*அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்.*
சோதனையை முடித்துக் கொண்டு பினராயி வீட்டில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வெளியே வந்த கார் மீது கம்யூனிஸ்ட் தொண்டர்கள் ஆவேச தாக்குதல். அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்த கார் மீது செங்கல்லை வீசியும் கட்டைகளை கொண்டும் அடித்து நொறுக்கினர் கம்யூனிஸ்ட் தொண்டர்கள்.Saturday, May 30, 2026
protocol என்ன என்பது தங்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்தே விளம்பர கிடைக்க யாரை குஷிப்படுத்த இதையெல்லாம் செய்கிறீர்கள்?..
protocol என்ன என்பது தங்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்தே விளம்பர கிடைக்க யாரை குஷிப்படுத்த இதையெல்லாம் செய்கிறீர்கள்?..
கேவலமான அற்பப்பிறவிகள்….லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் IPS-க்கு எதிரான வழக்கில்,
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் IPS-க்கு எதிரான வழக்கில், அவருக்கு சம்மன் வழங்க சென்ற உயர்நீதிமன்ற அலுவலரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்த, அருண் IPS நீதிமன்றத்தில் காத்திருப்பு...
"நீதிமன்ற ஊழியரையே 2 மணி நேரம் காத்திருக்க வைத்தீர்கள் அல்லவா? எனவே நீங்களும் இப்போது காத்திருங்கள்" சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் #சட்டம்_அனைவருக்கும்_சமமானதுபத்திரிகை செய்தி
பத்திரிகை செய்தி
#தொடர்மின்வெட்டு; #இருளில்தவிக்கும்தமிழகம்! தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் #நயினார்நாகேந்திரன் அறிக்கை 27.05.2026 தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் மின்வெட்டால் மக்களை இருட்டில் மூழ்கடித்துள்ளது முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி! மின்வெட்டால் மக்கள் மட்டுமல்ல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்த மின் தேவையில் தமிழகத்தின் வெளிசார்பு 19,126 மெகாவாட். மின்வாரியத்தின் மொத்தக்கடன் 2.50 லட்சம் கோடி ஆகும். கடந்த திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளுக்கான மின் கட்டண உயர்வு 45,000 கோடி. 5700 மெகாவாட் பல மின் உற்பத்தி திட்டங்கள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அனல்மின் திட்டங்களால் மின் நிலையங்களின் உற்பத்தி காலதாமதமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி தேவைப்படும். அதற்கு என்ன திட்டங்கள் உள்ளன என்பதை த.வெ.க அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் மின் சுய சார்பை உறுதி செய்ய முதல்வர் திரு. ஜோசப் விஜய் என்ன செய்யப்போகிறார்? இவரது நிலைப்பாட்டை சட்டசபையில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதிக விலை கொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதால்தான் மின்வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மொத்த மின் உற்பத்தியை அதிகரிக்க மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதே மின்வெட்டு நிலை தொடரும். தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதுபட்டு சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் மின் உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் மக்களுக்கு அத்தியாவசிய தேவை. அதுபோல மின்சாரம் மாநில அரசின் அத்தியாவசிய சேவை என்ற புரிதல் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும். "நான் ஒரு தூயசக்தி. என்னிடம் வாருங்கள். எல்லாம் கிடைக்கும்" என்று சொன்ன திரு. ஜோசப் விஜய் அவர்கள், தற்போது நடந்துவரும் தொடர் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? தமிழக மக்களை இருளில் தவிக்கவிட வேண்டாம் என தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். *Press Release* *Continuous Power Cuts; Tamil Nadu Suffering in Darkness!* *Statement by Thiru. Nainar Nagendran, State President, Tamil Nadu Bharatiya Janata Party (BJP)* Date: May 27, 2026 The continuous power cuts across Tamil Nadu have plunged the public into darkness under the administration of Chief Minister Thiru. Joseph C. Vijay. This crisis has severely impacted not only common citizens but also various industries. *Current Power Scenario & Financial Crisis* * *Power Deficit:* Tamil Nadu's external dependency stands at 19,126 MW against its total electricity demand, while the state electricity board's (TNEB) own power generation is merely 3,559 MW. * *Accumulated Debt:* To date, the total outstanding debt of the electricity board has reached ₹2.5 lakh crore. * *Legacy Issues:* Under the previous DMK regime, electricity tariff hikes over four years amounted to ₹42,000 crore. Multiple power projects aimed at generating 5,700 MW have been delayed and unfulfilled for several years. *Delays and State Inefficiency* * *Thermal Project Delays:* Production at existing thermal power stations continues to face severe delays. * *High-Cost Procurement:* The electricity board is incurring massive financial losses primarily because it purchases power from private entities at exorbitant rates. * *Lack of Maintenance:* Power generation stations across Tamil Nadu remain faulty and unrepaired, directly leading to a deficit in electricity production. What steps is Chief Minister Mr. Joseph Vijay going to take to ensure Tamil Nadu's self-reliance in power generation? He must transparently declare his stance on this matter in the Legislative Assembly. The electricity board must take immediate and appropriate measures to increase total power production; otherwise, this severe power crisis will continue indefinitely. Electricity is an essential need for the public, and the ruling administration must understand that providing uninterrupted power is a fundamental service of the state government. Having previously proclaimed, "I am a pure force ( _thooya sakti_ ). Come to me, and everything will be provided," how is Mr. Joseph Vijay going to answer for the ongoing continuous power cuts?விஜய் ஆட்சியின் 15 நாள் அலங்கோலங்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சி,
