Book Shop Jorbagh, in Delhi, ending*



—————————————
The Bookshop in Jor Bagh which has been around since the 1970s has been described by the New York Times as “the cosiest bookshop in the country”.
டில்லி சென்றால் Khan market Bahrisons Booksellers , @jorbaghbookstore  செல்லாமல் சென்னை திரும்பியது இல்லை. JNU காலத்தில் இருந்து 1970 இதன் வாடிக்கையாளர். The Book Shop, in Delhi’s Jorbagh, இந்த அக்டோபர் மாத இறுதியில் மூடப்படுவது கவலையான செய்தி







Mayank Austen Soofi
Friends, an era in the world of bookstores is ending! India’s iconic The Book Shop, in Delhi’s Jorbagh, is shutting down at this month’s end! The founders’ daughter Rachna Singh just broke the news. I have chronicled this haven a multitude of times, over the years, in both words and images. The bookstore we love will live on in the heart of its many friends, and also in my work! But I’ll miss its presence! Here, founders Nini and KD Singh—I clicked them in their “true home” in 2009!
•••
The Bookshop in Jor Bagh is going to be closed…. 

Like then Madras now Chennai Nungambakkam Land marks book store 
A hollow in the gut feeling...when people 

places and things change or dissappear from life...everything passes ,we shall too but it never stops hurting.

That’s sad. It was a haven. Couldn’t go there often but just knowing it was there was enough..

••••

Miles Davis’s moody music fills the room. An elegant woman is sitting, surrounded by books. The rest is silence and sakoon.

This was an evening scene from some years ago at The Book Shop. The Jor Bagh landmark is shutting down tomorrow. Rachna Singh, the founders’ eldest daughter, broke the news yesterday on social media, saying: “The Book Shop has had its season, now it’s time to move on.” She said “we will dissolve the partnership that owns it.” The other partner, Sonal Narain, is moving the business to adjacent Lodhi Colony Market, with the same stock and staff. The Bookshop Inc will open on November 1.

The Book Shop’s original edition was a couple’s longtime love story—see photo. It was established in 1970 by Kanwarjit Singh Dhingra, aka KD. He died some years ago at the age of 73, after which his wife, Nini, became the face of the shop (she is the aforementioned elegant woman).

The shop continued to serve all this time in sleepy Jor Bagh Market, but cemented its iconic reputation during the 24 years its branch enjoyed in the more popular Khan Market. It was in that address that Salman Rushdie signed copies of his newly published Midnight’s Children. That was also the outlet where the great Gabriel García Márquez browsed during his only visit to India.

The Khan Market branch shut down in 2006 after a rent dispute. The one in Jor Bagh carried on. Its closure marks the end of an era in Delhi.

After a brief stint at a family-owned factory, KD co-founded a delicatessen in Jor Bagh Market in 1963. Steak House was the first Delhi store to stock imported cheese and meat cuts. This was about the time that KD was dating an army officer’s daughter. He would pick her up after classes from Lady Shri Ram College and they would drive to Connaught Place restaurants such as Volga or Gaylord, both of which closed long ago.

KD and Nini married in 1967. They opened The Book Shop in 1970. Nini remembers her husband single-handedly arranging all the books. When he was done, the two Jazz music lovers waltzed between shelves that smelled of wood polish.

Following the arrival of the coronavirus pandemic, Nini drastically reduced her presence at the shop, leaving its daily administering to business partner, the aforementioned Sonal Narain.

In the pre-pandemic days though, every evening at quarter past seven, staffer Sohan Singh— himself a bookstore legend—would switch off the air conditioner, Nini would turn off the credit card machine, pick up her handbag, took one last look around and turn off the lamps one by one.

At the forthcoming Bookshop Inc in Lodhi Colony, the genial Sohan Singh will continue to be present. And Jor Bagh will still have a bookstore, The Kunzum Lounge, since 2022.



#TheBookShop_Jorbagh
#newdelhi_bookstores #jorebaghbooksellers
#landmark_bookstore_Chennai

#ksrpost
29-10-2023.


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் #*மக்களின் முதல்வர்!* #*முதல்வர்களின் முதல்வர்!!*

#*மக்களின் முதல்வர்!*
#*முதல்வர்களின் முதல்வர்!!* 
—————————————

நேற்று (28-10-2023) மாலை திருமதி தேவி  மோகன் தனது ‘ஓமந்தூரார் - முதல் முதல்வர்’ பாரதி புத்தகாலயம் வெளியிட்டள்ள நூலை சந்தித்து வழங்கினார். பத்திரிகையாளர் மணி மாறன் உடன் இருந்தார். இந்த புத்தகத்தில் எனது அணிந்துரை வேண்டும் என கேட்டு பெற்றனர். அமைச்சர் கே.என். நேரு, தமழக முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் நண்பர் ஜி. ராமகிருஷ்ணன, நடிகர் சிவகுமார் ஆகியோர்களின்  அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளது.




 திருமதி தேவி  மோகன் இலங்கையில் பிறந்து அங்கு படித்து பின் திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் கற்றார்.
***
எனது அணிந்துரை:

*மக்களின் முதல்வர்!
முதல்வர்களின் முதல்வர்!!* 
••••
பொது வாழ்வு, அரசியலில் நேர்மையின் இலக்கணமாகத்திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை ராஜதானியின், ஏன் தமிழ்நாட்டின் முதல் முதல்வர். உத்தமர்காந்தி அடியொற்றி விடுதலைப் போராட்டம், காங்கிரஸ் கட்சிகளப்பணிகள் என ஆரம்ப கட்டத்தில் பங்கேற்றவர். நிலக்கிழாராக இருந்தாலும் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர். காங்கிரஸ்வாதியாக விடுதலைப் போராட்டக் காலத்தில் நடந்தே சென்று கிராமம் கிராமமாக தண்டோரா போட்டு, கூட்டங்களை நடத்தி விடுதலை உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டியவர்.
 அன்றைய திருநெல்வேலி ஜில்லாவுக்கு 1936-ல் கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை வந்து மதிய உணவிற்கு எங்கள் கிராமத்திற்கு வந்ததாகவும் அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டு எங்கள் வீட்டின் பெரிய திண்ணையில் பாயை விரித்து எளிமையாக படுத்து உறங்கி சங்கரன்கோவில் சென்றார் என்றும் எங்கள் தந்தையார் சொல்வார். என்னுடைய தந்தை கே.வி.சீனிவாசநாயுடுவிடம் அன்பு பாராட்டியவர் ஓமந்தூரார். அவர் எழுதிய கடிதங்களை எங்கள் தந்தையார் பாதுகாத்து வந்தார் என்பதெல்லாம் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. எங்கள் வீட்டில் இந்த உத்தமரின் காலடி பட்டது எங்களுக்கு காலம் வழங்கிய அருட்கொடை என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டிவனம் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் துவங்கி முதலமைச்சர் பொறுப்பு வரை உயர்ந்த விவசாயிகளின் முதல்வர்.  தென்னார்காடு மாவட்டத்தில் படையாச்சிகளை குற்றப்பரம்பரை என ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சட்டம் கொண்டு வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவரும் ஓபிஆர்.
ஓமந்தூரார் முதல்வரான பின் 1949-ல் நிலச் சீர்த்திருத்தங்கள் குறித்தான நடவடிக்கைகளை ஜே.சி.குமரப்பா அறிக்கைக்கு சற்றுமாறுபட்டு விவசாயிகளின் நலன்கருதி தன் கருத்தில் ஆணித்தரமாக இருந்ததெல்லாம் உண்டு. பின் புதுச்சேரி மாநிலம் பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவில் இணைய எடுத்துக் கொண்ட போராட்டங்கள் அதிகம். அதேபோல ஹைதராபாத் நிஜாம் இந்தியாவோடு இணைய யோசித்து சற்று எதிர்வினைகள் ஆற்றியபோது இரும்பு மனிதர் சர்தார்படேலுக்கு உதவியாக சென்னை ராஜதானியில் பாதுகாப்பு படையை அனுப்பி ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்க பட்டேலோடு பெரும் பங்காற்றியவர். தமிழக தலைவர்கள் அந்தக் கால கட்டத்தில் ராஜாஜி, காமராஜர் என பல்வேறு திசைகளில் பயணித்தாலும் அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய - விரும்பிய தலைவராக ஓமந்தூரார் இருந்தார்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம், விவசாய நலன்களுக்கான திட்டங்களைத் தீட்டியவர் ஓமந்தூரார். இன்றைக்கு சமூகநீதி என்று பலர் முழங்குகிறார்கள். ஆனால், நாட்டின் விடுதலைக்குப் பின் நீதிக்கட்சி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முத்தையா முதலியார் கம்யூனல் ஜீவோவிற்கு அடுத்து செயல்பாட்டிற்கு வரக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக சமூகநீதி உத்தரவை முதன்முதலாக பிறப்பித்த ஒரு காங்கிரஸ் முதலமைச்சராக ஓ.பி.ஆர். திகழ்ந்தார். 
இப்படியெல்லாம் மக்களின் உரிமைகள், நலன்களைப் போற்றி கடமையாற்றிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை இன்றைய இளைஞர்கள் அறியவோ, புரியவோ இல்லை என்பது எங்களைப் போன்றோர்க்கு ரணமான செய்திகள். பொதுவாழ்வில் நீண்டகாலம் எங்களைப் போன்றோர் பணியாற்றினாலும் எங்களுக்கு என்றைக்கும் ரோல் மாடலாக ஓமந்தார் இருக்கின்றார். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் வடலூர் வள்ளலார் சுத்த சன்மார்க்க அமைப்புக்கு வழங்கி அந்த அமைப்புக்கான கட்டிடங்கள் கட்டி, வள்ளலாருடைய வடலூர் ஆசிரமத்தை மேலும் சீராக்கி கொண்டாடியவர் ஓமந்தூரார். 
இந்த இடத்தில் ஒன்றை பதிவு செய்ய வேண்டும். இன்றைக்கு எத்தனையோ அமைச்சர்கள் தேசியக்கொடி கட்டி சிகப்புவிளக்கு கார்களில் காதைப் பிளக்கும் ஒலி எழுப்பான்கள் (ஹாரன்) அடித்துக் கொண்டு செல்வதைப்பார்க்கின்றோம். அவர்கள் ஒருசிலரிடம் ஓமந்தூராரைத் தெரியுமா? என்று நான் கேட்டபோது மேலும் கீழும் பார்க்கிறார்களே தவிர பதிலில்லை. 
தமிழ் வளர்ச்சி, தமிழ்இலக்கியங்கள், பெரியசாமி தூரன் தலைமையில் அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்குதல், உயர்கல்வி சீராக்குதல், நீர்ப்பாசன திட்டங்கள், மின்சார வசதி, தமிழக திருக்கோவில்களின் சீர்திருத்தங்கள் என பலதுறைகளில் சீரமைப்பை திட்டமிட்டு செய்தவர் ஓமந்தூரார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தையே அரசு சின்னமாக அறிவித்து, தமிழருடைய கலாச்சாரத்தைப் போற்றி வளர்த்தவர். ஒருமுறை இங்கிலாந்து எலிசபெத் ராணி சென்னை வந்தபோது அவரை வரவேற்கச் செல்ல வேண்டும். குளித்துவிட்டு தயாராகி கசங்கிய கதர் சட்டையோடு வெளியே வருகிறார் ஓமந்தூரார். இவரை எதிர்பார்த்து அழைத்துச் செல்ல இருந்த அதிகாரிகள், “ஐயா, நீங்க கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வருவீர்கள் என நினைத்தோம். ஆனால் என்றும் போல கதர் ஆடைகளோடு சென்றால் ராணியை வரவேற்க நல்லாவா இருக்கும்” என்று கேட்டவுடன் ஓபிஆர், “இதோ பாருங்க... இதுதான் என் இயல்பு... நீங்க சொன்னாப்புல நான் வரமுடியாது. என்னால் வேஷங்கட்ட முடியாது. இப்படி வரவேற்க வருவதே நல்லது. இல்லையென்றால் நான் வரலை.. நீங்க எல்லாம் போங்க...”என்ற பதிலளித்தவர் தான் ஓமந்தூரார்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய முண்டாசுக் கவி பாரதியின் பற்றாளர். எட்டயபுரத்தில் பாரதியின் மண்டபம் அமைய கல்கிக்கு உதவியாக இருந்தவர் ஓமந்தூரார். பாரதியுடைய கவிதைகள் மேல் இருந்த தடையை நீக்க வேண்டும் என்று ரசிகமணி டி.கே.சியோடு குரல் கொடுத்தவர்.
இவர் நேர்மையின் திருவிளக்கு! நேர்மையற்றோர்க்கு அவர்களை அழிக்கும் அக்கினி! ஏழை பாழைகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும் ஒப்பற்ற ஜோதியாக விளங்கியவர்.
இப்படிப்பட்ட மாமனிதருடைய படத்தை தமிழகச் சட்டப் பேரவையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னால்தான் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின் வைக்கப்பட்டது. பலருடைய படம் ஏதோ ஒரு ஆதாயத்திற்காக அங்கே வைக்கப்பட்ட போது இந்த மாமனிதனுடைய படத்தை வைக்க நாடு விடுதலைப்பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு தான்ஆட்சியாளர்களுக்குத் தெரிகிறது.
தகுதியே தடை என்ற நிலையில் இன்றைய அரசியல் இங்கே நடக்கின்றது. ஓமந்தூரார் போல் இன்றைக்கு பார்ப்பது சிரமம். இவ்வளவு நெறியான வாழ்க்கையை வாழ்ந்த மாமனிதர் 25 ஆகஸ்ட் 1975-ல் காலமானார்.
இப்படி ஒரு ஆளுமையினுடைய நூலினைத் திருமதி தேவிமோகன் அவர்கள் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிடுகின்றது. திருமதி தேவிமோகன் என்ற பாரததேவியின் தந்தையார் பெயரும் ராமசாமி ரெட்டியார். நூலாசிரியரின் பிறந்த தேதியும் ஓமந்தூரார் பிறந்தநாளன்றே.
ஒரு பொருத்தமான நுண்மான் நுழைபுலம் கொண்ட திருமதி தேவிமோகன் சிறப்பாக இன்றைய தலைமுறைக்கு ஓமந்தூராரை புரிந்து அவரையே வழிகாட்டியாக எடுத்துக்கொள்கின்ற அளவில் இந்த நூலை வடித்துள்ளார். இந்த நூல் ஓமந்தூரார் முதல் முதல்வர் என்ற தலைப்பில் தமிழக மக்களிடம் சென்றடைய வேண்டும். இந்நூல் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய வேண்டும். இதை படைத்த நூலாசிரியர் திருமதி தேவிமோகனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

