Monday, April 6, 2026

feb 17


 

ஒரு அரசு தரும் மக்களுக்கான இலவசங்கள் இலவசங்கள் என்பது உண்மையில் என்னவாக ஒரு நாட்டின் பொருளாதார வரவு செலவுகளுக்குள் இடம்பெறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்!!.

 ஒரு அரசு தரும் மக்களுக்கான இலவசங்கள் இலவசங்கள் என்பது உண்மையில் என்னவாக ஒரு நாட்டின் பொருளாதார வரவு செலவுகளுக்குள் இடம்பெறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்!!. குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணங்கள் வழங்குவதால் அரசுக்கு ஏற்படும் செலவு சுமார் 6936 கோடி இதை ஆண்டுக்கு ஒரே ஒரு முறைச் செலவாக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அதற்கு இணையாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டம் அரசின் கழுத்தில் நிரந்தரமான நிதிக் சுமையைக் கட்டுகிறது. இந்தத் திட்டம் மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 13,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக ஒரே நேரத்தில் சுமார் 20000 கோடி கூடுதல் சுமையை அரசு தன்னிச்சையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும் இவையெல்லாம் மக்களுக்காக தானே அரசு செலவழிக்கிறது என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் வருமானம் போதாமல் கடனில் மூழ்கி இருக்கும் ஒரு குடும்பத் தலைவர் வீட்டையே அடமானம் வைத்து விருந்துகள் கொடுத்தால் அதை வள்ளல்த் தன்மை என்று சொல்ல முடியுமா? தமிழக அரசின் தற்போதைய நிதி நிலையயும் இதே நிலைதான்!! கஜானா காலியாக இருக்கும் பொழுது கடன் வாங்கி இலவசங்களை வாரி வழங்குவது மக்கள் நலமல்ல அது அரசியல் சூதாட்டம்.!! முதல்வர் இந்த இலவச அறிவிப்புகளை வெளியிடும் அதே நேரத்தில் இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தமிழகத்தின் நிதி நிர்வாகத்தின் உண்மையான நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.! அரசு தனன்னிச்சையாக நினைத்த மூன்று முக்கிய நிதி இலக்குகளில் இரண்டில் அது முற்றிலும் தோல்வி அடைந்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.! இது அரசியல் விமர்சனம் அல்ல!! அரசின் சொந்த கணக்கு புத்தகத்தில் இருந்து வெளிவந்த முதல் தோல்வி!!வருவாய்ப் பற்றாக்குறை ஒரு மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தை அளவிடும் மிக முக்கியமான அளவுகோல்!! வருவாய் பற்றாக்குறை அதாவது அன்றாட செலவுகளுக்கே வருமானம் போதாமல் கடன் வாங்கும் நிலையை தமிழக அரசு 2025 26க்குள் பூஜ்ஜியமாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயத்திருந்தது! ஆனால் நடைமுறை என்ன சொல்கிறது!! 