06.06.2026
முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ---------- இந்திய அரசியல் வரலாற்றிலேயே தமிழ்மொழி, தமிழ் மக்கள் தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின்மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டவர் நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், அவர்களது சாதனைக்குரிய 12 ஆண்டுகால மத்திய ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எவ்வகையில் எல்லாம் நன்மைகள் செய்திருக்கிறார் என்பதை, நாம் நினைவு கூருவது நம் ஒவ்வொருவரின் கடமையாக கருதுகிறேன். “தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியார் அவர்களின், கனவுகனை நனவாக்கியவர் நமது பாரதப் பிரதமர். “உலக மொழிகளுள் மிகத் தொண்மையானது, தமிழ்மொழி என்பதில் பாரதம் பெருமைக்கொள்கிறது” என்று உலகளவில் பிரகடனப்படுத்தியவர் நமது பாரதப் பிரதமர். • ஐக்கிய நாடுகளின் சபையில் பன்நாட்டுத் தலைவர்களின் மத்தியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் புலவன் கனியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உலக சகோதரத்துவத்தின் வரிகளை தமிழில் வாசித்துக் காட்டியவர் நமது பாரதப் பிரதமர் அவர்கள், • குறிப்பாக, தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளை தன் நெஞ்சிலிருத்தி, தான் செல்லும் இடமெல்லாம் அதன் கருத்துச் செழிமையையும், வளமையையும் வாயாரப் புகழ்ந்து பாராட்டுகிறார் நமது பாரதப் பிரதமர் அவர்கள், • அதுமட்டுமல்லாது, நமது தமிழகத்தின் பண்டைய செங்கோண்மையின் சிறப்பை உணர்த்தும் விதமாக தேவாரம், திருவாசகம் பதிகங்களைப் ஆதியில் தமிழ்வளர்த்த ஆதின மட ஆதினகர்த்தாக்கள் பாட தமிழர்களின் அடையாளமாகிய செங்கோலை மக்கள் அவையில் நிலைநிறுத்தியவர் நமது பாரதப் பிரதமர் அவர்கள், தமிழ் மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடிதிருவாதிரை திருநாள், கங்கைகொண்ட சோழபுரம் சிவன் திருக்கோயில் கட்டப்பட்ட 100வது ஆண்டு நிறைவு நாள் தென்கிழக்கு ஆசியாவின் கடல்சார் எழுச்சி பயணத்தின் 1000ஆவது வெற்றித் திருநாள் போன்ற முப்பெரும் விழாவை நடத்திக் காட்டியவர் நமது பாரதப் பிரதமர். • ஒவ்வொரு மாத கடைசி ஞாயிறு அன்று அவர் கலந்து கொள்ளும் மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழ், தமிழ்நாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பெருமைகளை தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். • தமிழ், பண்பாடு கலாச்சாரத்தின் அடையாளமான திருக் கோயில்களுக்கு சொந்தமான தெய்வத் திருவுருவச்சிலைகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் போன்ற ஏராளமான பழமை செல்வங்களை பாதுகாத்துவரும் காவலராய் இருந்து வருபவர் நமது பாரதப் பிரதமர். • காங்கிரஸ் காலத்தில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அனுமதித்து, தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்தவர் நம் பிரதமர். • மதுரையில் தேர்தல் பரப்புரையில் வெற்றிவேல், வீரவேல் என்று முழங்கியவர் நமது பிரதமர். • அகத்திய முனிவரின் பிறந்தநாளை தேசிய சித்தமருத்துவ தினமாக அறிவித்தார் நம் பிரதமர். • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சீன அதிபர் ஜின்பிங் அவர்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய இடமான மாமல்லபுரத்திற்கு அழைத்துவந்து விருந்தளித்தவர், • 2019 திருப்பூரில் நடந்த பேரணியில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை வீர்ர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்தார். • ஔவையார், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் அவர்களின் கவிதைகளை, பாடி அவர்களது கருத்துகளை சர்வேத அரங்கிற்கு கொண்டு சென்றார். இதன் நீட்ச்சியாக இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். • திருக்குறளை குஜராத் மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பள்ளிகளில் அவர்களது தாய் மொழிகளில் மொழிப் பெயர்ப்பு செய்து பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்தார். • இந்தியாவின் முதல் பசுமை ரயில் பாதைத்திட்டம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. • 2020 ஆம் ஆண்டு தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை நிறுவ அனுமதி அளித்தவர் பிரதமர் அவர்கள். • முதன்முதலாக பாதுகாப்புத்துறையிலும், நிதித்துறையிலும் முதல் தமிழ் பெண் மத்திய அமைச்சராக திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை நியமித்த பெருமைக்குரியவர் நமது பாரதப் பிரதமர். • தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து கைது செய்து வருவதைக் கண்டித்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை அடையச் செய்து தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்தது, இதைப்போல, தண்டனைக்கு உள்ளான 6 தூக்கு தண்டனை கைதிகளை விடுவித்து, தாயகம் திரும்ப வைத்தது நம் தாயுள்ளம் கொண்ட பிரதமர் அவர்களே. • இலங்கைக்கு தாரைவார்த்த கச்ச தீவை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருப்பவர். • இப்படி தமிழகத்திற்காக பிரதமர் மோடி செய்த அரும்பணிகளை நீண்ட பட்டியலிடலாம், இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.Thursday, June 25, 2026
• சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பிரேம் குமார் என்பவர் மதப்பிரச்சாரத்திற்காக அங்கே சென்றபோது,
• சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பிரேம் குமார் என்பவர் மதப்பிரச்சாரத்திற்காக அங்கே சென்றபோது, ஆப்கானிஸ்தான் அரசு அவரை தீவிரவாதி என்று அறிவித்து தூக்கு தண்டனை விதித்த து அந்த தூக்கு தண்டனை கைதியை மீட்டெடுத்து தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் நமது பாரதப் பிரதமர் அவர்கள்.