முகாம்: கோவில்பட்டி​​​​​​  
தேதி: 29.07.2023

*#மக்களின்_முதல்வர்!
#முதல்வர்களின்_முதல்வர்!!* 
#ஓமந்தூர்_ராமசாமிரெட்டியார்
#Omandur_Periyavalavu_RamasamyReddiyar

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
29-10-2023.


Saturday, October 28, 2023

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது….

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது….

#*சிலப்பதிகாரம்-ஊழ்* #*இன்றைய அரசியல்* #*குற்றாலம் மௌனசாமி மடம்* #*பிரதமர் பி.வி.நரசிம்மராவ்* #*பிரதானமான நிலக்காட்சி*



—————————————
தமிழின் கவிதை பாரம்பரியத்தில் வள்ளுவர் இளங்கோ பாரதி வள்ளலார் என பலரும் எழுதி வந்த வழக்காற்றில் இன்றைய நவீன கவிதைகளும் அதன் தொடர்ச்சியில் சமூக வாழ்க்கை பற்றி தனது படைப்புகளை  அரசியலாக முன் வைத்து தான் வருகின்றன. அந்த வகையில் கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன் என்கிற முறையில் இன்றும் அவரது ஒரு கவிதையை முன்வைத்து எனது பதிவை முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

இக்கவிதையில்   சிலப்பதிகாரத்தின் கூற்றுகளும் இருக்கின்றன என்பதை இதைத் தேர்வு செய்ய முக்கிய காரணம்.
இதில் அவரும ஒரு ஊழ்வினையை இறுதியில் முன் வைக்கிறார்.

‘பிரதானமான நிலக்காட்சி’

பல்முனை வணிகத்தின் பிரதான பிச்சைக்காரனாகிய நான்
அழுகிய காய்கறிகள் விரயமாகும் சந்தைக்குள் தெருவில் அலையும் மிருகத்தின் சாவதானத்தோடு பலவற்றிலும் வாய் வைத்து முதுகு தண்டில் அடிவாங்குகிறேன்.
நீங்கள் பார்த்திருக்கலாம்
 சிறிய பாலித்தீன் பைகளில் காய்ந்த முள்ளங்கிகளைச்சுமந்து திரிபவனை 
அல்லது 
  மேம்பாலத்தின் நடைபாதையில் தன் கந்தல்களை வைத்துக்கொண்டு தனியே குடித்தனம் பண்ணும் ஒரு காலழுகிய பெண்ணை
பார்க்காதவர்கள் பாக்கியவான்கள்
 மற்றபடி தேசத்தின் பிரமாதமான நிலக்காட்சி அது
இவர்கள் தான்  காலத்தில்
சந்தையின் நடுவே மோசடிக்காரர்களை அறைந்து கொல்லும் சதுக்கப்பூதமாக இருந்தார்கள்
என்பது எவ்வளவு கேலிக்குரியது
என் பிச்சைக்காரத்தனத்தின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் விமான தளங்கள் மென்மேலும் புதுப்பிக்கப்படட்டும்
ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இல்லை என்பவர்களுக்கும்
பூமியின் விலை பன்மடங்கு ஆகிவிட்டது என்று ஆறுதல் கொள்பவர்களுக்கும்
பெண்களிடம் துரோகம் மட்டுமே எஞ்சியிருக்கிறதென முறையிடுபவர்களுக்கும்
 சேர்த்தேதான் சாபம் இடுகிறேன்
ஒரு நாள் இவ்வுலகின் வீடுகள் 
மது விடுதிகளாகவும் வேசைத்த்தனத்தின்
 படுக்கையறைகளாகவும்  மாறும் போது
உங்கள் நிலக்காட்சிகளை பங்குச்சந்தைகள் அல்ல மன்றாட்டும் கடவுளும் அல்ல ஆயுதச் சந்தைகளே தீர்மானிக்கும்.

சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். 

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

மன்னர்களையும் கடவுள்களையும் பாடிய காவியங்களுக்கு அப்பால் குடிமக்கள் காவியத்தை  எழுதிய இளங்கோவடிகளின் நூலான சிலப்பதிகாரத்தில் காணப்படும்  நீதிகள் தான் நாம் மேற்கண்ட மூன்று அசைக்க முடியாத உண்மைகள். அவற்றின் மீது மிக விரிவான உரைகளையும் விவாதங்களையும் தமிழ் கூரும் நல்லுலகம்  மேற்கொண்டு இன்று வரை அதைப்பேணி வந்திருக்கிறது. அதை மக்கள் வழக்காகவே நாம் இன்றளவும் தொடர்ந்து காணலாம்.

அப்படியான சிறப்பு பெற்ற தமிழின் தொன்மையான அரச நிர்வாக அதன் அடிப்படையான  குடும்ப வாழ்க்கை முறைகள் இன்றைய நவீன அரசாட்சி முறையில் எவ்வளவு கேவலமாக திரிந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எங்கு பார்த்தாலும் ஊழல்கோடிக்கணக்கான ஆயிரக்கணக்கான பொருளாதார ஊழல் முறையில் தான் இன்றைய நவீன அரசாங்கங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

கொஞ்சமும் மனம் கூசாமல் பொதுமக்களின் பணத்தை  மட்டுமல்லாமல் பன்னாட்டு மூலதனத்தையும் பயன்படுத்தி இன்னும் பலவற்றையும் நிலங்களையும் கேளிக்கை விடுதிகளைத் திறந்து வைத்துக்கொண்டு லட்சக்கணக்காக  சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் யார் யாரிடம் கூட்டில் இருக்கிறார்கள்!  அரசுகள் எந்த வகையான வணிக தந்திரத்தை மேற்கொள்கிறன! எத்தனை யூக பேர ஊழல்கள்! வங்கியை வைத்து ஏமாற்றும் தில்லுமுல்லுகள்  அரசியல் புரோக்கர்கள் என்று சொல்லக்கூடிய கமிஷன் முறையில் ஒரு அரசாங்கத்தை நடத்துவதற்கு பெயர்தான் மக்களாட்சியா?

உண்மையில் நாட்டு வளர்ச்சிக்கு தான் இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர்கள் எத்தனை முறை சொன்னாலும் இன்னும் ஏன் அதிகமான கடன் தொகைகளை பெற்று இந்த அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது
என்பது மட்டும் புரியவில்லை. மக்களுக்குத் தெரியாது தெரிவிக்க அவசியமில்லாத குழப்பமான வகையில் தான் அரசுகள் நடந்து கொள்கின்றன. ஆனால் தனியார் சொத்துக்கள் ஏன் இவ்வளவு பெருக்கம் அடைகின்றன என்பதற்கான முறையான விசாரணையும் வருமானங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் ஏதும் நடைமுறையில் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

அமலாக்கத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சோதனை இடுகிறார்கள்.
ஆனாலும் அதையும் மீறி அதிகம் சொத்துக்கள் மடைமாற்றப்படுகின்றன என்றால் ஊழல்கள் அதிகமாகிவிட்டது என்று தான் அர்த்தம்.

யாரோ பாதிக்கப்பட யாரோ கண்ணீர் விட அழுது அழுது ஆற்றாமல் வாழ்விழந்து பலரும் தெருவில் திரிய  இந்த பாவப்பட்ட ஊழல் பலரை பிரமிக்க வைக்கும் அளவில் பணக்காரர்கள் ஆக்கிவிடுகிறது.

கல்வி மருத்துவம் பொதுச் சொத்துக்கள் அனைத்திலும் அபகரிப்பும் ஊழலும் மலிந்து விட்டன. இதற்கு அதிகாரமும் துணை போகிறது. யார் வாழ்ந்தாலும் என்ன இறந்தாலும் என்ன தன் பை நிரம்பினால் போதும் என்கிற போக்கு ஒரு சமூகத்தை அதன் தொடர்ச்சியில் மிக மோசமான முறையில் நாசகரமாக்கி வருகிறது! இதைத்தான் நாம் ஊழ்வினையின் சமூக்காட்சிகள் என்று சொல்கிறோம்.

மிகச் சிறந்த இந்திய பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் இந்த வளர்ச்சி என்பது மறுபுறத்தில் வறுமையை பிரதிபலிக்கிறது என்று சொல்லி நோபல் பரிசை பெற்று கொண்டார்.