2022-23ல் ரூ36,215 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை அடுத்த ஆண்டில் நினைத்தது மாதிரி குறையவில்லை!! மாறாக 45 ஆயிரத்து 121 கோடியாக அந்தப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இதில் அதிர்ச்சி தருவது இந்த குறிப்பிட்ட நிதி மதிப்பீட்டு எண்கள் மட்டுமல்ல! இடைக்கால நிதி திட்டத்தில் அரசு தானே கணித்திருந்த அளவைவிட இந்த பற்றாக்குறை 71.5% அதிகம் அதாவது காகிதத்தில் சீர்திருத்தம் என்றும் நடைமுறையில் கடன் குவிப்பு என்றும் நடந்திருக்கிறது!! அன்றாட நிர்வாக செலவுகளுக்கே கடன் வாங்கும் அரசு எப்படி ஆயிரக் கணக்கான கோடிகளை வழங்க முடியும் என்ற அடிப்படைக் கேள்விக்கு இங்கு பதில் ஏதுமில்லை!! இது முதல் தோல்விய எனில் தோல்வி 2-நிதிப் பற்றாக்குறை நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மைச் சட்டம் மாநிலங்களுக்கு ஒரு தெளிவான எல்லையை வகுத்துள்ளது. நிதிப் பற்றாக்குறையானது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்தில் இருக்க வேண்டும்! இது ஆலோசனை அல்ல!! சட்டப் பூர்வமானது!!ஆனால் தமிழக அரசு இந்த எல்லையைத் தாண்டி மிகப்பெரிய ரிஸ்கை எடுத்துள்ளது! அதன்படி தற்போதைய நிதிப் பற்றாக்குறை 3.32% ஆக இருக்கிறது! நிர்ணயித்த இலக்கை விட இது ஆபத்தான எல்லைகளைத் தொட்டு இருக்கிறது! என்று சி ஏ ஜி குறிப்பிடுவது சாதாரண எச்சரிக்கை அல்ல அது ஒரு நிர்வாகத் தோல்விக்கான சிவப்பு விளக்கு எச்சரிக்கை. இதில் ஒரே ஆறுதல் என்னவெனில் மூன்று இலக்குகளில் ஒன்றில் மட்டுமே அரசு வெற்றி பெற்றுள்ளது அது கடன் ஜிஎஸ்டி பி விகிதம். அது ஒருபுறம் இருக்க அரசியல் ஆதாயங்களுக்காகப் பொருளாதாரத்தை பலிகடாவாக ஆக்குவது இந்திய அரசியலில் புதிது அல்ல!! ஆனால் திராவிட மாடல் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நிதி சார்ந்த முடிவுகள் பொருளாதாரத்தின் அடிப்படையையே அதன் அரிச்சுவடியையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வகையில் உள்ளன! கேட்பதற்கு மக்கள் நலன் போல தோன்றும் அறிவிப்புகள் உள்ளே பார்த்தால் நிதி நிர்வாகத்தின் முழுமையான திவால் தனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. பழம் வெளியே பளபளப்பாக இருந்தாலும் உள்ளே முற்றிலும் அழுகிப் போய் இருக்கிறது! சமீபத்தில் அரசு வெளியிட்ட இரண்டு அறிவிப்புகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு!! ஒன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரருக்கு ரூ 3000 உட்பட பரிசுத்தொகுப்பு மற்றும் அரசு ஊழியருக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் இவை இரண்டும் தேர்தல்அரசியலுக்குப் பயன்படக்கூடிய இனிப்பான அறிவிப்புகள் ஆனால் இந்த இனிப்பு எங்கிருந்து வருகிறது யார் அதற்கான விலையைச் செலுத்தப் போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் திராவிட மாடலின் பொருளாதாரம் முற்றிலும் கிழிந்து1/2

