Monday, May 25, 2026

*இது ஆதங்கம் அல்ல*…..

 *இது ஆதங்கம் அல்ல*…..

*அரசியல் அவலம்* ⁉️ ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் கருத்து பல சமயங்களில் உரிய கவனம் அளிக்கப்படாமல் போகும்;! ஏற்கெனவே நிலைப்பெற்ற அமைப்பு அல்லது கருத்தின் மீது உங்கள் கருத்து தாக்கத்தை உண்டாக்கும்பட்சத்தில் நீங்கள் பெருந்தாக்குதலுக்கு உள்ளாவதோடு, உங்கள் கருத்தும் புறம் தள்ளப்படும்.. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த அல்லது நம்மை அவரவர் அறிவுக்கே ஏற்ப புரிந்துகொண்டவர்களுக்கு நாம் சிலவற்றைச் சொல்ல விரும்புகின்றோம், நெல்லைச் சீமையின் சின்ன ஒரு கிராமம், குருஞ்சாக்குளத்தில் பிறந்த இந்த கரிசல் மண்ணின் மைந்தன். நான் தைரியமாக சொல்வேன் தெலுங்கு பேசும் தமிழன் நான் என்று. தகுதியே தடை என்ற நிலையில் எனக்கு கிடைத்த நல்வாய்ப்புகளை தடுத்தவர்கள் பலர் உண்டு. கடந்த பல நாட்களாக சாத்தூர் பகுதியின் தேர்தல் களத்தில் இருக்கிறேன்! இங்கே சிலர் திட்டமிட்டே பாஜகவும் அதிமுகவும் தெலுங்கு பேசுகிற மக்களுக்கு எதிரிகள், விரோதமானவர்கள் என்று அப்பட்டமாக அவதூறாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் அவதூறு பேசுகிறவர்கள் எல்லாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் ! இன்று அவதூறுகளை அள்ளித் தெளிக்கிற இதே திமுக தானே ?. என்னையும், வைகோ போன்றவர்களையும் திமுக கட்சியை விட்டு , தங்களின் குடும்ப நலனுக்காக விலக்கி வைத்து. வேடிக்கை பண்ணியது ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன் அவர்கள் தன் இறுதி காலத்தில் மன நிம்மதியற்று இறந்து போனார். அந்த இறப்பிற்கான காரணம் என்ன ? இந்த தென்பாண்டி நாட்டில் அவர் திமுகவால் புறந்தள்ளப்பட்டதால் தானே ? ஒரு காலத்தில் தென் தமிழ் நாட்டிற்கு வரும் போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன் அவர்களின் வீட்டில் தான் கலைஞர் சென்று அந்த காலத்தில் தங்குவார். ஆனால் அந்த நன்றி உணர்ச்சி கூட இல்லாமல் அவரைப் புறந்தள்ள வைத்தது எது ? பெருந்தலைவர் காமராஜர் அவர்களையேத் தோற்கடித்த அண்ணன் விருதுநகர் பெ. சீனிவாசனின் நிலைமை கடைசியில் என்னவாயிற்று? இப்படி மனம் கிலேசப்பட்டு, சஞ்சலத்துடன், மன வருத்தத்துடன் மறைந்தவர்கள் எல்லாம் , திமுக கட்சியை விரும்பிப் போனவர்கள்தான் ! அப்படி விரும்பிப் போனவர்களையெல்லாம் திமுக வேண்டுமென்றுதானே புறக்கணித்தது ? இதன் பின்னுள்ள காரணி என்ன ? அன்று உங்களுடன் தோளுக்குத் தோளாக நின்று போராடிய