ஏறத்தாழ நான்கு கோடி மக்கள்  கடந்த 30 வருட இடைக்காலத்தில் பட்டினியால் இறந்துவிட்டார்கள் என்று சொன்ன அவரது கண்டுபிடிப்பு மிக அதிர்ச்சியை அளித்தது. 

அதை யார் இப்பொழுது நினைவு கொள்கிறார்கள் எல்லாம் மறந்து வேகம் வேகம் போக நேரம் என்பது பணம் என்கிற முறையில் இந்த சமகாலம் எல்லோரையும் பரபரக்க வைத்திருக்கிறது. இதைக் கண்டு தன்னிச்சையான இயற்கையே சுற்றுச்சூழல் மாசால் நடுங்குகிறது. பல அபூர்வ விலங்குகள் அழிந்து விட்டன.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம். என்பதற்கு இணங்க அதற்கான ஊழ்வினைகளை எப்போது அவர்கள் சந்திப்பார்கள் என்பதைத்தான் நாம் நியூட்டனின் மூன்றாம் விதி போல பார்க்க வேண்டி இருக்கிறது.

இன்றைய பின் நவீன காலத்தில் நகர பன்னாட்டுக் கட்டுமானங்கள் ஏன் எதற்கென்று தெரியாமல் மிகையாக உற்பத்தி செய்யப்பட்டு அதிக அளவில் பெருகி அழகியல்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சூதாட்ட விடுதிகள் கோடைவாசஸ்தலங்கள்  தனித்தீவுகள். அங்கே ஏராளமாக விரையம் ஆகும் உணவு கழிவு மது போத்தல்கள் பல்வேறு  உபயோகிக்கப்பட்ட பண்டங்கள் கடலில் விடப்படும் வீணான பொருட்கள் சுற்றுச்சூழல் கெடுதல் என்று எதற்கும் முறையான நீதிகள் விசாரணைகள் கிடையாது!

ஒரு பத்து சதவீத பணக்காரர்களுக்காக உருவாக்கப்படும் இந்த உலகத்தை நாம் யாருக்கு இறையாண்மை பரியந்தம் அளிக்கப் போகிறோம்.எளிய மக்களுக்கு அதனால் ஒரு பலனும் இல்லை! நான்கு கார்கள் 15 பங்களாக்கள் 28 தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு யாரோ ஒருவர் ஆறடி படுக்கையில் படுத்து கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த வளர்ச்சியின் மறுபக்கத்தில்
 மனிதம் தன் உடல் வளங்களை இழந்து நலம் கேட்டு சீர் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத்தான் நாம் விளக்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இந்திய பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் 1988 இல் தனக்கும் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அரசியல் ஒத்து வராது. இதனால் அரசியலில், ஓய்வு பெறுவது நல்லது என்று நினைக்கிறேன் என சொந்த ஊர் ஐதராபாத் செல்ல மூட்டை முடிச்சி கட்டி விட்டார். பின்,ஐதராபாத்தில் சில காலம் இருந்துவிட்டு,  தன் இறுதி காலத்தில் தென்காசி  குற்றாலம் மௌனசாமி மடத்தில் தங்கி அங்கேயே  இருக்கப்போவதாக தன் அரசியல் அவஸ்தைகளுக்கு அப்பால் முடிவெடுத்தார். ஆனால் 1991 பிரதமர் என்ற மாலை எதிர்பார்க்கமல் அவரின் மேல் வந்து விழந்தது. அதுதான் ஊழ்.

உண்மையில் தாம் செய்த ஊழ்வினைகள் தம்மை துரத்துவது அறியாது பலரும் அதிகார பதவியில் தான் நிலைத்திருக்கப் போவதாகக் கனவு காண்கிறார்கள். யார் யாரோ எந்த வகையிலோ முதல்வராக ஆகிவிடுகிறார்கள்.

கடந்த பல காலங்களில் வைகோ பழ நெடுமாறன் நல்லகண்ணு போன்ற இன்னும் பலருக்கு இந்த முதல்வர் பதவி கிடைத்திருக்கலாம். அவர்களும் அதற்கு முயன்றும் கூட இருக்கலாம். எந்த ஊழ் வினைகளோ அதை யார் சொல்ல இயலும்.

தகுதி திறமை என்பது அனுபவத்தில் தான் கிடைக்கிறது என்றாலும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் 40 வருடங்களாக அரசியல் இருந்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பு அவருக்கு இந்த முதல்வர் பதவி கிடைக்குமா என்பதை ஒருவரும் அனுமானிக்கக் கூட இயலவில்லை.

யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்பதெல்லாம் முன்வினை பின்வினைப் பயன்களை ஒட்டி தான் என்றாலும் தகுதியையும் திறமையும் தேர்ந்தெடுக்க ஒரு முழு சமூகமும் அறிவார்ந்த நிலையில் மன உயரங்களை கொண்டதாகவும் அறிவியல் சார்ந்து இன்னும் பல ஆற்றல்களைத்திறனாக அதையே உழைப்பாக பெற்ற சமூகத்தில் தான் நடைபெறுமே ஒழியஅதுவரை அத்தனை அவலங்களையும் ஒரு ஊழ்வினையாக நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். லட்சியவாதம் மிக அழகிய சில மனிதர்களையும் மிகப் பல கோரமான உருக்களையும் வரலாற்றில் உருவாக்கி இருக்கிறது. வரலாற்றில் மிகப் பெரிய கொடுங்கோலர்கள் லட்சியவாதிகள்தான்.

அத்தகைய முன்னேறிய சம நீதி பேசிய சமூகங்கள் கூட நிலைத்திடுமாறி போன வரலாற்றை நாம் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் மேலான ஒரு சக்தி அதன் செயல்விளைவில் ஊழ்வினை மீது நிகழ்ந்து தான் மாற்றமாகி இயக்கமாக மாறும் என்பதை ஒரு பக்கத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒளியின் தாளம் எனச்சக்தியின் ஊழிக்கூத்தனை பாரதி இப்படித்தான் குதித்துக்கொண்டாடினான். அற்பங்களை பொசுக்கும் அக்கினி குஞ்சொன்றை ஆழ்ந்த சிந்தனையில் வைத்தான். அந்த மாபெரும் சக்திக்கும் ஊழ்வினைக்கும் இடையே  யாரொருவரும் தன்னை ஒப்படைத்து நிற்கத்தான் வேண்டும்.

ரிஸ்கா முக்தார் வரிகள்…
இப்போதெல்லாம்
எல்லோரையும் நேசிக்க முடிகிறது 
எதனையும் மன்னிக்க முடிகிறது
எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது 
எல்லாவற்றோடும் சமரசமாகிட முடிகிறது

எவர்மீதும் வெறுப்புகள் இல்லை
எதனோடும் வருத்தங்கள் இல்லை
இதுதான் வேண்டுமெனும் பிடிவாதங்கள் இல்லை
என்ன இந்த வாழ்க்கை என்ற 
அங்கலாய்ப்புகள் இல்லை

இன்னும்
இழந்தவைக்காக மனம் கசியாமல்
அவமானங்களை அசை போடாமல்
விட்டுப்பிரிந்தவர்களை வீணே நினைத்துக்கொள்ளாமல்

வாழ்வு 
அதன்போக்கில் 
சுவாரஸ்யம் கூட்டுகிறது

இனி
தொலைந்தவை எவையும் 
மறுபடி நான் தொலையும் பொருட்டு
மீண்டும் கிடைக்காமலிருக்கட்டும் 
ஆமின்

-ரிஸ்கா முக்தார் 

மனிதனுக்கு மேலான சக்தி என்பது மனிதனால் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் தான் இன்னும் இருக்கிறது.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.

செப்டம்பர் 1 #திருநெல்வேலி . அதையொட்டி ஒரு சிறப்புப் பதிவு #Tirunelveli #நெல்லை #nellai

செப்டம்பர் 1
 #திருநெல்வேலி . அதையொட்டி ஒரு சிறப்புப் பதிவு #Tirunelveli #நெல்லை #nellai

#நெல்லை, #திருநெல்வேலி, #திருநெல்வேலிமாவட்டம், #திருநெல்வேலிநாள், #கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #நிமிரவைக்கும்நெல்லை, #கேஎஸ்ஆர்வாய்ஸ்,  #nellai, #thirunelveli, #thirunelvelidistrict, #thirunelveliday, #nimiravaikumnellai, #ksr, #ksrvoice, #ksrpost, #ksradhakrishnan, https://youtu.be/2cBy1GPjcnM?si=brU9cD13eN9dUNTV

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.

#ராஜராஜ சோழனின்சதயவிழா #தஞ்சைப்பெரிய கோயில் #Peruvudayar Temple

#ராஜராஜ சோழனின்சதயவிழா  
#தஞ்சைப்பெரிய கோயில் 
#Peruvudayar Temple 
——————————————
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றம் என்றார் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள்.

ராஜராஜ சோழனின் சதய விழா  நடந்திருக்கிறது.
ஒரு அமைச்சர்களோ அதிகாரிகளோ உயர் பதவியில் இருப்பவர்கள் யாரும் அந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை இவர்கள் எல்லாம் அங்கிருந்துதான் அரசியல் அதிகாரத்தின் பாடம் கற்றுக் கொண்டவர்ரகள். அங்கு இருந்துதான் ஜனநாயகத்தை கற்றுக் கொண்டார்கள். அங்கிருந்துதான் குடவோலை முறை என்று சொல்லக்கூடிய  மக்களின் வாக்களிப்பு முறையைக்கற்றுக் கொண்டார்கள். 

ஆனால் இன்று அவர்களெல்லாம் நவீன சோழர்கள் ஆகிவிட்டார்கள். தாங்கள் பெற்ற விழுமியங்களை தாங்கள் பெற்ற அறிவை வைத்து பிழைப்பு வாதம் பேசக்கூடிய இவர்கள் அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள்.

அத்தகைய ஆட்சி முறையை நவீன காலத்தில் சுலபமாக பெற்றுக் கொண்டு இன்று அதிகாரத்தில் லயிப்பவர்கள் அற்ப மமதையில் மேடை தோறும் பேசி மீண்டும் அதே நவீன முடி ஆட்சி மன்னர்களாகி விடுகிறார்கள் . இன்றைய ஆட்சி முறை மாவட்டம் தோறும் தமிழகத்தின் பிராந்திய குறுநில மன்னர்களின் ஆட்சி போல தான் இருக்கிறது. என்ன ஒரு அரசியல் அதிகாரம் !ஏகப்பட்ட அதிகார மட்ட விசுவாசிகள் அவர்களுக்கு  கீழே பன்னாட்டு கூட்டு வணிகத்தில் தங்கம் பொன் நிலம் நவீன அந்தப் புரங்கள் என்று வாழ்க்கை மிக அருமையாக போய்க்கொண்டிருக்கிறது. ..

ராஜராஜன் எழுப்பிய அல்லது தமிழ் சமூகம் தங்களுடைய வரலாற்று பாத்திரங்களை இந்த உலகம் அறியக்கூடிய. அளவில் நிகழ்த்திக் காட்டிய பெரும் சாத்தியங்களை ஒரு கிஞ்சித்தும் கூட நிறைவேற்ற இயலாத இந்த அற்ப கூட்டம் அதே ராஜ ராஜனின் விழுமியங்களை மறந்து விட்டு அதன் வழியாக கிடைத்த அனுகூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதே மன்னர் பரிபாலணம் தான் பண்ணுகிறார்கள் என்பதை விளக்கிச் சொல்லவும் வேண்டுமா.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்,தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டினார். பொ.ஊ. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஊ. 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இங்கும், கட்ட பொம்மனின்  பஞ்சாலங்குறிச்சி சென்றால் ராசி இல்லாமல் சிக்கல்கள் ஏற்படும் சிலரின் பதவி மோகம்.