விழுந்துவிடும்

 விழுந்துவிடும்.

இது ஒரு போலி அரசாங்கம்! கொள்கையை மக்களுக்கும் பொருளாதார நலன்களைத்தனக்கும் சுருட்டிக் கொள்ளும் மோசடியான அரசு!! சிந்திப்பவர்கள் யோசிக்க வேண்டும்.2/2

மனதில் இருக்கும் எவ்வளவு உண்மைகளை நாகரீகம் என்ற பெயரில் புதைத்து விடுகிறோம்..

 மனதில் இருக்கும் எவ்வளவு உண்மைகளை நாகரீகம் என்ற பெயரில் புதைத்து விடுகிறோம்..




மகளிர் உதவித் தொகை கொடுத்துவிட்டாலே வெற்றி பெற்று விடுவோம் என்பது இங்குள்ள சிலரின் நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தோமேயானால் மூன்று ஆண்டுகளாக ராஜஸ்தான்

 மகளிர் உதவித் தொகை கொடுத்துவிட்டாலே வெற்றி பெற்று விடுவோம் என்பது இங்குள்ள சிலரின் நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தோமேயானால் மூன்று ஆண்டுகளாக ராஜஸ்தான்

தெலுங்கானா சட்டீஸ்கர் ஆந்திரப் பிரதேசம் டெல்லி போன்ற மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை கொடுத்தபின்பும் அக் கட்சிகள் தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற முடியவில்லை! அதேபோல மத்திய பிரதேசம் ஜார்கண்ட் மகாராஷ்டிரா பீகார் போன்ற மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் அங்குள்ள கட்சிகள் வெற்றி பெற்றன. அதையும் மறுக்க முடியாது. ஆனால் மகளிர் உரிமைத் தொகை தான் ஒரு கட்சியினரின் தேர்தல் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது என்பதை ஏற்க முடியாது! 2011 தேர்தலில் திமுகவின் மருமகன் சபரீசன் உருவாக்கிய வியூகம் அல்லது அவருடைய ஸ்டேட்டஜி யை பயன்படுத்தியதால் திமுக தோல்வியைக் கண்டது. அதை அடுத்து 2016 இல் ஸ்டாலின் நமக்கு நாமே என்கிற திட்டத்தை முன்வைத்து தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வந்த பிறகும் கூட அவருடைய மருமகனுடைய அந்த குறிப்பிட்ட ஸ்டேட்டஜி ஓட்டுக்கு பணம் கொடுத்தும் திமுக வெற்றி பெறவில்லை.! அந்த வகையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுகவின் ஆட்சி தமிழகத்தில் நடந்தது. ஆகவே மகளிர் உரிமைத் தொகை தான் தேர்தல் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது!அது ஒரு மாயை.! அது ஒரு சரியான மக்கள் கணிப்பும் ஆகாது! அதைவிட முக்கியம் ஒரு வணிக அரசியல் ஊழலில் ஊறிப் பெருத்த அரசாங்கம் தான் இது மாதிரியான இலவசங்களை கொடுத்து ஓட்டை அறுவடை செய்கிறது என்கிற முறையில் இது ஒரு மோசமான முன்னுதாரணமாக கூட ஜனநாயகத்தில் அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோக மருமகனுடைய ஸ்டேட்டஜியை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஐ பேக் நமக்கு நாமே அது இதுவென்று கார்பெட் ஐடியாக்களை கொடுத்து தோல்வியை தழுவியது திமுகவிற்கு மிகப்பெரிய பாடமாக இருந்திருக்க வேண்டும். என்றாலும் அது தன் பழைய வழக்கத்தை கைவிடுவதில்லை. பத்தாண்டு அதிமுக ஆட்சி, டி.டி. வி. தினகரன வாக்கு பிரிப்பு என்ற நிலுவையில் 2001 இல் திமுக ஆட்சிக்கு வந்ததை யாரும் மறுக்க முடியுமா ? ஆகவே 2026 தேர்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!! எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மீது அதிருப்தி எல்லா மாவட்டங்களிலும் தொகுதிகளிலும் இருக்கிறது! அதைஅவர்கள் புரிந்து கொள்வது முக்கியம்.! If we postpone the election to may first week 1) people may forget this 5000 2)March April payment of 1000 they may not get..(will upset in ladies side)



இந்த ₹5000 அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் கிடைக்கும்

 இந்த ₹5000 அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் கிடைக்கும் என்று அறிக்கை விட்டு விட்டு, இரவோடு இரவாக மூன்றில் ஒருவருக்கு அனுப்பி மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வெறுப்பை பெற்று தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டு உள்ளார்கள். இந்த பணம் எந்த நிதியில் இருந்து அனுப்பியது என்று மத்திய அரசு கேள்வி எழுப்பினால் அவர்கள் மேல் வீண் பழியை போட்டு விட்டு எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே. அதற்கு பல உயர் அதிகாரியின் ஒத்துழைப்பும் உள்ளது. ஆக யாரெல்லாம் பலிகடா ஆகப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

அண்ணா காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் சி.பி. சிற்றரசு.