என்னைப் போன்றவர்களையெல்லாம் புறந்தள்ளி ஒதுக்கியது யார்.. இன்றைய ஆளும் திமுக,தானே ? இன்று ஆடு நனைகிறதே, என்று ஓநாய் அழுத கதையாக, என்டி எ கூட்டணி ஒரு தொகுதியைக் கூட தெலுங்கர்களுக்கு கொடுக்கவில்லை என்று திமுகவினர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் ! ஆனால் உங்களின் பொய்யுரை பலிக்காது,,, உங்களின் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் பொய் உண்மையாகி விடும்,,என்கிற கோயபல்ஸ் தந்திரம், இங்கே செல்லுபடியாகாது,,,, ஆனாலும்,,, உங்களிடமே கேட்கிறேன் ! நீங்க ஒரு தொகுதி ஒரேயொரு தொகுதி சாத்தூர் தொகுதியில் தெலுங்கு பேசும் மக்களுக்கு இப்போது கொடுத்து உள்ளீர்கள். ஆனால் பெரும்பாலான நாயக்கர் மக்கள் வாழும் கோவில்பட்டியில் அவர்களுக்கு ஏதும் சீட் கொடுத்து உள்ளீர்களா!? இல்லை ராஜபாளையத்திலாவது தெலுங்கர்களுக்குக் கொடுத்துள்ளீர்களா!? நீங்களும் ஒரு சீட் தான் கொடுத்திருக்கிறீர்கள் நாங்களும் ஒரு சீட்டை வடக்கு வட்டாரத்தில் கொடுத்திருக்கிறோமே,,, ! காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எஸ்.ஆர். நாயுடுவுக்கும், இராவன்ண கிருஷ்ணசாமி நாயுடுவுக்கும், திருமங்கலம் ராஜாராம் நாயுடுவுக்கும், காங்கிரஸ் அமைச்சரவையில் 1950 களில் 60 களில் ஏன் இடம் அளிக்கவில்லை. திமுகவின் நிறுவனத் தலைவர்களாக இருந்த வேலூர் சின்னராஜ் என்ற சிற்றரசுக்கும், அண்ணன் பெ.சீனிவாசனுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் செய்தவர்கள் யார் ? ஏன் அவர்களைப் புறக்கணித்தார்கள்? ஆனால் அதிமுக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி காலத்தில் தான் தெலுங்கு பேசும் திருச்சி சௌந்தரராஜன் அவர்களையும், பின் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கடம்பூர் ராஜூ அவர்களையும், அமைச்சராக்கி அழகு பார்த்தது அதிமுக ஆட்சி தான்,,,, பல ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு பேசுபவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது அதிமுக ஆட்சியில் தான், அந்த அதிமுக கூட்டணி? தெலுங்கர்களை புறக்கணிக்கிறது என்று இன்று வந்து பொய்யுரைக்கிறீர்களே ?? இது நியாயம் தானா ? இவையெல்லாம் ஏனென்று தெலுங்கு பேசும் மக்கள் உணர வேண்டும். இன்று புறம் பேசுகிறவர்களே ! கடம்பூர் ராஜு யார் என்று உங்களிடம் கேட்கிறேன்.! நமக்காக உழைத்தவர் உழைப்பவர் அல்லவா ! ஆனால் புறம் பேசுகிற திமுக வினர் நாயக்கர்களிடம் ஓட்டு மட்டும் வாங்கிவிட்டு தெலுங்கர்களை படு விவரமாகப் புறக்கணிக்கிறீர்கள்! பிறகு

