*இது ஆதங்கம் அல்ல*…..
*அரசியல் அவலம்*Monday, May 25, 2026
*இது ஆதங்கம் அல்ல*…..
திட்டங்களை எல்லோரும் நாமெல்லாம் கூடிச்சேர்ந்து முயற்சி எடுத்து வளப்படுத்தினால் அதன் பலன்கள் பெரும்பாலமான நாய்க்கர் இன மக்களுக்கு மட்டுமல்ல சகலருக்கும் போய் சேரும்! என்பதுதானே உண்மை. !
திட்டங்களை எல்லோரும் நாமெல்லாம் கூடிச்சேர்ந்து முயற்சி எடுத்து வளப்படுத்தினால் அதன் பலன்கள் பெரும்பாலமான நாய்க்கர் இன மக்களுக்கு மட்டுமல்ல சகலருக்கும் போய் சேரும்! என்பதுதானே உண்மை. ! இதையெல்லாம் வலிமையாக செயல்படுத்துவதற்கு நாயக்கர்கள் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ? குறைந்தபட்ச எண்ணிக்கைகளாகக் கூட இல்லை! இதையெல்லாம் தொடர்ந்து பேசி வந்த நான் 1989 இல் இருந்து இன்றுவரை வாய்ப்பு கிடைக்காமல் , வாய்ப்பு கிடைத்தும் தோற்கடிக்கப்பட்டேன். ஆனால் எனக்கென்ன வந்தது என்று இருந்திருக்க கூடாதா? அல்லது இருந்திருக்க முடியாதா ?1984 முதல் டெல்லிக்கு மட்டும் நூறு முறை மேற்கண்ட வழக்குகளுக்காக விமானத்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்திருக்கிறேன். அன்றைக்கு எல்லாம் இவ்வளவு விமானங்கள் கிடையாது. யாருக்காக இவ்வளவு முயற்சி ? இந்த மண்ணில் வாழுகிற மக்களுக்காகத் தானே ? இந்த மண்ணில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்காக தானே? இவ்வளவு நாள் நான் பாடுபட்டு இருக்கிறேன்!. அதிலும் அதிகம் பலன் பெற்றவர்கள் நாயக்கர்கள் தான். விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கான வழக்குகளிலும் நான் பலமுறை ஆஜராகி உள்ளேன். இதையெல்லாம் எனக்காக ? என் தனிப்பட்ட வாழ்விற்காகவா ? வழக்குகளை தொடர்ந்தேன்.? இந்த மண்ணில் பிறந்தவன் சக மனிதர்களோடு வாழ்ந்தவன், நான் பிறந்த மண் ! இந்த வட்டாரம் வளம் பெறுவதற்காகத் தான் இத்தனை முயற்சிகளையும் செய்தேன்! நான் கேட்கிறேன்! இப்படியான முயற்சிகளை எல்லாம் அதிமுகவில் இருந்து, இப்போது திமுகவில் இருக்கக்கூடிய கே. கே .எஸ். ராமச்சந்திரன் போன்றவர்களாயினும் சரி செய்திருக்கிறார்களா? செய்வதற்கான முயற்சியையாவது எடுத்தார்களா? யாரும் , யாருமே செய்யவில்லையே ? இல்லை , இன்றைக்கு கூட்டணிக் கொடி பிடிக்கிற முன்பு ஆண்டகாங்கிரஸ்காரர்களாவது செய்தார்களா? எதுவுமே செய்யாமல், தேர்தல் வந்தால் மட்டும் உபயோகப்படுத்திக் கொள்கிற கருவேப்பிலையாக பயன்படுத்திக் கொள்கிற நிலைமையில் இந்த இனமானது இருக்கையில் பாஜகவும் அதிமுகவும் தெலுங்கர்களுக்கு விரோதமானவர்கள் என்று திமுக சித்தரிப்பதுவும், அதற்கு நம்மவர்களில் சிலர் கை தட்டுவதும், மிகவும் மோசடித்தனமானது உழவர் சங்கத்தலைவர் சி நாராயணசாமி நாயுடு அவர்களுக்குப்பின் நமது இன மக்களின் அரசியல் அஸ்திவாரம் இல்லாமல் போனது