கான மயிலாட வான்கோழி தன் சிறகை விரிக்குமாம்.

ஆதார விழுமியங்களையும் அறங்களையும் இழந்த கூட்டு சமூக வாழ்க்கை எந்த பிராந்திய பிரதேசத்தில் இருந்தாலும் அவை இறுதியில் அழிந்து ஒழியும் என்பதுதான் வரலாறு .ராஜராஜ சோழனை அவனது முழு வரலாறையும் விழுங்கிய ஏப்பம் விட்ட ஒரு குள்ளநரி கூட்டம் தான் இன்று தலைமை வகிக்கிறது. பெரியார் கூத்தாடிகள் என்று திட்டுவார். அவரையும் விழுங்கி ஏப்பம் விட்டு இந்த கூத்தாடிகள் கொழிக்கிறார்கள்.

ஆரியமாம் திராவிடமாம். இந்த முரண்பாட்டில் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்று தான் பழமொழியும் இருக்கிறது.  எல்லாம் வெட்டி பேச்சுக்கள்….

#ராஜராஜசோழன்
#தஞ்சைபெருடையார்கோவில்

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.


#*இப்போது நீட்தேர்வு* *போகாத,இல்லாத ஊருக்கு வழி சொல்லும் பம்மாத்து வேலை இது..*



—————————————
நேற்று இந்திய  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை  வந்த போது
 தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரைச்சந்தித்து அகில இந்திய மருத்துவத் துறைக்கான நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றும் அதன் இடர்பாட்டால் தகுதியான மாணவர்கள் பலர் மருத்துவத் துறைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள் என்று ஒரு உருக்கமான மனுவைக் கொடுத்திருக்கிறார்.சரி நீட்டை முதலில் கொண்டு வந்தவர்கள் யார்?

அதெல்லாம் சரிதான் நானும் கூட நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பவன் அல்ல. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஏக மனதாய் நீட் தேர்வை ஆதரித்து மசோதா தாக்கல் நிறைவேறிய பின்பு அதில்  ஜனாதிபதியும் கையெழுத்து போட்ட பிறகு அவரிடம் போய் இம் மனுவைக் கொடுப்பது பரிதாபகரமாகத்தான் இருக்கிறது. நானும் நீட்டை எதிர்ப்பவன்தான்… ஆனால் இன்றைய நிலையில் நீக்க முடியுமா?

இந்த முறை நாங்கள் தேர்தலில் ஜெயித்து வந்தால் முதலில் நீட் தேர்வை நீக்குவதற்கு தான் முதல் கையெழுத்திடுவோம் என்று சொன்னவர்கள் தானே இவர்கள். ஆட்சிக்கு
வந்தவுடன்  அந்த முதல் கையெழுத்து என்ன ஆனது? முதல்வர் அவர்களே..
அது எவ்வாறு சட்ட வடிவானது என்று அவர்களுக்குத் தெரியாதா? ஏமாந்தவர்கள் தமிழர்கள் என்றால் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதா? அதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது எந்த வகையில் அதைச் சட்டத்தின் மூலம் கோர வேண்டும் என்பதெல்லாம் தெரியாமல் போகிற போக்கில் விருந்தாளியாய் வந்த இடத்தில் கோரிக்கை வைப்பது அபத்தமாக படவில்லையா?

நீட்டை மாற்ற முடியாது என்பது இந்திய மருத்துவ கவுன்சில் துறை இன்னும் பலவாறானத் தகுதி தேர்வுகள் அடிப்படையில் அது உறுதியான சட்டமாக்கப்பட்டு விட்டது. பல மேல் முறையீடுகளை வழக்குகளை தாக்கல் செய்தபின்பும் அதைப் பலவறாக அலசி ஆராய்ந்த இந்தியத்தலைமை உச்ச நீதிமன்றமே நீட் தேர்வு அவசியமானதே  அதை நீக்க இயலாது என்று தீர்ப்பளித்து விட்ட பிறகு ஜனாதிபதியிடம் மனு கொடுப்பது ஜால அரசியலாகத்தான் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா கொண்டுவரப்பட்டு அந்த மசோதா  பின்னர் ஒப்புதலை பெற்று சட்ட வடிவைப் பெற்றது.ஆட்சிக்கு 2021 வந்த உடன் உங்க
கைசாத்து எங்கே

ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி நீட் ஒழிக்க முடியும் என்றால்
கோடி கையெழுத்து வாங்கி தர தாய்மார்கள் ரெடி...
டாஸ்மாக் ஒழிப்பார்களா? 

ஒரு குற்றவாளியை முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்து சிறைச்சாலையில் தள்ளிய பிறகு அவரை மீட்டுக் கொண்டு வருவேன் என்று சொல்வது வெற்று வீம்பு தானே. நான் நீட் தேர்வை குற்றவாளி போலச் சொல்லவில்லை உவமையாகவும் ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது. இந்த மனு வெறும் கண்துடைப்பு தான். இரண்டரை வருடம் ஆகியும் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசு தான் தந்த வாக்குறுதியை மறைக்கவே இந்த நாடகத்தை ஆடுகிறது. ஓட்டு வாங்க எதையும் சொல்லலாம்!ஆனால் அதை நடத்துவதற்கு திராணி வேண்டும். இந்த அரசு தேர்தலுக்கு முன்பு தன்கட்சி சார்ந்து தந்த வாக்குறுதிகளை முதலில் முறையாக பரிசீலிக்க வேண்டும்! சரியாக அதை நடைமுறைப்படுத்த முடியுமா? அதற்கான பொருளாதார பின்னணிகள் தேசிய வரவீனங்கள் யாவற்றையும் வைத்து மதிப்பிட்டு  பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில்தான் வாக்குறுதிகளைத் தர வேண்டுமே ஒழிய வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது! .முதலில்  நமது முதுகிற்குப்  பின் என்ன இருக்கிறது என்பதைப்பற்றித்தான்  யோசிக்க வேண்டும் .பிறகு தான் நீட் தேர்வை பற்றி எல்லாம் பேச நமக்கு உரிமை இருக்கிறது.

நீட் தேர்வு ஒழித்து விடுவோம் என்று இனிமேலாவது பொய் உரைக்காமல் இருப்பது நல்லது. போகாத,இல்லாத ஊருக்கு வழி சொல்லும் பம்மாத்து வேலை இது..

#நீட்தேர்வு
#neetexam

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.

#*சென்னை பவளக்காரதெரு யூதர்கள் வாழ்ந்த இடம்!* #பாலஸ்தீனம் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும்! *2009 மே மாதம் ஈழம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது உலக நாடுகள் மௌனித்தது ஏன்?* *ஒரு நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற ஊடகங்களின் பணி இன்றியமையாதது. ஜனநாயகத்தைக் காக்க மக்களுக்கு செய்திகளைக் கலப்பற்று கொண்டு சேர்ப்பது மற்றும் பிரச்சினைகளின் மூலம் அறிந்து அதற்கான விடைகளையும் தேடி பயணிப்பதும் தான் தமிழ் அகம் தொலைக்காட்சியின் முதன்மை நோக்கமாகும்*.

#palastine #israel #eelam #ltte #KSR #ksradhakrishnan 

#*சென்னை பவளக்காரதெரு யூதர்கள் வாழ்ந்த இடம்!*

#பாலஸ்தீனம் பக்கம் தான் நாம் நிற்க வேண்டும்!

*2009 மே மாதம் ஈழம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது உலக நாடுகள் மௌனித்தது ஏன்?*

*ஒரு நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற ஊடகங்களின் பணி இன்றியமையாதது. ஜனநாயகத்தைக் காக்க மக்களுக்கு செய்திகளைக் கலப்பற்று கொண்டு சேர்ப்பது மற்றும் பிரச்சினைகளின் மூலம் அறிந்து அதற்கான விடைகளையும் தேடி பயணிப்பதும் தான் தமிழ் அகம் தொலைக்காட்சியின் முதன்மை நோக்கமாகும்*.

#tamilagamtv  #tamilagam #tamilagamchannel #tamilagamtelevison https://youtu.be/ztFFVXMOEuA?si=l6OXsuQO49znAd1g

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.

Friday, October 27, 2023

#*மாற்றங்கள் தேவை ஆனால்* *நம்அடிப்படை அற,நெறிமுறைகளை மரபுகளை மாற்றவோ புறம் தள்ளவோமுடியாது*



—————————————
நேற்று கோவையில் நரசிம்ம நாயகன் பாளையம் சகோதரர் பத்மாலாய சீனவாசன் அனபு புதல்வி  பிரீதிதா மற்றும் ஆனந்த திருமண விழாவுக்கு சென்ற போது அரசியல் கட்சி நண்பர்கள், கோவை நகர பிரமுகர்களை சந்திக்க முடிந்தது.
கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களை சந்தித்தேன். நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். 



பத்மாலாய சீனவாசனின் தம்பி தாமோதரன் மனைவி மகப்பேறு மற்றும் பெண்கள் நலச் சிறப்பு மருத்துவரான  டாக்டர் சசித்ரா தாமோதரன், திருப்பாவை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அருமையாக படைத்துள்ளார்.திருப்பாவைக்கு உரை எழுதிய சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது அவரது நூலை நான் வாசித்துள்ளேன் அதில் திருப்பாவை என்பது வெறும் பாவை நோன்பு மட்டுமல்ல ஒரே சமயத்தில் பக்தியைக் கருவியாக கொண்டு மறுபுறத்தில் பெண்களின் உரிமைகள் பெண்களுடைய விருப்ப உறுதிகள் பெண்களுக்கு ஆன உயிரியல் அரசியல் போன்றவற்றின் பொருத்தப்பாடுகளை திருப்பாவையை வைத்து டாக்டர் சசித்ரா தாமோதரன்  புதிதாக நவீனமாக ஆராய்ச்சி செய்துள்ளார்.பெண்னெனும் பெரும் உயிரியல் சம்பவம்  இன்றி இந்த உலகத்திற்கு ஆழ்ந்த பொருளும் இல்லை அதைத்தொடர்ந்த இயக்கமும் இல்லை என்பதுதான் மெய்ப்பாடு.

பெண்ணின் பெருந்தக்க யாவுள என்றான் வள்ளுவன் அத்தோடு மெய் வாய் கண் மூக்கு செவிமனம் என்னும் ஐம்புலனும் பெண் கண்டோடி உள  என்றவனும் அவன் தான் . இன்பத் துன்பத்தின் பரபக்கமும் மறுபக்கமும் அவள் தான்.  அங்கே கடைக்கண் வைத்தாள் பராசக்தி என்று பெண்வழிச் சேரலின்  அறபதத்தைப் பாடிப் பாடி சரணாகதியில் பித்துநிலை கொண்டு மகிழ்ந்திருந்தான் மகாகவி பாரதி.!  

