Tuesday, August 4, 2026

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேடிக்கையாக இருக்கிறது! இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முதல்வர் விஜயை அழைத்துப் பார்த்தார்!அவருக்கு வேலை இருக்கிறது வர முடியாது என்று மறுத்துவிட்டார்.! அதற்கு முன்பாகத் துணைக் குடியரசு தலைவரை அழைத்தார் அவரும் மறுத்து விட்டார்! அந்த நூலில் அவர் பேசிய அனைத்தும் காங்கிரஸுக்கு எதிராக இருந்தபோதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வைத்தே இந்த நூலை வெளியிடுவதாகச் சொல்லி இருப்பது முதல் வேடிக்கை! ராகுல் செய்வது எல்லாம் தனி வேடிக்கை அது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கடுத்து ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் போன்றவர்களுடைய படங்களை பதாகையில் வைத்தநு போன்று நிகழ்விற்கு வாராத முதல்வர் விஜய்யின் பதாகையையும் வைத்திருக்கிறார். வரமாட்டேன் என்று சொன்னவரின் பதாகையை வைத்து எதற்கு இப்படிப் பம்மாத்து வேலைகளைச் செய்ய வேண்டும்! இதையெல்லாம் தொடர்ந்து செய்யக்கூடியவர் தான் வைகோ! முதலமைச்சராக யாராக இருந்தாலும் கூட அவர்களின படத்தை போட்டு விடுவார். ஏனெனில் எப்போதும் பதவியில் இருக்க வேண்டும்! எதிலாவது ஒட்டிக்கொண்டு தொங்க வேண்டும்! இதற்காக எல்லா வேடிக்கைகளையும் செய்யும் அரசியல் ஆகிவிட்டனர் அவருடன் இருந்தவர்களுக்கு அவரை இப்படி ஒரு நிலைமையில் பார்ப்பது….⁉️ #vaiko

Image

இந்தியப் பாதுகாப்புப் படை

 இந்தியப் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவ சேவைகளுக்காக கடந்த 10 ஆண்டுகளில் 33 போர்க்கப்பல்களும் 7 நீர்மூழ்கி கப்பல்களும் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டு இருக்கின்றன.இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த 33 கப்பல்களும் ஏழு நீர்மூழ்கிக் கப்பல்களும் நமது நாடே நமது தொழில் நுட்பங்களின் அடிப்படையில் தயாரித்து ராணுவத்திற்குத் தந்திருக்கிறது!ரூபாய் மொத்தம் 90 ஆயிரம் கோடி செலவில் 51 கப்பல்கள் அதனளவில் கட்டப்பட்டு வருகின்றன! கணக்கின்படி 40 நாட்களில் புதிய கப்பல் ஒன்று தயாரிக்கப்பட்டுப் படையணியில் சேர்கிறது! தற்போது கப்பற்படை கொள்முதலில் 67% பங்குகளை இந்தியத் தொழில் துறையே செய்து வருவது நமது தன்னிறைவைக் காட்டுகிறது. வலிமையுள்ள பாரதத்திற்கு வாழ்த்துகள்!

facebook.com/share/v/1BdZhCi6V4/?mibextid=wwXIfr

04.08.1987, யாழ்பாணம்:

04.08.1987, யாழ்பாணம்: #பிரபாகரனின் சுதுமலை கோவிலடியில் மக்கள் முன்னிலையில் தோன்றி நிகழ்த்திய முதலாவது உரை. “#சுதுமலைப்பிரகடனம்


Image

வருஷக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும் போது தான் சில முகங்கள் தென்படுகின்றன.

வருஷக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும் போது தான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பம் அமையாமல் உள்ளே மூடிக் கிடக்கும் முகங்கள் எத்தனையோ... ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று வாதிடுவதில் இன்னும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்..