ஏன் .? இன்றைய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் யார்? நம்மைப் போன்ற தெலுங்கு பேசுபவர்கள் தான்! ஒருமுறை நெல்லை மாவட்டத்தில் நாயக்கர்கள் சார்பாக ஒரு வழக்கு ! பலருக்கு நிபந்தனை ஜாமின் யாரால் போட்டு விட்டார்கள்! ஒரு மாதம் காலம் வழக்கில் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து அவர்களுக்கு உணவளித்து வேண்டிய உதவிகளைச் செய்தார்! இது நடந்த உண்மை. அப்போது அவர் அமைச்சராக கூட இருக்கவில்லை! யார் தெலுங்கர்களுக்கு விரோதி? போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு போவது திமுக காரர்களின் பொதுப்புத்தி ! இவர்களின் விநாச காலப் புத்தியை அறிந்த பின்னரும், அவர்களை ஆதரிப்பதென்பது கொள்ளிக் கட்டையால் தன் தலையை தானே சொறிந்து கொள்வதற்குச் சமம். இன்றைக்கு அவதூறு பேசுகிறவர்களுக்கு ஒரு சவால் ! மனம் விட்டுப் பேசுவோம் ! நீங்களும் வாருங்கள் ! நானும் வருகிறேன் ! பேசி விவாதித்து பார்ப்போம் ! அப்போதுதான் உங்களுக்கு எதார்த்தம் தெரியும்!. உண்மையில் தெலுங்கர்களுக்கு விரோதி திமுகவும் காங்கிரசும் தான் ! வேண்டுமானால் தெலுங்கு பேசும் கே கே எஸ் ஆர் நாயக்கர்களை ஏமாற்றிப் பிழைப்பார்! நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் மேற்சொன்ன அனைத்தையும் நாயக்கர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு விளக்கத்தை தர வேண்டி இருக்கிறது! இதுவரை உங்களை ஏமாற்றுவதற்காகவே ஆட்சி அதிகாரங்கள் பயன் படுத்தப் படுகிறது. மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாசியுடன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் சாத்தூர் தொகுதியில் நிற்பதாலே பிரித்தாளும் சூழ்ச்சி எனும் இந்த தந்திரங்களைப் பயன்படுத்தி சாத்தூரில் ஒரு சீட்டு தெலுங்கருக்குக் கொடுத்து வேடிக்கை பார்ப்பது என்கிற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் ! இதைத்தான் இன்று நாயக்கர் இன மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் சொல்கிறேன். நாளை நமக்காக , நம் இனத்திற்காக கோரிக்கைகளோடு பிரதமரைச் சந்திக்க வேண்டுமென நினைத்தால், திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் அதனைச் செய்து முடிப்பார். என்பதனை ஞாபகத்தில் வையுங்கள். யார் யாருக்கு துரோகம் செய்கிறார் ? என்று நாயக்கர் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் !. 1998 ல் ஜெயலலிதாவாகப் பார்த்து எனக்கு என் தகுதிக்கு, என் நட்புக்குக் கொடுத்த
கொள்கை பிடிப்பு சார்ந்த தலைவர்களாக வந்திருக்க வேண்டிய நாயக்கர்கள் பலரையும் புறம் தள்ளி அவர்களை எழும்ப விடாமல் ஒதுக்கியது இந்த திமுக என்பதற்கு நானும் ஒரு சாட்சி!