திட்டங்களை எல்லோரும் நாமெல்லாம் கூடிச்சேர்ந்து முயற்சி எடுத்து வளப்படுத்தினால் அதன் பலன்கள் பெரும்பாலமான நாய்க்கர் இன மக்களுக்கு மட்டுமல்ல சகலருக்கும் போய் சேரும்! என்பதுதானே உண்மை. !

திட்டங்களை எல்லோரும் நாமெல்லாம் கூடிச்சேர்ந்து முயற்சி எடுத்து வளப்படுத்தினால் அதன் பலன்கள் பெரும்பாலமான நாய்க்கர் இன மக்களுக்கு மட்டுமல்ல சகலருக்கும் போய் சேரும்! என்பதுதானே உண்மை. ! இதையெல்லாம் வலிமையாக செயல்படுத்துவதற்கு நாயக்கர்கள் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ? குறைந்தபட்ச எண்ணிக்கைகளாகக் கூட இல்லை! இதையெல்லாம் தொடர்ந்து பேசி வந்த நான் 1989 இல் இருந்து இன்றுவரை வாய்ப்பு கிடைக்காமல் , வாய்ப்பு கிடைத்தும் தோற்கடிக்கப்பட்டேன். ஆனால் எனக்கென்ன வந்தது என்று இருந்திருக்க கூடாதா? அல்லது இருந்திருக்க முடியாதா ?1984 முதல் டெல்லிக்கு மட்டும் நூறு முறை மேற்கண்ட வழக்குகளுக்காக விமானத்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்திருக்கிறேன். அன்றைக்கு எல்லாம் இவ்வளவு விமானங்கள் கிடையாது. யாருக்காக இவ்வளவு முயற்சி ? இந்த மண்ணில் வாழுகிற மக்களுக்காகத் தானே ? இந்த மண்ணில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்காக தானே? இவ்வளவு நாள் நான் பாடுபட்டு இருக்கிறேன்!. அதிலும் அதிகம் பலன் பெற்றவர்கள் நாயக்கர்கள் தான். விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கான வழக்குகளிலும் நான் பலமுறை ஆஜராகி உள்ளேன். இதையெல்லாம் எனக்காக ? என் தனிப்பட்ட வாழ்விற்காகவா ? வழக்குகளை தொடர்ந்தேன்.? இந்த மண்ணில் பிறந்தவன் சக மனிதர்களோடு வாழ்ந்தவன், நான் பிறந்த மண் ! இந்த வட்டாரம் வளம் பெறுவதற்காகத் தான் இத்தனை முயற்சிகளையும் செய்தேன்! நான் கேட்கிறேன்! இப்படியான முயற்சிகளை எல்லாம் அதிமுகவில் இருந்து, இப்போது திமுகவில் இருக்கக்கூடிய கே. கே .எஸ். ராமச்சந்திரன் போன்றவர்களாயினும் சரி செய்திருக்கிறார்களா? செய்வதற்கான முயற்சியையாவது எடுத்தார்களா? யாரும் , யாருமே செய்யவில்லையே ? இல்லை , இன்றைக்கு கூட்டணிக் கொடி பிடிக்கிற முன்பு ஆண்டகாங்கிரஸ்காரர்களாவது செய்தார்களா? எதுவுமே செய்யாமல், தேர்தல் வந்தால் மட்டும் உபயோகப்படுத்திக் கொள்கிற கருவேப்பிலையாக பயன்படுத்திக் கொள்கிற நிலைமையில் இந்த இனமானது இருக்கையில் பாஜகவும் அதிமுகவும் தெலுங்கர்களுக்கு விரோதமானவர்கள் என்று திமுக சித்தரிப்பதுவும், அதற்கு நம்மவர்களில் சிலர் கை தட்டுவதும், மிகவும் மோசடித்தனமானது உழவர் சங்கத்தலைவர் சி நாராயணசாமி நாயுடு அவர்களுக்குப்பின் நமது இன மக்களின் அரசியல் அஸ்திவாரம் இல்லாமல் போனது ஏன் .? இன்றைய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் யார்? நம்மைப் போன்ற தெலுங்கு பேசுபவர்கள் தான்! ஒருமுறை நெல்லை மாவட்டத்தில் நாயக்கர்கள் சார்பாக ஒரு வழக்கு ! பலருக்கு நிபந்தனை ஜாமின் யாரால் போட்டு விட்டார்கள்! ஒரு மாதம் காலம் வழக்கில் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து அவர்களுக்கு உணவளித்து வேண்டிய உதவிகளைச் செய்தார்! இது நடந்த உண்மை. அப்போது அவர் அமைச்சராக கூட இருக்கவில்லை! யார் தெலுங்கர்களுக்கு விரோதி? போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு போவது திமுக காரர்களின் பொதுப்புத்தி ! இவர்களின் விநாச காலப் புத்தியை அறிந்த பின்னரும், அவர்களை ஆதரிப்பதென்பது கொள்ளிக் கட்டையால் தன் தலையை தானே சொறிந்து கொள்வதற்குச் சமம். இன்றைக்கு அவதூறு பேசுகிறவர்களுக்கு ஒரு சவால் ! மனம் விட்டுப் பேசுவோம் ! நீங்களும் வாருங்கள் ! நானும் வருகிறேன் ! பேசி விவாதித்து பார்ப்போம் ! அப்போதுதான் உங்களுக்கு எதார்த்தம் தெரியும்!. உண்மையில் தெலுங்கர்களுக்கு விரோதி திமுகவும் காங்கிரசும் தான் ! வேண்டுமானால் தெலுங்கு பேசும் கே கே எஸ் ஆர் நாயக்கர்களை ஏமாற்றிப் பிழைப்பார்! நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் மேற்சொன்ன அனைத்தையும் நாயக்கர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு விளக்கத்தை தர வேண்டி இருக்கிறது! இதுவரை உங்களை ஏமாற்றுவதற்காகவே ஆட்சி அதிகாரங்கள் பயன் படுத்தப் படுகிறது. ​மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாசியுடன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் சாத்தூர் தொகுதியில் நிற்பதாலே பிரித்தாளும் சூழ்ச்சி எனும் இந்த தந்திரங்களைப் பயன்படுத்தி சாத்தூரில் ஒரு சீட்டு தெலுங்கருக்குக் கொடுத்து வேடிக்கை பார்ப்பது என்கிற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் ! இதைத்தான் இன்று நாயக்கர் இன மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் சொல்கிறேன். நாளை நமக்காக , நம் இனத்திற்காக கோரிக்கைகளோடு பிரதமரைச் சந்திக்க வேண்டுமென நினைத்தால், திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் அதனைச் செய்து முடிப்பார். என்பதனை ஞாபகத்தில் வையுங்கள். யார் யாருக்கு துரோகம் செய்கிறார் ? என்று நாயக்கர் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் !. 1998 ல் ஜெயலலிதாவாகப் பார்த்து எனக்கு என் தகுதிக்கு, என் நட்புக்குக் கொடுத்த