Image

#காவிரி

#காவிரி வெட்கக்கேடு 400 டிஎம்சி தண்ணீரை வீணடித்த நாம்...உலகிலேயே ஆற்றுக்கு நடுவில் முதலில் அணை கட்டிய தமிழன் என்று மார்தட்டிப் பேசிக் கொள்வோர் கவனத்திற்கு எப்போதும் போல கபினி அணை முதலில் நிரம்பி, முதலாவதாக நமக்கு திறக்க வைத்து வயிற்றில் பால் வார்த்திருக்கிறது இயற்கை! இந்த பதிவு போடும் போது 45,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது! லட்சம் கன அடியை தொட இறைஞ்சுவோம்! காவிரியில் நமது உரிமை என்பது நமது உயிருக்கு சமம்தான், ஆனால் இந்த பதினைந்து நாட்களாக நம் அரசியல்வாதிகள் போட்ட சண்டையை, தண்ணீர் வர ஆரம்பித்த அடுத்த கணமே மறந்து விடப்போகிறார்களே? சென்ற ஆண்டு இயற்கையின் கருணையால் ஏழு முறை மேட்டூர் அணை நிரம்பியது! 400டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் போனது! இது ஏதோ ஒரு வருடம் நடக்கும் கதை அல்ல! உணர்ச்சிவசப்படாமல், உண்மையை கொஞ்சம் யோசிக்க வேண்டும்! கர்நாடகாவை விட தமிழ் நாட்டிற்கு மழை அதிகம்! 950 டிஎம்சி அளவுக்கு பெய்வதாக சொல்கிறார்கள்! அத்தனை மழை நீரையும், மேட்டூரின் உபரித்தண்ணீரையும் சேமிக்க ஏதாவது யோசித்திருப்போமா? மேட்டூருக்கு கீழே அணைகள் கட்டும் அளவுக்கு இயற்கை சூழல் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் ஏராளமான தடுப்பணைகள் காட்டியிருக்கலாம், இன்றைய நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி ஏரி குளங்களுக்கு தண்ணீர் கொண்டு போய் இருக்கலாம், புதிதாக நிறைய கால்வாய்கள் அமைத்து, சாகுபடி நிலங்களை அதிகமாக்கி இருக்கலாம்! காமராஜர் காலத்திலிருந்தே ஏட்டளவில் இருக்கும் ராசிமணல் அணையை முயற்சி எடுத்து கட்டியிருக்கலாம் (மேட்டூர் அணைக்கு முன்பாகவே 65டிஎம்சி தண்ணீர் தேக்க முடியுமாம்), காவிரி -குண்டாறு நதியை இணைத்திருக்கலாம், பம்பிங் ஸ்டேசன்கள் மூலம் வசிஷ்டர் நதி, கோதையாறு போன்ற சிறிய ஆறுகளை இணைத்து எல்லா ஏரிகளையும் நிரப்பி இருக்கலாம்! எந்த அரசாவது இதுவரை புதிதாக பதவியேற்றதும் நீர் நிலை ஆக்ரமிப்புகளை அகற்றுவது குறித்தோ, காணாமல் போன ஏரி குளங்களை மீட்பது குறித்தோ, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க என்ன வழி என்று அக்கறையோ ஆர்வமோ கொண்டுள்ளதா? நானூறு டிஎம்சி தண்ணீரை வீணாக கடலில் கொட்டுவதை ஆட்சியாளர்கள், தங்கள் ஆட்சியின் அவமானமாக கருத வேண்டாமா? கை மேல் பலனாக ஓட்டுகள் வராத எந்த திட்டத்தின் மேலும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகள், நமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதை எப்போதுதான் உணரப்போகிறோம்? தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது, இனி எல்லா சத்தங்களும் அடங்கிப்போகும்! அடுத்த வறட்சியில் தூங்கி எழுவோம்! "மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண.." - அகம் 376 காவிரியைப் பற்றி பேசுவதற்கே குறைந்த பட்ச அறிதல் தகுதி கூட நமக்கெல்லாம் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். கர்நாடகா அளவிற்கு காவிரியை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை... அந்த புனிதமான காவிரியை போற்றி பாதுகாக்கவும் தெரியவில்லை... கவலையுடன்…. #cauveri

ImageImageImage


A fiction with day today reality @meenakandasamy

 A fiction with day today reality

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...