Tuesday, July 21, 2026

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

 ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலான பணிகளை மின்வாரியம் தொடங்கியிருந்தது!

மொத்த் திட்டச் செலவு 12776 கோடி ரூபாய்! மூன்றரை ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டப்பட்டது!ஆனால் 2021 மார்ச்சில் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தனால் கட்டுமானப் பணிகள் முடங்கி இருந்தன! அதன் பின் 64 மாதங்களாக இந்தத் திட்டத்தில் எந்தப் பணிகளும் நடக்கவில்லை! உப்பூர் மின் திட்டத்திற்கு நிலக்கரி எடுத்து வர தூத்துக்குடியில் இருந்து 28 கிலோமீட்டருக்கு தனி ரயில் பாதையை முதலில் அமைக்க வேண்டும்! எனவே உப்பூர் மின் திட்டத்தை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் நிலையம் அருகே மாற்ற மின்வாரிய இயக்குனர்கள் குழு 2021 ஏப்ரலில் ஒப்புதல் அளித்தன! திமுக ஆட்சி அமைந்ததும் உட்பூர் மின் திட்டத்தை அங்கேயே தொடங்கலாமா? அல்லது உடன்குடிக்கு மாற்றலாமா? என அரசிடம் மின்வாரியம் ஆலோசனை கேட்டது! இந்தப் பணியில் ஐந்து ஆண்டுகள் வீணடிக்கப்பட்டு ஆட்சி முடிவடையும் நிலையில் உடன்குடிக்கு மாற்றி 800 மெக்காவாட் திறனில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க கடந்த கால தி மு க அரசு அனுமதி அளித்தது! தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் உள்ளார்!திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்து அதற்கு ஏற்பப் பணிகளைத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது! தொடங்கிய நாளிலிருந்து இந்த மின் திட்டத்தால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது! உப்பூரில் 30% பணியுடன் திட்டம் ஏற்கனவே முடங்கியுள்ளது! இதுவரை கடனுக்கான வட்டி சேர்த்து 5000 கோடி ரூபாய் செலவாகி உள்ளது! ரயிலில் மட்டுமே நிலக்கரி எடுத்து வர வேண்டி இருப்பதனால் செலவு கூடும்! ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால்தான் பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அத்திட்டத்தைத் தொடர்ந்தார்! இருப்பினும் மின்வாரிய நிதி நெருக்கடி கருதி அவர் ஆட்சியிலேயே உடன்குடிக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது! திமுக ஆட்சியில் அதைத் தொடர்ந்து இருந்தால் திட்டம் எப்போதோ செயல்பாட்டிற்கு வந்திருக்கும்! ஆய்வில் தாமதம் செய்யப்பட்டு இறுதியாக உடன்குடியில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது!! தற்போதும் அங்கு பணிகளைத் தொடங்கலாம்! அதன்படித்தொடங்கினால் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க வாய்ப்பு உள்ளது! ஆனால் இந்த ஆட்சியிலும் திட்டத்தை ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த உள்ளனர்! இதனால் கடந்த ஆட்சியில் ஏற்பட்டது போல இப்பொழுதும் ஆய்வில் தாமதம் ஏற்படுமோ!? என்ற அச்சம் இருக்கிறது என்று கூறினார்.! ஏற்கனவே மின்தட்டுப்பாடு இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் இத்தகைய திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டிய ஆட்சியாளர்கள் பல குழப்பங்களுக்கிடையே காலதாமதப்படுத்துவது எந்த வகையில் மக்களுக்கு பலன் அளிக்கும் என்று தெரியவில்லை! ஏற்கனவே மின்வாரியக் கடன்கள் விண்ணை முட்டுகின்றன! இந்தச் சூழ்நிலையில் எந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு இந்த திட்டத்தை ஆய்வு செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை! அதற்கான பொது அறிவிப்புகள் வந்து பணியைத் தொடங்கும் வரை மின்வெட்டுகளோடு சிறு தொழில்கள் ஆலைகள் போன்றவற்றுக்கான முதலீடுகளுடன் மக்கள் சகித்திருக்க வேண்டியதுதான்! வேறு என்ன சொல்ல இருக்கிறது!? இந்த மின் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விரைவில் ஆவண செய்யுமா ஜோசப் விஜய் அரசு! #Uppoorpowrthermal #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost #KSRadhakrishnan




ஆடி மாதம் வந்தாலே கல்கியின் #பொன்னியின்செல்வன் ஞாபகம் கூடவே வந்து விடும்.

 ஆடி மாதம் வந்தாலே கல்கியின்

#பொன்னியின்செல்வன் ஞாபகம் கூடவே வந்து விடும்.

துன்பத்தில் மூழ்கிய காலத்தை மெள்ள மெல்ல மெல்ல மறந்து விடவேண்டும்..

 துன்பத்தில் மூழ்கிய காலத்தை மெள்ள மெல்ல மெல்ல மறந்து விடவேண்டும்.. ஆனால் அந்த நாட்கள் கற்றுத்தரும் பாடத்தை வாழ்நாள் முழுக்க மறக்கக்கூடாது..

நம்மால் மாற்ற முடியாதது எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.. செய்ய வேண்டியதை மட்டும் செய்யுங்கள்.. வெற்றி நிச்சயம்..

#தினமலரின் நிறுவனர் #டிவிஇராமசுப்பையரின் நினைவு நாள் இன்று.

 #தினமலரின் நிறுவனர் #டிவிஇராமசுப்பையரின் நினைவு நாள் இன்று.