 அண்ணா காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் சி.பி. சிற்றரசு. சுயமரியாதை இயக்கத் திலும், நீதிக்கட்சியிலும் பணியாற்றிய ‘சின்னராசு’ என்ற இயற்பெயர் கொண்ட சிற்றரசு, எழுச்சி மிக்க தம் எழுத்துகளாலும் பேச்சுகளாலும் சிந்தனைச் சிற்பியாக அறியப்பட்டார். உலக வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்து அவற்றை உணர்ச்சியூட்டும் தம் வலிமையான எழுத்து நடையால் தமிழ் மக்களுக்கு உவப்புடன் வழங்கினார். அருள்பாரதி பதிப்பகம் அவருடைய படைப்புகளை ஆறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

முதல் தொகுதியில் உலக மதங்கள் என்ற வரிசையில் இந்து, ஜைனம், புத்தம், கிருத்துவம், சோரோஸ்டிரியம் உள் ளிட்ட மதங்கள் ஆராயப்பட்டுள்ளன. உலகைத் திருத்திய உத்த மர்கள் என்ற வரிசையில் சாக்ரடீசு, சன்யாட்சன், மார்க்சு, முகமது நபி, கரிபால்டி உள்ளிட்டோர் வரிசைப்படுத்தப் பட்டுள்ளனர். புரட்சி செய்த ‘பேனா வீரர்கள்’ என்ற தலைப் பில் ரூசோ, வால்டேர், எமிலிஜோலா உள்ளிட்டோர் காட்டப் பட்டுள்ளனர். இரண்டாம் தொகுதியில் ‘விஷக் கோப்பை’ என்ற தலைப்பில் சாக்ரடீசின் வரலாறும், ‘சாய்ந்த கோபுரம்’ என்ற தலைப்பில் மாவீரன் மாஜினியின் வரலாறும் சொல்லப் பட்டுள்ளன. மூன்றாம் தொகுதியில் மார்டின் லூதர், கவுதம புத்தர், கொலம்பஸ் முதலிய மாமனிதர்கள் நம் கண் முன்னே உயிர் பெற்ற வரலாற்று நாயகர்களாக நிறுத்தப்படுகின்றனர். நான்காம் தொகுதி முழுவதிலும் பிரஞ்சு நாட்டின் புகழ்பெற்ற புரட்சி எழுத்தாளர்எமிலி ஜோலாவின் வரலாறு இரண்டு பாகங்களாகப் பீடுமிக்க நடையில் சொல்லப்பட்டுள்ளது. அய்ந்தாம் தொகுதியில் அடிமை விலங்கொடித்த விடு தலை வீரன் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் கைவிளக்கேந்திய காரிகையார் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆகிய பெருமக்களின் வாழ்வு பேசப்படுகிறது. சி.பி. சிற்றரசுவின் சிந்தனை முத்துக் களும் இந்நூலின் இறுதிப் பகுதியில் கோக்கப்பட்டுள்ளன. ஆறாம் தொகுதியில் ‘தங்க விலங்கு’ என்று வரலாற்றுக் கற்பனை நாடகம் பார்ப்பனியப் பசப்புகளால் முடியாட்சிகள் எங்ஙனம் வேரற்று முறிந்து வீழ்ந்தன என்கிற வரலாற்றைச் சுவைபடச் சொல்கிறது. ‘சீனத்தின் குரல்’ என்ற தலைப்பில், விரிவான சீன வரலாறு குறுகத் தரித்த குறள் போலக் குன்றாச் சுவையுடன் கூறப்பட்டுள்ளது. #சிபி_சிற்றரசு #திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிந்தனை சிற்பி அண்ணன் சிபி சிற்றரசு அவர்களின் பிறந்தநாள் இன்று.



feb 17