@highlight

 @highlight

கொள்கை பிடிப்பு சார்ந்த தலைவர்களாக வந்திருக்க வேண்டிய நாயக்கர்கள் பலரையும் புறம் தள்ளி அவர்களை எழும்ப விடாமல் ஒதுக்கியது இந்த திமுக என்பதற்கு நானும் ஒரு சாட்சி!

கொள்கை பிடிப்பு சார்ந்த தலைவர்களாக வந்திருக்க வேண்டிய நாயக்கர்கள் பலரையும் புறம் தள்ளி அவர்களை எழும்ப விடாமல் ஒதுக்கியது இந்த திமுக என்பதற்கு நானும் ஒரு சாட்சி! இன்னும் வரிசைப்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால், பெ. சீனிவாசன், வைகோ, ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன், குன்னூர் சீனிவாசன் தொம்பக்குளம் லிங்குசாமி, என பலரின் அரசியல் வாழ்க்கையையே நாசம் பண்ணியது திமுகவும் கலைஞரின் அந்தக் குடும்பமும். இதில் குறிப்பாக ஈடுபட்டவர்கள் ஸ்டாலின், தூத்துக்குடி பெரியசாமி , கே. கே. எஸ்.எஸ். ராமசந்திரன் ,ஆகியோர் தான். ஆனால் தூத்துக்குடி பெரியசாமிக்கும், கே.கே. எஸ். எஸ். ராமச்சந்திரனுக்கும் நாயுடுகளின் ஆதரவு வேண்டும் ! ஆனால் தங்களைத் தவிர வேறு எவரும் இங்கே வந்து விடக்கூடாதென உள்ளடி அரசியல் செய்தவர்கள், செய்பவர்கள் இவர்கள் , தெலுங்கு பேசும் மக்கள் பலரின் அரசியல் வாழ்வைக் கெடுத்தவரே இந்த கே. கே. எஸ். எஸ். ராமசந்திரன் தான்! அதற்கான ஆதாரங்கள், தரவுகள் என்னிடம் இருக்கின்றன! இந்த லட்சணத்தில் இவர்கள் எப்படி நாயக்கர் மக்களுக்காக மற்றவரிடம் வக்காலத்து வாங்க முடியும்? ​இன்று நாம் வாழ்கிற இந்தப் பகுதி ஒரு வானம் பார்த்த பூமி அனைத்தும் வறட்சி மாவட்டங்கள். குறிப்பாக ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி,சங்கரன்கோவில் கிழக்குப் பகுதி, விருதுநகர், சிவகாசி. இவையெல்லாம் நிரந்தர வறட்சிப் பகுதி என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று முதன் முதலில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தவனும் நான்தான்! ​இது பற்றியெல்லாம் அமைச்சர் பதவியை பெற்ற கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் சட்டமன்றத்திலே பேசி இருக்கிறாரா? இதனை மாற்றுவதற்கான முயற்சி தான் செய்தாரா? இல்லை மேல் நடவடிக்கை ஏதேனும் எடுத்தாரா ? நடவடிக்கை எடுக்கவில்லையே என ஏதாவது வழக்கு தான் தொடர்ந்தாரா? • 2009 ல் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் கொன்ற போது திமுக மீது விழுந்த அவபேரை உடைத்தவன் நான் தானே ! • கனிமொழி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தை சரி செய்தவன் நான்தானே • நள்ளிரவு கலைஞர் கைதின் cd எடுத்து சென்று உலகத்திற்கு காட்ட நள்ளிரவில் ஓடியவனும் நான் தானே ​1984 இல் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று இந்த வறட்சிப் பகுதிகளை நீர் வளம் உடையதாக