Tuesday, July 8, 2025

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

 நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்..
உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அமைதிக்கும் இதுவே வழி..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் உ வாசுகி அவர்கள் தீக்கதிருக்கு அதிகம் சந்தா சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு பதிவை அவரது வலைத்தளங்களில் இட்டுள்ளார்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் உ வாசுகி அவர்கள் தீக்கதிருக்கு அதிகம் சந்தா சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு பதிவை அவரது வலைத்தளங்களில் இட்டுள்ளார். அப்பதிவில் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்கிற முரசொலி பத்திரிகையின் ஹைலைட் வாசகம் இடம் பெற்றிருக்கிறது. அதன் அருகே ஒரு மனிதர் மாட்டின் கொம்பை பிடித்து எதிர்த்து நிற்பது போல இருக்கும் முரசொலி இதழின் எம்பளமும் பதிவாகி இருக்கிறது. அப்படியானால் தீக்கதிர்ப் பத்திரிக்கை முரசொலி ஆகிவிட்டதா? ஏற்கனவே ஆங்கில இந்து ஏடு முரசொலி ஆகிவிட்டது!. இப்படித்தான் தமு எ கச அமைப்பு தமிழ்நாட்டை வழி நடத்துகிறது.

சு வெங்கடேசன் கீழடி அகழாய்வு உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் குரல் கொடுப்பார். ஆனால் அவர் காலடியில் உள்ள முல்லை பெரியாறு, கண்ணகி கோவில் ஆகிய சிக்கல்களில் குரல் கொடுக்க மாட்டார். ஏனென்றால் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கிறது அல்லவா.! இதுதான் மார்க்சிஸ்ட்களின் பொலிட்டிக்கல் ஸ்டேட்டஜி. இந்த வகையில் ஸ்டாலினுக்கு நாம் முன்வைக்கும் கேள்வி! அவர் உண்மையில் திராவிட ஆட்சியைத்தான் நடத்துகிறாரா இல்லை கம்யூனிஸ்ட் புத்தி ஜிவிகள் சொல்வர்களின் ஆட்சியை நடத்துகிறாரா! என்பதுதான் நமக்கும் தெரியவில்லை! கவிஞர் கலாப்ரியா போன்ற திராவிட படைப்பாளிகள் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு தெரியவில்லை.

ஜீலை 8, ராஜபாளையம் இராண்டாம் தமிழக முதல்வர்.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களின் பிறந்த நாள். நேர்மையின் முகவரி. அவரை மகிழ்ந்து என்றென்றும் போற்றுவோம்.

 ஜீலை 8, ராஜபாளையம் இராண்டாம் தமிழக முதல்வர்.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களின் பிறந்த நாள். நேர்மையின் முகவரி. அவரை மகிழ்ந்து என்றென்றும் போற்றுவோம்.

எளிமை, நேர்மை, உண்மை ஆகிய மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்து வாழ்ந்த அரசியவாதி யார்?
எத்தனையோ பேர் இருந்துள்ளார்கள், அதில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பி.எஸ். குமாரசாமி ராஜாவைப் பற்றிச் சொல்கிறேன்.
மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பி.எஸ்.கே. இன்று நீங்கள் ராஜபாளையம் போனால், அங்கு இருக்கும் காந்தி கலைமன்றம் அவர் வாழ்ந்த வீடு. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்துச் சென்றுவிட்டார் பி.எஸ்.கே.
காந்தி பலமுறை அவரது வீட்டுக்கு வந்துள்ளார். போராட்டக் காலத்தில் காமராஜர் இங்கு வந்து தங்குவார். ஓராண்டு காலம் கடலூர் சிறையில் இருந்தவர். இத்தகைய பாரம்பரியமும் பணமும் இருந்தாலும் எளிமை, நேர்மை, உண்மை மூன்றையும் கடைப்பிடித்தவர்.
ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் முதலமைச்சராக அவர் ஆனபோது, 'இதற்கான திறமையோ, யோக்கியமோ, எனக்கு இல்லை’ என்று சொன்னவர். 1952 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் தோற்றபோது, 'இந்தத் தோல்விக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக எந்தத் தண்டனை வேண்டுமானாலும் எனக்குக் கொடுங்கள்’ என்று சொன்னவர்.
அவரது சேவையைப் பயன்படுத்திக்கொள்ள பிரதமர் நேரு நினைத்தார். ஒரிஸ்ஸா கவர்னர் பதவியைத் தந்தபோது, பி.எஸ்.கே. ஏற்கவில்லை. கட்டாயப்படுத்தி ஏற்கவைக்கப்பட்டார். அங்கும் அவரால் இருக்க முடியவில்லை. 'நாட்டின் செல்வம் வடக்கே கொள்ளை போகிறது’ என்று ஒரு விழாவில் இவர் பேச, அவர்கள் விளக்கம் கேட்க, உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியைவிட்டு விலகி ராஜபாளையம் வந்துவிட்டார். இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்?
கழுகார் பதில்கள்!
ஜூனியர் விகடன்

_Stop running away from the hard things and situations, because both build the foundation for the good things to grow. Always think and act positively. Your positive action combined with positive thinking results in success. The happiness of your life depends on the quality of your thoughts. Say to yourself “I’m stronger because I had to be. I am smarter because of my mistakes, happier because of the sadness I’ve have known and now wiser because I learned”. And keep sailing..... #ksrpost


 


 

Cauvery River Scene near Tanjore— Photograph circa 1890s.


 

“நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவருண்டோ சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய் “

 “நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவருண்டோ சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய் “ என்கிற பாரதியின் வரிகளில் காணப்பட்ட உணர்ச்சியையும் அறிவையையும் உணராமல் தன்னையும் தன்னை நம்பி உழைத்தவர்களை சூறையாடி அது மீது உருவான இயக்கத்தை சூறையாடி மிகச் சிறந்த நல் மாண்பையும் அவை உருவாக்கிய புதுமைகளையும் சூறையாடிப் பாழ் படுத்தி வரும் இந்த மனிதர்களை என்னவென்று சொல்வது.

நல்லதோர் கட்சியை காவு கொடுத்துட்டு இப்ப தெருவோட அலையுது.கொள்வாருண்டோன்னு. கைநீட்டம் விற்பது கஷ்டம்தான்.

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...