இப்படியாக, தமிழகம் மட்டும் அல்லாமல், அயலக தமிழகளுக்கும் அரும்பணிகள் செய்தவர் நமது பிரதமர் மோடி அவர்கள், முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்ற முதல் பெருமைக்குரியவர் இந்திய பிரதமர் நமது நரேந்திர மோடி அவர்கள்தான். குறிப்பாக, இலங்கை தமிழகர்களுக்கு வீட்டு மனையோடு 60,000 வீடுகள், அவசர கடன் உதவி மருத்துவ உதவி, விவசாயிகளுக் டிராக்டர்க, ஆம்புலன்ஸ்கள் அங்கு பள்ளியில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு சைக்கிள்கள் ஆகியவற்றை வழங்கியதோடு, யாழ்ப்பான நகரில் தமிழ் கலாச்சார மையத்தை இலங்கை தமிழர்கள் வியக்கும் பிரமாண்டமான கட்டிடத்தைக் கட்டிக்கொடுத்தவர் நமது பிரதமர் அவர்கள். இலங்கையின் கிழக்கு மாவட்டத்திற்கு நமது நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை அனுப்பி வங்கி வசதிகள், வேலைவாய்ப்புகள், எண்ணெய் கிடங்குகள் அமைத்துக் கொடுத்தவர். அதைப்போல மலேசியா தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்களின் உழைப்பையும், தியாகத்தையும், பாராட்டி அவர்களின் தமிழ் வளர்ச்சிக்குறித்து பேசியது. இப்படி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்தவர்தான் நமது பாரதப் பிரதமர் அவர்கள். முதலாம் ராஜேந்திர சோழ மன்னனைப்போல், சர்வதேச கடல் எல்லைகள் கடந்து தமிழின் பெருமைகளை கொண்டு சென்ற நமது பெருமைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களை முதலாம் நரேந்திர சோழன் என்று சொன்னால் அது மிகையாகது, தமிழ்கூரும் நல்லுகம் அதை நிறைந்த நெஞ்சத்தோடு ஏற்று அவரை வாயார வாழ்த்தி மகிழும் என்பது உண்மையே. என்னுடைய மொழியில் பேசினால்தான் பாஜகாவை தமிழகம் அறியும் சொன்னவர் இன்று சொல்லுகிறவர் அவரே என்ன சொன்னார் என்று பாருங்கள் தமிழர்க்காக மோடி தமிழகத்திற்காக மோடி இந்தியாவிற்காக மோடி இப்போது… படிப்படியாக ஆனால் சர்வ நிச்சயமாக மோடிக்காக தமிழகம் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர், பாஜக Sudhakar Reddy BJPஉலகத்தின் மிகப் பெரிய குற்றம் நம்பிக்கைத் துரோகம்.
உலகத்தின் மிகப் பெரிய குற்றம் நம்பிக்கைத் துரோகம். இதற்கு தண்டனை இவ்வுலகில் கொடுக்க முடியாது. எவன் துரோகம் செய்தானோ.. அவனே இந்த துரோகத்தால் வீழ்த்தப்படுவதே, இதற்கு தண்டனை.. தன் நம்பிக்கை தோற்று அழியும் நேரத்தில் தான் தன் நம்பிக்கை துரோகம் புரியும்.அப்போது யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத மிகப் பெரிய துக்கம் சூழும்..
L .K. Advani Filing Nomination For Gandhinagar Loksabha Seat , Gujarat -1991
L .K. Advani Filing Nomination For Gandhinagar Loksabha Seat , Gujarat -1991
Narendra Modi Helping Him In Filing Papers . Amit Shah Is Seen Standing Behind06.06.2026
06.06.2026 முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் ந...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...