ஆக்க வேண்டும் , எவ்வகையிலேனும் பாடுபட்டு நதி நீர் ஆதாரங்களோடு இப்பகுதியை இணைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தேன். நதிநீர் இணைப்பு என்கிற திட்ட முறையில் கங்கைக் காவிரி திட்ட வரைவில் கன்னியாகுமரி வரையுள்ள ஆறுகளும் இணைக்கப்பட வேண்டுமென்று அந்த வழக்கில் குறிப்பிட்டு இருந்தேன் கங்கை குமரியை தொட வேண்டும். அதற்கான தீர்ப்பு நானும் அழகிரியும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக பொறுப்பாளர்களாக இருந்த போது 2012 பிப்ரவரி 27 அன்று தீர்ப்பு வந்தது நினைவு. அந்தத் தீர்ப்பிற்குப் பின் இந்த வறட்சிப் பகுதியான கோவில்பட்டி, சங்கரன்கோவில், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்தூர்ப் பகுதிகள் உட்பட வெம்பக்கோட்டை பகுதிகளின் விவசாய வளர்ச்சி நிவர்த்தி அடைய வேண்டுமென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை கட்டப்பட வேண்டும் என்றும் என்று வாசுதேவநல்லூரில் எனது தலைமையில் போராட்டமும் நடந்தது. அது மட்டுமில்லாமல் செண்பகவல்லி அணை உடைப்பை சீர் செய்ய வேண்டும் என்று போராடியவன் நான் ! இவை யாவும் வெம்பக்கோட்டை அணை மூலம் சாத்தூர் வைப்பாற்றில் இணைக்க வேண்டும் . அதுபோல தென்காசி தென்மலைக்கு மேலே அச்சன் கோவிலில் பம்பை நீர்ப் படுகைகளை கிழக்கு முகமாக திருப்பி செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் புளியங்குடி வழியாக திருவேங்கடம் வெம்பக்கோட்டை சாத்தூர் வைப்பாற்றுடன் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைக்கப்பட்டால் வடக்கே இரண்டு கால்வாய்கள் கிட்டத்தட்ட அருப்புக்கோட்டை மானா மதுரை வரை செல்லும். இன்னொரு கால்வாய் திருப்பப்பட்டு ராஜபாளையம் சிவகாசி வரை வரும். தெற்கு முகமாக இரண்டு கால்வாய் வெட்டப்பட்டால் கிட்டத்தட்ட சங்கரன் கோவில் மேல நீலிதநல்லூர் குருவிகுளம், திருநெல்வேலி வரை போன்ற பகுதிகளுக்குச் செல்லும்! இன்னொரு கால்வாய் தெற்கு புறத்தின் கிழக்கே சாத்தூரிலிருந்து வெட்டப்பட்டால் விளாத்திகுளம் கோவில்பட்டி ஒட்டப்பிடாரம் ஏன் தூத்துக்குடி வரை செல்லும். இதெல்லாம் நான் வாழ்ந்த பகுதிக்குச் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன் நான் ! • அச்சன்கோயில் – பம்பை - வைப்பாறு இணைப்பு • வெம்பக்கோட்டை அணை சீர் செய்தல் • அழகர் அணைத்திட்டம் • செண்பகவல்லி அணை உடைப்பை சீர்திருத்தல் • ஏழாயிரம் பண்ணையில் பேருந்து நிலையம் • பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தில் தீப் புண்களுக்கு சிகிச்சை தரும் உயர் ரக மருத்துவமனை • . விஜய கரிசல்குளம் அகழாய்வு பணிகள் • பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழிலில் சீர் செய்தல் மேற்ச்சொன்ன