அதன் அடிப்படையில் எனக்கு சில யோசனைகள் தோன்றின. மாற்றம் என்பது மிக அவசியம் மாற்றத்திற்கு ஏற்றவாறு சமூக சிந்தனைகள் செயல்பாடுகள் கலாச்சாரம் பண்பாடு யாவும் தன்னளவில் சிதைந்தும் உயிர்ப்பித்தும் இந்த உலகத்தினுடைய தகவமைப்போடு இணைந்து ஏதோ ஒரு வகையில் தன்னை தற்காத்துக் கொள்ளவே முயல்கிறது என்றாலும் கூட சில மனித மாண்புகள் அதனுடைய அடிப்படை உரிமைகள் அது உருவான வரலாற்று பாத்திரங்களில் இருந்து பெற்றுக் கொண்ட அறம் சார்ந்த உண்மைகள் எப்போதும் நமது வாழ்விடத்தில் புழங்கிய வண்ணம் தான் இருக்கின்றன. அதை வெளியில் இருந்தோ உள்ளில் இருந்தோ வேறு எந்த அதிகாரமும்  வேரோடு  பிடுங்க இயலவில்லை என்பதைத் தான் உலகமெங்கும் பரந்துபட்டு வாழும் பல்வேறு மக்கள் குலங்களின் சொந்த பட்டறிவாகவும் அதன் அறம் சார்ந்த விழுமியமாகவும் இருக்கிறது என்பதை  நான் அதிகம் விளக்க விரும்பவில்லை. முரண்பாடுகளோ இயக்கங்களோ பிறகு அதற்கான அமைப்புகளோ ஒரு இயக்கமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவியல்ப் பூர்வமாக உணர்ந்த மக்கள் சமூகம்தான் இன்றளவும் அரசியலாகவும் தற்சார்பாகவும் நீடித்துவருகிறது அதிகம் அது உயிரியல் பண்பை தான் கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் வாழ்வில் ஒரு தத்துவ நிலைப்பாட்டை எய்தி விடுகிறார்கள்.

ஆக மாற்றங்கள்  அதன்விளை பயன்கள் தொடர்ச்சியான மோதல்கள் முரண்பாடுகள் இவற்றின் இடையே நாம் நமக்கு கிடைத்திருக்கும் அறம் சார்ந்த விழுமியங்களை  உலகில் எந்த பகுதியில் வாழ நேர்ந்தாலும் இழந்து விட முடியாது என்பதுதான் இறுதி மெய்நிலைச் செய்தியாகிறது. மாற்றங்கள் தேவை ஆனால்
நம் அடிப்படை அற நெறி முறைகளை, மரபுகளை மாற்றவோ புறம் தள்ள முடியாது. மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து,  

நமக்கு மக்கள் வாழ்வின் மீது அறம் சார்ந்து இருத்தல் தான் முக்கியம் அவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய எந்த ஒரு கொள்கையையும் அதன் அரசியல் அறம் நிறைவேற்றி தர வேண்டும்.

மனித வாழ்க்கை இந்த பூமியின் மீது ஒரு ஒப்பந்தம் மட்டுமே.  நிலம் தனது பல்வேறு பல்லுயிர் பெருகங்களுக்கு இயற்கையை சார்பாக்கி இயங்குகிறது. மனிதனுடைய கடமை அதனுடன்  இணைந்து  வாழவும் இயற்கையோடு ஒன்றித்து இந்த வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் தாம் பழங்கியது போக பின்வரும் தலைமுறைகளுக்கு அதன் புத்திளம் உயிர்களுக்கு இந்த உலகத்தை மறு புழக்கத்திற்கென விட்டுச் செல்லவும்  வேண்டும் என்பதுதான் சூழலியல் அறம் நன்றி தங்களுடைய உடைமைகளை பெருக்கிக் கொள்வது மட்டும் அல்ல.

வயது ஆக ஆக, முதிர்ச்சி கூடி வாழ்க்கை கடினமற்றதாக இலகுவாக ஆகி விடும் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கழிக்கிறோம் ஆனால் நிகழ்வுகள் நினைவுகளாகப் படிப்படிய அதன் கனங்களில் , அட்லஸ் ஷ்ரக்டு( Atlas shrugged) என்கிற அய்ன் ரேண்டின் படிமம் போல  அழுந்திக் கொண்டே இருக்கிறோம். (அந்த நாவல் என்ன சொல்கிறதென்று எனக்குத் தெரியாது நான் படித்ததில்லை) என காலபிரியா சொல்கிறர்.Tk Kalapria

உலகைத் தூக்கிச் சுமக்கின்ற அட்லஸ் தன் தோளைக்குலுக்கி கீழேயிறக்கி விட்டுவிடவேண்டுமென்கிறது அய்ன் ரேண்ட் தத்துவம். படிக்கும் போதும் நினைக்கும் தோறும் அறிவு விம்முகிறது,விழைகிறது. முடிவதில்லை.

" I swear - by my life and my love of it - that I will never live for the sake of another man , nor ask another man to live for mine . " 
-  மொத்த நாவலுமே இதைத்தான் சொல்கிறது .

இதையே பின் நவீனத்துவம் அதிகாரத்தை எதிர்த்து உண்மையை  நோக்கி சந்தேகத்தையும் கேள்விகளையும் எழுப்புகிறது என்பதை வாசித்து வருகிறேன். உலகத்தை  எவ்வாறு வரையறுத்து தீர்ப்பது என்கிற அனைத்தும் மீண்டும் மீண்டும் தீர்ப்புக்கு உள்ளாகிறது என்பதை புரிந்து கொண்டால்  மனித அறமும் விழுமியங்களும் வாழ்வின் அற்ப சேகரிப்புகளுக்கு அப்பால்  எவ்வளவு முக்கியமானது என்று என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
26-10-2023.

#செய்ந்நன்றி கொன்ற மகற்கு….. (மூத்த பத்திரிகையாளர் கல்கி ப்ரியன் அவர்களின், சமூக வலைதளங்களில் என்னைக் குறித்தான அவரின் நேற்றைய (26-10-2022)பதிவு. நன்றி ப்ரியன்) கேஎஸ்ஆர் உழைப்பை பிழித்தவர் களுக்கு வாய்ப்பின் வாசலைத் திறக்கும் விசால மனது இல்லாதது என் போன்ற அவரது பரந்த உலகில் முழுதும் வாழும் எண்ணற்ற நண்பர்களுக்கு வருத்தம் கொடுக்கும் விஷயமே.

#செய்ந்நன்றி கொன்ற மகற்கு…..
 (மூத்த பத்திரிகையாளர் கல்கி ப்ரியன் அவர்களின், சமூக வலைதளங்களில் என்னைக் குறித்தான அவரின் நேற்றைய (26-10-2022)பதிவு. நன்றி ப்ரியன்)
------------------------------------
                         -  #கல்கிப்ரியன்-
      கோவை மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் சின்னாம்பதி என்னும் கிராமத்தில் காவல் துறை நடத்திய அராஜகத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.. இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு தொகுப்புக்காக இந்த  சம்பவம் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டன. அந்த நிகழ்வு பற்றி வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய "மனித உரிமைகள் என்றால் என்ன?'" என்ற சிறு கையேட்டில் படித்ததாக ஞாபகம். எனவே அந்த புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தேன்.

அதைத் தேடும்போது ராதா எழுதிய "ஈழத் தமிழர் பிரச்னை- சில குறிப்புகள்" என்ற புத்தகம் கண்ணில் பட்டது. 2012 ஆகஸ்டில்
திமுக நடத்திய  "தமிழ் ஈழம் ஆதரவாளர்கள்"(TESO) மாநாட்டை ஒட்டி வெளியிட்ட புத்தகம்.  இந்த புத்தகத்துக்கு நான்  பிழை திருத்தியது நினைவுக்கு வந்தது. அது மட்டுமா? டெசோ மாநாட்டை வெற்றிகரமாக நடத்த கலைஞர் வழிகாட்டுதலில் ராதா கிருஷ்ணன் கால நேரம் பார்க்காத கடின உழைப்பும் நினைவு அடுக்குகளில் பளிச்சிட்டது.
      
ஈழ விவகாரத்தில் திமுகவை குறித்த மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட காலகட்டம் அது.எதோ திமுகவே ஈழத்திற்கு படைகளை அனுப்பி தமிழர்களை இனஅழிப்பு செய்து விட்டதாக ஜெயலலலிதா, வைகோ, சீமான்,  இன்னும் பலர் ஆவேசமாக பரப்புரை செய்து வந்தார்கள். ஓட்டு அரசியலில் இந்த விமர்சனங்கள் உண்டாக்கிய பாதிப்பை சரியாக அளவிட முடியாவிட்டாலும், தமிழக மக்களிடையே - குறிப்பாக ஈழத் தமிழர்களிடையே திமுகவுக்கு  மிகப் பெரிய அவப்பெயரை அந்த  விமர்சனங்கள் உண்டாக்கின.
      
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கலைஞருக்கு தர்மசங்கடமான நேரமது.

திமுகவின் மீது பூசப்பட்ட கறையை முற்றிலுமாக நீக்க முடியா விட்டாலும் சேதத்தை குறைக்க முயன்று கொண்டிருந்தார் அவர்.  அப்போது அவருக்கு உதவியாகவும் உறுதுணையாகவும்  இருந்தவர் தான் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
பிரபாகரன் முதற்கொண்டு அனைத்து ஈழப் பிரமுகர்களோடும் 30, 40 ஆண்டுகளுக்கு மேலாக தனிப்பட்ட உறவு முறையை பராமரித்து வந்தவர். கேஎஸ்ஆர் திருமணத்தில் தான் பிரபாகரனைப் முதலில் பார்க்கிறார் கலைஞர்.மயிலை சாலைத் தெருவில் பிரபாகரன் ராதாவுடன் இருந்தபோது லட்சிய வெறியோடு வலம் வந்து கொண்டிருந்த பிரபாகரனை நானும் பார்த்திருக்கிறேன்.
       
தனது ஈழத்தொடர்பை பயன்படுத்தி புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மட்டுமல்லாது இலங்கையிலிருந்த முக்கிய தமிழ் பிரமுகர்களிடமும் கலைஞரின் எண்ண ஓட்டங்களை எடுத்து வைத்தார் கேஎஸ்ஆர். ஈழத்தமிழர் பிரச்னையில் கலைஞரின் கடிதங்கள், கட்டுரைகள்,திமுகவின் தீர்மானங்கள் ஆகியவற்றை தொகுத்து "கலைஞரும் ஈழத்தமிழரும்" என்ற புத்தகத்தையும்  வெளியிட்டார் ராதா .
       
12-08-2012 அன்று "டெசோ" மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டுககாக "கருத்துரு விளக்கம்" என்ற கையேட்டையும் தயாரித்தார் கேஎஸ்ஆர் . கலைஞரின் வழிகாட்டுதலில் ராதாகிருஷ்ணன் என்ற தனிமனிதனின் உழைப்பு தான் அந்த மாநாடு.அது முடிந்த பின்  ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்துக்கு ஸ்டாலின் போனார் . அப்படியே லண்டனுக்கும் போனார்கள் அவர்கள். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த ஈழத்தமிழர் பிடிஎப் ஏற்பாடு செய்த மாநாட்டில்,புலம் பெயர்ந்த தமிழீழ பிரமுகர்களைச் சந்தித்து திமுகவின் நிலைப்பாட்டை எடுத்து வைக்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு  கேஎஸ்ஆர் மூலம் கிடைத்தது.இதை எல்லாம் பலர் மறந்து விட்டனர்

ராதாவின் அயராத  செயல்பாடுகள் காரணமாக தமிழர்களிடையே  ஈழ விவகாரத்தில் திமுகவின் மீதிருந்த கசப்புணர்வும் வெறுப்புணர்வும் ஓரளவு குறைந்தது என்றால் அது மிகைப்படுத்தல் அல்ல.
  