கொள்கை பிடிப்பு சார்ந்த தலைவர்களாக வந்திருக்க வேண்டிய நாயக்கர்கள் பலரையும் புறம் தள்ளி அவர்களை எழும்ப விடாமல் ஒதுக்கியது இந்த திமுக என்பதற்கு நானும் ஒரு சாட்சி! இன்னும் வரிசைப்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால், பெ. சீனிவாசன், வைகோ, ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன், குன்னூர் சீனிவாசன் தொம்பக்குளம் லிங்குசாமி, என பலரின் அரசியல் வாழ்க்கையையே நாசம் பண்ணியது திமுகவும் கலைஞரின் அந்தக் குடும்பமும். இதில் குறிப்பாக ஈடுபட்டவர்கள் ஸ்டாலின், தூத்துக்குடி பெரியசாமி , கே. கே. எஸ்.எஸ். ராமசந்திரன் ,ஆகியோர் தான். ஆனால் தூத்துக்குடி பெரியசாமிக்கும், கே.கே. எஸ். எஸ். ராமச்சந்திரனுக்கும் நாயுடுகளின் ஆதரவு வேண்டும் ! ஆனால் தங்களைத் தவிர வேறு எவரும் இங்கே வந்து விடக்கூடாதென உள்ளடி அரசியல் செய்தவர்கள், செய்பவர்கள் இவர்கள் , தெலுங்கு பேசும் மக்கள் பலரின் அரசியல் வாழ்வைக் கெடுத்தவரே இந்த கே. கே. எஸ். எஸ். ராமசந்திரன் தான்! அதற்கான ஆதாரங்கள், தரவுகள் என்னிடம் இருக்கின்றன! இந்த லட்சணத்தில் இவர்கள் எப்படி நாயக்கர் மக்களுக்காக மற்றவரிடம் வக்காலத்து வாங்க முடியும்? இன்று நாம் வாழ்கிற இந்தப் பகுதி ஒரு வானம் பார்த்த பூமி அனைத்தும் வறட்சி மாவட்டங்கள். குறிப்பாக ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி,சங்கரன்கோவில் கிழக்குப் பகுதி, விருதுநகர், சிவகாசி. இவையெல்லாம் நிரந்தர வறட்சிப் பகுதி என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று முதன் முதலில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தவனும் நான்தான்! இது பற்றியெல்லாம் அமைச்சர் பதவியை பெற்ற கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் சட்டமன்றத்திலே பேசி இருக்கிறாரா? இதனை மாற்றுவதற்கான முயற்சி தான் செய்தாரா? இல்லை மேல் நடவடிக்கை ஏதேனும் எடுத்தாரா ? நடவடிக்கை எடுக்கவில்லையே என ஏதாவது வழக்கு தான் தொடர்ந்தாரா? • 2009 ல் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் கொன்ற போது திமுக மீது விழுந்த அவபேரை உடைத்தவன் நான் தானே ! • கனிமொழி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தை சரி செய்தவன் நான்தானே • நள்ளிரவு கலைஞர் கைதின் cd எடுத்து சென்று உலகத்திற்கு காட்ட நள்ளிரவில் ஓடியவனும் நான் தானே 1984 இல் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று இந்த வறட்சிப் பகுதிகளை நீர் வளம் உடையதாக ஆக்க வேண்டும் , எவ்வகையிலேனும் பாடுபட்டு நதி நீர் ஆதாரங்களோடு இப்பகுதியை இணைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தேன். நதிநீர் இணைப்பு என்கிற திட்ட முறையில் கங்கைக் காவிரி திட்ட வரைவில் கன்னியாகுமரி வரையுள்ள ஆறுகளும் இணைக்கப்பட வேண்டுமென்று அந்த வழக்கில் குறிப்பிட்டு இருந்தேன் கங்கை குமரியை தொட வேண்டும். அதற்கான தீர்ப்பு நானும் அழகிரியும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக பொறுப்பாளர்களாக இருந்த போது 2012 பிப்ரவரி 27 அன்று தீர்ப்பு வந்தது நினைவு. அந்தத் தீர்ப்பிற்குப் பின் இந்த வறட்சிப் பகுதியான கோவில்பட்டி, சங்கரன்கோவில், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்தூர்ப் பகுதிகள் உட்பட வெம்பக்கோட்டை பகுதிகளின் விவசாய வளர்ச்சி நிவர்த்தி அடைய வேண்டுமென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை கட்டப்பட வேண்டும் என்றும் என்று வாசுதேவநல்லூரில் எனது தலைமையில் போராட்டமும் நடந்தது. அது மட்டுமில்லாமல் செண்பகவல்லி அணை உடைப்பை சீர் செய்ய வேண்டும் என்று போராடியவன் நான் ! இவை யாவும் வெம்பக்கோட்டை அணை மூலம் சாத்தூர் வைப்பாற்றில் இணைக்க வேண்டும் . அதுபோல தென்காசி தென்மலைக்கு மேலே அச்சன் கோவிலில் பம்பை நீர்ப் படுகைகளை கிழக்கு