Thursday, July 30, 2026

#மேகாதாட்

 #மேகாதாட்

மேகாதாட்வில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவற்கான திட்ட அறிக்கை (DPR) திருப்பி அனுப்பிவைப்பு!! தமிழகத்தின் ஒப்புதலின்றி இத்திட்டம் நடைபெறாது என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளதையே இது காட்டுகின்றது!! உண்மை இவ்வாறு இருக்க, இரண்டு நாட்களுக்கு முன்னதாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய பாஜக அரசுக்கு எதிராக அறிக்கை விட்டவர்கள் இப்போது மன்னிப்பு கேட்பார்களா? தமிழகத்தை விட கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் அதிகமுண்டு எனும் நிலையிலும், தேர்தல் அரசியலை புறம்தள்ளி, தமிழக மக்களின் நலனே முக்கியம் எனச்செயல்படும் பாஜகவின் செயலை பாராட்டி அறிக்கை தான் விடுவார்களா? #makadat #BJP4IND #BJP4TN




புத்திர பாசத்தில் வாரிசு மகனை அரசியலுக்கு

 புத்திர பாசத்தில் வாரிசு மகனை அரசியலுக்கு

கொண்டு வந்தார். இப்போது படும் ரணங்கள் அதிகம். அனுபவிக்கட்டும். பலரின பாவங்கள். இது எங்களுடைய 30 ஆண்டு கணக்கு . இதுதான் எல்லா வாரிசு விரும்பி தலைவர்களின் இன்றைய நிலை. இவர்கள் வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டுகள். He brought his heir son into politics out of paternal affection. Now, the wounds he suffers are many. Let him experience them. The sins of many. This is our 30-year account. This is the current state of all those heir-preferring leaders today. May these people live for thousands and thousands of years. #dyanastypoltics

"ஆறு என்பது வெறும் தண்ணீரல்ல; அது தன் இரு கரைகளிலும் வரலாற்றையும், கலையையும், மனித நம்பிக்கைகளையும் சுமந்து வரும் ஒரு ஜீவநதி."

 "ஆறு என்பது வெறும் தண்ணீரல்ல; அது தன் இரு கரைகளிலும் வரலாற்றையும், கலையையும், மனித நம்பிக்கைகளையும் சுமந்து வரும் ஒரு ஜீவநதி."

- தி.ஜானகிராமன் •••• கொள்ளையடிக்கும் நோக்கில் எங்கள் நிலத்தை பாலைவனமாக ஆக்கிய பாவிகள் எங்களின் கல்லணை கால்வாய் என்கிற புது ஆறு என்பது சர் ஆர்தர் காட்டன் மற்றும் கர்னல் டபிள்யூ.எம். எல்லீஸ் அவர்களால் சேர்ந்து உருவாக்கப்பட்டது அது உருவாக்கப்படுவதற்கு முன் நூற்றுக்கணக்கான ஏரி மற்றும் குளங்கள் இருந்தன அதற்கான நீர் ஆதாரங்களாக பல்வேறு காட்டு வாரிகள் இருந்தன உதாரணமாக முதலைமுத்துவாரி செம்புடான் வாரி இப்படியாக பல்வேறு வாரிகள் இந்த ஏரிகளை நிரப்பின இவை வருடம் முழுவதும் நீர் ஆதாரத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் நீர்பஞ்சம் என்று இருந்ததே இல்லை அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய கல்லணை கால்வாய் ஆறு திட்டத்தில் இந்த வாரிகளில் வரும் நீர் கல்லணை கால்வாய் கலக்காமல் நேரடியாக வெண்ணாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் கலந்து செல்வது போல் கல்லணை கால்வாய்க்கு கீழ் ஒரு வடிகால் வாய்க்காலை உருவாக்கி அதன் வழியாக வாரி நீரை #வெண்ணாறு மற்றும் #குடமுருட்டி ஆற்றில் கொண்டு சேர்த்தார்கள் வழக்கம்போல் வாரி ஏரிகளை நம்பி இருந்த விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு #கல்லணைகால்வாய் ஒரு தீர்வாக இருந்தது எனக்கு விவரம் தெரிந்து எவ்வளவு கோடையிலும் கல்லணை கால்வாயில் நீர் இருந்து கொண்டே இருந்தது அதுதான் எங்களுக்கு நீர் ஆதாரம் குடிப்பதற்கு குளிப்பதற்கு ஆடு மாடுகளுக்கு நீர் வற்றிய கோடையிலும் கூட மணலை நோண்டி நீர் எடுத்துக் கொண்டிருந்தோம் எங்களுக்கும் மாடுகளுக்கும் யாரோ ஒரு புண்ணியவான் ஒரு திட்டத்தை முன் வைத்து கொள்ளையடிப்பதற்கு எங்கள் கல்லணை கால்வாயை பயன்படுத்திக் கொண்டு விட்டான் கால்வாய் முழுக்க கான்கிரீட் போட்டுவிட்டு எங்கள் நிலம் இன்று பாலைவனமாக ஆகிவிட்டது. விரைவில் மக்கள் எழுச்சியோடு. கான்கிரீட் தளத்தை உடைத்து மணலை மேலே கொண்டு வந்து எங்களுக்கான நீரை நாங்கள் எடுத்துக் கொள்வோம் எங்கள் நிலம் எங்கள் நீர் !



உங்கள் கடின உழைப்பை உயர்த்துங்கள்,

 உங்கள் கடின உழைப்பை உயர்த்துங்கள்,

உங்கள் நேர்மையைக் காத்துக்கொள்ளுங்கள். பணம் உங்கள் மீது கவனத்தை ஈர்க்கலாம், ஆனால் உங்கள் குணமே உங்கள் அடையாளத்தை வரையறுக்கிறது!!!

நீட் க்கு முன் ஒருவருடத்தில் MBBS சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேர்தான்..

 நீட் க்கு முன் ஒருவருடத்தில் MBBS சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேர்தான்..

போன வருஷம் மட்டும் MBBS சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 500 க்கும் மேல.. இன்னுமாடா ஏமாத்தறீங்க..

எல்லாரிடமும் நேசக்கரம் நீட்டுங்கள்..

 எல்லாரிடமும் நேசக்கரம் நீட்டுங்கள்.. ஏற்றால் மகிழ்ச்சி.. ஏற்காதவர்கள் எந்த விதத்திலும் நம் வாழ்வை பாதிக்கப் போவதில்லை என்பதை மனதில் கொண்டு,.. அனாவசியமான கலக்கத்தை தூக்கி எறிந்தாலே மகிழ்ச்சியடைவீர்கள் வாழ்வில்..

உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,

 உற்றாரை யான் வேண்டேன்,

ஊர் வேண்டேன், பேர் வேண்டேன், கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும், குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா, உன் குரை கழற்கே கற்று ஆவின் மனம்போலக் ….கசிந்து உருக வேண்டுவனே!

#மேகாதாட்

  #மேகாதாட் மேகாதாட்வில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவற்கான திட்ட அறிக்கை (DPR) திருப்பி அனுப்பிவைப்பு!! தமிழகத்தின் ஒப்புதலின்றி இத...