ஆனால் வைகோ, சீமான் போன்றவர்கள் 2016 தேர்தலுக்கு பிறகும் கூட அந்த வெறுப்பணர்வை விசிறிவிட்டுக்கொண்டுதானிருந்
தார்கள். அரசியல் தட்பவெப்ப நிலை  திமுகவையும் வைகோவையும் நெருங்க வைத்திருக்கிறதது. அவரை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆககியிருக்கிறது. .அதற்கு அவர் தகுதியானவர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
திமுகவின் மீது சீமான் மற்றும் பல்வேறு சிறு குழு தலைவர்களின் விமர்சனங்கள் தொடரும் . முள்ளி வாய்க்கால் நினைவு நாளின்போது அவைகளின டெசிபல் அதிகமாகும்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் பின்னால் அரசியலுக்கு வந்து fast trackல் ஏற்றம் பெற்றவர்கள் நிறைய பேர் உண்டு. 1989சட்டமன்ற தேர்தலில் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் நின்ற போது பிரச்சாரத்தை   பற்றி கல்கிக்கு எழுதுவதற்காகச் சென்றிருந்தேன்.அப்போது அவருக்கு உதவியாளராக இருந்தவர் கூட எம்.பி.ஆகும்  அதிசயம் நடந்தது.

கேஎஸ்ஆர் உழைப்பை பிழித்தவர் களுக்கு வாய்ப்பின் வாசலைத் திறக்கும் விசால மனது இல்லாதது  என் போன்ற அவரது பரந்த உலகில் முழுதும் வாழும் எண்ணற்ற நண்பர்களுக்கு வருத்தம் கொடுக்கும் விஷயமே.

ராதாவைப் பொறுத்தவரை "கடமையைச் செய்;பலனை எதிர்பாராதே" என்பது "விதி"யாகி விட்டது.அவரே அடிக்கடி சொல்வது போல " தகுதியே  தடை". அறிவார்ந்தவராக இருப்பது மட்டுமல்லாமல் அவர் கட்டிக்காக்கும் சுயமரியாதை கூட அவருக்கு எதிராக  சமயங்களில் சதி செய்யும்.

ஆனால் கேஎஸ்ஆர்  இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பணியைத் தொடர்கிறார். இலங்கை மீது போர்  குற்ற விசாரணை, தமிழ் நாட்டு நலன்; தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சி,  நதிநீர் பிரச்சனைகள், சுற்று சூழல், தூக்கு தண்டனை எதிராக, தேர்தல் சீர்திருத்தம் என்று தனது எழுத்துக்கள் மற்றும் பொது நல வழக்குகள்-சட்டப் போராட்டங்கள் மூலம் சமர் செய்து வருகிறார்.

இந்த சூழலில் திமுகவிலிருந்த தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன்..கலைஞர் மறைவுக்கு பிறகு  கேஎஸ்ஆருக்கும் திமுக தலைமைக்கும்  உறவு சுமூகமாக இல்லை என்பது வெளிப்படையான விவகாரம். புதிய அதிகார மையங்களுக்கு கேஎஸ்ஆர் பன்முகத் திறமை தெரியவில்லையா அல்லது அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ராதா நடக்கவில்லையா என்ற பிரச்னைக்குள் நான் போக விரும்பவில்லை. 

எனவே அவரின் " நீக்கல்" விவகாரத்தை ஒதுக்கி வைப்போம்.
ஆனால் ராதா போன்றவர்கள் கட்சியில் இருந்தால்-அவர்கள் பயன்படுத்தப்பட்டால்-- கட்சிக்குதான் வலிமை என்பது என் கருத்து.இதை கலைஞர் புரிந்து கொண்டிருந்தார். பல பிரச்னைகளில், பின்னணியில் இருந்து செய்யப்படும் யுக்திகளின் மூலம் கட்சிக்கு சாதகமான நிலைப்பாடுகளை உருவாக்கலாம்.அதற்கேற்ற உலக நாடுகள் , டில்லி, பலமாநிலங்கள் தமிழக வரை தொடர்புகளோடும் பரந்துபட்ட பார்வையோடும் இருந்தவர் கேஎஸ்ஆர் . தற்போது திமுக  சந்திக்கும் சில பிரச்சனைகளை சமாளிக்க ராதாவின் ஐம்பது வருட மேலான அரசியல் அனுபவம் உதவியாக இருக்கும்.

ஜெயலலிதா ஊழல் வழக்கை பங்களூருக்கு மாற்றியது; கலைஞர் கைது செய்யப்பட்டபோது  அந்த காட்சியை உள்ளடிக்கிய வீடியோ காஸட்டை ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சி க்கு கொண்டு சேர்த்தது;
அறிவாலயம் வெளிகேட்டை உடைத்து உள்ளே போக முயற்சித்த கமிஷனர் முத்துகருப்பனை தடுத்து நிறுத்தியது; மனத உரிமை மீறல்களுக்காக புகார் கொடுக்க ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா அவர்களை சம்பந்தப்பட்ட  மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அழைத்துச் சென்றது;  அண்ணா நகர் ரமேஷ் பிரச்சனை,சைதை-ஆண்டிபட்டி இடைத்தேர்தகளில் ,திமுகவினர் மீது அடக்குமறையை கையாண்ட துணை கமிஷனரை நடுசாலையில் தைரியமாக எதிர் கொண்டது----இப்படி கட்சிசார்ந்த ராதாகிருஷணனின் பங்களிப்புகள் நிறையவே உண்டு.

இதில் பலவற்றை நான் கல்கி இதழில் பதிவு செய்திருக்கிறேன்.ஒருமுறை மறைந்த முரசொலி மாறன் கட்சி பொதுக்குழுவில் பேசும்போது "அறிவாலயத்தைநான் எப்போது தொடர்பு கொண்டாலும் ராதாகிருஷ்ணன்தான் பதில் சொல்கிறார்; மற்றவர்கள் தலைவர் வரும்போது மட்டும் "பிலிம்" காட்டுகிறார்கள்" என்று பேசி விட்டார்.
அன்றிலிருந்து இரு சீனியர்கள் ராதாவுக்கு எதிராக தங்கள் "வேலை களை" காட்டத்துவங்கி விட்டனர்.மாறன் இருந்திருந்தால் கேஎஸ்ஆர்  டில்லி அரசியல் வரை ஏற்றம் பெற்றிருப்பார். இவைகள் பழைய கதைகளாக இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதோ.... முதல் பத்தியில் சொன்ன,  எனக்கு  வேண்டிய புத்தகம் கண்ணில் படும் முன் ராதாவின் மற்றொரு புத்தகம் தென்படுகிறது. 2014ல்  ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தை முன்னிட்டு அவர் எழதிய கலைஞரின் அணிந்துரை இருந்த ஆங்கிலப் புத்தகம்: Impunity in Sri Lanka
இலங்கை மீது போர் குற்றங்களுக்காக "பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை ஏன்  தேவை " என்பதை ஆதாரபூர்வமாக விளக்கும் புத்தகம்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எந்த இயக்கத்தில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல.
இத்தனை வருட அனுபவத்தில், தனது அறிவுசார் தளத்தில்   தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் வகையில் அவரே ஒரு  இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
-கல்கி ப்ரியன்
                    
                        ---------------+--+----+++++


Thursday, October 26, 2023

#*வாழ்க்கை*-#*நிர்மலம்* #*மாசின்மை* #*நிர்மதி* #*நிம்மதி*

#*வாழ்க்கை*-#*நிர்மலம்* #*மாசின்மை* #*நிர்மதி* #*நிம்மதி* 
—————————————
மனித வாழ்க்கையை நீண்ட காலம் கவனித்து வருகின்ற முறையில் எனக்கு சில விஷயங்கள்  முதலில் பிடிபட மறுத்தது. அல்லது அதை ஏற்பதில் சங்கட உணர்ச்சிகளையும் அடைந்திருந்தேன். ஆனால் இதுவரை நான் பழகிய மனிதர்களையும் அவர்களின் பல்வேறு அரசியல் செயல்பாடுகள் மற்றும் பொதுவான விஷயங்களில் கூட நான் பழகிப் பார்த்தபோது எத்தனை கீழ்மையான மனிதர்களோடு நாம் நம்மை அறியாமல் பழகி இருக்கிறோம்.அதுதான் போகட்டும் எனில் அதில் எத்தனை தூய்மையானவர்களை இழந்திருக்கிறோம்  என்கிற துக்கம் தான் ஏற்பட்டது . தனிமனிதர்களின் உளவியல் சிக்கல்கள்  எழுதத் தூண்டும் காரணிகளாக இருக்கின்றன.

இன்று கோவையில் என் நண்பர் வி சுந்தர் உடைய ஆர் எஸ் புரம் இல்லத்திற்கு சென்ற போது  அவர் வீட்டைவிட்டுக் காணாமல் போய் 35 வருடங்கள் ஆகிவிட்டது என்பது உறைத்தது. மிக வசதியான செல்வ செழிப்பான குடும்பம் மனைவி ஏராளமான  சொத்துகள் எல்லாம் இருந்தும் அவர் போயேவிட்டார். மிக அருமையானவர் பண்பானவர் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடியவர். சுவாமி விவேகானந்தர் மீது பற்று கொண்டவர். என்னுடன் பி எல் படித்தார். சட்டம் மட்டுமல்ல  தமிழ் இலக்க்கியம் என இந்த வாழ்வின் கதியை முழுவதும் புரிந்து கொண்டவர்தான் ஆனால் ஏனோ அவ்வளவு வசதிகளையும் செல்வாக்கையும் விட்டுவிட்டு எங்கோ காணாமல் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.

குடும்ப நண்பர் என்கிற முறையில்  அங்கே எனக்கு இன்று உணவு தயாரித்து ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கென்னவோ மனம் கேட்கவில்லை. சுந்தரின் முகம் தான் திரும்பத் திரும்ப மனதில் வந்தது. ஏன் அப்படி போனார் என்று கேள்வியுடன் மனபாரத்துடன் திரும்பி விட்டேன். 

இது மட்டும் அல்லாது   பி இ பொறியல் படித்து அதன் மூலம்  தனியாக தொழில் செய்து கொண்டிருந்த  எனது சொந்த கிராமத்தை சர்ந்தவர். கோவில்பட்டியை சேர்ந்தவர்…எஸ். வெங்கடசாமி  என்ற அருமையான மனிதர்.  1960ல் எனக்கு கோவை விவசாயக் கல்லூரியில் படிக்க  நேர்முக தேர்வுக்கு சென்ற  போது முதல் காந்திபுரம் திருவள்ளுவர்ப் பேருந்து நிலையத்திலும்,  கோவை ரயில் நிலையத்திலும் வந்து காத்திருந்து  பிறகு என்னை அழைத்துக் கொண்டு செல்வார் .அவரும் பிறகொரு  நாளில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ காணாமல் போய்விட்டார். .எல்லா விதமான பிரச்சனைகளையும் என்னிடம் மனம் விட்டு பேசக்கூடியவர் மிகச் சிறந்த அறிவாளி! நுட்பமானவர்! அவருக்கு எல்லாம் கிடைத்துத்தான் இருந்தது. ஆனாலும்  அவரும் எங்கோ போய்விட்டார். இதுவரை இருக்கும் இடம் கூட தெரியவில்லை. எனக்குத் தெரிய இப்படி பல மனிதர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். யாருக்கும் தெரியவில்லை இவர்கள் யாரும் இன்று உயிருடன் இருக்கிறார்களா இல்லையா? இருந்தால் எங்கே இருக்கிறார்கள்?