முகமாக திருப்பி செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் புளியங்குடி வழியாக திருவேங்கடம் வெம்பக்கோட்டை சாத்தூர் வைப்பாற்றுடன் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைக்கப்பட்டால் வடக்கே இரண்டு கால்வாய்கள் கிட்டத்தட்ட அருப்புக்கோட்டை மானா மதுரை வரை செல்லும். இன்னொரு கால்வாய் திருப்பப்பட்டு ராஜபாளையம் சிவகாசி வரை வரும். தெற்கு முகமாக இரண்டு கால்வாய் வெட்டப்பட்டால் கிட்டத்தட்ட சங்கரன் கோவில் மேல நீலிதநல்லூர் குருவிகுளம், திருநெல்வேலி வரை போன்ற பகுதிகளுக்குச் செல்லும்! இன்னொரு கால்வாய் தெற்கு புறத்தின் கிழக்கே சாத்தூரிலிருந்து வெட்டப்பட்டால் விளாத்திகுளம் கோவில்பட்டி ஒட்டப்பிடாரம் ஏன் தூத்துக்குடி வரை செல்லும். இதெல்லாம் நான் வாழ்ந்த பகுதிக்குச் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன் நான் ! • அச்சன்கோயில் – பம்பை - வைப்பாறு இணைப்பு • வெம்பக்கோட்டை அணை சீர் செய்தல் • அழகர் அணைத்திட்டம் • செண்பகவல்லி அணை உடைப்பை சீர்திருத்தல் • ஏழாயிரம் பண்ணையில் பேருந்து நிலையம் • பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தில் தீப் புண்களுக்கு சிகிச்சை தரும் உயர் ரக மருத்துவமனை • . விஜய கரிசல்குளம் அகழாய்வு பணிகள் • பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழிலில் சீர் செய்தல் மேற்ச்சொன்ன
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என்ற அந்த வாய்ப்பை எனக்குத் தரக்கூடாதென மறுப்பதற்கு வைகோவுக்கு எப்படி மனம் வந்தது! துரோகி யார்?.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என்ற அந்த வாய்ப்பை எனக்குத் தரக்கூடாதென மறுப்பதற்கு வைகோவுக்கு எப்படி மனம் வந்தது! துரோகி யார்?. கைம்மாறு கருதாது எத்தனை உதவிகள் வைகோவுக்குச் செய்திருக்கிறேன்! வைகோவுக்குப் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அறிமுகப்படுத்தி வைத்தவனே நான் தானே . என்னால்தானே ?திரு.வே.பிரபாகரனை வைகோவுக்கே தெரியும்!
அன்றைக்கு அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை எம் பி யாக நெடுமாறன் போன்றவர்களை அழைத்து வாக்களிக்க வைத்து வெற்றி பெற நான் எடுத்த பொறுப்புகள் அதிகம். ஆனால் இவர்கள் தான் என்னையும், என்னைப் போன்றோரை எல்லாம் ஒதுக்கி விட்டு அரசியலில் ஒட்டு புற்களாகிப் போனார்கள். அதுதான் கடைசி காலத்தில் இப்படியெல்லாம் திமுகவினரிடம் அவமானப் படுகிறார்கள்! நமக்கு நன்மை செய்வதற்கென இன்றைக்கு ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அதை ஒட்டி நமது எதிர்காலத்தைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நான் முக்கியமாக முன் வைக்க விரும்புகிறேன். இந்தத் திமுக எனும் மோசடியான தனி குடும்பச் செல்வாக்கில் இன்றோ ? நாளையோ ? அல்லது என்றோ ? ஒரு நாள் என்று காத்திருந்தால் எதிர்காலத்திலும் நமக்கு ஒன்றும் கிடைக்காது! இலவு காத்த கிளியாகத்தான் நாம் காத்திருந்து ஏமாற வேண்டும். அந்த ஏமாற்றத்தினைத் தவிர்க்க நாம் நம்மை பெரும் ஆதரவுடன் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் ! இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும் ! இப்போது இதனை உணரத் தவறி விட்டால் நமக்கு என்றும் விமோசனம் இல்லை! மேலே குறிப்பிட்ட சில நிகழ்வுகளை, நாயக்கர் இன மக்களுக்கான புறக்கணிப்புகளை எல்லாம் , கடந்த கால வரலாற்ரு அரசியலாக மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நம் இடத்தினை தக்க வைக்க வேண்டியாவது, அவதூறுகளை நம்பாமல், நமக்கான இலக்கினை நோக்கி சரியாக பயணிக்க வேண்டும்,,, உங்களொடு இணைந்து பணியாற்றுகிற என் கருத்துக்களையும், சற்றே கவனியுங்கள் என்றே வேண்டுகின்றேன். இது ஆதங்கம் அல்ல….. அரசியல் அவலம்*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...