விஜய் ஆட்சியின் 15 நாள் அலங்கோலங்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சி,
மாநிலத்தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் அறிக்கை 25.05.2026 தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் ஒரு தூய சக்தி என்றும், மற்றக் கட்சியினர் தீய சக்தி என்றும் பிரச்சாரம் செய்தார். அப்படியான நிலையில், 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று முதல்வர் ஆக முடியாமல் அவர் சாடிய திமுக வின் தோழமைக்கட்சிகளுடன் பேசி ஆதரவுப் பெற்று முதல்வர் பதவிக்கு வந்தார். அது மட்டும்மல்லாமல் அஇஅதிமுக வில் வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுபினர்களையும், திருட்டு தனமாக அரசியல் புரோக்கர்களை வைத்து, குதிரை பேரம் பேசி, சட்டமன்றத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக தனது வலுவை நிரூபித்தார். நேற்றைக்கு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினமா செய்ய வைத்துவிட்டு, தன்னுடைய கட்சியிலும் சேர்த்துக் கொண்டார். இதில் என்ன நியாயம் இருக்கிறது! ராஜினாமா செய்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடந்தால், மக்களின் வரிப்பணம்தானே வீணாய்கிறது என்று முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அறியாமல் இருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. வேடிக்கை என்னவென்றால், நேற்று ராஜினாமா செய்த 3 அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், "முதல்வர் திரு. விஜய் அவர்களின் ஆட்சி 10 நாட்களிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியைப்போல இருக்கிறது" என்றும் கூறி, இதற்காகத்தான் தவெக கட்சியில் சேர்ந்தோம் என்றும் கூறியுள்ளார்கள். இது எவ்வளவு வேடிக்கையான, முட்டாள்தனமான பேச்சு. இவர்கள் எப்படி தலைமைச்செயலகத்தில் ஒரு அமைச்சர் முன்னிைைலயில் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரமுடியும்? தலைமைச் செயலகம் என்ன தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகமா? இந்த அடிப்படைக்கூட தெரியாமல் ஒரு அறிவிலி அமைச்சர் இருக்கிறாரே? மேலும், இன்ஸ்டாகிராம் Influencers களை வைத்து, ஏமாற்றி, எளிதாக ஆட்சிக்கு வந்த திரு. விஜய் அவர்களுக்கு எப்படி அரசியல் பக்குவம் இருக்கும்? அதுமட்டுமல்லாது குதிரைபேரத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்ற திரு. ஜோசப் விஜய் எப்படி தூயசக்தி ஆவார்? திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சி 15 நாட்களிலே அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியைப்போன்று இருக்கிறது என்று சொல்லுகிறார்களே? 15 நாட்களில் தமிழகத்தில் நடந்த அவலங்களைப் பாருங்கள். * திரு. விஜய் ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 266 குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. * 45 படுகொலைகள் நடந்துள்ளன. * 66 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குகெதிரான குற்றங்கள் நடந்துள்ளன. * 74 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. * 82 ஊழல் குற்றங்கள் நடந்துள்ளன. "போதைப்பொருள்களை ஒழிப்பேன் என்று சொன்னார் திரு. விஜய் அவர்கள். இன்றுவரை பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருள்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறதே! அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்கடன் தள்ளுபடி செய்கிறேன் என்று சொன்ன திரு. ஜோசப் விஜய் அவர்கள் விவசாய பெருங்குடி மக்களையும் ஏமாற்றி இருக்கிறார். அவர் அறிவித்தப்படி முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்யவில்லை. இது அவர்கொடுத்த வாக்குறுதியை மீறியதாகும். மேலும், கடந்த 2 நாட்களிலேயே திரு. ஜோசப் விஜய் அவர்கள் சிறுபான்மை ஆட்சியில், * திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி, * கோவையில் 10 வயது சிறுமி, * விழுப்புரம் வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி, * மதுரையில் 10 ஆம் வகுப்பு மாணவி, * நாகப்பட்டினத்தில் 80 வயது மூதாட்டி ஆகியோர் கொடூரமாக பாலியல் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லுவாரா முதல்வர் அவர்கள்? இவரது ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பார்த்தால், மகாகவி பாரதி பாடிய, "நெஞ்சுப் பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்" என்ற துயரப்பாடல்தான் நினைவிற்கு வருகிறது. இப்படியாக, தமிழக மக்களை வருத்தம் அடையச் செய்யும் அளவிற்கு, சிறுபான்மை அரசின் முதல்வர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடையும்படி செய்து விட்டார் என்பது வேதனைக்குரியது.2021-2026: ஸ்டாலின் மருமகன் ஆட்சி 2026-2031: லாட்டரி மருமகன் ஆட்சி
2021-2026: ஸ்டாலின் மருமகன் ஆட்சி
2026-2031: லாட்டரி மருமகன் ஆட்சி
Subscribe to:
Posts (Atom)
*அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்.*
*அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்.* சோதனையை முடித்துக் கொண்டு பினராயி வீட்டில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வெளியே...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...