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என்ற அந்த வாய்ப்பை எனக்குத் தரக்கூடாதென மறுப்பதற்கு வைகோவுக்கு எப்படி மனம் வந்தது! துரோகி யார்?.

 வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என்ற அந்த வாய்ப்பை எனக்குத் தரக்கூடாதென மறுப்பதற்கு வைகோவுக்கு எப்படி மனம் வந்தது! துரோகி யார்?. கைம்மாறு கருதாது எத்தனை உதவிகள் வைகோவுக்குச் செய்திருக்கிறேன்! வைகோவுக்குப் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அறிமுகப்படுத்தி வைத்தவனே நான் தானே . என்னால்தானே ?திரு.வே.பிரபாகரனை வைகோவுக்கே தெரியும்!

அன்றைக்கு அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை எம் பி யாக நெடுமாறன் போன்றவர்களை அழைத்து வாக்களிக்க வைத்து வெற்றி பெற நான் எடுத்த பொறுப்புகள் அதிகம். ஆனால் இவர்கள் தான் என்னையும், என்னைப் போன்றோரை எல்லாம் ஒதுக்கி விட்டு அரசியலில் ஒட்டு புற்களாகிப் போனார்கள். அதுதான் கடைசி காலத்தில் இப்படியெல்லாம் திமுகவினரிடம் அவமானப் படுகிறார்கள்! நமக்கு நன்மை செய்வதற்கென இன்றைக்கு ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அதை ஒட்டி நமது எதிர்காலத்தைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நான் முக்கியமாக முன் வைக்க விரும்புகிறேன். இந்தத் திமுக எனும் மோசடியான தனி குடும்பச் செல்வாக்கில் இன்றோ ? நாளையோ ? அல்லது என்றோ ? ஒரு நாள் என்று காத்திருந்தால் எதிர்காலத்திலும் நமக்கு ஒன்றும் கிடைக்காது! இலவு காத்த கிளியாகத்தான் நாம் காத்திருந்து ஏமாற வேண்டும். அந்த ஏமாற்றத்தினைத் தவிர்க்க நாம் நம்மை பெரும் ஆதரவுடன் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் ! இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும் ! இப்போது இதனை உணரத் தவறி விட்டால் நமக்கு என்றும் விமோசனம் இல்லை! மேலே குறிப்பிட்ட சில நிகழ்வுகளை, நாயக்கர் இன மக்களுக்கான புறக்கணிப்புகளை எல்லாம் , கடந்த கால வரலாற்ரு அரசியலாக மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நம் இடத்தினை தக்க வைக்க வேண்டியாவது, அவதூறுகளை நம்பாமல், நமக்கான இலக்கினை நோக்கி சரியாக பயணிக்க வேண்டும்,,, உங்களொடு இணைந்து பணியாற்றுகிற என் கருத்துக்களையும், சற்றே கவனியுங்கள் என்றே வேண்டுகின்றேன். இது ஆதங்கம் அல்ல….. அரசியல் அவலம் ⁉️ எனது தனிப்பட்ட கருத்துகள்… கே. எஸ். இராதாகிருஷ்ணன் இன்று,சட்டமன்றத் தேர்தல்-2026 #கரிசல்காடு #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 23-4-2026




Times of India,Vijayawada edition, Dt 21-4-2026

 Times of India,Vijayawada edition, Dt 21-4-2026

facebook.com/share/r/17M3VF6fGg/?mibextid=wwXIfr

 facebook.com/share/r/17M3VF

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...