நடிப்பின் இலக்கணமாக விளங்கிய நடிகர் திலகம் செவாலியே #சிவாஜிகணேசன் அவர்களின் நினைவு நாளில் , அவரோடு காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸில் பயணித்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றன

 நடிப்பின் இலக்கணமாக விளங்கிய நடிகர் திலகம் செவாலியே #சிவாஜிகணேசன் அவர்களின் நினைவு நாளில் , அவரோடு காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸில் பயணித்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றன




மாணவர்களின் பெயரில் பிரிவினை அரசியலை முன்னெடுக்கும் நாசகார கரப்பான் பூச்சியின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டும்.

 மாணவர்களின் பெயரில் பிரிவினை அரசியலை முன்னெடுக்கும் நாசகார கரப்பான் பூச்சியின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டும்.




பாஜக வின் தமிழக முதல் தலைவர் டாக்டர் #விகே_ஜானின் ஒரு கிருத்தவர்

 பாஜக வின் தமிழக முதல் தலைவர் டாக்டர் #விகே_ஜானின் ஒரு கிருத்தவர்

———————————————————- இன்று, (20-7-2026)அன்றைய #ஜனசங்கம் இன்றைய #பாஜக வின் தமிழக முதல் தலைவர் டாக்டர் #விகே_ஜானின் பிறந்த நாள். மதச்சார்பின்மை (Secularism) இங்கே பேசுவர்கள் தமிழக தலைவர் கிருத்துவர் என அறியல் வேண்டும். டாக்டர் வி.கே. ஜான், 1953-ஆம் ஆண்டு மெட்ராஸ் ராஜ்தானியில் நடைபெற்ற சட்ட மேலவையின் முதல் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தார்.   பாரதிய ஜன சங்கத்தின் (#பிஜேஎஸ்) ... நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் வசித்தார்.ர் அடல்ஜி அவரது வீட்டிற்கு ஓரிரு முறை வந்துள்ளார்...... எல்.கே.அத்வானி பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த அத்வானி, "பாஜகவின் முன்னோடி பாரதிய ஜன சங்கம் ஆகும். அது 1951-ல் டாக்டர் ஷ்யாமா பிரசா... டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் உருவாக்கப்பட்டது. டாக்டர் முகர்ஜி சுதந்திரப் போராட்ட வீரர். அவர் பண்டிட் நேருவின் அமைச்சரவையில் இந்தியாவின் முதல் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஐம்பதுகளின் முற்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை உருவாக்கும் பணியின்போது, அவர் (முகர்ஜி) வழக்கறிஞர் வி.கே.ஜானை மெட்ராஸ் மாகாணத்தின் ஜன சங்கத்தின் தலைவராக நியமித்தார்"பிரச்சாரம் அப்போதும் கேட்கப்பட்டது. வழக்கறிஞர் ஜானிடம், "ஒரு கிறிஸ்தவரான நீங்கள், ஒரு மதவாதக் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக இருக்க எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், அவர், "எனக்கு டாக்டர் எஸ்.பி.முகர்ஜியை நன்றாகத் தெரியும். அவர் ஒரு மதவாதக் கட்சியின் தலைவராக இருக்க முடியாது எனக்கு ஜனசங்கம் கோட்பாட்டினை ஆதரித்து வருகிறேன் என்றார் " என்று ஜான்வெளிப்படையாகப் பதிலளித்தார்......இப்படி முதன்முதல் ஜன சங்கம் 1958 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது....... வி.கே. ஜான் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஒரு பாரிஸ்டராக, ஜான் அக்காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 1,750 ரூபாய் கட்டணம் வசூலித்து வந்தார். அவர் அக்காலத்தில் மிகவும் தேடப்பட்ட வழக்கறிஞராக இருந்தார். அவர் அக்காலத்தில் மிகவும் தேடப்பட்ட வழக்கறிஞராக இருந்தார். கோடீஸ்வரரான முகர்ஜி லண்டனில் சட்டம் பயின்றார். 1927-ல் ஜான் அவரது வகுப்புத் தோழராக இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஜான் கேரளாவைச் சேர்ந்தவர் மற்றும் சிரியன் கிறிஸ்தவர். அவர் தமிழ்நாட்டில் ஜனசங்கத்தின் முதல் தலைவர். பண்டிட் தீனதயாலும் முகர்ஜியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜானின் பேச்சைக் கேட்ட மக்கள் அதை சிங்க கர்ஜனை போல வரவேற்றனர். ராஜாஜியின் சமகாலத்தவர். ராஜாஜி 1957-ல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,250 கட்டணம் வசூலித்தார். ஆனால் ஜான் ராஜாஜியை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்தார். அவர் சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். ஜான் ராஜாஜி ஆதரவில் பட்டதாரி தொகுதியில் சென்னை மாகன மேலவைக்கு தேர்த்து எடுக்கப்பட்டார் Dr. V. K. John was a prominent lawyer, politician, and an early leader of the Bharatiya Jana Sangh (the predecessor of the BJP) in Tamil Nadu. Here are some key facts about him: * He was born on 20 July 1893. * He was a Barrister-at-Law and was regarded as one of the leading lawyers in the Madras High Court. * He served as a Member of the Madras Legislative Council (MLC) and was the Deputy Leader of the Opposition in 1953. * In 1958, he became the first President of the Bharatiya Jana Sangh in Tamil Nadu (then Madras State), helping establish the party in South India. * He was a Christian who believed in Indian nationalism and maintained a close association with Syama Prasad Mookerjee, the founder of the Bharatiya Jana Sangh. * He also participated in the Goa Liberation Movement, leading volunteers from Tamil Nadu in support of Goa’s integration with India. Dr. V. K. John is remembered as a pioneering political leader who played an important role in laying the foundation of the Bharatiya Jana Sangh in Tamil Nadu and was respected for his legal career and public service. #VK_John #tnbjpfirstpresident #tamilnadujanasangam #tamilnadubjp #பாஜக #பாரதியஜனதாகட்சி #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost #ksradhakrishnan



ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...