ஐஏஎஸ் அதிகாரியான திருமதி ஷீலா ராணி சுங்கத் அவருடைய கணவர் சுங்கத் அவர் ஐஏஎஸ் . வீட்டை விட்டு போய்விட்டார்.அவர் சில நாட்கள் காணாமல் போய் விட்டார். ஏன் 
இப்படியான முடிவுகள் என தெரியவில்லை.

ஏன் அப்படி போய்விடுகிறார்கள்.
நல்ல படிப்பு அதற்கேற்ற பணி செல்வாக்கு வசதி வாய்ப்புகள் மனைவி தாம்பத்தியம் நட்பு சுற்றம் உறவினர்கள் இன்னும் எல்லாம் இருந்தும் இவர்களுக்கு ஏன் மனம் இவ்வாறு முடிவெடுத்து விடுகிறது சித்தார்த்தன் என்ற கௌதம் புததர் அரச வாழ்வையும் துறந்து மனைவியையும் தன் குழந்தைகளையும் விட்டு ஏன் வெளியேறிக் காணாமல் போனார்?  உண்மையில் அவர் எதைத்தேடிப் போனார்?. இப்படியான வெளிப் போக்கின் விசித்திரத்தை  ஒரு வகையான தத்துவத் தளத்தில் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் இவ்வாறு பலரும் காணாமல் போய்விடுவது ஒரு அதிசயமான 
ஆய்விற்குரிய சம்பவங்கள் தான். நளன் நிலை…?

இன்று வரை இந்தியாவில் 3 லட்சத்துக்கும்  அதிகம் பேர்கள் எந்த முகவரி அற்றும் எங்கு இருக்கிறாரகள் என்று தேட இயலாதபடிக்கும் காணாமல் போய்விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம்.

இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரர் அனந்தகிருஷ்ணன் மலேசியாவில் இரட்டைக் கோபுரங்களை கட்டியவர் அவரது ஒரே மகனான சிறு வயது பையன் 10 வயதில் வீட்டை விட்டு எங்கோ தொலைந்து போகிறான் .தேடி அலைந்து பத்து வருடங்களுக்கு பிறகு அவன் திபெத்தில் இருக்கக்கூடிய ஒரு  புத்தத் துறவிகளின் மடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே போய் மகனை சந்திக்கிறார்.கூட  வருமாறு அழைக்கிறார் உமது பணம் உங்களுடைய வசதி செல்வாக்கு வாய்ப்பு எதுவும் எனக்கு வேண்டாம் நான் அமைதியாக இந்த துறவு மடத்திலிருந்து வாழ்நாளை சாத்வீகமாக கழித்து விடுகிறேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டான். எவ்வளவோ சொல்லியும் அவனை அவர் அழைத்துப் போக இயலவில்லை.

இந்த இக போக வாழ்க்கை மீதான மொத்த பரிணாமங்களையும் புரிந்து கொண்டபின்புதான் அல்லது அதில் இருக்கும் இன்மையையும் வெறுமையும் அறிந்து கொண்ட பின்தான் இவர்கள்  இப்படிக் கிளம்பிச் சென்று விடுகிறார்கள் என்று  தோன்றுகிறது.

மனிதர்கள் தன் விடுமுறையைக் கழிக்க வந்து போகும் இடம் தான் இந்த பூமி என்று தோன்றுகிறது.  இதற்குத்தான் பிறவி வாழ்வு இன்று பெயரிட்டுக் கொள்கிறோம்.

அமெரிக்காவிலும் இந்தியாவில் தங்களது வர்த்தகத்தால் கொடிகட்டிப்பறந்த சிவகாசி அய்ய நாடார்  வாரிசான அதிபன் போஸ் கூட இன்றைய வாழ்நாளில் "இறை பணிக்காக நான் திரும்பி என் வாழ்நாள் முழுவதும் அதற்கு ஒப்படைத்து விட்டேன்" என்று சொல்கிறார். அவருக்கு நான் வழக்கறிஞர் கூட.

உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் கூட "பணத்தால் எனக்கு ஒரு பலனும் இல்லை" என்று ஒரு பேட்டியில் சொல்கிறார்.

இதையெல்லாம் ஒரு பக்கம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் அதிகாரத்திற்காகவும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் விசுவாசத்தையும் பணிவையும் காட்டி பிறர் கால்களை நக்கி பிழைக்கும் ஒரு கூட்டம் இன்னும் தங்கள் வாழ்க்கை மிக மதிப்புக்குரியது பாரம்பரியமிக்கது என்றெல்லாம்  தறுதலைகளைப் போல நடந்து கொள்கிறார்கள்.

அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் கொடிபிடிப்பான் என்பது போல இவையெல்லாம் காலப்போக்கில் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதையும் உணர்ந்து கொண்டுதான் இந்த லௌகீக வாழ்வின் துக்கங்களில் சுமைகளில் இருந்து அவர்கள் விடுபட்டுப் போய்விடுகிறார்கள் போல. 
"நல்லவர்களுக்கு அழகு சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவது" என்று ஒரு பழமொழியே இருக்கிறது.

 இன்றைக்கு மேசையில் இருந்த  சின்னாளபட்டிக்கவிஞர் யவனிகா ஸ்ரீ ராமின் கவிதை தொகுப்பை தற்செயலாக புரட்டிக் கொண்டிருந்தபோது  ஒரு கவிதை எனக்குக் கண்ணில் பட்டது இந்தப் பதிவிற்கு அது ஏதோ ஒரு வகையில் பொருத்தமாக இருப்பதாய்ப் பட்டதால் அதை இங்கே பதிவு செய்கிறேன்.

பருவம் தவறுவது

இடைவெட்டாய்ப் பக்கவாட்டில் அலையாதே
காட்சிகளை ஒரு கேமராவைப் போல சேகரிக்க முடியவில்லை
எதிரில் பிணம் வந்தால் நல்லது என்கிறார்கள்
நமக்குக் கோடைகாலம்
 தோல்ப் புண்களோடு திமிரையும் கொண்டு வருகிறது
கால்நடைகளை அது கழிச்சலுக்கு உள்ளாக்குகிறது
பருவம் தவறுவது நம்மைச் சுயநலம் ஆக்குவதற்குத் தான்
இல்லையெனில் மழைக்காலத்தில் தானியங்களின் விலை ஏன் கூடுகிறது
நம்மில் பலர் இறந்து போனவர்களைப் போல ஏன் காணாமல் போய்விடுகிறார்கள்
தயவுசெய்து பக்கவாட்டில் இருந்து எப்போதும் அழைக்காதே
அது மரணத்தை ஞாபகப்படுத்துகிறது
அம்புக்குறிபோல் முன்னோக்கிச் சென்றிருந்த ஒரு பறவை கூட்டத்தை ஏதோ ஒன்று சரேலென  தனது பக்கவாட்டில் இழுத்து மறைத்ததை இன்று நான் வானத்தில் பார்த்தேன்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
26-10-2023.


*காவேரி* #*பூட்டிக்கிடக்கும் நீதியின் வாயிலில்...* - Vanathi Chandharasekaran அவர்களின் கவிதை.. (தமிழகநதி நீர் சிக்கல்கள் விரிவாக 800 பக்கங்களில் வெளி வர இருக்கும் என் நூலில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது)

#*காவேரி*

#*பூட்டிக்கிடக்கும்
நீதியின் வாயிலில்...*
- Vanathi Chandharasekaran அவர்களின் கவிதை..



(தமிழகநதி நீர் சிக்கல்கள் விரிவாக 800 பக்கங்களில் வெளி வர இருக்கும் என் நூலில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது)
•••••


குடமலையில் தோன்றிய
குணவதியாள்
தலைக்காவிரியாய்
புறப்பட்ட தவழ்கொடியாள்
தான்பாய்கின்ற வழியெங்கும்
பசுமை வளர்த்து
நிலமகளின் தாகங் தீர்க்கும்
காவிரித் தாயானாள்

எம்மாநிலமாயினும்
எம் பாரதத் தாயின் திருமண்ணே
என்பதை மறந்த
பாரபட்ச அரசியலாளர்களால்
பாசிச எண்ணங் கொண்டவர்களால்
மனமிருந்தும்
தவழ்ந்தோட வழியின்றித்
தோங்கிக் கிடக்கிறாள்
தாய்மையைத் தனக்குள்
பூட்டிக்கொண்டு
மனம் வெதும்பிக் கிடக்கிறாள்

நீரின்றிப் பயிர்களெல்லாம் 
வாடிக்கிடக்க
உழுது விதைத்து காத்துநின்றவர்
கண்ணீர் உகுத்து உகுத்து
அவர்தம் கண்விழிகளும்
காய்ந்து போயின

முளைத்த பயிர்கள் 
வேரூன்றி 
தன்மீது தழைத்துவளர வழியின்றி
தவியாகத் தவிக்கிறாள்
தலைவிரித்தாடும் வறட்சியின்
நீள்குழல் ஏந்திய
காவிரி டெல்டாவின்
மண்மகள்

பரவசமாய்ப் பாய்ந்தோடி
பயிர்கள் செழிக்கப் பார்த்து 
மகிழ்ந்திருந்த காவிரித் தாயோ
கனத்துக் கிடக்கிறாள்

அடைத்து வைத்து
அகங்காரங் காட்டும் மூடர்களின் 
மூளையின் மூலையில்
சிறுவெளிச்சம் பாய்ந்து
தன் ஆன்ம ஓட்டம்
தாழ்திறவும் கணங்களுக்காக
காத்துக் கிடக்கிறாள்

நீதியுணர்த்தி 
அநீதி களைந்திட
நீதிமன்றக்கதவைத் தட்டினர் 
எண்பதுகளின் தொடக்கந்தொட்டு
இன்றுவரை
மன்னை ரங்கநாதன்
கருப்பையா மூப்பனார்
முரசொலி மாறன்
கோ. சி. மணி
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
போன்ற பெருமகனார்கள் பலர்
பேதங்கள் ஏதுமின்றி

தேங்கிக் கிடக்கும் காவிரி போலவும்
ஏங்கிக் கிடக்கும் பயிர்களைப் போலவும்
ஏக்கங்களை ஏந்தி 
வறுமையைத் தாங்கி
தேங்கிக் கிடக்கிறது
காவிரி டெல்டா விவசாயிகளின்
வாழ்வாதாரம்

பூட்டிக் கிடக்கும்
நீதியின் வாயிலில்
காலங்கள் பல கடந்தபின்பும்!

- வானதி சந்திரசேகரன்
@vanathichandrsekaran




Wednesday, October 25, 2023

தென் குமரிக் கடற்பரப்பிலும்,,, கதிரவன் உதயத்தில்….. என் வானம் அழகானது தான் !

*அவன் கொஞ்சம் இளைப்பாறட்டுமே ?
அவனை விட்டு விடுங்களேன்,,,,, !
அவனைச் சுமந்த நதிமகள் கண்ணீர்உகுக்கின்றாள் ,,,,,,,,,

அதுவொரு போர்க்களம்,,,  ?*
நவ நாட்கள்  கடந்து விட்டது,,, !
உறவுகளே,,ஒன்றையொன்று வெட்டிச் சாய்த்து குருதிச்சுவை ருசித்துக் கொண்டிருக்கிறது !

அவன் குருதி கொஞ்சம் ருசி அதிகம்,,,,!
இல்லையில்லை,,இவன் குருதி தான் ருசி அதிகம்,,,,



வல்லூறுகளும், கழுகுகளும், தந்திர நரிகளும்,,,,களமெங்கும், ஊடாடிக் கொண்டிருக்கின்றன ! 



அதுவென்னவோ ? இயல்பு தானே ?
களமென்றால் குருதி சிந்தும் தான் !
சிந்துகிற குருதியினை ருசிப்பதற்கென்றே ஒரு கூட்டம்,,, காத்திருக்கத்தான் செய்யும்,,,

குருதி சிந்தி மரித்தவனை விட,,,,
மரித்துக் கொண்டிருக்கிறவனின் செங்குருதி கொப்பளிக்கிற தருணங்களில்,,,
அந்தக் குருதி,,,ஆஹா,,,
என்ன ருசி,,,என்ன ருசி,,
சுவை நரம்புகள் சப்புக் கொட்டிட,,,,,
சுவை பின்னதே உலகம்,,,என்று சும்மாவா ? சொன்னார்கள்,,,,,,

பத்தாவது நாள்,,,,,, !
அவன் எய்த அம்புகள்,,,,சர மழையாய்,,,,,,,,,,,,, !
கை வில் உடைந்து போகிறது ! பார்த்தனே,,,,,
உன் சரமழையினைப் பார்க்கும் போதெல்லாம், கைதட்டத் தோன்றுகிறதடா ?
ஆனால்,,,,
என் கை வில்லினை விட்டுவிட்டு,,,,,,
இக்களத்தினில்,,உன்னைப் போற்றினால்,,,,, ? ஹாஹாஹா,,,,
இப்பூவுலகு சிரிக்குமடா,,,,,,,,,,, !

நான் வளர்த்த பிள்ளை,,,
என் கைகளில் விளையாடிய பிள்ளை,,,நீ !
உன் அம்புகள் அற்புதமானவையடா !
உன் விழிகள் எங்கு நோக்குகின்றனவோ ? அங்கெல்லாம் சரமழை !

துரோணரின் வித்தையது !
என் துரோணரின் வித்தையது !
என் விழிகள் விரிகின்றன கண்மணி,,,, !
ஆனால்,,,,,
என் முன்னே சிகண்டியினை முன்னிறுத்தி எய்த அம்புகள்,,,,,, ?
நான் தோற்றுப் போனேனடா ! பார்த்தனே,,,,,,

உனக்கு ஸ்ரீகிருஷ்ணனென்ன ? 
அந்த சிவன் கூட வந்து தேரோட்டுவான் !
ஆம்,,,
அத்தகைய வல்லமை மிக்கவன் நீ !
நான் அறிவேன்,,,,
ஆனால்,,,,,
இன்று நான் வீழ்ந்து கிடக்கிறேன்,,,, ! 

என் உடல் மண்ணில் படவில்லை,,,,
என் மேனியினை மண் தீண்டும் நாள் இன்னும் வரவில்லையடா ? கண்மணி!

எந்தை சந்தனு இருந்திருந்தால்,,,,?
அழுது புலம்பி இருப்பான்,,, !

நீயென்ன தியாகியா ?
தியாகி போல நடிக்காதே ?
என்கிறாயா ?

 அம்பை அம்பிகா, அம்பாலிகா, என அப்பாவிப் பெண்களைக் கவர்ந்து வந்த கிழவனல்லவா ?  நீ !
வந்தவளில் ஒருத்தி மணந்து கொள் என்று கால் பிடித்து நின்ற போது , உதறித் தள்ளியவன் நீ தானே ? என்கிறாயா ?

அவள் துகிலுறிந்து நின்ற போது , கண் பொத்திக் கொண்டாயா ? கண்ணீர் விட்டு மறைத்துக் கொண்டாயா ? 
அன்று குத்திக் கொன்றிருக்கலாமே ? எதுவும் செய்யாமலிருந்தவர்களில் நீ முதல்வன் அல்லவா ? என்கிறாயா ?

நீ எய்த அம்புகள்,,,
என் உடலெங்கும்,,,,குத்திக் கொண்டிருக்கிறது !
நானென் உடல் சாய்த்து விடத்தான் நினைக்கிறேன் ?

ஆனால்,,,,
எந்தை செய்த செயலினை நானும் செய்தால்,,,,? உத்திராயணம் வரட்டும் பிள்ளாய்,,,,,,,,,,,,,,,, நதிமகள் சொல்கின்றாள் !
அவள் விதியின் பிடியில் தவிக்கின்றாள் !

அந்தக் களத்தில்,,,,,
நீ எய்த அம்புகள் மட்டுமே தரை தொட்டிருக்கிறது,,,! கண்மணீ !
ஆயினும்,,இப்போது என்னைப் பார் !
என் தலை தொங்கிக் கிடக்கிறது,,,,,,,,,,,,,,,, என்கிறேன்,,,,,,

அதோ !
என்னாயிற்று என்றபடி , 
என் சொல் கேட்டு பஞ்சணை கொண்டு வருகிறார்கள் ?
அவர்களுக்குத் தெரியாது,,,,? நான் வேண்டுவது எதுவென்று,,,,?

நீ அறிவாய் !
உன்னை இயக்குகிற ஸ்ரீகிருஷ்ணனவன் அறிவான் !
மீண்டும்,,,,
வில்லெடு,,, !
சரத்தினை வை,,,, பார்த்தா !
நாண் இழு !
ம்ம்,,,,இழு,,இன்னும்,,,கொஞ்சம்,,,இழுத்து,,,விடு,,,

இப்போது எய்து விடு ! பார்த்தா.
முச்சரங்கள்,,
என் தலை தாங்கட்டும்,,,,,,,  !

அதோ,,,!
அவர்கள் ஏன் ? பக்கத்தில் வருகிறார்கள்,,,,,?

உபதேசிக்கவா ?
உபதேசம் செய்யவா ?
எதுவும்,,,உனக்கு வேண்டாம்,,, !

ஆமாமடா !
குந்திக்கும், உன்னைப் பிடிக்கும்,,,!
பாஞ்சாலிக்கும், உன்னைப் பிடிக்கும்,,,,!
ஆனால்,,,,
விதி,,,!
என்னைத்தான் எவருக்குமே ? பிடிக்காமற் போய் விட்டது,,,,  ?

எல்லோரும், நதியின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது,,,,,
நான் மட்டுமே ? விதியின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தேன் ! 
அது தவறு என்பது,,,இப்போது புரிகிறதடா ?

இப்போது புரிந்தென்ன ? லாபம்,,,,!
வேண்டுமானால்,,,,,,,,,,,,,, ஆயிரம் போற்றி சொல்லலாம்,,,கேட்கலாம்,,, !
ஆஹா,,
இவர் பீஷ்மர் அல்லவா ! என்ற புகழ் மொழிகளில் மயங்கியே,,,,
புத்தி கெட்டுப் போனேனோ ? அறியவில்லையடா,,,, !

நான் கொஞ்சம் இளைப்பாறட்டுமா ?
எனக்கான நாள் வரும் வரைக்கும்,,,,
நான் கொஞ்சம் இளைப்பாறட்டுமா ?
உன்னை இயக்குகிற, அந்த ஸ்ரீ கிருஷ்ணனிடம் சொல்,,,, 
உன் விஸ்வரூபதரிசனம் பார்க்க ஆசைபடவில்லையடா ! என்று,,,,

சொன்னாலும், கேட்க மாட்டான் ! அவன்,,,,
ஆஹா,,,
அந்த கிழவனுக்கே,,,
அல்ல அல்ல,,அந்த பீஷ்மனுக்கே விஸ்வரூபதரிசனம் காட்டி விட்டேன் பார்த்தாயா ? பார்த்தா ! என்று தனக்குத்தானே ? தோள் தட்டிக் கொள்ளவாவது,,, அவன் விஸ்வரூப தரிசனம் காட்டத்தான் செய்வான் !
ஆனால்,,
அதுவல்ல,,,
நான் எதிர்ப்பார்ப்பது ?
எதிர்பார்த்தது,,,,?
எல்லோரும், இன்புற்று இருக்க நினைத்த விரதன் ! நான் ,,
அதுவும், தேவ விரதன் நான்,,,,,
பீஷ்மன் எனச்சொல்லிச் சொல்லி,,,நான் வீழ்ந்து விட்டேன்,,,,!

இனி அழுது புலம்பி ஆவதொன்றுமில்லை தான்,,, !
ஆயினும்,,,
எனக்கான நாள் வரும் வரைக்கும்,,,,,
உடலெங்கும்,,
,உன் அம்புகள் குத்தியதால் கொப்பளிக்கும் குருதியோட்டம்,,,, தகிக்கிறது !
உன் அம்பின் மெல்லிய விடநுனிகள் மெல்ல மெல்ல என்னைக் கொன்று கொண்டிருக்கின்றன தான்,,,,,
ஆனாலும்,,,,
எனக்கான நாள் வரும் வரைக்கும்,,,,
இந்த முதுகிழவன் கொஞ்சம் இளைப்பாறுகின்றேனே,,,,,,,,,,,,,, !
கொஞ்சம் இளைப்பாறுகிறேனே ! பார்த்தா !
நீ உன் பணி தொடர் !
இனி வெற்றி உன் பக்கலில் தான்,,,,,

வீழ்ந்த முதுகிழவன்,,,,
இனி ,,
எழுவதற்கான வாய்ப்பில்லை,,,,, !

அதோ !
நதிமகள் அழுகின்றாள் !
அவள் கண்ணீர் அந்த கங்கை நதியிலேயே மரணித்து விடும்,,,
விதிமகளின் கண்ணீரல்லவா ? அது,,,, !

கொஞ்சம்,,அழுது விடேன் என்கிறாள் ! அவள்,,,!
அவளுக்குத் தெரியாது,,,,?
என் கண்ணீர் தான் அவள் பேர் தாங்கி நதியானதென்று,,,,,
பாவம் நதிமகள் ! விதிமகளின் கைப்பாவையாய்,,,,,,,,,,,,,,

இப்போது,,,
கொஞ்சம் தள்ளித்தான் நில்லுங்களேன்,,,, !
காற்று வரட்டும்,,, ! எவரோ சொல்கிறார்கள்,,,,

கதவைத் திறந்தால் தான் காற்று வருமாவென்ன ?
கொஞ்சம் தள்ளி நின்றால் கூட காற்று வரும் தான் !
அவன் கொஞ்சம் இளைப்பாறட்டும்,,,
வெகுதூரம் பயணித்து விட்டான் !
வெகுநேரம் பயணித்து விட்டான் !
அவனுக்கான காலம் வரும் வரைக்கும் , 
அவன் கொஞ்சம் இளைப்பாறட்டுமே,,,,,,,,,,,,,, !

அவனுக்கான காலமா ? 
அவனுக்கான காலனா ?

ஹாஹாஹா,,,,,,,,,,,,
ஏதோவொன்று,,,,
 வரும் வரைக்கும்,,,
அவன் கொஞ்சம் இளைப்பாறட்டுமே !

அவனுக்காக,,,,
அவன் மட்டுமே ? அழுது தீர்ப்பான் ! அழுது தீர்த்துக் கொள்வான் !
மண்ணில் எவரும் அவனுக்காய் அழ வேண்டாம்,,, ! 
அப்படித்தானே ? பிள்ளாய்,,,,,,,,,,,,,

ஹாஹாஹா

•••••••

தென்  குமரிக் கடற்பரப்பிலும்,,, 
கதிரவன் உதயத்தில்…..
என் வானம் அழகானது தான் !

Velu Pillai சொல்லி கேட்டது.




*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...